Tuesday, November 27, 2007

மலேஷியாவில் கோயில்கள் இடிப்பு? உண்மை என்ன?

கடந்த சில நாட்களுக்கு முன்பு மலேசியாவில் உள்ள சிலாங்கூர் மாநிலத்தில் ஆக்ரமித்து கட்டப்பட்ட கோயிலை அந்நாட்டு அரசு அப்புறப்படுத்தியது. இதையடுத்து அங்குள்ள இந்துக்கள் சிலர் அந்நாட்டு அரசுக்கு எதிராக போர்க் கொடி தூக்கினர். அதோடு இங்குள்ள இந்துத்துவ வகையறாக்கள் அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்தியாவிற்கான மலேஷிய தூதரிடம் அங்குள்ள கோயில்களை 'பாதுகாக்க' மனுவும் அளித்தனர். (ஏன்னா, 'இடிக்கிற'தெல்லாம் அவங்க வேலையாச்சே!). ஜெ போன்ற அரசியல்வாதிகளும் இதில் தலையிட்டு குட்டையை குழப்ப முயன்று வருகின்றனர்.

ஆனால், உண்மை நிலவரம் என்ன? இடிக்கப்பட்ட ஆலயம் பழமையானது என்பதாலும், முறையான அனுமதியின்றி ஆக்ரமிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டது என்பதாலும் அதை இடிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, கடந்த நவம்பர் 2005-லேயே, ஆக்கிரமித்து கோவில் கட்டப்பட்டுள்ள அந்த இடத்தை காலி செய்து தரும்படி சிலாங்கூர் மாநில அரசு அக்கோயில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதோடு கோவிலை இடம் மாற்றிக் கட்டிக் கொள்வதற்காக இரண்டு ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டுள்ளது. இதை கோயில் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதன் பிறகே அக்கோயில் தற்போது இடிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து அந்நாட்டு மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவரும், அக்கட்சி ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதால் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருக்கும் டத்தோஸ்ரீ சாமிவேலு கூறும்போது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிலம் வழங்கப்பட்டும் புதிய இடத்துக்கு கோவிலை மாற்றுவதற்கு கோவில் நிர்வாகத்தினர் தயக்கம் காட்டி வந்தனர் என்று தெரிவித்திருக்கிறார். மேலும், இந்துக்கள் கோவில் கட்டும் போது மாநகர மன்றத்தின் ஒப்புதல் பெறாமல் தங்கள் விருப்பத்திற்கு கட்ட வேண்டாம் என்றும் சாமிவேலு அறிவுறுத்தியுள்ளார். மேலும் இவ்விவகாரத்தை மதரீதியானதாக நாங்கள் பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கோவில்கள் மட்டுமல்லாது இது போன்று ஆக்ரமித்து கட்டப்பட்ட ஏராளமான பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டுள்ளன என்று மலேஷிய வாழ் முஸ்லிம்கள் தெரிவித்திருக்கின்றனர்.

பொதுவாக எந்த நாட்டிலும் இது போன்று ஆக்ரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றுவது வழக்கம்தான். சென்ற ஆண்டு என்று நினைக்கிறேன், மதுரையில் இது போல ஆக்ரமிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டிருந்த பல கட்டிடங்கள் நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்பட்டன. அவற்றுள் சில கோவில்களும், தர்காக்களும் அடக்கம். அது போல சட்டவரையறைக்குள் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையே இந்த மலேஷிய நிகழ்வு. அதை ஊதி ஊதி பெரிதாக்கி குளிர்காய முற்படுகின்றனர் இந்துத்துவாக்களும் சில அரசியல்வாதிகளும்.

சிறுதகவல்: மலேசியாவில் ஏறத்தாழ பதினேழாயிரம் கோயில்கள் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாம்.



நன்றி: தமுமுக

Saturday, November 24, 2007

தஸ்லிமா நஸ்ரினுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுக்கலாமா?

தனது தாய்நாடான பங்களாதேசிற்கு திரும்பினால் வழக்கு விசாரணைகளை ச்ந்திக்க நேரும் என்பதால் கடந்த பத்தாண்டு காலமாக வெளிநாடுகளில் சுற்றிக் கொண்டிருக்கும் தஸ்லிமா நஸ்ரினுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுக்கணுமாம். சொல்றது யாருன்னா விகே மல்ஹோத்ரா என்கிற பிஜேபி தலைவர்.

முஸ்லிம்கள் என்பதற்காகவே குஜராத் மக்களை கூட்டம் கூட்டமாக எரித்துக் கொன்ற அதே சங்பரிவார கும்பலைச் சேர்ந்த பிஜேபி தலைவர் ஒருவர்தான் இந்த முஸ்லிம் அம்மணி மேல் இவ்வளவு அக்கறை காட்டியிருக்கிறார்.
காரணம் என்னன்னா கருத்துச் சுதந்திரமாம்!

இந்துக் கடவுள்களை நிர்வாணமாக வரைந்தார் என்பதற்காக ஓவியர் ஹுசைனை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியவர்களும் இதே பிஜேபியினர்தான். அப்போ இவங்களோட கருத்துச் சுதந்திரம் எங்கே புல் புடுங்க போயிருந்துச்சுன்னு தெரியலை!

பிரபல இந்திய எழுத்தாளர் கமலா சுரையா முஸ்லிமாக மாறினார் என்பதற்காக அவரைக் கொல்ல முயற்சி செய்ததும் இதே இந்துத்துவ சக்திகள்தான்! கமலா சுரையாவின் கருத்துக்களுக்கு சுதந்திரம் கிடையாதா என்ன?

சரி போகட்டும்! தஸ்லிமாவுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுத்துடலாம்! நரேந்திர மோடி போன்றவைகளெல்லாம் நடமாடும் பேறு பெற்ற இந்தியாவாச்சே! தஸ்லிமாவுக்கு அடைக்கலம் கொடுக்குறதால ஒன்னும் குறைஞ்சு போயிடாது.

ஆனா, அதுக்கு முன்னாடி ஒரு விஷயம்..!

'Oh You Hindu! Awake!' என்ற பெயரில் இந்துக்களை விழிப்புணர்வு பெறச் செய்யும் நூலை எழுதியவர் Dr. சட்டர்ஜி என்பவர். அரிய பல கருத்துக்களை உள்ளடக்கிய இந்நூலை எழுதியதற்காக இந்தியரான Dr. சட்டர்ஜிக்கு பாரத ரத்னா விருது கொடுத்துவிட்டு அதன்பிறகு பங்களாதேஷ் தஸ்லிமாவுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுப்பதைப் பற்றி யோசிக்கலாம். என்ன நாஞ்சொல்றது?

Monday, November 19, 2007

ம.பி. சிறையில் தாடிக்குத் தடை!

'சிறைக் கைதிகள், தாடி வைக்கக்கூடாது; குல்லாய் அணியக்கூடாது' என்று சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மத்தியப்பிரதேச பா.ஜ. அரசு, புது தடைகளைப் போட்டுள்ளது. 'கைதிகள் அடையாளம் காண, இவை தடையாக இருப்பதால், தாடி வளர்க்கவும், குல்லாய் அணியவும் தடை விதிக்கப்படுகிறது' என்று கூறியுள்ளது.


அரசின் சிறுபான்மை நலத்துறை தலைவர் அன்வர் கூறுகையில், "கைதிகளிடம் பாகுபாடு காட்டப்படுவதாக தெரிந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். ஆனால், அரசு இப்படி ஒரு உத்தரவை போட்டுள்ளதா என்பதை அவர் உறுதி செய்ய தயங்கினார்.

போபால் மத்திய சிறை கண்காணிப் பாளர் சோம்குன்வார் கூறுகையில், "கைதிகளை சிறைக்குள் அனுப்பும் முன்பு, தாடியை மழிக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளோம். அவர்களின் தாடி மழித்த போட்டோ தான், போலீஸ் பதிவேட்டில் வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

தீபாவளியை ஒட்டி நடத்தப்படும், எருமை மாட்டு மோதல் விளையாட்டுக்கும் சவுகான் அரசு தடை விதித்துள்ளது. ஜல்லிக்கட்டு போல நடக்கும் இந்த மோதல், பல ஆண்டுகளாக ம.பி.யில் இந்துக்கள் நடத்தி வருகின்றனர்.

நன்றி: தினமலர்
இந்தச்சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமா அல்லது சீக்கியர்களுக்கும் பொருந்துமா என்பது தெரியவில்லை!
கிரிமினல் கொலைக் குற்றத்திற்காக சிறைக்குச் சென்ற முதல் சங்கராச்சாரியார் என்ற பெருமை பெற்ற இருள்நீக்கியார் தண்டம் + தாடி + காவி உடையுடனேயே உள்ளே சென்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது!




Monday, November 12, 2007

சோ ராமசாமியின் தேசப்பற்று!

கரண் தாப்பரின் நான்கு கேள்விகளுக்கு பதில் சொல்வதற்குள் நா வறண்டு, தண்ணீர் குடித்து, மைக்கை பிடுங்கி எறிந்து, பின்னங்கால் பிடரியில் அடிக்க, தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிய 'மாவீரன்(?)' மோடியின் கொடூர முகத்தை அவனது சகாக்களின் வாக்குமூலத்தைக் கொண்டே தோலுரித்து தொங்க விட்டது டெஹல்கா. அரக்கக் குணம் படைத்த அந்த ஜந்துக்களின் கொடூரச் செயல்களை 'அது'களின் வாயாலேயே கேட்டு உலகமே அதிர்ந்தது. மனதில் கடுகளவேனும் மனிதாபிமானம் உள்ளவர்கள் கூட அந்த வாக்குமூலங்களை ஜீரணிக்க இயலாமல் தவித்தனர். இவன்கள் ஒரு தாயில் வயிற்றில்தான் ஜனித்தார்களா என்பதே நம்ப முடியாததாக இருக்கிறது.


ஆனால், இவ்வளவு நடந்த பிறகும், சில இடங்களில் மயான அமைதி நிலவுகிறது!


- செல்வி ஜெயலலிதா: மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திவிட்டு வந்தவர் இவர். சமீபத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் ஒருவர் இறந்ததற்கு கவிதை அஞ்சலி செலுத்திய முதல்வர் கருணாநிதியைக் கண்டித்த அம்மணி, ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் கொல்லப்படுவதற்கு காரணமான மோடியை கண்டித்து இன்னும் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை!



- சங்கரமடத்து இருள்நீக்கி சுப்பிரமணியனார்: பாபரி மசூதி விவகாரத்தில் அழையா விருந்தாளியாய் மூக்கை நுழைத்து, மத்தியஸ்தம் என்ற பெயரில் மசூதியை முஸ்லிம்களிடமிருந்து அபகரிக்க திட்டம்தீட்டியவர் இவர். (ஏன்னா, நாட்டுல மதநல்லிணக்கம் நிலவுறதுக்காக இவர் பாடுபடுறாராம். காலுல சாக்ஸ் மாட்டிண்டு சேரி மக்களை ஆசீர்வதிக்க போனவராச்சே!) ஒட்டுமொத்த குஜராத் முஸ்லிம்களையும் கூண்டோடு கொலை செய்ய வழி செய்த மோடி விவகாரத்தில் இவர் இன்னும் மூச்சு கூட விடவில்லை!


- முன்னாள் பிரதமர் வாஜ் பேய்: 2002-ல் இந்த கொடூரக் கொலைகள் நடந்தபோது, 'இனி வெளிநாட்டினர் முகத்தில் நான் எப்படி விழிப்பேன்' என்று வெட்கப்பட்ட மனுஷன் இவர். 'இந்தக் கொடூரன் இருக்கும் அதே கட்சியில் நானும் இருப்பதா?' என்று அக்கட்சியில் இருந்து இன்னும் இவர் விலகவில்லை! அட்லீஸ்ட் மோடியை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று இவர் முணுமுணுக்கக் கூட இல்லை!


- உச்சாநீதி மன்றம்: முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதம் இருக்க முற்பட்டபோது பொதுமக்களின் நலன் பாதிக்கப்படுவதாகச் சப்பைக் கட்டு கட்டி 'ஆட்சி கலைக்கப்பட்டுவிடும்' என்று உச்சநீதி மன்றம் மிரட்டியது. குஜராத் கொடூரங்களைப் பற்றி இத்தனை ஆதாரங்கள், வாக்குமூலங்கள் வெளியான பிறகும் கொடியவன் மோடியின் ஆட்சியை பறித்து அவனை வீட்டிற்கு அனுப்ப இந்த நீதிமன்றம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சிறு முனகலைக் கூட வெளிப்படுத்தவில்லை. ஒருவேளை குஜராத் முஸ்லிம்கள் 'பொதுமக்களில்' சேர்த்தி இல்லை போல.

- முதல்வர் கருணாநிதி: "நரேந்திர மோடி தொடர்பாக தெஹல்கா பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளதே?" என பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது "பத்திரிகைகளில் அதுபற்றி படித்துக் கொண்டிருக்கிறேன். பிறகு என் கருத்தை சொல்கிறேன்." என்று சொன்னவர்தான். இதுவரை கருத்து எதுவும் வெளியானதாகத் தெரியவில்லை! அவரோட பிரச்னை அவருக்கு! அடுத்த கூட்டணி வாய்ப்பை கெடுத்துக்கக் கூடாதில்லையா?

- சோ ராமசாமி அய்யர்: மோடியை பிரதமர் பதவிக்கு தகுதியானவன் என்று சொல்லி போற்றியவர் இவர். 'இவ்வளவு கொடூரமான ஒருவனையா நாம் ஆதரித்து எழுதினோம்' என்று இவர் இன்னும் வெட்கித் தலைகுனியவில்லை. பிஜேபி ஆட்சியில் ராஜ்யசபா எம்.பி. பதவியை அனுபவித்த விசுவாசம் தடுக்கிறது போலும். இதுவே வேறோரு கட்சியின் ஆட்சியிலுள்ள மாநிலத்தில் நடந்திருந்தால், இந்த அய்யர் எப்படி விளாசித் தள்ளியிருப்பார்?

இங்கேதான் சோ ராமசாமியின் தேசப்பற்று வெளிப்படுகிறது. ஜெர்மனியின் ஹிட்லர், இத்தாலியின் முசோலினி, உகாண்டாவின் இடிஅமீன், இவர்களெல்லாம் தங்கள் 'திருச்சேவை'களின் காரணமாக உலக வரலாற்றில் அழியாத இடத்தை பிடித்து விட்டார்கள். அதுபோல இந்தியாவின் பெயரை நிலை நிறுத்த யாரும் இல்லையே என்ற ஆதங்கத்தில்தான் சோ அய்யர் மோடியின் பெயரை பிரதமர் பதவிக்கு பரிந்துரை செய்திருக்கிறார். குஜராத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட 'சோதனை முயற்சி'யை இந்தியாவெங்கும் நடத்தி, உலக அரங்கில் இந்தியாவுக்கு நிலையான 'புகழை' பெற்றுத் தந்திடுவார் மோடி.

வாழ்க சோ ராமசாமியின் தேசப்பற்று!

(ஆனால், பாவம் இந்தியா!)

Sunday, November 11, 2007

டெஹல்கா அம்பலம்: நிரம்பி வழியும் உண்மைகள்? திகைத்து நிற்கும் மானுடம் - பேரா. அ. மார்க்ஸ்

உயிரைப் பணயம் வைத்து, ஐந்து மாத காலக் கடும் உழைப்பின் மூலம் தெஹல்கா வார இதழ் குஜராத் 2002 குறித்து, ஏற்கெனவே தெரிந்த பல உண்மைகளுக்கு மேலும் பல நிரூபணங்களை வெளிப்படுத்தியுள்ளது. இம்முறை இந்த உண்மைகள், யார் இந்த வரலாறு காணாத வன்கொடுமைகளுக்குக் காரணமாக இருந்தார்களோ, அவர்களின் வாயிலிருந்தே கசிந்திருக்கின்றன. அது தான் ஒரே வித்தியாசம்.

இந்தக் கொலை மனங்கள் ஒவ்வொன்றும், தன் முன் அந்த நுண்ணிய, ஆற்றல் வாய்ந்த உளவுக் கருவி கண் சிமிட்டிக் கொண்டிருப்பதை அறியாமல், தம்மை வெளிப்படுத்திக் கொண்டுள்ளதை வாசிப்பதற்கு அல்லது பார்ப்பதற்கு ரொம்ப நெஞ்சுரம் வேண்டும். அந்தக் காலத்தில் பரிசை கண்ணப்பத் தம்பிரான் கூத்தில் அறிவிப்பார்களே, ''இப்போது துச்சாதன் வரப்போகிறான். கர்ப்பிணிப் பெண்களும், கலங்கிய சித்தம் கொண்டவர்களும் எழுந்து சென்று விடுங்கள்'' என்று. அது போல இந்தக் கொலை வாக்கு மூலங்களை எல்லோராலும் தாங்கிக் கொள்ள முடியாது. இவற்றை எதிர் கொள்ள நெஞ்சுரம் வேண்டும். முழுமை யாகப் படித்து முடிப்பதற்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.

"ஒன்பது மாதக் கர்ப்பிணித் துலு.......... அந்தக்...........ளை வயிற்றைக் கிழித்து கருவை வாள்முனையில் குத்தி வெளியே இழுத்து உயர்த்திக் காட்டினோம். தாயையும், கருவையும் நெருப்பில் எரித்தோம்.அவர்கள் கரு உயிர்க்கக் கூடாது."

"முதியவர் இஹ்சான் ஜாஃப்ரி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. பணத்தைக் கொண்டு வந்து எங்கள் காலடியில் கொட்டிவிட்டு ஓடப் பார்த்தார். பற்றி இழுத்தோம். பின்னாலிருந்து ஒருவன் உதைத்து வீழ்த்தினான். ஒருவன் அவர் மீது கத்தியைப் பாய்ச்சினான். முதலில் கைகளை வெட்டினோம். பின்னர் ஒவ்வொரு உறுப்பாக சிதைத்தோம். குற்றுயிராய்க் கிடந்த உடலையும் கழித்த உறுப்புகளையும் நெருப்பில் எரித்தோம். செத்த உடல்களை எரிக்கக் கூடாது என்பதல்லவா அவர்களின் நம்பிக்கை."

"அது ஒரு சரிவான குழி. ஒரு புறம் சரிந்து இருக்கும், மறுமுனையோ செங்குத் தான உயரம். ஏறித் தப்ப முடியாது. அதில் போய் அவர்கள் ஒண்டினார்கள். பெட்ரோலை அள்ளி ஊற்றி எல்லோரை யும் எரித்துக் கொன்றோம்."

இப்படி இன்னும் இன்னும். இவற்றை எல்லாம் சொல்லுகிற பாபு பஜ்ரங்கி, ராஜேந்திர வியாஸ், ரமேஷ் தவே, மதன் சவால், பிரஹலாத் ராஜு, மஞ்சிலால் ஜெயின், திமன்ட் பட், தீபக் ஷா.. இவர்களெல்லாம் யார்? பஜ்ரங்கதள், வி.எச்.பி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க இந்த அமைப்புகளின் முக்கிய உள்ளூர் தலைவர்கள். தம்மை தாதாக்களாகவும், தலைவர்களாகவும், இந்து மதக் காப்பாளர் களாகவும் ஒரே சமயத்தில் அறிவித்துக் கொள்பவர்கள். இவர்கள் இன்று சிறைகளிலோ, தலைமறைவாகவோ இல்லை. வெளிப்படையாக உலவுகின்றனர். பெரிய மனிதர்களாய் தலைவர்களாய், கட்டப் பஞ்சாயத்துக்காரர்களாய் பட்டம், பதவி, பணம் எல்லாவற்றுடன் வலம் வருகிறார்கள்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு, ஒன்பது சதவீத பொருளாதார வளர்ச்சி, அணுகுண்டுச் சாத்தியமுள்ள ஐந்து வல்லரசுகளில் ஒன்று. ஐ.நா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராகும் முயற்சி.... இத்தனைப் 'பெருமைக்கும்' உரிய இந்தியாவில் இது எப்படிச் சாத்தியமானது?


இவர்கள் தன்னந்தனியாக இல்லை. இவர்களின் பின்னே, இந்தக் கொலை மனங்களின் பின்னே இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சி இருக்கிறது. 'சங்காதன்' என்று சொல்லும் பரிவாரக் கும்பல் உள்ளது. இந்துத்துவம் என்னும் கருத்தியல் உள்ளது. கோரிதான் சபாடியா என்கிற அன்றைய உள்துறை அமைச்சர், வி.எச்.பியின் மாநிலச் செயலர் ஜெயதீப் படேல், சர்வதேசச் செயலாளர் பிரவிண் தொகடியா, எல்லாவற்றிற்கும் மேலாக மாநில முதலமைச்சர் சின்ன சர்தார் நரேந்திர மோடி இருக்கிறார். இத்தனை கொடுமைகளுக்குப் பின்னும்கூட முஸ்லிம்கள் யாருடனும் ஒன்றாக வாழ மாட்டார்கள் எனச் சொல்லி மோடிக்கு ஆதரவளிக்க வாஜ்பேயி இருக்கிறார்.


'மூன்று நாள் அவகாசம் தருகிறோம் செய்து முடியுங்கள். உங்களைப் போலீஸ் கண்டு கொள்ளாது. சாட்சியங்களும் தடங்கலும் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும். கைதானவர்களுக்குச் சட்ட உதவி வழங்கப்படும். அவர்கள் குடும்பங்களுக்கு தொடர்ந்து தேவையான 'ரேஷன்'கள் வழங்கப்படும்.

உங்கள் பிள்ளைகள் பள்ளிகளில் கட்டணம் கட்ட வேண்டியதில்லை, நாங்கள் பள்ளி நிர்வாகங்களில் பேசிக் கொள்கிறோம். உங்களுக்கு எதிராக சாட்சிகள் பேசமாட்டார்கள். கொலையுண்டவர்களின் குடும்பத்தவர்கள் கூட சாட்சி சொல்ல மாட்டார்கள். உங்களை விசாரிக்கும் போலீஸ் உங்களை மிகவும் கண்ணியத்துடன் நடத்தும்...' இத்தனை உறுதி மொழிகளும் அந்த கொலை மனங்களின் பின்னால் நின்றன.

ஒன்றைச் சொல்ல மறக்கக்கூடாது. சங்பரிவாரங்கள் வாக்குத் தவறாதவர் கள் - இந்த மாதிரி விஷயங்களைப் பொறுத்த மட்டில். இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் அவர்கள் நிறைவேற்றினார்கள். நிறைவேற்றிக் கொண்டுள்ளார்கள்.

கொலை வாட்கள், கூரான திரிசூலங்கள், துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், இவைகளெல்லாம் சேகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் இன்னொரு பக்கம் வழக்கறிஞர்கள் குழு ஒன்று உருவாக்கப்படுகிறது. காவல் துறைக்கு உரிய ஆணைகள் இடப் படுகின்றன. அகமதாபாத்திலும், பரோடாவிலும் இன்னும் பல்வேறு இடங்களில் கூட்டங்கள் நடத்தப்படு கின்றன. ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பஜ்ரங்தள், துர்கா வாஹினி, பா.ஜ.க ஆகிய அமைப்புகளின் உள்ளூர் தலைவர்கள், ஒவ்வொரு கூட்டத்திலும் 60 முதல் 70 பேர்கள் வரை கலந்து கொள்கின்றனர். ''எதிர்ப்படும் முஸ்லிம்கள் எல்லோரையும் சொல்லுங்கள், சூறையாடுங்கள், அழியுங்கள் உங்களைப் போலீஸ் கண்டு கொள்ளாது...'' இன்ன பிற வாக்குறுதிகள்.


ஒவ்வொரு நிகழ்விற்குப் பின்னும் 'ஸ்கோர்' எவ்வளவு என தலைமைக்கு தகவல்கள் போய்க் கொண்டே இருக் கின்றன. மாயா கோட்னானி என்றொரு பா.ஜ.க பெண் (சட்டமன்ற உறுப்பினர்) கொலைத் தலங்கள் ஒவ்வொன்றாக 'விசிட்' செய்து ஊக்குவித்து செல்கிறார்.

கோத்ரா, அகமதாபாத் மிக அதிகமான கொலைகள் நடந்த நரோடாபாடியா என்கிற இடத்திற்கும் மோடியே நேரில் செல்கிறார். வெளிப்படையாக அவர் பேச இயலாது என்பதை கொலைஞர்கள் புரிந்து கொள்கின்றனர். அவர் வந்து சென்றதே, கண்டனங்கள் கூறாமல் அகல்வதே அவர்களுக்கு அளிக்கும் செய்தி அல்லவா! இரண்டாவது இரும்பு மனிதனல்லவா நரேந்திர மோடி. உருக்க வேண்டிய பொருள், அதனிடம் இரக்கத்தை எதிர்பார்ப்பது எங்கனம்?


மெகானி நகர் காவல் நிலைய ஆய்வாளர் கே.ஜி எர்டா 'மூன்று மணி நேரம் ஜமாயுங்கள்' என்று சொல்லிவிட்டு அகல்கிறான். பேராசிரியர் பந்துக்வாலா வின் வீட்டிற்குள் பாதுகாப்புக்கு நியமியக்கப்பட்ட காவலர்கள், கும்பல் வந்தவுடன் சீக்கிரம் வேலையை முடிக்கச் சொல்லிவிட்டு அகல்கிறார்கள்.


ஒரு போலீஸ் வேனில் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படும் முஸ்லிம்களை கூண்டோடு எரிப்பதற்கும் கொலைஞர்களிடம் வழி சொல்கிறான் எர்டா. 'நீங்கள் கல்லால் அடியுங்கள். டிரைவர் ஓடி விடுவார். பின் உங்கள் வேலையைச் செய்யலாம்''. அதே நேரத்தில் அங்கு வந்த பதான் என்கிற ஒரு முஸ்லிம் அதிகாரியால் 'காரியம்' கெட்டு விடுகிறது. அவர்கள் காப்பாற்றப் படுகிறார்கள். முஸ்லிம் காவலர்களால் இப்படிக் காப்பாற்றப்பட்ட இன்னொரு சம்பவமும் தெஹல்கா அம்பலப்படுத்துகிகிறது. காவல்துறையிலும், ரெவின்யூ துறையிலும் உரிய அளவு முஸ்லிம் பிரதி நிதித்துவம் தேவை என மனித உரிமையாளர்கள் தொடர்ந்து சொல்லி வருவதை ஒரு கணம் இத்துடன் இணைத்துப் பாருங்கள்.


சபர்கந்தாவின் பப்ளிக் பிராசிகியூட்டர் பாரத் பத், தான் எவ்வாறு முஸ்லிம் சாட்சிகளை மிரட்டினான் என்பதையும் பெருமிதத்துடன் தெஹல்கா நிருபரிடம் சொல்கிறான். மேற்சொன்ன கொலைகளுக்கு பச்சைக் கொடி காட்டும் அரசு, கொலைகாரர்களிடம் எல்லாப் பாதுகாப்புகளும் வெளிப்படும் என வாக்குறுதி அளிக்கும் ஆளுங்கட்சி, சாட்சியங்களையும் தடயங்களையும் உடனடியாக அழித்தொழிக்க சட்ட அறிஞர் குழு, குற்றவாளிகளுக்கு எதிராக வழக்காட வேண்டிய அரசு வழக்குரைஞரே ஆதரவாகக் சாட்சிகளை மிரட்டும் அவலம், பாதிக்கப்பட்டவர்களின் வாக்கு மூலங்களைச் சரிவரப் பதிவு செய்யாமலும் முறைப்படி முதல் தகவல் அறிக்கைகளை தயாரிக்காமலும், குற்றம் சாட்டப்பட்டவர் களிடம் உண்மையை அறிய முயலாமல் விருந்துபசாரம் செய்து கொண்டிருந்த காவல்துறை..., மோடியின் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்?

இல்யோதார்த் என்கிற தத்துவ அறிஞர் சொல்வது போல இது ஒரு 'முழுமையான குற்றம் (perfect crime) எந்தக் குற்றமானாலும் ஏதேனும் ஒரு பலவீனம் அதில் வெளிப்பட்டிருக்கும். புலனாய்வின் மூல ஆதாரமாக அதுவே அமையும். ஆனால் குஜராத்தில் நடந்ததோ முழுமையான குற்றம் (நுட்பமான திட்டமிட்ட படுகொலை எந்தப் பலவீனமும் இல்லை. குற்றவாளிகளைத் தண்டிக்கவே இயலாது.) உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்புமில்லை, குற்றவாளிகள் தண்டிக்கப் படாதது மட்டுமல்ல கண் முன்னே தலைவர்களாகவும் பதவி உயர்வுகளுடனும் உலா வருவார்கள். ஈடுசெய்யக் கூடிய இழப்புகளும் கூட ஈடுகட்டப்படவில்லை. அகதிகள் திரும்பி வர இயலாது, பிள்ளைகள் தொடர்ந்து பள்ளிகளில் படிக்க இயலாது, பழைய முதலாளிகள் வேலை தரமாட்டார்கள்.... முஸ்லிம்கள் மன நிலை எப்படி இருக்கும்?

கொலைகாரர்களின் வாக்கு மூலங்களை இன்னொரு முறை படித்துப் பாருங்கள். அவர்களிடம் கிஞ்சிற்றும் குற்ற உணர்வில்லை. தாங்கள் செய்தவற்றில் அவர்களுக்குப் பெருமை. 'நான் பெருமை கொள்கிறேன். இன்னொரு வாய்ப்புக் கிடைத்தால் இன்னும் அதிக முஸ்லிம்களைக் கொல்வேன்'' என்கிறான் பஜ்ரங்கி. ''முஸ்லிம்களைக் கொல்வது தான். அவர்களை உதைப்பதுதான் எங்கள் அரசியல்'' என்றும் அவன் பெருமிதம் கொள்கிறான். மற்றவர்களும் அதே குரலை ஒலிக்கின்றனர். சாரா என்றொரு குற்றப் பரம்பரைச் சாதி ஒன்று. அதே போல கர்வா, பக்ரி, காஹல், ராபரி, பஸ்மல் முதலான அடித்தளச் சாதிகள் சில. இவற்றைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் பலரையும் மூளைச் சலவை செய்து, பண ஆசை காட்டி கொலைகாரர்களாக மாற்றுகிறது இந்துத்துவம். முஸ்லிம்களைக் கொல்வதன் மூலம் இந்து மதத்திற்குச் சேவை செய்ய முடியும் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு ஊட்டப்படுகிறது. எப்படி முஸ்லிம்களைக் கொல்வது இந்து மதத்திற்கு கடமை ஆற்றுவதாக அமையும்? காலங்காலமாக இந்து மதத்தால் வஞ்சிக்கப்பட்டுக் குற்றப் பரம்பரையாக ஆக்கப்பட்டவர்கள் ஏன் இந்து மதத்தைக் காப்பாற்ற வேண்டும்? இந்தக் கேள்விகளை எழுப்ப இன்று ஒரு காந்தி இல்லை, பெரியார் இல்லை, அம்பேத்கர் இல்லை.

ஜான்சி ராணி போல உணர்ந்ததாக ஒரு கொலை மனம் கூறுகிறது. தான் ஒரு முஸ்லிம் பெண்ணை வன்முறையாக உடலுறவு கொண்டதைத் தன் மனைவி முன்பே பெருமையாகச் சொல்கிறான் இன்னொரு கொலையாளி. இதெல்லாம் என்ன? மனித மனத்தில் சிந்தனை வெறுப்புகள் எங்கே புதையுண்டு கிடந்தன? இவற்றைத் தோண்டி வெளிக் கொணரும் சாத்தியம் இந்துத்துவவாதிகளுக்கு எப்படி வந்தது?


முஸ்லிம்களை ரத்தமும் சதையுமான மனித உயிர்களாய், நேற்றுவரை நம்முடன் பழகியவர்களாய், சமூக உறவுகள் கொண்டவர்களாய் இந்தக் கொலை மனங்கள் பார்க்கத் தயாராக இல்லை. அவர்கள் தனி மனிதர்கள் இல்லை. தனி அடையாளங்கள் அவர்களுக்கில்லை. நேற்று வரை பக்கத்து வீட்டுக்காரராக இருந்த ஒருவரைக் கொன்று குவிப்பதற்கு இன்று எனக்கு வெட்கமில்லை. 'அவர்கள்' எல்லோரும் ஒரே அடையாளமுடையவர்கள். ஒட்டு மொத்தமாய் எதிரிகள் 'அவர்களைக்' கொல்வது குற்றமல்ல. பாவமல்ல. மாறாகப் பலி கொடுத்துப் 'பாரதத்தை' தூய்மை செய்வது - கொலை மனங்களின் 'லாஜிக்' இதுதான்.

இந்தக் கொலைமனங்கள் ஒளிந்திருப்பது ஏதோ பாபு பஜ்ரங்கிகளிடம் மட்டுமல்ல. ஒவ்வொரு இந்துத்துவவாதியிடமும் (இந்தக் கொலை மனம்) உள்ளது. நரேந்திர மோடி, அத்வானி, வாஜ்பேயி, தொகாடியா, சுதர்ஸன், இராம கோபாலன் எல்லோரிடம் இந்த மனங்கள் புதைந்துள்ளன. சிலர் தெஹல்காவின் உளவுக் காமெராவிடம் மாட்டிக் கொண்டு விட்டனர். இன்னும் சிலர் மாட்டவில்லை. அவ்வளவுதான்.


நன்றி: தமுமுக ஆன்லைன்

Sunday, October 21, 2007

மோடியை துரத்தும் குஜராத் பேய்கள்!



CNN-IBN தொலைக்காட்சியின் "Devil's Advocate" (சாத்தானின் வழக்குறைஞர்) என்ற Talk Show வில் தோன்றும் கரண் தாப்பர் அவ்வப்போது பிரபலங்களை நேர்காணல் செய்து பரபரப்பை உண்டாக்குவார். இவருடன் நேர்காணலுக்கு வரும் பிரபலங்களில் பலர் கலங்கியவாறே பேட்டியை முடித்துக் கொள்வர்.

சில வருடங்களுக்கு முன்னர் முன்னாள் இந்திய கிரிக்கெட் காப்டன் கபில்தேவுடனான நேர்காணலில் கண்கலங்க வைத்தார். அதேபோல் இருவருடங்களுக்கு முன் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடனான நேர்முகத்தில் நிதானம் இழக்கச் செய்தார். பாதிக்கப் பட்ட பிரபங்களும் நேயர்களும் இவரை உண்மையிலேயே சாத்தானாகப் பார்க்கும் அளவுக்கு இவரின் கேள்விகள் அவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்.

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த முஸ்லிம் இனச்சுத்திகரிப்புகளால் இந்தியாவை உலக அரங்கில் தலைகுனிய வைத்ததோடு, வாஜ்பாயின் முகத்தையும் கிழித்த (எந்த முகத்தை வைத்துக் கொண்டு இனி உலக நாட்டுத் தலைவர்களை சந்திப்பேன் என்று வாஜ்பாயே சொன்னதை நினைவில் கொள்ளவும்) நரேந்திர மோடியின் முகத்தில் அறைந்தாற்போல் கேள்விகளைக் கேட்டு திண்டாடச் செய்துள்ளார். குஜராத்தில் முஸ்லிம்கள் பலரை அகதிகளாக வெளியேறச் செய்த நரேந்திர மோடி, கரன் தாப்பருடனான பேட்டியிலிருந்து கிழிந்த முகத்துடன் வெளியேறியுள்ளார். ஐந்து நிமிடமே நடந்த் பேட்டியின் விபரம் வருமாறு:

கரண்: ஹலோ Devil's Advocate நிகழ்ச்சிக்கு வருக.

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அவர்களுக்குத் தோற்றக் கோளாறு (Image Problem) உள்ளதா? மேலும் வரவிருக்கும் குஜராத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராக முடிசூடுவாரா? இவையே இன்றைய நேர்காணலின் முக்கிய அம்சம்.

திரு. மோடி, உங்களைப் பற்றிப் பேசுவோமா? கடந்த ஆறு வருடங்களில் நீங்கள் முதல்வராக இருந்தபோது, மிகச்சிறந்த நிர்வாகியாக ராஜீவ் காந்தி பவுண்டேசன் தேர்ந்தெடுத்தது. இந்தியா டுடே வெவ்வேறு பதிப்புகளில் மிகவும் திறமையான நிர்வாகியாக அடையாளம் காட்டியது. உங்களின் முகத்திற்கெதிராகவே மக்கள் உங்களை கொடூர கூட்டுக் கொலையாளியாகவும் (Mass Murderer), முஸ்லிம்களை அச்சுறுத்தியதாகவும் முற்றிலும் இருவேறுவிதமாகப் பேசப்படுகிறீர்கள். உங்களிடம் ஏதேனும் தோற்றப்பிழை இருக்கிறதா?

மோடி: மக்கள் சொல்கிறார்கள் என்று சொல்லப்படுவதை சரியல்ல என்றே சொல்வேன். இருவர் அல்லது மூவர் மட்டுமே இவ்வாறு என்னைப் பற்றி சொல்கிறார்கள். அவர்களைக் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்பதே என்னுடைய பதில்.

கரண்: அதாவது இதை சிலரின் சூழ்ச்சி என்கிறீர்களா?

மோடி: நான் அவ்வாறு சொல்லவில்லை.

கரண்: ஆனால் நீங்கள்தான் சொன்னீர்கள். ஒருசிலர் மட்டுமே என்றீர்கள்.

மோடி: நானறிந்தவையில் இது மக்களின் குரல் அல்ல!

கரண்: 2003 செப்டம்பரில் உங்கள் அரசு மீதான நம்பிக்கையை இழந்து விட்டதாகஉச்ச நீதிமன்றம் சொன்னதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஏப்ரல் 2004-ல் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உங்களை நவீன நீரோ மன்னனாகவே வர்ணித்ததார். ஆதரவற்ற குழந்தைகளும் அப்பாவி பெண்களும் எரித்துக் கொல்லப் பட்டுக் கொண்டிருந்தபோது வேறு பக்கத்தில் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தவர் அவர். உச்சநீதிமன்றத்தின் உங்கள் மீதான கண்ணோட்டத்தில்தான் ஏதோ பிரச்னை உள்ளது.

மோடி: கரண்! தயவு செய்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை ஒருமுறை வாசியுங்கள் என்று வேண்டுகிறேன். அதில் எங்கேனும் எழுத்துப்பூர்வமாகச் சொல்லப்பட்டிருந்தால்காட்டலாம்; மகிழ்வடைவேன்.

கரண்: அப்படி எதுவும் எழுத்துப்பூர்வமாகச் சொல்லப்படவில்லை. இருந்தாலும் இதுஒரு புரிந்து கொள்ளல்.

மோடி: தீர்ப்பில் அவ்வாறு சொல்லப்பட்டிருந்தால், உங்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதில் மகிழ்ச்சியடைவேன்.

கரண் : ஆனாலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் குட்டப்பட்டது ஒன்றும் பெரிய விசயமில்லை என்று சொல்ல வருகிறீர்களா?

மோடி: என்னுடைய தாழ்மையான வேண்டுகோள், நீதிமன்றத் தீர்ப்பை வாசித்து விட்டு உங்களின் கூற்று மெய்யென்றால் மக்களிடம் கொண்டு செல்லலாம்.

கரண்: நன்று. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்து வெளிப்படையாக சொல்லப்பட்டது மட்டுமல்ல. 2004 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட 4600 மொத்த வழக்குகளில் சுமார் 2100 வழக்குகள், கிட்டத்தட்ட 40% வழக்குகளில் குஜராத்தி(முஸ்லிம்)களுக்கு நீதி மறுக்கப் பட்டுள்ளதாகக் கருதப்பட்டு அவ்வழக்குகள் மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

மோடி: வழக்கு மன்றம் நல்ல தீர்ப்பை வழங்கினால் சந்தோசப்படுவேன்.

கரண்: இந்தியா டுடே,உங்களை மிகச்சிறந்த முதலமைச்சராகவும், ராஜிவ் காந்தி பவுண்டேசன் குஜராத்தின் திறமையான நிர்வாகியாகவும் தேர்ந்தெடுத்தபோதிலும், மோடி முஸ்லிம்கள் விஷயத்தில் நியாயமின்றி நடந்து கொண்டார் என்று சொல்லப்படுவதால்தான் கேட்டேன், உங்களுக்குத் தோற்றப்பிழை (Image Problem) உள்ளதா என்று!

மோடி: நியாயமாக என் மீதான பிம்பம் பற்றி கவலைப்பட ஒருநிமிடமாவது ஒதுக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். நான் குஜராத்திற்காக ஏற்றுக்கொண்ட என்னுடையப் பணிகளில் மூழ்கியுள்ளேன். நான் ஒருபோதும் என்னுடைய பிம்பத்தைப் பற்றி பேசியதில்லை; அதற்காக ஒரு நிமிடம் கூட ஒதுக்காததும் அத்தகைய குழப்பத்திற்குக் காரணம்.

கரண்: என்ன பிரச்சினை என்றால், ஐந்து வருடங்கள் கழிந்தும் 2002 ஆம் ஆண்டு குஜராத் படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களின் ஆவிகள் உங்களைத் விரட்டுகிறது. அந்த பிரச்னையை தீர்க்க (அந்த ஆவிகளை நண்பர்களாக்க?) நீங்கள் ஏன் ஒன்றுமே செய்யவில்லை?

மோடி: கரண் தாப்பர் மாதிரியான ஊடகவியலாளர்களிடம் இதை கொடுத்து விட்டேன். அவர்கள் அனுபவிக்கட்டும்! (?)

கரண்: நான் ஒரு ஆலோசனை சொல்லட்டுமா?

மோடி: எனக்கு ஆட்சேபனையில்லை.

கரண்: குஜராத் படுகொலைகளுக்காக ஏன் நீங்கள் வருத்தம் தெரிவிக்கக் கூடாது? அரசு அவர்களைக் காக்கத் தவறி விட்டது என்று ஏன் ஒப்புக் கொண்டிருக்கக் கூடாது?

மோடி: நான் என்ன சொல்ல வேண்டுமோ அதையெல்லாம் அந்த நேரத்திலேயே சொல்லிவிட்டேன். எனது பழைய அறிக்கைகளை தேடிப்பாருங்கள்.

கரண்: திரும்ப அதைச் சொல்லலாமே!

மோடி: அவசியமில்லை! 2007 தேர்தலைப் பற்றி நான் நிறைய பேச வேண்டியுள்ளது.

கரண்: ஆக, அதை மீண்டும் சொல்லாததன் மூலம்,உங்கள் அறிக்கையை மக்களை மீண்டும் கேட்கவிடாததன் மூலம், உங்கள் மீதான பிம்பம் தொடர அனுமதிக்கிறீர்கள். அதை மாற்றுவது உங்கள் கையில்தான் உள்ளது.

மோடி: நான் ஓய்வெடுக்க வேண்டும்; குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?

கரண்: தண்ணீர் ப்ளீஸ்...!

(இந்த இடத்தில் கரண் தாப்பரிடமிருந்து பார்வையை விலக்கிக் கொண்டு, வேறு பக்கம் பார்க்கிறார் மோடி. அப்போது அவர் முகத்தில் தெரிகிறது பாருங்கள் அப்பட்டமான குற்ற உணர்ச்சி! வெல்டன் கரண்!!!)

Modi: Dosti bani rahe.bas. I'll be happy. You came here. I am happy and thankful to you. I can't do this interview. It's okay your things are. Apne ideas hain aap bolte rahiye aap karte rahiye. 3-4 questions I've already enjoyed… nahin please.

Karan Thapar: But Modi Sahab..

Narendra Modi: Nahi please, Karan.

Karan Thapar:But Modi saab..

Narendra Modi: Karan dekho main dostana sambhand rakhna chahta hoon, aap usko koshish kariye.

Karan Thapar: Mujhe ek cheez samjhayee sir. I am not talking about doing anything wrong. I am saying why can't you correct your image?

Narendra Modi: This is not the time. Uske liye aap mujhe 2002 mein mile hote 2003 mein mile hote mein sab kar leta.

Tuesday, July 24, 2007

விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள்!

தேச விடுதலை என்று வரும் போது அதில், ஜாதி, மதம், இனம் என்பதற்கெல்லாம் இடம் இல்லை. இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியர்களுக்கும் மிகச்சிறந்த பங்குண்டு. மைசூர் வேங்கை திப்பு சுல்தான், கான் அப்துல் கபார் கான் போன்றவர்களை வரலாற்றால் மறைக்க முடியவில்லை. இஸ்லாமியர்களுக்கு தனி நாடு அளிப்பதற்காக நடந்த நாட்டு பிரிவினைக்குப் பின், இந்தியாவுடனே இருந்த மவுலானா அபுல் கலாம் ஆசாத் போன்றவர்களுக்கு கூட, மிகப் பெரிய அளவில் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.

போராடிய பல இஸ்லாமிய தலைவர்கள், நவாப்புகள், போர் வீரர்கள் பெயர்கள் நமக்குத் தெரிந்தாலும், இந்திய வரலாறு துல்லியமாக தொகுக்கப்படாத காரணத்தால் பலருடைய தியாகம் மறைந்துவிட்டது என்றே கூறலாம். ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிரி மக்கி போன்றோர் இன்றும் நினைவு கொள்ளத்தக்கவர்கள். அவர் ஷம்லி என்ற இடத்தில் பிரிட்டிஷார்களை ஓடச் செய்தார். அடக்குமுறைகளையும் அக்கிரமங்களையும் எதிர்ப்பதை அடிப்படை கடமையாக இஸ்லாம் போதிப்பதால் அதை பின்பற்றும் இஸ்லாமிய பெருமக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக போரிட்டதில் வியப்பு ஏதும் இல்லை. ஷா வலியுல்லாஹ் மற்றும் ஷாவலியுல்லாஹ் தெஹ்ல்வி ஆகியோரும் பிரிட்டிஷாருக்கு எதிரான புரட்சிக்கு தலைமை தாங்கி சிறப்புப் பெற்றவர்கள். இதை பிரிட்டிஷ் தரைப்படை தளபதி தாம்சனே குறிப்பிட்டுள்ளார்.



"ஹுஜ்ஜத்துல்லாஹி பலிகா' என்ற நூலில், விடுதலை உரிமை, நம் நாட்டு சொத்து மீதான பாதுகாப்பு உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும் ஷா வலியுல்லாஹ் எழுதினார். இவரது மகன் அப்துல் அஜீஸ் தெஹ்லவி ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிரான "பத்வா'க்களை (தண்டனை பேராணை) பிரயோகித்தார். விடுதலைப் போர் துவங்கவும் "பத்வா' அறிவிக்கப்பட்டது.


சையத் அஹ்மத் ஷகீத் (1831) மார்க்க அறிஞரான இவர், உ.பி., ரேபரேலியின் விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். இவர் எல்லைப் புறத்தில் தற்காலிக சுதந்திர அரசை துவக்கினார். அது பல ஆண்டுகள் நீடித்தது. தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதியில் முஜாகிதீன்கள் உதவியுடன் சுதேசி பட்டான் படை என்ற பெயரில் பலகோட் போர்க்களத்தில் பிரிட்டிஷாரை வீரமுடன் எதிர்த்து 300 இஸ்லாமியர்கள் உயிர்த்தியாகம் செய்தார்கள். "சாதிப்பூர்உலமா' இந்த படைக்கு தலைமை தாங்கினார். 1845 முதல் 1871ம் ஆண்டு வரை இவர் பிரிட்டிஷாருக்கு எதிராக போர் புரிந்தார்.


மாவீரம் கொண்ட"மவ்லவிகள்' என்று கேட்டாலே பிரிட்டிஷார் நடுங்கினார்கள். 1857ம் ஆண்டில் முதல் சுதந்திரப் போரின் போது, 34 உலமா (இஸ்லாமிய மத சட்ட அறிஞர்) பிரிட்டிஷாருக்கு எதிராக பத்வா அறிவித்தார்கள். மவுலானா காசிம், மவுலானா ரஷீத் அகமது மற்றும் ஹபீஸ் ஜமீன் உள்ளிட்ட உலமாக்கள் போர்க்களத்திலேயே மடிந்தார்கள். முதல் சுதந்திரப் போர் சமயத்தில் 51 ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் தங்கள் இன்னுயிர் ஈந்திருக்கின்றனர். தலைநகர் டில்லியில் மட்டுமே 500 உலமாக்கள் வீரமரணம் அடைந்தார்கள். குறுநில அரசான "அவுத்'தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதைப்பார்த்த உருது கவிஞர் மிர்ஸா காலிப், "என் முன்னால்ரத்த ஆறு ஓடியதைப் பார்க்கிறேன். ஒவ்வொருவரும் கொல்லப்படுவதை பார்த்தேன். மற்றொருபுறம் பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதை பார்த்தேன்'' என்றுஎழுதினார்.


இஸ்லாமியர்கள் போரிட்டவரலாற்றை இன்று நினைத்தாலும் உடல் மெய்சிலிர்க்கும்.



சுதந்திர தின வைரவிழாவுக்கு இன்னும் 23 நாட்கள்...

.

இந்தக் கட்டுரையை வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு நன்றிகள்!

சேது சமுத்திரம் திட்டம் தொடர்பாக ஒரு முக்கிய ஆலோசனை!

அரசியல் பண்ண காரணமே இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த இந்துத்துவாக்கள் 'ராமர் பாலம்' என்ற ஒன்றை கையிலெடுத்திருக்கிறார்கள். நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு துணை புரியும் ஒரு நல்ல திட்டத்தை அரசியல் காரணங்களுக்காக பலி கொடுக்க முனைகிறார்கள் இவர்கள்.



'ராமர் பாலத்தை காக்க நாங்கள் உயிரையும் கொடுப்போம். உயிரையும் எடுப்போம்' என்கிறார் பெண் துறவி உமாபாரதி.

'ராமர் பாலத்தை அழித்து மத்திய அரசு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால், அது இந்து மதத்தையே அவமதிக்கும் செயலாகும். இது நடக்க ஒருநாளும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ராமர் பாலத்தை பாதுகாக்க எந்தவொரு தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம்' என்கிறார் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா.

ராமர் பாலத்தைக் காக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்க டெல்லியில் வருகிற 25 மற்றும் 26 தேதிகளில் 2 நாள் மாநாட்டுக்கு இந்துத் துறவிகள் அமைப்பு மற்றும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், "புராதன சின்னங்கள் மற்றும் தொல்பொருள் ஆய்வு சட்டப்படி ராமர் பாலத்தை தேசிய சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்" என்று தொகாடியா சொன்னாராம். பாபர் மசூதி போன்ற, சரித்திரப் பிரசித்திப் பெற்ற புராதன சின்னங்களை இவர்கள் இடித்துத் தள்ளுவார்களாம். ராமர் பாலம் என்ற, இல்லாத ஒன்றை இவர்கள் காப்பாற்றப் போகிறார்களாம்..!!!!

சேது சமுத்திரம் போன்ற, நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு அவசியமான திட்டங்களை இடையூறின்றி நிறைவேற்ற, மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு அவர்களுக்கு ஒரு ஆலோசனை சொல்ல விரும்புகிறேன்.

'சர்ச்சைக்குறிய அந்தப் 'பாலம்' ராமர் கட்டியதல்ல. அந்தக் கால அரபு முஸ்லிம்கள் தங்கள் வணிகப் பொருட்களை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எடுத்துச் செல்ல கட்டிய பாலம். அதனால் இதை இடிக்காமல், ஒரு புராதன சின்னமாக அறிவித்து மத்திய அரசே அதை பாதுகாக்கும்' என்று ஒரு 'பிட்'டை போட்டுப் பாருங்கள். இது மட்டும் 'க்ளிக்' ஆயிடுச்சுன்னா, 'அந்தப் பாலத்தை இடித்தே தீர வேண்டும்' என்று போராட்டம் நடத்தி, அதற்காக உயிரையும் கொடுக்க உமாபாரதி, ராமகோபாலன், தொகாடியா, சு.சாமி எல்லாம் வரிசையில் நிற்பார்கள்.

என்ன நாஞ்சொல்றது?

Monday, July 23, 2007

டாக்டர் ஹனீஃபிற்கு எதிரான ஆதாரங்கள் எதுவுமில்லை - ஆஸ்திரேலியக் காவல்துறை


மெல்போர்ன்: டாக்டர் ஹனீஃபிற்கு எதிராக கடந்த 12 நாட்களாகத் தொடரும் மிகக் கடுமையான தேடுதல் வேட்டைகளுக்குப் பிறகு, "டாக்டர் ஹனீஃபிற்கு எதிரான ஆதாரம் எதுவும் சிக்கவில்லை என்றும் ஏற்கெனவே அவருக்கு எதிராகத் தொடுத்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட தகவல் பொய்யானது என்றும் இனி ஹனீஃபை காவலில் வைத்திருப்பதில் அர்த்தமில்லை" என்றும் ஆஸ்திரேலிய காவல்துறை அறிவித்துள்ளது.

இலண்டன் விமானநிலையத்தில் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து டாக்டர் ஹனீஃபின் சிம் கார்ட் கண்டெடுக்கப்பட்டதையே அவர் மீதான குற்றச்சாட்டிற்கான முக்கிய காரணமாக ஆஸ்திரேலிய காவல்துறை கூறி வந்தது. அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கிலும் அவருக்கு எதிரான மிக முக்கிய ஆதாரமாக இதனையே ஆஸ்திரேலிய காவல்துறை ஆவணப்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் அவர் மீதான குற்றச்சாட்டிற்கு தக்க வலுவான ஆதாரம் இல்லாத நிலையில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி, அவர் நீதிமன்றத்திலிருந்து வெளிவந்த மறுநிமிடமே மீண்டும் ஆஸ்திரேலிய காவல்துறை அவரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் எடுத்ததற்கு இந்த சிம்கார்டு விவகாரமே காரணமாகக் கூறப்பட்டது.

ஆனால் இலண்டனில் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து ஹனீஃபின் சிம் கார்டு கிடைக்கவில்லை எனவும், தாக்குதல் நடந்த இடத்திலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள அவரின் மனைவியின் தம்பி வீட்டிலிருந்தே அவரின் சிம்கார்ட் மற்றும் ஸ்மார்ட் கார்ட் கிடைத்தன என்றும் காவல்துறை கூறியது. இதன் மூலம் அவர் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு அடுக்கிய காரணம் பொய்யானது என்பது தெளிவாகியுள்ளது.

எவ்வித உறுதியான ஆதாரமும் இன்றி அநீதியான முறையில் ஹனீஃப் நடத்தப்பட்டுள்ளதற்கு "பண்பாடு" மிக்க மேற்கத்திய நாடுகளின் உள்நோக்கம் தான் காரணம் ஆகும் (Haneef has been treated with gross prejudice and injustice by a purportedly "civilized" Western nation) என ஆஸ்திரேலிய மனித உரிமை ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

டாக்டர் ஹனீபின் மீதுள்ள சந்தேகத்திற்கு ஆஸ்திரேலிய காவல்துறை கருதியது அவர் இலண்டன் கிளாஸ்கோ விமான நிலைய தாக்குதலுக்கு மறுநாள் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா செல்லவிருந்தது தான். அவர் ஆஸ்திரேலியாவில் வருமானம் போதாத சூழலிலும், தன் மனைவியின் பிரவசத்திற்கு அருகில் இருக்கவுமே இந்தியா செல்லவிருந்தார் என்ற தகவல்கள் உறுதிசெய்யப்பட்ட நிலையில் காவல்துறையினரின் சந்தேகம் நீங்கி தெளிவு அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வியாழன் இரவு தன் கணவருடன் தொலைபேசியில் பேசியதாகக் கூறிய டாக்டர் ஹனீபின் மனைவி புதிதாய் பிறந்த பெண் குழந்தை பற்றி விசாரித்ததாகவும், தான் குற்றமற்றவர் என்று உறுதிபடக் கூறியதாகவும் செய்தியாளர்களிடம் உருக்கமாகத் தெரிவித்தார்.

டாக்டர் ஹனீஃப் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் விதத்தில் அவரது ஆஸ்திரேலிய குடியுரிமைக்கான ஆவணங்களில் குளறுபடி செய்து அவரது குடியுரிமை விசாவை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்த தகவலும் தற்பொழுது வெளியாகியுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத நிலையில் டாக்டர் ஹனீஃபை காவலில் அடைத்து விசாரணையைத் துவக்கிய நாள் முதல் ஆஸ்திரேலிய அரசு மீது உள்ள சந்தேகத்தை உலக ஊடகங்கள் எழுப்பி வந்திருந்தன. அது இப்போது சந்தேகமற நிரூபணம் ஆகியுள்ளது.

ஆஸ்திரேலிய சட்டக்குழுமமும் (Australian Law Council) மற்றும் சர்வதேச மனித உரிமை இயக்கமும் (Amnesty International) இணைந்து ஆஸ்திரேலியாவின் இந்த அநீதியான செயலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன.
தொடர்புடைய பிற சுட்டிகள்: தினத்தந்தி தாட்ஸ்தமிழ்.காம்

Tuesday, July 10, 2007

"உயிரை எடுப்போம்!" - துறவி உமாபாரதி கர்ஜனை!


சேதுசமுத்திரத் திட்டத்தை எதிர்த்து திருச்சியில் பாரதீய ஜனசக்தி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவி செல்வி உமாபாரதி (முன்னாள் பாஜக) "ராமர் பாலத்தை மீட்க உயிரையும் எடுப்போம்" என்று கர்ஜித்தார். அவரது பேச்சை விளையாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதாலோ என்னவோ திருச்சி போலீசார் அவர் மீது கலவரத்தை தூண்டுதல், கொலை மிரட்டல் ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பெண்துறவியான உமாபாரதி, 'சேது சமுத்திர திட்டத்தினால் பாதிக்கப்படும் 10 லட்சம் பொது மக்களில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் என்று அனைத்து மதத்தினரும் உள்ளார்கள். ராமர் பாலத்தை இடிப்பதை எதிர்த்து குரல் கொடுக்க அவர்கள் முன்வரவேண்டும். ராமர் பாலத்தை காக்க நாங்கள் உயிரையும் கொடுப்போம். உயிரையும் எடுப்போம்' என்று பேசினார். அவரது இந்த பேச்சு பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக இருப்பதால்தான் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
துறவிகளெல்லாம் ஏன்தான் இப்படி 'உயிரை எடுக்குறாங்களோ', தெரியலை!

Tuesday, June 26, 2007

இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் (வருங்கால) குடியரசுத் தலைவரே?

ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திருமதி பிரதிபா பாட்டீல் அவர்களை ஆதரிக்கப் போவதாக பாஜக-வின் முக்கிய கூட்டணித் தலைவர்களுள் ஒருவரான பால் தாக்கரே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

பாஜக கூட்டணியின் ஆதரவு பெற்ற திரு செகாவத் அவர்களும் போட்டியில் இருக்கும்போது, காங்கிரஸ் வேட்பாளரான திருமதி பாட்டீலை சிவசேனா ஆதரிப்பதாக சொல்வது சாதாரணமாக யாரையும் வியப்பில் ஆழ்த்தும் ஒரு விஷயம்தான். ஆனால் இம்முறை இந்த அறிக்கை ஒருவகையில் எதிர்பார்க்கப் பட்டதுதான் என்பதால் இது யாருடைய புருவத்தையும் உயர்த்தி யிருக்காது.

திருமதி பாட்டீலின் பெயர் ஜனாதிபதி பதவிக்கு முன்மொழியப் பட்டதுமே அவர் ஒரு காரியம் செய்தார். இந்தியாவில் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் உடை பழக்கத்தைக் குறித்து, "இது முகலாய மன்னர்களால் விளைந்த தீமை, அவர்களின் காலத்தில் அவர்களிடமிருந்து தப்பிக்க இந்திய பெண்கள் கடைபிடிக்க துவங்கியதே இந்த பர்தா முறை" என்று அவர் கருத்து தெரிவித்தார்.

எந்நேரமும் தலையில் முக்காடிட்ட வண்ணம் காட்சி தரும் ஒரு பெண்மணி, 'பர்தா' எனப்படும் இஸ்லாமியப் பெண்கள் அணியும் ஆடை முறை குறித்து இப்படி ஒரு நகைப்பிற்குறிய ஒரு கருத்தை தெரிவித்திருப்பது அவரது அறியாமையை காட்டுகிறதா என்றால் நிச்சயமாக இல்லை.

'காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் தான் ஒரு இந்துத்துவ சிந்தனை உடையவர்' என்று காட்டிக் கொண்டு இந்துத்துவாக்களையும் திருப்தி படுத்தி அவர்களின் ஆதரவும் வாக்குகளும் தனக்கே கிடைக்கே வேண்டும் என்ற லட்சியத்தில்தான் இவர் இப்படி பேசியிருக்க வேண்டும். சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தினரின் வாக்குகளையும் இவர் வாங்கினால்தால் ஜனாதிபதி பதவியில் அமர முடியும் என்ற நிலை இல்லை அல்லவா!

தான் திட்டமிட்டபடியே முதல் கட்டமாக சிவசேனாவை 'மடக்கிய'தன் மூலம், தான் ஒரு கைதேர்ந்த அரசியல்வாதி என்பதை நமது வருங்கால குடியரசுத் தலைவர் நிரூபித்திருக்கிறார்.

வாழ்க வளமுடன்!

பின் குறிப்பு:

நான் ஏன் 'குடியரசுத் தலைவரே' என்று தலைப்பிட்டிருக்கிறேன்?

ராஷ்டபதி ஆண்பாலா பெண்பாலா என்ற பிரச்னை ஒரு புறமிருக்க, மரியாதைக்குரிய பதவியில் இருக்கும் ஒரு பெண்மணியை 'தலைவி' என்று அழைப்பது சரியா? தலைவன், தலைவி ஆகியவை முறையே ஆண்பாலுக்கும் பெண்பாலுக்குமான ஒருமை விளிச்சொற்கள் அல்லவா? 'தலைவர்' என்பதுதானே இருபாலாருக்கும் பொதுவான மரியாதை விளிச்சொல்? அப்படியென்றால், 'குடியரசுத் தலைவர்' என்று அழைப்பதுதானே முறை? தெரிஞ்சவங்க யாராவது விளக்கம் கொடுத்தால் நல்லா இருக்கும்.

Monday, June 18, 2007

கொலையும் செய்வார் பார்ப்பனர்!

ஆர்குட்டில் பிராமணர்கள் ஒரு குழு அமைத்திருக்கிறார்கள் Brahmin என்ற பெயரில். அந்தக் குழுமத்தில் 7,710 உறுப்பினர்கள் இருக்கிறார்களாம்.

இந்தக்குழுவில் சமீபத்தில் ஒரு வாக்கெடுப்பு (poll) தொடங்கியிருக்கிறார்கள். தலைப்பு என்ன தெரியுங்களா? Is it the right time to kill Muslims?



முஸ்லிம்களை கொல்வதற்கு இது சரியான தருணமா?



இதற்கு இதுவரை 7 பேர் 'ஆம்' என்றும் 5 பேர் 'இல்லை' என்றும் பதில் சொல்லியிருக்கிறார்கள். இல்லை என்று சொன்னவர்கள், 'இந்த தருணம் சரியில்லை. வேறொரு தருணத்தில் கொல்லலாம்' என்ற எண்ணத்தில் வாக்களித்திருப்பார்கள் போலிருக்கிறது. ஒருவர் கூட இப்படி ஒரு தலைப்பில் வாக்கெடுப்பு நடத்துவது தவறு என்று சுட்டிக்காட்டவில்லை.

கொலைகாரப் பசங்க..! என்னதான் உயர்ந்த ஜாதி, படிச்சவனுங்க என்று சொல்லிக் கொண்டாலும் உள்மனதில் கொலைகார எண்ணம்தான் ஓடும் போல. காந்தியிலிருந்து காஞ்சிபுரம் வரை இதற்கு நிறைய உதாரணங்களை சுட்டிக் காட்டலாம்.

இந்தியாவில் உள்ள முஸ்லிம்களையெல்லாம் கொன்னுட்டு, கிருஸ்துவர்களை உயிரோடு எரித்து விட்டு, தலித்துகளை புத்தமதத்திற்கு விரட்டிவிட்டு,

2% நீங்க மட்டும் நல்லா இருங்கடே!

Thursday, June 14, 2007

RAW-விலிருந்து இன்னொரு 'தேசபக்தர்' மாயம்!

புதுடில்லி : பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகத்தில், "ரா' உளவுப் பிரிவில் உயர் அதிகாரியாக பணியாற்றிய வங்கதேச உளவாளி, 'தலைமறைவானவர்' என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில், பல்வேறு உளவு மற்றும் புலனாய்வுப்பிரிவுகள் உள்ளன. அவற்றில், முக்கியமானது, "ரா' என்று அழைக்கப்படும், "ரிசர்ச் அண்ட் அனலிசஸ் விங்க்!' இதில், துணை இயக்குனராக இருந்து வந்தவர் தேவன்சந்த் மாலிக். அவர் பற்றிய சந்தேகத்துக்கு இடமான தகவல்கள் வரவே, அவரைப்பற்றி விசாரித்துக் கொண்டிருந்தபோது, 2005ம் ஆண்டு மே மாதம் தலைமறைவானார்.

கேபினட் செயலகத்தில் உள்ள, "ஏவியேஷன் ரிசர்ச் சென்டர்' இயக்குனர் அனுஜ் பரத்வாஜ், லோதி காலனி போலீஸ் நிலையத்தில், மாலிக் தொடர்பாக அப்போது புகார் பதிவு செய்தார். போலீசாரும் தேடி வந்தனர். மேற்கு வங்க மாநிலத்தில், "24 பர்கானா' மாவட்டத்தை சேர்ந்தவர் மாலிக் என்று, அவர் பற்றிய அரசு பதிவேட்டில் விவரம் இருந்தது. அங்கு போய், அவர் முகவரியில் விசாரித்த போது தான், அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர்' என்பதே போலீசுக்கு தெரிந்தது.

இந்த விஷயத்தில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ரகசியம் காத்து வந்தனர். ஆனால், போலீஸ் நிலையத்துக்கு விஷயம் சென்றதை அடுத்து, திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத் துவங்கிவிட்டன. பிரதமர் அலுவலகத்தில், "டிசி' என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்தவர் தேவன்சந்த் மாலிக். 1999ம் ஆண்டில் இருந்து 2005ம் ஆண்டு மே மாதம் வரை பணியாற்றி இருக்கிறார். அப்போது, அவர் பற்றி விசாரணை நடக்கிறது என்று தெரிந்ததும், திடீரென காணாமல் போய்விட்டார். இப்போது அவர், "தலைமறைவானவர்' என்று பிரகடனப் படுத்தப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சகம் இது தொடர்பான அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் முக்கிய அலுவலகங்களில், உளவு பிரிவுகளில் உளவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது புதிதல்ல. கடந்த 2004ம் ஆண்டில், "ரா' உளவுப்பிரிவின் இணைச் செயலர் ரவீந்தர் சிங் என்பவர், உளவு சொல்கிறார் என்று தெரிந்ததும், அமெரிக்காவுக்கு முக்கிய ஆவணங்களுடன் தப்பியோடி விட்டார். கடந்த 2002ம் ஆண்டில், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி மாளிகையில் உளவு வேலை பார்த்ததாக 12 ஊழியர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. கடந்த 1985ம் ஆண்டு, "கூமர் நாராயண் உளவு சதி வழக்கு' பரபரப்பானது. இவர்கள் இப்போது, கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

நன்றி: தினமலர்

விளங்காத விஷயங்கள்:

RAW போன்ற சென்சிடிவான அமைப்புகளில் ஒருவரை வேலைக்கு சேர்க்குமுன்னரே அந்த நபரின் பிண்ணனியை ஆராய்ந்திருக்க மாட்டார்களா என்ன? தேசவிரோத சக்திகள் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி 1999-ல் இவரை இந்தப் பணியில் சேர்த்திருக்க வாய்ப்பிருக்கிறதா? சமீப காலத்தில் RAW, ராணுவம் போன்ற அதிமுக்கியமான துறைகளில் உளவாளிகள் கண்டுபிடிக்கப் படுவதும் 'காணாமல் போவதும்' அதிகரித்திருப்பதன் காரணம் என்ன?

தொடர்புடையை பழைய பதிவுகள்:

உளவுத்துறையில் ஒரு கருப்பு ஆடு!
ராணுவ ரகசியங்களை விற்க முயன்ற ராணுவ வீரர்
ராணுவத்தில் உளவாளிகள் ஊடுருவல்
முக்கிய ஆவணங்களை திருடிய முன்னாள் ராணுவ அதிகாரி கைது!
அரசு உயர்மட்டத்தில் தொடரும் நாட்டிற்கெதிரான துரோகங்கள்

Wednesday, June 13, 2007

லஞ்சம் கொடுப்பதற்காகவே ஒரு கரன்ஸி நோட்டு!

அண்மையில் ஒரு போக்குவரத்துக் காவலர், போக்குவரத்து விதிகளை மீறியதாக சரவணன் என்ற ஆட்டோ ஓட்டுனரை நிறுத்தினார். அவர் இலஞ்சம் கேட்க, ஓட்டுனர் ஒரு பெறும் தொகையுடைய நோட்டை கொடுத்திருக்கிறார். காவலருக்கோ ஆச்சரியம்! மகிழ்ச்சியோடு வாங்கிய காவலரின் முகம் ரூபாயில் எழுதப் பட்டிருந்த தொகையை கண்டவுடன் சிவந்து விட்டது.

ஏனெனில் மதிப்பு எழுதப்படும் இடத்தில் 'பூஜ்ய ரூபாய்' என்ற எழுத்துக்களுடன் காந்தி சிரித்துக் கொண்டிருந்தார். ரூபாயின் மேல்பகுதியில் 'அனைத்து மட்டத்திலும் இலஞ்சத்தை ஒழிப்போம்' என பொறிக்கப் பட்டிருந்தது. மேலும் வழக்கமாக ரூபாயின் 'I Promise to pay..' என எழுதப் பட்டிருக்கும் இடத்தில் 'நான் இலஞ்சம் கொடுக்கவோ வாங்கவோ மாட்டேன் என உறுதியளிக்கிறேன்' என எழுதப் பட்டிருந்தது.

அந்தக் காவலரின் முகத்தில் முதலில் மகிழ்ச்சி; பிறகு ஏமாற்றம்; அடுத்து கோபம்; எனக்கூறும் சரவணன், அந்த ரூபாயை திருப்பிப் பார்க்கச் சொல்ல, காவலரும் அச்சத்துடன் திருப்பிப் பார்க்கிறார். அதன் பின் பகுதியில் 'சமூகத்தில் அனைத்து மட்டத்திலிருந்தும் இலஞ்சத்தை ஒழிக்க ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஊக்கமும், அதிகாரமும் அளியுங்கள்' என்பதாக எழுதப் பட்டிருக்கிறது. அதன் கீழேயே, சாதாரண மக்களும் இலஞ்சத்திற்கெதிராக எவ்வாறு போராடுவது எனப் பயிற்றுவிக்கும் 'ஐந்தாவது தூண்' (5th Pillar) என்ற சமூக சேவை நிறுவனத்தின் முகவரியும் தொலைபேசி எண்ணும் இருக்கிறது.


'இதுதான் சாலையில் இலஞ்சத்தால் நேரடியாக பாதிக்கப்படும் சாதாரண மனிதன் அதை எதிர் கொள்ள வேண்டிய வழி' எனக் கூறும் திரு M.B. நிர்மல்தான் இந்த ஐந்தாவது தூணின் நிறுவனர். 'ஐந்தாவது தூண் சேவைக்காக இருக்கிறது. எங்கள் இயக்கத்தின் சின்னமாக காந்தியின் கைத்தடியை பயன்படுத்துகிறோம். ஏனெனில் அவர்தான் சேவையின் உண்மையான பிதா' என்கிறார் நிறுவனர்.




இந்த நிர்மல்தான் இருபது ஆண்டுகளுக்கு முன் 'எக்ஸ்னோரா' என்ற அமைப்பை நிறுவியவர். இன்று சாலை தூய்மை பணியில் ஒரு பெரும் சேவை நிறுவனமாக அது வளர்ந்திருக்கிறது.


நன்றி: சமரசம் 1-15 மே 2007

Thursday, May 17, 2007

நில மோசடியில் ஈடுபட்ட சாமியார் தலைமறைவு!



சென்னை: பெரும் நில மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளரும், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் சம்பந்தியுமான ஈவிபி பெருமாள்சாமி ரிஷி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தலைமறைவாகி விட்ட அவரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அதிமுகவில் முன்பு மாவட்டச் செயலாளராகவும், வாரியத் தலைவராகவும் இருந்தவர் பெருமாள்சாமி. பின்னர் கட்சியிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். அதிமுகவில் இருந்தபோது ரியல் எஸ்டேட் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.


கட்சியிலிருந்து ஒதுங்கிய பின்னர் தன்னை ஒரு துறவி போல காட்டிக் கொண்டார். தனது பெயருக்குப் பின்னார் ரிஷி என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டார். ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சில கோவில்களையும் கட்டினார்.


டோட்டலாக தன்னை உருமாற்றிக் கொண்ட போதிலும், தனது ரியல் எஸ்டேட் தொழிலை தொடர்ந்து நடத்தினார். இவருக்குச் சொந்தமாக ஒரு பொறியியல் கல்லூரியும் உள்ளது.


இந்த நிலையில் பெருமாள்சாமி மீது தி.நகரில் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வரும் ரவி அப்பாசாமி என்பவருக்கு மதுராந்தகத்தைச் சேர்ந்த பெருமாள் ரெட்டி என்பவர் ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

அதில், கோயம்பேடு 100 அடி சாலையில் பெருமாள்சாமிக்குச் சொந்தமான பூர்வீக நிலமான 26 கிரவுண்ட் நிலத்தை நீங்கள் 2005ம் ஆண்டு ஒப்பந்தம் போட்டு கடந்த மார்ச் மாதம் பதிவு செய்துள்ளீர்கள். ஆனால் அதற்கு முன்பாகவே இந்த நிலத்தை ரூ. 14 கோடிக்கு ஒப்பந்தம் போட்டு எனக்கு பெருமாள்சாமி விற்று விட்டார்.


ஆனால் நீங்கள் அவரை மிரட்டி ரூ. 31கோடிக்கு வாங்கியுள்ளீர்கள். எனவே இது செல்லாது என்று கூறியிருந்தார். சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் அவர் வழக்கு தொடர்ந்தார்.


இதை விசாரித்த நீதிமன்றம், மாம்பலம் போலீஸாரை இதுகுறித்து விசாரிக்கப் பணித்தது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ரவி அப்பாசாமி வழக்கு போட்டார். அதில், 2005ம் ஆண்டு இந்த நிலத்தை வாங்க ஒப்பந்தம் போட்டேன். நிலத்துக்கு பெருமாள்சாமி அதிக விலை சொல்லியபோதும் அதை ஏற்றுக் கொண்டு கடந்த மார்ச் மாதம் ரூ. 31 கோடியைக் கொடுத்து நிலத்தைப் பதிவு செய்தேன்.


ஆனால் தனது உறவினரான பெருமாள் ரெட்டி மூலம் திடீரென வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் பெருமாள்சாமி. அவருக்கு முறையாக நிலத்தை விற்கவில்லை பெருமாள்சாமி. நிலத்தை விற்பது தொடர்பாக அவர்கள் போட்டுக் கொண்ட ஒப்பந்தப்பத்திரம் போலியானது, அது பதிவு செய்யப்படவில்லை.


மேலும் இப்போது கூடுதலாக ரூ. 61 கோடி கொடுக்க வேண்டும் என்று கூறி பெருமாள்சாமி, அவரது மகன் சந்தோஷ் ரெட்டி, ஆகியோர் என்னை மிரட்டுகின்றனர். இதுகுறித்து விரிவாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.


இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் பெருமாள் ரெட்டி கூறுவதில் உண்மை இல்லை என்று தெரிய வந்தது. போலியான பத்திரத்தை வைத்துக் கொண்டு ரவி அப்பாசாமியை மிரட்டியதும் தெரிய வந்தது. இதையடுத்து பெருமாள் ரெட்டி, சந்தோஷ் ரெட்டியை போலீஸார் கைது செய்தனர். பெருமாள் சாமி ரிஷி, அவரது மனைவி ராஜேஸ்வரி உள்ளிட்ட 5 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.


பெரும் நில மோசடியில் ஈடுபட்டுள்ள பெருமாள் சாமி, வெறும் விளம்பரங்கள் மூலமே வளர்ந்தவர். அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் இவரது ரியல் எஸ்டேட் விளம்பரங்களைப் பார்க்க முடியும்.


தற்போதைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் சம்பந்தியான பெருமாள்சாமி, பெருமளவில் நில மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.




பின் குறிப்பு:
'ரிஷி'(?!) சாரோட போட்டோவில நெத்தியில நீ....ளமா போட்டிருக்காரே நாமம்.. அதைப் பார்த்தா உங்களுக்கு என்ன தோணுது?

Sunday, May 06, 2007

விபச்சாரிகளின் வங்கி!

தலைப்பைப் பார்த்துவிட்டு யாரும் கோபம் கொள்ள வேண்டாம். நம் நாட்டுச்சட்டப்படி விபச்சாரம் தண்டனைக்குறிய குற்றம். இருப்பினும் இங்கே ஒரு சாதனையாகச் சொல்லப்பட்டுள்ள செய்தியை படிக்கும்போது விபச்சாரம் ஒரு தேசிய தொழிலோ என்று எண்ணத் தோன்றுகிறது.

செக்ஸ் தொழிலாளர்கள் நடத்தும் வங்கியின் சாதனை

மே 05, 2007 கொல்கத்தா:

விபச்சாரப் பெண்களால் நடத்தப்படும் ஒரு வங்கி ரூ. 9 கோடி அளவுக்கு முதலீடுகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. கொல்கத்தாவில் கடந்த 1995ம் ஆண்டு உஷா பன்னோக்கு கூட்டுறவு சங்கம் என்ற கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டது. மேற்கு வங்க மாநில கூட்டுறவு வங்கியின் ஆதரவுடன் இந்த வங்கியை, தர்பார் மகிளா சம்மனய் சமிதி என்ற அமைப்பு தொடங்கியது. இந்த வங்கியை முழுக்க முழுக்க விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களே தொடங்கி நிர்வகித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தின் 5 மாவட்டங்களில் 8500 உறுப்பினர்கள் இதில் சேர்ந்துள்ளனர். இதன் முதலீடு ரூ. 9 கோடியைத் தொட்டு சாதனை படைத்துள்ளது.

மேற்கு வங்கத்தின் ரெட் லைட் ஏரியாவான சோனாகாச்சி பகுதியில்தான் முதலில் இந்த வங்கியின் கிளை தொடங்கப்பட்டது. அங்கு கணிசமான அளவு விபச்சாரப் பெண்கள் உறுப்பினராக சேர்ந்தனர். அதன் பின்னர் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விபச்சாரப் பெண்களும் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

இந்த கூட்டுறவு வங்கி ரூ . 15 லட்சம் வரை கடன் வழங்கி சாதனை படைத்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பெண்களைத் தேடிப் போய் அவர்களுக்கு இந்த வங்கி சேவை செய்து வருகிறது.

கொல்கத்தாவில் 2, தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கனா, நாடியா, முர்ஷிதாபாத் ஆகிய மாவட்டங்களில் தலா ஒன்றும் என மொத்தம் 7 கிளைகளை இந்த வங்கி கொண்டுள்ளது. வங்கியன் கடன் வழங்கும் பிரிவுக்குத் தலைமை வகிக்கும் சாந்தனு சாட்டர்ஜி வங்கியின் செயல்பாடுகள் குறித்துக் கூறுகையில், செக்ஸ் உழைப்பாளிகளின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தவே இந்த வங்கியை தொடங்கினோம். இப்போது தினசரி ரூ. 50 ஆயிரம் வரை முதலீடு செய்யப்படுகிறது என்றார்.

இந்த வங்கியின் தலைவரும் , செக்ஸ் உழைப்பாளியுமான அமிதா தாஸ் கூறுகையில், இன்னும் நிறைய சிவப்பு விளக்குப் பகுதிகளில் கிளைகள் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

வங்கியின் ஆண்டு முதலீட்டின் அளவு ரூ. 9 கோடியைத் தொட்டு விட்டதாம்.

இந்த வங்கியில் கணக்குத் தொடங்க எந்தவிதமான அடையாள ஆவணங்களும் கேட்கப்படுவதில்லை. குறைந்தபட்ச முதலீடு ரூ. 15 தான். தினசரி தாங்கள் சம்பாதிக்கும் பணத்திலிருந்து ஒரு பகுதியை வங்கியில் சேமித்து வைக்குமாறு விபச்சாரப் பெண்களிடம் இந்த வங்கி பிரசாரம் செய்கிறது. அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது.

சோனாகாச்சி பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்களில் பலர் வசதி இல்லாதவர்கள் . தங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் ஆணுறைகளைப் பயன்படுத்த மறுக்கும் நேரத்தில் தங்களிடம் பண வசதி இல்லாததால், தாங்களே வாங்கி வைத்துக் கொள்ளக் கூட முடியாத நிலையில் இருப்பவர்கள். தற்போது வங்கி வசதி வந்து விட்டதால் இவர்களே ஆணுறைகளை வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். மருத்துவ சோதனைகளையும் அவ்வப்போது செய்து கொள்ள முடிகிறதாம்.

இந்த வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் விபச்சாரப் பெண்கள் தங்கள் குழந்தைகளின் படிப்புக்கு கடன் பெற்று பயன் அடைந்து வருகின்றனராம்.

====

விபச்சாரிகள்- செக்ஸ் தொழிலாளர்களாம்!

தொழிலாளர்களின் ஆட்சி என்று சொல்லப்படும் கம்யூனிஸ்டுகள் ஆளும் மேற்கு வங்கத்தில்தான் இந்தக் கொடுமை நடக்கிறது! பாலியல் சுகத்திற்காகவும் பணத்திற்காகவும் கண்டவனுக்கும் முந்தானை விரிக்கும் விபச்சாரிகளின் செயலை உழைப்பு என குறிப்பிடுவது சரியா? காடு-கழனிகளில் அரைவயிற்றுடன் ஒருநாளின் மூன்றில் இரண்டு பங்கு கால்கடுக்க, உடல்நோக உழைக்கும் விவசாயினுடைய உழைப்பும் இதுவும் ஒன்றா?

விபச்சாரத்தில் ஈட்டும் பணத்தை சேமிக்க வேண்டுமாம்! நாடு உருப்படுமா? அதேபோல் 'குடிமகன்'களுக்கும் வங்கி லோன் வழங்கி அரசே உதவலாமே! வங்கி வழங்கும் கடன்தொகையால் ஆணுறையை போதுமான அளவுக்கு இருப்பு வைத்துக் கொள்ள முடியுமாம். இந்த கடனை அவலமான இந்த தொழிலிலிருந்து வெளிப்பட்டு வேறு தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு கொடுக்கலாமே!


இத்தகைய அவலங்களைக் கண்டுகொள்ளாமல் போனால் வெகுசீக்கிரம் அன்னை பாரதம் என்று அறியப்படும் நம்நாடு வேறு பெயரில் அறியப்படும் அபாயம் இருக்கிறது.

Saturday, May 05, 2007

காதலை எதிர்க்கும் இந்துத்துவாக்கள்!

அந்தச் செய்தியில் சம்பந்தப் பட்டவர்களின் பெயர்களோ, அவர்கள் சார்ந்த சமூகங்களோ குறிப்பிடப் படாமலிருந்தால், 'வழக்கமான காதல் பிரச்னைதானே..!' என்று அதை கடந்து போயிருப்பீர்கள். ஆனால் அதில் சம்பந்தப்பட்ட ஆண் ஒரு முஸ்லிமாகவும் பெண் சிந்தி சமூகத்தைச் சேர்ந்த ஒரு இந்துவாகவும் இருந்து தொலைத்து விட்டதால், மத்தியப் பிரதேச இந்துத்துவாக்களுக்கு 'அரசியல்' பண்ண ஒரு காரணம் கிடைத்து விட்டது. பேனையே பெருமாளா ஆக்குறவங்களுக்கு பெருச்சாளியே கிடைத்தால் சும்மா விடுவார்களா என்ன?

குஜராத்துக்கு அடுத்து சிந்தி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ள மாநிலம் மத்தியப் பிரதேசம். இதன் தலைநகரமான போபாலில் உள்ள ஈத்கா ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த பிரியங்கா வட்வாணி, பி.காம். இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி. அகமதாபாத் ஏரியாவில் பிரியங்கா குடும்பம் வசித்து வந்தபோது, பக்கத்து வீட்டு முகமது உமர் என்ற இளைஞரோடு அவருக்குக் காதல் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் 2-ம் தேதி தேர்வு எழுத கல்லூரிக்குப் போன பிரியங்கா, அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், இரு வீட்டாருக்கும் ஒரு கடிதம் வந்திருக்கிறது. அதில், ''நாங்க ரெண்டு பேரும் மேஜர். ஒருத்தரை ஒருத்தர் உயிருக்கு உயிரா காதலிக்கிறோம். எங்க காதலைக் கண்டிப்பா யாரும் ஏத்துக்க மாட்டாங்க. அதனால நாங்க இந்த ஊரை விட்டுப்போய் கல்யாணம் பண்ணிக்கிறோம். நாங்க போன பிறகு யாரும் எந்த கலவரமும் செய்யாதீங்க'' என காதல் ஜோடியான உமரும், பிரியங்காவும் எழுதிக் கையெழுத்துப் போட்டிருக்கின்றனர்.

பிரியங்காவின் கடிதத்தைப் பார்த்துக் கொதித்துப் போன அவளுடைய பெற்றோர், உமர் தங்கள் மகளைக் கடத்திக்கொண்டு போய்விட்டதாகப் புகார் கொடுத்தனர்.

ஈத்கா ஹில்ஸ் காவல் நிலைய போலீஸ், உமரின் சகோதரர் ஷகீல் என்பவரைத் தூக்கிவந்து சட்ட விரோதமாக சிறையில் அடைத்து, 'உமர் எங்கே?' என மிரட்டியது. இப்படி ஷகீல் காவல் நிலையத்தில் சித்ரவதை செய்யப்படும் காட்சிகளை எப்படியோ உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று ரகசியமாகப் படம் பிடித்து வெளியிட்டது. அதன் பிறகு கவர்னர் தலையிட்டு, ஷகீல் விடுதலை செய்யப்பட்டர். இந்த விவகாரம் எல்லா மீடியாக்களிலும் பரபரப்பான விஷயமாக... போபால் நகரம் சூடாகியது.

வி.ஹெச்.பி., பஜ்ரங்தளம் போன்ற இந்து அமைப்புகள் ஒன்றுசேர்ந்து நடத்திவரும் 'இந்து கன்னிகள் பாதுகாப்பு மன்றம்' இந்தக் காதல் பிரச்னையைக் கையில் எடுத்துக் கொண்டு, 'பிரியங்காவை மீட்டு உமரைக் கைது செய்ய வேண்டும்' என போராட்டத்தில் குதித்தது. அதன் உச்சக் கட்டமாக ஏப்ரல் 14-ம் தேதி போபால் நகரம் முழுக்க பந்த் நடத்தி தங்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள்.

இந்துத்துவ கும்பல் இரட்டை முகம் கொண்டவை என்பதற்கு இது ஒரு உதாரணம். 'இந்து கன்னிகளை பாதுகாக்க போராட்டம்' நடத்தும் இதே கும்பலைச் சேர்ந்தவன்தான் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட சொக்ராபுத்தீனின் அப்பாவி மனைவி கவுசர்பீ-யை கற்பழித்து எரித்து கொலை செய்ய காரணமாக இருந்த கயவன் வன்சாரா . இவன் RSS கும்பலில் உறுப்பினனாக இருந்தவன் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

இப்படி ஒருபுறம் காதலுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்க... மும்பையில் ஒரு கோயிலில் தனது பெயரை உமேஷ் என மாற்றி இந்துவாக மாறினார் உமர் . அதே கோயிலில் பிரியங்காவை திருமணமும் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு கோர்ட்டுக்குப் போன தம்பதி, ''எங்கள் திருமணத்தை அங்கீகரித்து, எங்கள்மீது போலீஸ் நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும்'' என மனு செய்தனர். அவர்கள் கேட்ட படியே உத்தரவிட்டது கோர்ட். ஆனாலும் பிரச்னை ஓய்ந்துவிடவில்லை.

உமர் உமேஷாக மாறிய பிறகும் ஏன் பிரச்னை ஓயவில்லை? 'யார் வேண்டுமானாலும் இந்து மதத்திற்கு மாறி வரலாம்' என்று இணையத்தில் பிரச்சாரம் செய்பவர்கள் இதற்கு பதிலளிப்பார்களா? ஒருவேளை உமர் ஆர்யசமாஜிடம் போய் ஐயாயிரமோ பத்தாயிரமோ கொடுத்து ஒரு சர்டிபிகேட் வாங்கியிருந்தால் இந்த பிரச்னை தீர்ந்திருக்குமா?

சிந்தி சமூகத்தின் போபால் நகரத் தலைவரும், உமாபாரதியின் பாரதிய ஜனசக்தி கட்சியின் தலைவர்களில் ஒருவருமான பகவன்தாஸ் சம்தானி என்பவரின் கருத்தைப் பாருங்கள்..!

''பிரியங்காகிட்ட செல்போன் இருக்கு. அதோடு டூவீலர்ல காலேஜ் போயிருக்கா. செல்போனும் டூவீலரும்தான் எல்லா பிரச்னைக்கும் காரணம். காதலர்கள் துப்பட்டாவால் முகத்தை மூடிக்கிட்டு ஊரு சுத்த ஆரம்பிச்சிடுறாங்க. எங்க சிந்தி இனப் பெண்கள் இனி வெளியே போகும்போது துப்பட்டாவுல முகத்தை மூடக் கூடாது. செல்போன், டூவீலர் பயன்படுத்தக் கூடாதுன்னு தடை விதிச்சிருக்கோம். பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் கொடுக்காம பெற்றோருடைய கண்காணிப்பிலேயே வச்சிருக்க சொல்லி இருக்கோம்''

என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு பாருங்கள்..! இந்த விஞ்ஞான யுகத்தில் உலகம் படுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கையில், இவர்கள் நூற்றாண்டுகளை கடக்க மறுத்து அங்கேயே நின்று கொண்டிருக்கிறார்கள்.! இவங்கதான் சொல்றாங்க, இஸ்லாம் பெண்களுக்கு சுதந்திரம் கொடுப்பதில்லை என்று!

இதையெல்லாம் தூக்கி சாப்புடுற மாதிரி ஒரு கண்டுபிடிப்பு இருக்கு..! அதை கண்டுபிடிச்சவர் இந்த இந்துத்துவ கும்பலை சேர்ந்தவர்தான். வி.எச்.பி தலைவர் ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர் என்பவரின் வாயிலிருந்து உதிர்ந்த முத்து இது..! "இந்துப் பெண்கள் முஸ்லிம் ஆண்களிடம் மயங்குவதற்கு உடல்ரீதியான காரணம் ஒன்று இருக்கிறது.
முஸ்லிம்கள் விருத்த சேதனம் (circumcision) செய்து கொள்வதால் அவர்களால் இந்துப் பெண்களுக்கு அதிக உடல் சுகம் (Sharirik anand) கொடுக்க முடிகிறது . இந்து ஆண்கள் இதை செய்து கொள்வதில்லை". 'இது'தான் முஸ்லிம் ஆண்களின் 'ரகசிய ஆயுதம்' என்பது இவரது கண்டுபிடிப்பு..!!!!!

அடப்பாவிகளா! இந்து மத அமைப்பு ஒன்றின் தலைவராக இருப்பவர் பேசுற பேச்சா இது? இந்து சகோதரிகளை இதை கேவலமாக வேறு யாராவது அவமானப் படுத்த முடியுமா?

பிரியங்கா வீட்டிலும் சரி, உமரின் வீட்டிலும் சரி... யாரும் பேசத் தயாராக இல்லை. போபால் முஸ்லிம் சமூகத்தின் முக்கியஸ்தரும், 'ஜமாத்-ஏ-உலமா-ஹிந்த்'தின் செய்தித் தொடர்பாளருமான ஹையத் யூசுப், ''இது உமரோட சொந்தப் பிரச்னை. இதுல நாங்க தலையிட ஒண்ணுமே கிடையாது. ஏற்கெனவே இங்கே அடிக்கடி இந்து-முஸ்லிம் பிரச்னை உருவாகும் சூழ்நிலையில் வி.ஹெச்.பி. மற்றும் பஜ்ரங்தள அமைப்புகள் இந்த விவகாரத்தை அரசியலாக்கி ஆதாயம் தேடுவதை நிறுத்த வேண்டும். ரெண்டு குடும்பமும் பேசித் தீர்த்துக்க வேண்டிய பிரச்னையை ஊதிப் பெருசாக்க நினைக்கக் கூடாது'' என்றார் வருத்தத்தோடு.

பற்றி எரியும் இந்தப் பிரச்னை பற்றிய வீடியோ செய்தியையும் கண்டு களியுங்கள்!

நன்றி: ஜூனியர் விகடன், சிந்த் டைம்ஸ்

Thursday, April 12, 2007

இந்துக்களை புண்படுத்தியதா எலிசபெத்தின் திருமணம்?

பிரபல மாடல் அழகி எலிசபெத் ஹர்லி அருண் நாயர் என்ற இந்தியரை கடந்த மார்ச் மாதம் ஜோத்பூரில் மிக ஆடம்பரமாக நடத்தப் பட்ட திருமண வைபவத்தில் கைப்பிடித்தார். இந்து மத முறைப்படி நடத்தப் பட்ட அந்தத் திருமணம் இப்போது சர்ச்சைக்கு உள்ளாகி யிருக்கிறது. அத்திருமணத்தில் 'இந்து மத சம்பிரதாயங்கள் கேலி செய்யப் பட்டிருப்பதாக' சிலர் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளனர்.

எலிசபெத் ஹர்லி முதல் காரியமாக ஆரிய சமாஜம் போன்ற இடங்களுக்கு போய் அஞ்சோ பத்தோ கொடுத்து ஒரு 'ஆரிய சமாஜி' சர்டிபிகேட் வாங்கி வைத்திருந்தார் என்றால் இந்த பிரச்னையே வந்திருக்காது.!!!

வலைப்பதிவு 'காப்பி & பேஸ்ட் வல்லுனர்' எழில் சார் அவர்களில் கண்களில் வழக்கம் போல இந்த செய்தி படவேயில்லை போலிருக்கிறது. இந்த பதிவை பார்த்த பிறகாவது,

1. இந்துமத சம்பிரதாயங்கள் என்றால் என்னென்ன?
2. அவற்றை யார் உருவாக்கினார்கள்?
3. இந்த சம்பிரதாயங்களை ஒரு வெளிநாட்டினர் கடைப்பிடித்தது ஏன் கேலியாக எடுத்துக் கொள்ளப்பட்டது?
4. கேலியில்லாமால் இந்த சம்பிரதாயங்களை கடைப்பிடிப்பது எப்படி?
5. 'இந்த சம்பிரதாயங்கள் எல்லாம் ஓகே' என்று ஆரிய சமாஜிடம் ஒரு 'No Objection Certificate' வாங்க வேண்டுமென்றால் என்ன செலவு வரும்?

போன்ற கேள்விகளுக்கு எல்கேஜி பிள்ளைங்களுக்கு புரியுற மாதிரி விளக்கி எழில் சார் அவர்கள் ஒரு பதிவு எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

Report: Hurley-Nayar wedding criticized

Model actress Elizabeth Hurley holds Damian, her four-year-old son, as husband Indian business man Arun Nayar, left, looks on, as they leave the airport after arriving in Jodhpur, India, in this March 7, 2007 file photo. A lawyer and Hindu religious activist has filed a complaint in a western Indian court saying that Hurley and Nayar's Hindu wedding made a "mockery of Hindu customs," a news report said Wednesday, April 11, 2007. Hurley and Nayar, were married in a lavish and traditional Hindu ceremony at a palace-turned-hotel in the western Indian city of Jodhpur on March 9, 2007.

NEW DELHI --A Hindu religious activist has filed a complaint in a western Indian court saying that Elizabeth Hurley and Arun Nayar's Hindu wedding made a "mockery of Hindu customs," a news report said Wednesday.

The 41-year-old British actress-model and Nayar, a 42-year-old Indian businessman, were married in a lavish Hindu ceremony at a palace-turned-hotel in the western Indian city of Jodhpur in March.

The couple first wed in a private civil ceremony in a castle outside London.

"This was a marriage for commercial purposes, but at the cost of religious feelings," Hasti Mal Saraswat, said in his complaint, The Times of India newspaper said. Saraswat is acting on behalf of Vishnu Khandelwal, a local businessman and religious activist.

Jasraj, a Hindu priest who uses just one name, also said that since the couple already had married before, they had no Hindu religious sanction to marry for a second time.

The complaint goes on to say that Hurley did not remove her footwear while walking around the sacred fire at the ceremony and wore revealing clothes.

The report had no details on when the complaint was likely to come up before a judge. India's legal system, burdened by a huge backlog of cases, is notoriously slow and it can take months and even years before complaints come up for hearing.

The petition was filed under a section of the Indian Penal Code that makes it an offense to upset any religious feelings with "deliberate and malicious intention."

Saraswat told the newspaper that Arun Nayar's father, Vinod Nayar, also will testify against the couple. Earlier this week, tabloids in England and India carried reports that Vinod Nayar has severed ties with his son after he was thrown out of the wedding on Hurley's urging.

Hurley and her husband have not commented on the reports or on the complaint.

Actress Hurley appeared in "Austin Powers: International Man of Mystery" and "Bedazzled," and for several years was the international face of Estee Lauder cosmetics. Her 4-year-old son, Damian, accompanied the couple on their trip to India.

Monday, April 09, 2007

இந்தியாவில் "கோமாதாவை விட மாதாவின் விலை மலிவு!" - தினமலர் செய்தி

'இந்து மதத்துக்கு வாங்க.. வாங்க' என்று ஒரு காலத்தில் கூவிக் கொண்டிருந்தார் எழில் என்பவர். ஏதோ இலவச அழைப்பா இருக்கும் என்று நினத்தால், இதெல்லாம் ஒரு வியாபார தந்திரம் என்பது பிறகுதான் தெரிந்தது. சும்மா இல்லைங்க.. யாராவது ஒரு ஏமாளி இந்து மதத்துக்கு மாறி வர்றேன்னு வந்தா ஐயாயிரம் பத்தாயிரம்னு பிடுங்கிட்டு ஒரு சர்டிபிகேட் கொடுப்பாங்களாம். இந்த ஏமாற்று கும்பலுக்கு தன்னோட வலைப்பதிவிலும் விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள் சிலர். கூட்டு களவாணித்துவமா இருக்குமோ?


தன்னோட மதத்தைப் பத்தி உசத்தியா சொல்லிக்கொள்ள ஒன்னுமில்லை என்பதால், 'சூடானில் அடிமை வியாபாரம் நடக்கிறது! மலேசியாவில் இந்துக்கோவில் இடிக்கப்பட்டது!! பாகிஸ்தானில் கோமாதாவை பிரியாணி போட்டார்கள்!' என்பது போன்ற உலகச் செய்திகளை, அவை இஸ்லாம் பற்றிய எதிர்மறையான செய்திகளாக இருந்தால் உச்சிக்குடுமி கூத்தாட அப்படியே காப்பி பேஸ்ட் செய்து ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறார் ஒருவர். இப்படிச் செய்தாலாவது தனது மத வியாபாரத்தை தூக்கி நிறுத்திவிட முடியாதா என்ற ஒரு நப்பாசைதான்!

இந்த 'காப்பி & பேஸ்ட் வல்லுனரின்' பார்வையில் படாத ஒரு செய்தி நம் கண்ணில் பட்டது. தினமலர் செய்திகளில் காவிப்பொடியை துடைத்துவிட்டுத் தேடினால் அரிதாக சில நல்ல செய்திகளும் தென்படும்! அந்தவகையில் தினமலரில் கண்ட செய்தியை அப்படியே காப்பி & பேஸ்ட் செய்கிறேன்.

வாசித்துவிட்டு வெறுமனே போய்விடாமல், இதற்கெல்லாம் யார் காரணம்?என்று கருத்துச் சொல்லவும் வேண்டுகிறேன். வெறுமனே சூடானையும், பாகிஸ்தானையும் பற்றி பஜனை பாடிக் கொண்டிருக்காமல், (அப்படி பஜனையடித்துக் கொண்டிருந்ததால்தான் சென்றமாதம் 30,00,000 இந்துக்கள் புத்தமதத்தை நோக்கி மாராத்தான் ஒட்டினார்கள்) இந்த சுதேசிப் பிரச்சினைக்கு தீர்வுகாணவும் முன்வர வேண்டுகிறேன். வெட்கம் மானம் சூடு சொரனை etc உள்ளவர்கள் இதைத்தான் செய்வார்கள்!

"இந்தியாவில் மாட்டின் விலையை விட, பெண்கள் மற்றும் குழந்தைகள் விலை மலிவாக உள்ளது. 500ல் இருந்து இரண்டாயிரம் ரூபாய் வரை இவர்கள் விற்கப்படுகின்றனர்' என்று பிரபல தன்னார்வ தொண்டு நிறுவனம் வேதனை தெரிவித்துள்ளது.

இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில் பெண்கள், குழந்தைகள் விற்கப்படுவது அதிகரித்து வருகிறது. விபசாரத்துக்குத் தான் பெண்களை இந்தியாவில் அதிகமாகக் கடத்துகின்றனர். கொத்தடிமை வேலைக்காக கடத்தப்படுவது, இப்போது ஓரளவுக்கு குறைந்துள்ளது. கோல்கட்டா நகரில் இயங்கி வருகிறது, "பச்சான் பச்சாவோ அந்தோலன்' என்ற தன்னார்வ அமைப்பு. குழந்தைகள், பெண்கள் கடத்தப்படுவதும், விற்கப்படுவதும் அதிகரிப்பதை தடுக்க, இது நடவடிக்கை எடுத்து வருகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதி புவன் ரிப்பு, சில திடுக்கிடும் தகவல்களை நிருபர்களிடம் வெளியிட்டார்.

அவர் கூறியதாவது:
தெற்காசிய நாடுகளில் பெண்கள், குழந்தைகள் கடத்தப்படுவது, விற்கப்படுவது அதிகரித்து வருகிறது. விபசாரத்தில் தள்ளவும், கொத்தடிமை வேலை செய்யவும் தான், இவர்கள் கடத்தி விற்கப்படுகின்றனர்.

திட்டமிட்டு சில சமூக விரோத கும்பல்கள், குழந்தைகளை இந்தியாவில் கடத்துகின்றன. சில மாநிலங்கள் தான், இந்த கும்பல்களைக் கண்காணித்து, போலீஸ் ஒடுக்குகிறது. "குழந்தையைக் காணவில்லை' என்று புகார் செய்யும் பெற்றோருக்கு, தங்கள் குழந்தை கடத்தப்பட்டு, விற்கப்படுவது பற்றிய தகவல் தெரிவதே இல்லை. போலீசும், குழந்தைகள் கடத்தல் பற்றிய விஷயத்தில் அக்கறை செலுத்துவதில்லை. உ.பி., பீகார் போன்ற மாநிலங்களில் குழந்தைகள் கடத்தல் நடந்தாலும், ஆங்காங்கு போலீஸ் நிலையங்களில், சாதாரண வழக்கு பிரிவில் தான், புகார் பதிவு செய்யப்படுகிறது. இந்தியாவில் உள்ள நிலைமை பற்றி சொல்ல வேண்டுமானால், மாட்டின் விலை கூட அதிகமாக உள்ளது. ஆனால், கடத்தி விற்கப்படும் குழந்தைகள், பெண்கள் விலை, 500 ரூபாயில் இருந்து அதிகபட்சம் இரண்டாயிரம் ரூபாய் தான். மத்திய அரசு, இது தொடர்பாக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் தான், குழந்தைகள், பெண்கள் கடத்தி விற்கப்படுவது அதிகரிப்பதை தடுக்க முடியும். இவ்வாறு புவன் ரிப்பு கூறியுள்ளார்.

http://www.dinamalar.com/2007april08/general_ind11.asp

இந்த செய்தியை படிச்ச பிறகாவது இவங்களுக்கெல்லாம் சொரணை வருதான்னு பார்ப்போம்!!!

Sunday, March 25, 2007

விவேகானந்தர் பார்வையில் இஸ்லாம்!

இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளை நடத்திய புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு. சொக்கலிங்கம் உரையாற்றிய போது அவர் சொன்னார், "விவேகானந்தருக்கு இஸ்லாம் மிகவும் பிடித்திருக்கிறது. காரணம் என்ன? அவர் சொன்னார்: இந்திய சமூகம் எப்படி இருக்க வேண்டுமெனில் with vedantic brain and Islamic body. இது விவேகானந்தரே எழுதியவை. தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அனைத்தும் இதில் இருக்கிறது."

இதைப் படித்த பிறகுதான் அதுவரை விவேகானந்தரைப் பற்றி அதிகம் அறிந்திராத எனக்கு அவரைப் பற்றியும் அவரது கொள்கைகள், போதனைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் இந்துத்துவாவாதிகள் குரு என போற்றும் ஒரு ஆன்மீகத் தலைவர் இத்தகைய நல்லிணக்கக் கருத்துக்களையும் கொண்டிருப்பாரா என்ற ஆச்சரியமும் எனக்கு இருந்தது. ஏனென்றால் இந்துத்துவமும் மதநல்லிணக்கமும் mutually exclusive என்பது நாமெல்லாம் அறிந்த ஒன்றுதானே? இது இருக்கும் இடத்தில் அது இருக்காது!

விவேகானந்தரைப் பற்றி நான் இணையத்தில் தேடிக் கொண்டிருந்த போதுதான் எனக்கு அதிக சிரமம் வைக்காமல் அவரது கருத்துக்கள் என சிலவற்றை ஜடாயு என்பவர் தன் பதிவில் வைத்திருந்தார். அதைப் படித்தபோது இந்துத்துவாக்கள் ஏன் இவரைப் போற்றி புகழ்கிறார்கள் என்ற உண்மை வெளிப்பட்டது. ஆனால் ஒரு சிறந்த சிந்தனாவாதி என போற்றப் படும் விவேகானந்தர் இப்படியும் சொல்லியிருப்பாரா, அல்லது இன்றைய இந்துத்துவவாதிகள் அவரது கருத்துக்களை தங்களின் கருத்தியல்புகளுக்கு ஏற்ப திரித்து கூறுகிறார்களா என்ற சந்தேகமும் இருக்கிறது. ஏனென்றால் கருத்துத் திரிப்பு என்பது இவர்களுக்கு கை வந்த கலை ஆச்சே!

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மிஃராஜ் என்னும் விண்ணுலகப் பயணத்தைக் குறித்து விவேகானந்தரின் கருத்தாக இவர்கள் சொல்கிறார்கள்,


"ஒருநாள் கேப்ரியேல் தேவதை ஒரு குகையில் தம்மிடம் வந்ததாகவும், தன்னை ஹரக் என்ற தேவலோகக் குதிரையில் சுவர்க்கத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் முகமது கூறினார். இதை வைத்துக் கொண்டு, பின்னர் முகமது சில ஆச்சரியகரமான உண்மைகளைப் பற்றிப் பேசினார். நீங்கள் குரானைப் படித்தால் அதில் உள்ள பெரும்பாலான ஆச்சரியகரமான உண்மைகள் மூடநம்பிக்கைகளுடன் கலந்திருப்பதைப் பார்க்கலாம். அந்த மனிதர் உணர்ச்சி பெற்றார், வாஸ்தவம் தான், ஆனால் அந்த உணர்ச்சி தடுக்கி விழுந்ததால் ஏற்பட்டது. அவர் பயிற்சியடைந்த யோகி அல்லர், தான் என்ன செய்கிறோம் என்றே அவர் அறிந்திருக்கவில்லை."


மிஃராஜ் பயணத்தைப் பற்றி ஒரு சாதாரணர் இத்தகைய கருத்துக்களை கொண்டிருந்தால் அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் ஒரு சிந்தனாவாதியாகவும் வேதாந்தியாகவும் போற்றப்படும் விவேகானந்தர் இது போன்ற முதிர்ச்சியற்ற கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தால் அது ஆச்சரியமான ஒன்றுதான்.

தன்னை ஒரு யோகியாக கருதிக் கொண்டிருந்த விவேகானந்தர், நபி (ஸல்) அவர்களையும் தன்னைப் போல ஒரு யோகி என்ற பிம்பத்தில் அடைக்க முயன்றிருக்கிறார். ஆனால் மிஃராஜ் விண்ணேற்றம், வஹி எனப்படும் இறைவசன வெளிப்பாடுகள் போன்ற நிகழ்வுகள் யோகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் யாருக்கும் நேரக்கூடிய அனுபவங்களல்ல. ஒரு யோகி என தான் நினத்துக் கொண்டிருக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இத்தகைய அனுபவங்கள் நேர்ந்தது எப்படி என்பதை விவேகானந்தரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த சூழ்நிலையில் ஒரு சாதாரணர் வரும் முடிவுக்குத்தான் விவேகானந்தர் வந்திருக்கிறார். அதாவது நபி (ஸல்) அவர்களுக்கு நேர்ந்த அனுபவங்கள் கற்பனையானதாக வெறும் பிரமையாகத்தான் இருக்கும் என்ற முடிவு.

ஆனால் உண்மை என்ன? நபி (ஸல்) அவர்களை ஒரு யோகி என விவேகானந்தர் கற்பிதம் செய்திருந்ததுதான் தவறு. நபி (ஸல்) அவர்கள் ஒரு யோகி அல்லர். அவர் தன்னை ஒரு யோகி என்று என்றும் சொல்லிக் கொண்டதில்லை. ஒரு யோகிக்கு தேவையான பயிற்சிகளை அவர் மேற்கொண்டதில்லை. அவர் இறைத்தூதர். அவருக்கு நேர்ந்த அனுபவங்கள் ஒரு இறைத்தூதருக்கு நிகழக்கூடியதுதான்.

ஒரு சிந்தனாவாதியாக போற்றப்படும் விவேகானந்தருக்கு இந்த எளிய உண்மை விளங்காமல் போனது எப்படி? I think he just failed to think out of the box! அறிஞர் பெருமக்கள் தங்களுக்கு முழுதும் விளங்காத ஒன்றைப் பற்றி கருத்து தெரிவிக்க மாட்டார்கள். ஆனால் விவேகானந்தர் தான் அரைகுறையாக மட்டுமே அறிந்திருந்த மிஃராஜ் பற்றி தனது கருத்துக்களை வெளிப் படுத்தியிருப்பது நம்மை மேலும் ஆச்சரியத்திற்குள்ளாக்குகிறது.


விவேகானந்தரின் கருத்தாக மேலும் சொல்கிறார்கள்;
பல முகமதியர்கள் இந்த விஷயத்தில் மிக வக்கிரமானவர்கள், மிக குழுவெறி கொண்டவர்கள். அவர்களது மந்திரம்: ஒரே கடவுள், முகமது அவரது இறைத்தூதர். இது அல்லாத மற்ற விஷயங்கள் எல்லாம் மோசமானவை மட்டுமல்ல, உடனே அழித்து ஒழிக்கப் படவேண்டியவை. ஒரு கண நேர முன்னறிவிப்பில் இதை முழுவதும் நம்பாத ஒவ்வோர் ஆணும், பெண்ணும், கொல்லப் படவேண்டும். இந்த வழிபாட்டு முறை இல்லாத மற்ற எல்லாம் உடனடியாக உடைத்து நொறுக்கப் படவேண்டும். இது தவிர வேறு எதையாவது கற்பிக்கும் எல்லா புத்தகங்களும் எரிக்கப் படவேண்டும். பசிபிக்கில் இருந்து அட்லாண்டிக் வரை 500 வருடங்கள் உலகம் முழுவதும் ரத்த ஆறு ஓடியது: அது தான் முகமதியம்!

அப்பட்டமாக ஒரு இந்துத்துவவாதியின் குரல் இங்கு வெளிப்படுகிறது! இஸ்லாம் (இங்கு முகமதியம் என்ற சொல்லை பயன்படுத்துகிறார் விவேகானந்தர்) ஒரு சகிப்புத் தன்மையற்ற மார்க்கம் என்று சொன்ன அதே விவேகானந்தர் இன்னொரு இடத்தில் இப்படி சொல்லியிருக்கிறார்.


...சமய உலகின் முடிந்த முடிபான தத்துவம் அத்வைதம். ஏனென்றால் அத்வைதம் என்ற நிலையில் இருந்து தான் ஒருவர் எல்லா சமயங்களையும், எல்லா இனங்களையும் அன்போடு நோக்க முடியும்.... ஆனால் மனிதகுலம் முழுவதையும் தன் ஆன்மா போலக் கருதும் நடைமுறை அத்வைதம் அதன் முழுமையான அளவில் இந்துக்களால் வளர்க்கப் படவில்லை. என் அனுபவத்தில், இந்த சமத்துவம் என்ற விஷயத்தை ஓரளவு பாராட்டத் தக்க வகையில் அணுகிய ஒரு மதம் இருக்குமென்றால், அது இஸ்லாம்.

'பிற சமயத்தவரை கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது' என்று சொன்ன அதே மனிதர் 'எல்லா சமயங்களையும் எல்லா இனங்களையும் அன்போடு நோக்கும் சமத்துவத்தை பாராட்டத்தக்க அளவில் அணுகிய மதம் இஸ்லாம்' என்றும் சொல்லியிருக்கிறார். என்ன ஒரு முரண்பாடு? ஒரு சிந்தனாவாதி இப்படியா முன்னுக்குப் பின் முரணாக பேசுவார்?

விவேகானந்தரின் இன்னொரு கூற்று:


வேதங்களைக் கடந்த, பைபிளைக் கடந்த, குரானைக் கடந்த ஓர் இடத்திற்கு மனிதகுலத்தை இட்டுச் செல்லவே நாம் விழைகிறோம். ஆனால் இதைச் செய்வதற்கு வேதங்களுக்கும், பைபிளுக்கும், குரானுக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தியாக வேண்டும். ஒருமை என்ற ஒரே மதத்தின் பல்வேறு மாறுபட்டவெளிப்பாடுகளே இந்த மதங்கள் எல்லாம் என்று மனிதகுலத்திற்குக் கற்றுக் கொடுக்க வெண்டும். தனக்குப் பொருத்தமான வழியை ஒவ்வொருவரும் தேர்ந்தெடுக்க அது வழிசெய்யும்.

கிருஸ்துவர்கள் பைபிளுக்கு இன்றும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். முஸ்லிம்களுக்கு குர்ஆன் இன்றளவும் வழிகாட்டியாக இருந்து வருகிறது. ஆனால் இந்துமத வேதங்கள் இந்துக்களாலேயே எப்பொழுதோ மறக்கப் பட்டு விட்டன. அவை வழக்கொழிந்து போய் பல காலமாகி விட்டது. மேற்கண்ட விவேகானந்தரின் கூற்றுக்கு ஒரு பொருள்தான் இருக்க முடியும், 'நாங்கள் ஏற்கனவே எங்கள் வேதங்களை புறக்கணித்து விட்டதைப் போல கிருஸ்துவர்களும் முஸ்லிம்களும் அவரவர் வேதங்களை புறக்கணிக்க வேண்டும்'.

இதையே கொஞ்சம் கொச்சையாக சொல்ல வேண்டுமெனில், 'ஏற்கனவே குப்பைக்கு போன உமியை நான் கொண்டு வர்றேன், நீ உன்னுடைய அவல் கொண்டு வா, அது ரெண்டையும் கலந்து குப்பையில வீசிட்டு நாம ரெண்டு பேரும் 'அம்போ'ன்னு நிப்போம்' என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஒரு ஆன்மீகவாதியான விவேகானந்தர் இப்படியா சொல்லியிருப்பார்? நம்ப முடியவில்லை!

பி.கு:

மேலே குறிப்பிட்ட பதிவை படிக்குமுன் விவேகானந்தரைப் பற்றி நான் உயர்வாகத்தான் நினைத்திருந்தேன். இப்போது, நான் அந்தப் பதிவை படித்திருக்கவே கூடாதோ என்று நினைக்கிறேன்.

Thursday, March 22, 2007

4. இந்துமத சுலோகங்கள் உணர்த்தும் உண்மைகள்

அதர்வண வேதம் 20-ம் நூல் 127வது காண்டம் சுலோகம் 1-13

சுலோகம் 1. அவர் நரசன்ஷா (புகழுக்குறியவர்) - முஹம்மது. அவருக்கு 60090 எதிரிகள் இருந்தும் அவர் பாதுகாப்புடன் கூடிய ஒரு சாந்திமிகு தலைவராக இருப்பார்.

சுலோகம் 2. அவர் ஒட்டகத்தில் சவாரி செய்யும் ஒரு ரிஷியாவார் ''மம்ஹா"

சுலோகம் 3. அவர் ரிஷியாவார். அவருக்கு 100 தங்க நாணயங்களும் பத்து கழுத்து அணிகலன்களும் 300 நல்ல குதிரைகளும் பத்தாயிரம் பசுக்களும் வழங்கப்படும்.

சுலோகம் 4. அவர் இறைவனை துதிப்பவராய் இருப்பார்.

சுலோகம் 5. வணக்க வழிபாடுகளில் தீவிர முயற்சி எடுப்பார்.

சுலோகம் 6. அவருக்கு இறைவன் புறமிருந்து அநேக அருள் வளங்கள் உண்டு.

சுலோகம் 7. அவர் சிறந்த அரசர், மனிதர், மனித சமுதாயத்திற்கு சிறந்த வழிகாட்டி.

சுலோகம் 8. அவரும் பாதுகாப்பில் இருப்பார். பிறருக்கும் பாதுகாப்பு வழங்குவார்.

சுலோகம் 9. உலக சாந்திக்கு உழைப்பார்.

சுலோகம் 10. அவரின் ஆட்சியில் மக்கள் வளமும், மகிழ்வும் பெறுவர். வறுமை அகன்று வளம் கொழிக்கும்.

சுலோகம் 11. அவர் அச்ச மூட்டி எச்சரிக்க தூண்டுவார்.

சுலோகம் 12. அவர் கொடைத் தன்மையும் தாராளமனமும் கொண்டவர்.

சுலோகம் 13. அவரைப் பின்பற்றுவோர் கொலை, கொள்ளை போன்ற கொடுமைகளிலிருந்து இறையருளால் பாதுகாப்பு பெற்று தம் தூதரையும் காத்தனர்.

சுலோகம் 14. இறைவனைப் போற்றிப் புகழ்ந்து தீய விளைவுகளில் இருந்தும் பாதுகாப்பு கோரினர்.

இந்த சுலோகங்களின் விளக்கங்களைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

1. சமஸ்கிருத வார்த்தை ''நரஷன்ஸா" என்றால் புகழுக்குறியவர், அரபிய மொழியில் முஹம்மது ஆவார். சமஸ்கிருத வார்த்தை ''கௌரமா" சாந்தியைப் பரப்ப உழைப்பவர். மற்றொரு பொருள் இடம் பெயர்ந்து சென்றவர். அதாவது மக்காவிலிருந்து மதீனாவுக்கு இடம் பெயர்ந்து சென்றவர். அவரின் 60090 எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெற்றவர்.

2. இறைத்தூதர் ஒட்டகச் சவாரி செய்பவர். உறுதியாக இந்தியத் தூதர்களைக் குறிப்பிடவில்லை. எவரும் இந்தியாவில் ஒட்டகத்தின் மீது சவாரி செய்வதில்லை. பிராமணர்கள் ஒட்டகச் சவாரி செய்யத் தடை உள்ளது. (மனுஸ்மிருதி பாகம் 25, பக்கம் 472).

மனுஸ்மிருதி அத்தியாயம் 2, சுலோகம் 202 கூறுகிறது. ''ஒரு பிராமணன் ஒட்டகக் கழுதைச் சவாரி செய்வது தடை செய்யப்பட்டது. நிர்வாணமாய் குளிப்பதும் தடையாகும். அவனுடைய மூச்சால் அவனை சுத்தப்படுத்திக் கொள்ளவும்"

3. முஹம்மது எனும் இறைத்தூதர் பெயரை மம்ஹா எனும் ரிஷி என சுலோம் கூறுகிறது. சமஸ்கிருதத்தில் மஹ்மத் என்பது கெட்ட வார்த்தையாகும். ஆகவே மம்ஹா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

4. அவருக்கு வழங்கப்பட்ட நூறு தங்க நாணயங்கள் அவரின் சிறந்த தோழர்களைக் குறிக்கிறது. ஏகத்துவத்தை ஏற்ற அத்தோழர்களைக் குறிக்கிறது. ஏகத்துவத்தை ஏற்ற அத்தோழர்கள் மக்கத்து இணைவைப்போரால் துன்புறுத்தப்பட்டு அபீஷினியா, மதீனா இடம் பெயர்ந்தனர். பின்னர் மதீனாவில் ஒன்று கூடினர். அவருக்கு வழங்கப்பட்ட 10 கழுத்து அணிகலன்கள் இஸ்லாம் கூறும் ''அஸ்ரத்துல் முபஷ்ஷரா" ஆகும். சுவனத்திற்கு இறைத்தூதரால் நன்மாராயம் கூறப்பட்ட பத்துபேர் (நபித்தோழர்கள்). அவர்களாவன அபூபக்கர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அலி(ரலி), தல்ஹா(ரலி), ஜுபைர்(ரலி), அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி), ஸஆத் பின் அபீவக்காஸ்(ரலி), ஸஆத் பின் ஜைது(ரலி), அபூ உபைதா(ரலி). தூதருக்க வழங்கப்பட்ட 300 குதிரைகள் பத்ருப்போரில் போரிட்டு வெற்றி ஈட்டித்தந்த நபித்தோழர்களைக் குறிக்கும் மூன்று மடங்கு அதிகமாக இருந்த எதிரிகளை வெற்றி கொள்ளப் போரிட்ட இந்நபித்தோழர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்ததாக இஸ்லாம் கூறுகிறது. 10000 பசுகள் என்பது இறைத்தூதருடன் மக்கா வெற்றியின் பொது வந்த நபித்தோழர்களைக் குறிக்கிறது. அவர்கள் பரிசுத்தமான, போராடக் கூடிய தீரர்கள் என்பதை அருள் மறையின் கீழ்கண்ட வசனம் கூறுகிறது.

முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும் அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும் இதுவே தவ்றாத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது. பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.(48:29)

''ரெப்ஹ்" என்னும் சமஸ்கிருத வார்த்தையின் அர்த்தம் அரபியில் அஹ்மத் ஆகும். இது இறைத்தூதரின் மற்றொருபெயர்.

5. இறைத்தூதரும் அவரின் தோழர்களும் இறை வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துவர். அது போர்களமாக இருந்தாலும் சரியே.

குர்ஆனின் கீழ் கண்ட வசனம் இதைத் தெளிவுப்படுத்துகிறது.

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள் எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்குத் தவிர மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.(2:45)

(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும் அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப்பற்றியும், உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனக் குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து (தாக்கி) விடலாமென்று காஃபிர்கள் விரும்புகின்றனர்; ஆனால் மழையினால் உங்களுக்கு இடைஞ்சல் இருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருப்பதினாலோ, உங்களுடைய ஆயுதங்களைக் (கையில் பிடிக்க இயலாது) கீழே வைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது. எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான்.(4:102)

6. இறைத்தூதருக்கு வழங்கப்பட்ட அருள் வளங்களில் ஒன்று அருள் மறை குர்ஆன் ஆகும். அதனை இறைத்தூதர் தம் தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்தார், அவர்கள் அதனை மனனம் செய்தனர்.

குர்ஆனின் கீழ்கண்ட வசனங்கள் இதனைத் தெளிவுப்படுத்துகிறது.

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.(21:107)

இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை. ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்(34:28)

மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.(68:4)

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.(33:21)

7. கஃபா (மக்காவில் உள்ள இறைவனின் ஆலயம்) புணர்நிர்மாணத்தின் போது அரபுக் கோத்திரங்களுக் கிடையில் எழுந்த போர் மூட்டத்தைக் போக்கி சமாதானம் நிலவச் செய்தவர். இறைத்தூதர் மக்கா வெற்றி கூட மிகப் பெரிய நிலப்பரப்பை இரத்த சேத மின்றி அறுர்மியவர். நபி(ஸல்), தம்மை எதிர்த்த மிகப்பெரும் விரோதிகளையும் மன்னித்த இறைத்தூதர்.

8. அறியாமைக்கால இருளில் மூழ்கிக்கிடந்த அரபுலக மக்களை தம் போதனைகளால் நேர்வழியின் பக்கம் அழைத்தவர்.

குர்ஆன் கூறுகிறது:

74:1 (போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே!

74:2 நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக.

74:3 மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.

3:159 அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள் எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும் பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.

114:1 (நபியே!) நீர் கூறுவீராக. மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.

114:2 (அவனே) மனிதர்களின் அரசன்.

114:3 (அவனே) மனிதர்களின் நாயன்.

வேதங்களைப் பின்பற்றுவோர், இறைவனைப் போற்றிப்புகழ்ந்து இறைத்தூதரைப் பின்பற்றி நரக நெருப்பிலிருந்து விடுபட வேதங்கள் கூறும் சுலோகங்கள் தான் மேலே கூறப்பட்டவை.

ஆக்கம்: நெல்லை இப்னு கலாம் ரசூல்
நன்றி: இஸ்லாம்கல்வி.காம்

Tuesday, March 20, 2007

3. இந்துமத புனித நூல்கள்!

இந்துவத்தில் புனிதம் வாய்ந்த இருவகை நூல்கள் உள்ளன 1) ஸ்ருதி 2) ஸ்மிருதி.

ஸ்ருதி
ஸ்ருதி என்றால் கேட்கப்பட்டு, உணரப்பட்டு, புரியப்பட்டது அல்லது அருளப்பட்டது, மிகப் பழமையான பிரசித்தி பெற்றது ஆகும். ஸ்ருதி இரு வகைப்படும் அவை 1) வேதங்கள் 2) உபநிஷங்கள்.

ஸ்மிருதி
ஸ்ருதி போல் புனிதம் வாய்ந்ததல்ல இருப்பினும் இந்துக்களால் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. "ஸ்மிருதி" என்றால் ஞாபகங்கள் அல்லது நினைவூட்டல்கள். இந்து இலக்கியங்கள் புரிந்து கொள்ள மிக எளிதானது. ஏனெனில் அவை உலகின் உண்மைகளை குறிப்பால் உணர்த்துகிறது. ஸ்மிருதி இறைவனிடம் இருந்து வந்த புனிதத் தன்மையின்றி இருந்தாலும் மனிதன் வாழ்வில் கடைபிடிக்கக் கூடிய அனைத்து வழிமுறைகளையும் கூறுகிறது. சமுதாயத்தில் நிலவும் ஒவ்வொரு செயலுக்கும் விதி முறைகளை கூறுகிறது. தர்மசாஸ்திரம் எனும் இதிகாச புராணங்கள் ஸ்மிருதியில் உள்ளன.

இந்து வேதங்களின் ஆய்வு
ஆக இந்துக்களின் புனித நூல்களாக வேதங்கள், உபநிஷங்கள், புராணங்கள் கருதப்படுகிறது

1. வேதங்கள்
அறிவு ஞானம் எனும் ''வித்" எனும் வேதச் சொல்லிருந்து வேதம் வந்தது. முக்கிய வேதங்கள் 4. ரிக், யஜுர், சாம, அதர்வணம் ஆகியவையாகும். முகாபாஷ்ய பாதாஞ்சலி கூற்றுப்படி ரிக்வேதத்தின் 21 கிளைகள், அதர்வனவேதத்தின் 9 கிளைகள், யஜுர் வேதத்தின் 101 கிளைகள், சாம வேதத்தின் 1000 கிளைகள் ஆக 1131 கிளைகள் உள்ளன. ஆனால் இவற்றில் 12 கிளைகள் இப்பொழுது காணக் கிடைக்கிறது.

ரிக், யஜுர், சாம வேதங்கள் பழமையானது இதனை ''தரை வித்யா" என அழைப்பர். அதர்வண வேதம் இறுதியில் வந்தது.

ஆர்ய சமாஜ் என்ற இயக்கத்தின் நிறுவனரான ஸ்வாமி தயானந்தர் கூற்றுப்படி 4 வேதங்களைத் தொகுத்த நாளில் ஒத்த கருத்து இல்லை. தயானந்தர் 1310 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வேதங்கள் அருளப்பட்டது எனக் கூறினார். சில அறிஞர்கள் 4000 ஆண்டுகள் முன்பு வேதங்கள் இறங்கின என்பர்.

வேதங்கள் இறங்கிய இடங்களிலும் ஒத்த கருத்து இல்லை. இறங்கிய வேதங்கள் ரிஷிகளிடம் வழங்கப்பட்டன என சிலர் கூறுகின்றனர். இந்த வேறுபட்ட கருத்துகள் இருந்த போதும் வேதங்கள் இந்து தர்மத்தின் ஆதாரப்பூர்வ நூல்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டவைகள்.

2. உப நிஷங்கள்
அருகில் இருந்து கற்றவை அறிந்தவை எனப் பொருள். அறியாமையை அகற்றக் கூடியது என மற்றொரு பொருளுமுண்டு.

இந்திய வரலாற்றுப் படி 200க்கும் அதிகமான உபநிஷங்கள் உண்டு. இருப்பினும் நடப்பில் உள்ளவை 10 அல்லது 18 ஆகும்.

உபநிஷங்களுக்கு வேதாந்தம் என்றும் பொருண்டு. தத்துவங்களைக் கூறும் உப நிஷங்களும் உள்ளன. வேதங்களுக்கு பின் தோன்றியவைகளே வேதாந்தம் எனும் இந்த உப நிஷங்கள்.

சிலபண்டிதர்கள் வேதங்களைக் காட்டிலும் உபநிஷங்கள் சிறந்தது எனக் கருதுகின்றனர்.

3. புராணங்கள்

வேத, உபநிஷங்களுக்குப் பின் இந்துக்ளின் புனிதமாக கருதப்படுவது புராணங்கள் ஆகும். உலகம் படைக்கப்பட்டது, முந்தய ஆரியர்களின் வரலாறு, தெய்வங்கள் பற்றிய குறிப்புகளை புராணங்கள் கூறுகின்றன. இவை நூல் வடிவில் அருளப்பட்டதாக கூறுவர். மகாரிஷி வியாசர் புராணங்களை 18 பாகங்களாய் பிரித்தார். அவற்றிக்கு பொருத்தமான தலைப்புகள் இட்டனர். பகவத் கீதை (மகாபாரதம்) இவரது எழுத்துத்திறனால் வெளிப்பட்ட புராணமே. புராணங்களில் முதன்மையானது பவிஷ்ய புராணம். எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறுவதால் இதற்கு இப்பெயர் வந்தது. இதனை இந்துக்கள் கடவுளின் வார்த்தை எனக் கூறுவர். மகாரிஷி வியாசர் இந்நூலை தொகுத்தவர் ஆவார்.

முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றிய இந்து வேதங்கள் மற்றும் புராணங்களின் கூற்று
பவிஷ்ய புராணம்ப்ரதி சாரக் பாகம் 3, காண்டம் 3, அத்தியாயம் 3, சுலோகம் 5 முதல் 8 வரை ''ஒரு வெளிநாட்டுக்காரர் வெளிநாட்டு மொழியினைச் சார்ந்த ஆன்மீக ஆசிரியர் ஒருவர் தோன்றுவார். அவருடன் தோழர்கள் இருப்பர் அவரின் பெயர் "முஹம்மது"

இந்த சுலோகங்கள் கீழ்கண்ட உண்மைகளை உணர்த்துகிறது.

1. நபியின் பெயர்
2. அவர் அரேபியாவைச் சார்ந்தவர் (சமங்கிருத மருஸ்தல் பாலைவன நிலத்தைக் குறிக்கும்)
3. அந்த நபிக்கு அநேக நபித்தோழர்கள் உண்டு
4. சமஸ்கிருத வார்த்தை ''பர்பதிஸ்நாத்" என்பதன் பொருள் அருட்கொடை

குர்ஆனின் கீழ்கண்ட வசனங்கள் இதை உறுதிச் செய்கிறது.

(நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர். (அல்குர்ஆன்-68:4)

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதாரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 21:107)


5. அவர் தீய செயல்களை விரட்டி (ஷைத்தானை) சிலை வணக்கம் அகற்றி ஏகத்துவ கொள்கையை நிலைநாட்டுவார்.

6. அந்த நபி இறைவன் புறமிருந்து பாதுகாப்பளிக்கப்படுவார். அந்த நபி பாவங்களற்றவர்.

பவிஷ்ய புராணம் ப்ரதி ஸாரக் பாகம் 3, காண்டம் 3, ஸ்லோகம் 10-27. மகாரிஷி வியாசர் கூறுகிறார்:

''அத்தூதர் அரேபியாவில் நிலவும் மூடப் பழக்க வழக்கங்களை ஒழிப்பார். ஆர்ய தர்மத்தை அந்நாட்டிலிருந்து அகற்றுவார். நேர்வழி காட்டும் அத்தூதர் முஹம்மது ஆவார். அவருக்கு பிரம்மன் (கடவுள்) துணைபுரிவார். துஷ்டர்களை அவர் நல்வழிப்படுத்துவார். ஓ ராஜாவே நீர் கெட்டவர்களை (ஷைத்தானைப்) பின்பற்றாதீர். ஆத்தூதரினைப் பின்பற்றுவோர் மாமிசம் உண்பர். விருத்தசேதனம் செய்வர். தாடியுடன் இருப்பர். பாங்கோசை ஒலித்து வழிபாட்டில் ஈடுபடுவர். அனுமதிக்கப்பட்டவற்றை மட்டுமே உண்பர். பன்றி இறைச்சியைத் தவிர்ப்பர். அவர்களுக்கு போர் வெற்றிப்பொருட்கள் ஆகுமானது. அவர்களுக்கு "முஸல்மான்" எனப்பெயர்."

இந்த சுலோகங்கள் உணர்த்தும் உண்மைகள்

1. ஷைத்தான்கள் அரேபியாவை அசுத்தப்படுத்தியிருந்தனர்.
2. ஆர்ய தர்மம் அரேபியாவில் காணப்படவில்லை.
3. சத்திய மார்க்கத்தை அழிக்கப் புறப்பட்ட பெரும் மன்னர்கள் அழிந்தனர் (உதாரணம்) அப்ரஹா

குர்ஆன் கூறுகிறது:(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (105:1)

அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்க விடவில்லையா? (105:2)

மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான். (105:3)

சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. (105:4)

அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். (105:5)

4. நபிக்கு அல்லாஹ் (பிரம்மா) எதிரிகளை நேர்வழிப்படுத்த துணைபுரிகிறான்.

5. இந்தியன் ராஜா அரேபியா செல்லவில்லை. மாறாக முஸ்லீம்கள் இந்தியா வந்தடைந்தனர்.

6. இறைத்தூதர் ஏகத்துவத்தை போதிப்பவர் நேர்வழிப் படுத்துபவர்.

7. இறைத்தூதர் விருத்த சேதனம் செய்தவர், தாடியை வைத்திருப்பவர்.

8. பாங்கு ஓசை எழுப்பி தொழுபவர்.

9. அனுமதிக்ப்பட்ட உணவை உண்பார், பன்றி இறைச்சி தடுக்கப்பட்டது.

குர்ஆன் கூறுகிறது,
தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக (தடுக்கப்பட்டவை) ஆக்கிருக்கிறான் ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான்.(2:173)

(தானகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன. (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும் அம்புகள் மூலம் நீங்கள குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) (5:3)

நபியே!) நீர் கூறும் ''தானாக இறந்தவைகளையும், வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை"...(6:145)

நீங்கள் புசிக்கக் கூடாது என்று உங்களுக்கு அவன் விலக்கியிருப்பவையெல்லாம் தானே செத்ததும், இரத்தமும், பன்றி இறைச்சியும், எதன் மீது அல்லாஹ்(வின் பெயர்) அல்லாத வேறு (பெயர்) உச்சரிக்கப்பட்டதோ அதுவுமேயாகும்...(16:115)

10. அநியாயத்தை எதிர்த்து மாற்றாருடன் போரிட தயங்க மாட்டார்கள்.

11. அவர்கள் முஸ்லீம்கள் ஆவர்.

12. அவர்கள் இறைச்சி உண்பர்

குர்ஆன் கூறுகிறது,
...உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவற்றைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக), ஆகுமாக்கப்பட்டுள்ளன... (5:1)

நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம் இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன் அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள். (23:21)

பவிஷ்ய புராணம் பாகம் 3, காண்டம் 1, அத்தியாயம் 3 ஸ்லோகம் 21-23

அக்கிரமும் அநீதியும் ஏழு புனித நகரங்களில் தலைவிரித்தாடும் (காசி உள்ளிட்ட) இந்தியாவில் ரச்சாஸ், ஸாபர், பிஹ்ல் போன்ற மூடர்களின் பழக்க வழங்கங்களை மக்கள் பின்பற்றுவர். முஹம்மதுவைப் பின்பற்றும் முஸ்லீம்கள் மிகச் சிறந்த தைரியசாலிகள். முஸல்மான்களிடம் நல்ல குணநலன்கள் காணப்படும். கெட்ட தீய செயல்கள் ஆரியர்களின் பூமியில் ஒன்று திரட்டப்படும். இஸ்லாம் இந்தியாவையும் அதன் தீவுகளையும் ஆட்சி செய்யும். இவ்வுண்மைகளை அறிந்து கொண்ட ஓ முனியே! உமது இரட்சகனைப் புகழ்ந்து துதிப்பாயாக!

குர்ஆன் கூறுகிறது,
அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்). (9:33)

முஷ்ரிக்குகள் வெறுத்த போதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான். (61:9)

அவனே தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பியருளினான் சகல மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்வதற்காக (இதற்கு) அல்லாஹ் சாட்சியாக இருப்பதே போதுமானது. (48:28)

பவிஷ்ய புராண 20-ம் நூல், அதர்வண வேதத்தில் 127வது காண்டம் இன்னும் சில அத்தியாயங்கள் குண்டப் அத்தியாயம் என அழைக்கப்படுகின்றன. குண்டப் என்றால் வறுமையில், துன்பத்தில், சுழல்பவனை நீக்குவது என பொருள் கொள்ளலாம். உலகின் மையப்பகுதியில் உள்ள ஒரு இடத்துடன் இச்செய்தி தொடர்பு உடையது. உம்முல் குர்ஆன் என அழைக்கப்பட்ட மக்காவை இது குறிக்கிறது.

(இதை) குர்ஆன் கீழ்கண்டவாறு கூறுகிறது,
(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளதுதான் அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.(3:96)

மக்காவின் மற்றொரு பெயர் பக்கா.அநேக மொழி பெயர்ப்பாளர்கள் குண்டப் அத்தியாயத்தை மொழிபெயர்த்தனர். குறிப்பாக எம். ப்ளாம் பீல்டு, ரால்ப் க்ரிப்ட், பண்டிட் ராஜாராம், பண்டிட் கேம் கரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

அதர்வண வேதம் 20-ம் நூல் 127வது காண்டம் சுலோகம் 1-13

சுலோகம் 1. அவர் நரசன்ஷா (புகழுக்குறியவர்) - முஹம்மது.
அவருக்கு 60090 எதிரிகள் இருந்தும் அவர் பாதுகாப்புடன் கூடிய ஒரு சாந்திமிகு தலைவராக இருப்பார்.

சுலோகம் 2. அவர் ஒட்டகத்தில் சவாரி செய்யும் ஒரு ரிஷியாவார் ''மம்ஹா"

சுலோகம் 3. அவர் ரிஷியாவார். அவருக்கு 100 தங்க நாணயங்களும் பத்து கழுத்து அணிகலன்களும் 300 நல்ல குதிரைகளும் பத்தாயிரம் பசுக்களும் வழங்கப்படும்.

சுலோகம் 4. அவர் இறைவனை துதிப்பவராய் இருப்பார்.

சுலோகம் 5. வணக்க வழிபாடுகளில் தீவிர முயற்சி எடுப்பார்.

சுலோகம் 6. அவருக்கு இறைவன் புறமிருந்து அநேக அருள் வளங்கள் உண்டு.

சுலோகம் 7. அவர் சிறந்த அரசர், மனிதர், மனித சமுதாயத்திற்கு சிறந்த வழிகாட்டி.

சுலோகம் 8. அவரும் பாதுகாப்பில் இருப்பார். பிறருக்கும் பாதுகாப்பு வழங்குவார்.

சுலோகம் 9. உலக சாந்திக்கு உழைப்பார்.

சுலோகம் 10. அவரின் ஆட்சியில் மக்கள் வளமும், மகிழ்வும் பெறுவர். வறுமை அகன்று வளம் கொழிக்கும்.

சுலோகம் 11. அவர் அச்ச மூட்டி எச்சரிக்க தூண்டுவார்.

சுலோகம் 12. அவர் கொடைத் தன்மையும் தாராளமனமும் கொண்டவர்.

சுலோகம் 13. அவரைப் பின்பற்றுவோர் கொலை, கொள்ளை போன்ற கொடுமைகளிலிருந்து இறையருளால் பாதுகாப்பு பெற்று தம் தூதரையும் காத்தனர்.

சுலோகம் 14. இறைவனைப் போற்றிப் புகழ்ந்து தீய விளைவுகளில் இருந்தும் பாதுகாப்ப கோரினர்.