Wednesday, January 31, 2007

''நாங்கள் முஸ்லிம்களாய் மதம் மாறுவோம்!''

"நாங்கள் முஸ்லிம்களாய் மதம் மாறுவோம்!" இப்படிச் சொல்வது தலித் மக்கள் அல்ல. வாணியச் செட்டியார் சமுதாய மக்கள்தான் இப்படிச் சொல்கிறார்கள். அதோடு நிற்காமல், முஸ்லிம் அமைப்புக்களயும் அவர்கள் பார்த்துப் பேசவே, ஆடிப்போய் இருக்கிறது நெல்லை மாவட்ட நிர்வாகம். மத மாற்றத்தின் மூலம் பிரபலமான மீனாட்சிபுரம் பக்கம் உள்ள ஆய்குடியில்தான், இப்படியொரு பகீர் முடிவை எடுத்திருக்கிறார்கள்.

நெல்ல மாவட்டம் தென்காசிப் பக்கம் இருக்கிறது, ஆய்குடி. இங்கு சேனைத் தலைவர் சமுதாயத்தினர் மெஜாரிட்டியாய் வாழ்கிறார்கள். சுமார் 1500 குடும்பத்தினர் இருக்கிறார்கள். வாணியச் செட்டியார் சமூகத்தினர் சுமார் 150 குடும்பத்தினர் வசிக்கிறார்கள். தற்போது இந்த வாணியச் செட்டியார் சமுதாயத்தினர்தான் 'முஸ்லிம்களாய் மதம் மாறப்போகிறோம்' என்று போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள். இந்த விஷயம் நமது கவனத்திற்கு வர, ஆய்குடிக்குச் சென்றோம். வாணியச் செட்டியார் சமுதாயத் தலைவர் சிதம்பரம் செட்டியாரச் சந்தித்தோம்.

"ஆய்குடியில் மைனாரிட்டியாய் வாழும் எங்க சமுதாயத்தினர் அனவருமே, முஸ்லிம்களாய் மாறப்போகிறோம். இதற்காக ஊர்க்கூட்டம் போட்டுப் பேசினோம். பெண்கள் உள்பட அனைவருமே முஸ்லிம்களாய் மாறச் சம்மதித்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, கடந்த ஒரு மாத காலமாக யாரும் கோயிலுக்குச் செல்வதில்ல!" என்றவரிடம், 'அதற்கான காரணம் என்ன?' என்று கேட்டோம்.

மனிதர் கொதித்துப்போய் பேசினார். ''எங்க ஊர்ல அற்புதமான முருகன்கோயில் இருக்கு. திருச்செந்தூருக்கு அடுத்து எங்க ஊர் முருகன் கோயிலில்தான் சூரசம்காரம் மிகவும் பிரமாண்டமாய் நடக்கும். சுத்துப்பட்டு கிராமங்களிலிருந் பல்லாயிரக்கணக்கானோர் அதைப் பார்க்க வருவார்கள். ஊருக்குள் உள்ள சிவன் கோயில் மைதானத்தில்தான் சூரசம்காரம் நடக்கும். மொத்தம் ஏழு நாட்கள் நடைபெறும் அந்தத் திருவிழாவில், இரண்டாம் நாள் மண்டகப்படி எங்க வாணியச் செட்டியார் சமுதாயத்தினருக்கு. அந்தக் காலத்தில் எங்க ஊர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இருந்தது. எனவே, இந்த சிவன்கோயில் தற்போது சுசீந்திரம் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. சிவன்கோயில் மைதானத்தில் நாங்க பிள்ளயார் சிலைய வக்க முடிவு செய்தோம். இதற்காக சுசீந்திரம் சென்று தேவசம்போர்டு அதிகாரிகள சந்தித்துப் பேசி அனுமதி வாங்கினோம். இதனைத் தொடர்ந்து சிவன்கோயில் மைதானத்தில் கடந்த ஆண்டில் நாங்கள் ஒரு பிள்ளையாரை பிரதிஷ்டை செய்தோம். இரண்டரை அடி உயர கற்சில அது. இந்தப் பிள்ளையார் சிலைதான் பிரச்னைக்குப் பிள்ளயார் சுழி போட்டது. எங்க சமுதாயத்தினர் மட்டுமல்ல, சர்வ சமுதாயத்தினரும் பிள்ளையாரை வணங்கிச் செல்வார்கள். இது எங்க ஊரில் உள்ள மெஜாரிட்டி சமுதாயமான சேனைத் தலவர் சமுதாயத்தினருக்குப் பிடிக்கவில்ல. எனவே, பிள்ளயார்கோயிலை அகற்ற வேண்டும் என்று பெட்டிஷன் மேல் பெட்டிஷன் போட்டுக்கொண்டே இருந்தார்கள்.

ஆனால், யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்ல. எனவே, சேனைத் தலவர் சமுதாயத்தினர் கூடிப்பேசி பிள்ளயார் சிலையை அகற்ற என்ன வழி என்று யோசித்திருக்கிறார்கள். அதன் விளவாக, கடந்த 13-ம் தேதி அவர்கள், எங்கள் பிள்ளையார் சிலைப் பக்கம் இரவோடு இரவாக ஒரு பீடம் அமைத்து, சுடலைமாடன் சிலயை வைத்து விட்டார்கள். இது குறித்த நாங்கள் போலீஸில் புகார் செய்தோம். இதனத் தொடர்ந்து தென்காசி உதவி கலெக்டர் ரமண சரஸ்வதி தலமையில் அதிகாரிகள் வந்தார்கள். சுடலைமாடன் சிலையை அகற்றுமாறு சேனைத் தலவர் சமுதாயத்தினரிடம் கூறினார்கள். அதற்கு அவர்கள், 'பிள்ளயார் சிலையை அகற்றினால்தான் சுடலைமாடன் சிலையை அகற்றுவோம்' என்று சொல்லி, பிரச்னையை ஊதிப் பெரிதாக்கினார்கள். இதனைக் கேட்டுக் கடுப்பான அதிகாரிகள், சட்டென இரண்டு சிலைகளயும் எடுத்து விட்டார்கள். பீடத்தையும் இடித்து விட்டார்கள்!'' என்று நடந்த கதையைச் சொன்னவர், ''இந்து சமுதாயத்தினரே இந்துக் கோயிலை இடிக்க வைத்தது எவ்வளவு பெரிய அநியாயம்? இனிமேல் நாங்கள் எங்கே போய் சாமி கும்பிடுவது? எனவேதான், ஒட்டுமொத்தமாக மதம் மாறத் தீர்மானித்தோம்!'' என்றார் ஆவேசமாய்.

கவுன்சிலர் அய்யப்பன் கூறும்போத, ''மெஜாரிட்டி இந்துக்களே எங்களத் தீண்டத்தகாதவங்களாகப் பார்க்குறாங்க. பிளளயார் சிலையை எடுத்ததற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிச்சதனால, சேனைத் தலைவர் சமுதாயத்தினர் எங்கள் மீது சில தடைகைள விதிச்சிருக்காங்க. குறிப்பா, எங்களுக்கு வெற்றிலை கொடிக்காலில் வேலை மறுக்கப்பட்டிருக்கிறது. எங்கள் சமுதாயத்தச் சேர்ந்தவங்க டீககடகளில் யாரும் டீ குடிக்கக் கூடாதுன்னும் சொல்லியிருக்காங்க. சொல்லப் போனா, எங்கள அடக்கி ஆளப் பார்க்கிறாங்க. பிள்ளயார் சிலய மறுபடியும் அதே இடத்தில் வக்க வேண்டும் என்று கோரி கலெக்டரச் சந்தித்தோம். அவரோ, எங்க மனுவ வாங்கிக் குப்பையில் போட்டு விட்டார். அதன் பிறகு முதல்வருக்கு மனு அனுப்பினோம். அதற்கும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அடுத்த மாதம் 4ம் தேதி வருஷாபிஷேகம் நடத்த வேண்டும். அதற்குள் பிள்ளயார் சிலை அதே இடத்தில் இருக்கணும். இல்லாவிட்டால் மறுநாளே ஊரில் உள்ள 1500 தலக்கட்டுகளும் முஸ்லிமாய் மாறிவிடுவோம். சிவன்கோயில் பக்கத்தில் எங்க சமுதாயத்திற்குச் சொந்த இடம் இருக்கிறது. அங்கே மசூதி கட்டுவோம்!'' என்றார்.

இதே ஊரச் சேர்ந்த பரமசிவன் ஒரு தீவிர பக்திமான். கடந்த 12 வருடங்களாக சென்னயில் இருந்து திருப்பதிக்குப் பாதயாத்திர சென்று வந்து கொண்டிருக்கிறார். பச்ச வேஷ்டி அணிந்து கழுத்தில் ருத்திராட்ச மாரல, நெற்றி நிறய சந்தனம், விபூதியுடன் காட்சியளித்தார். அவர் கூறும்போது, ''எங்க ஊர்ல நாங்க வச்ச சாமியக் கும்பிட முடியலேன்னா, நாங்க வாழ்ந்து என்ன பயன்? இதுக்கு நல்ல முடிவு தெரியலேன்னா நானும் வேஷததக் கலைச்சிடுவன்னு முடிவு செஞ்சுட்டேன்!'' என்றார்.

ஆண்கள்தான் இப்படி ஆவேசப்பட்டார்கள் என்றால், பெண்கள் அதைவிடவும் கோபமாகப் பேசினார்கள். முத்துலெட்சுமி, மகாலெட்சுமி ஆகிய இருவரும் நம்மிடம், ''கடந்த 3_ம் தேதி திருவாதிரர திருவிழா நடபெற்றது. எங்க சாமய நாங்க கும்பிட முடியலேன்னா, அந்த மததத்ல இருந்து என்ன பயன்? எனவே, எங்க ஊர்ப் பெரியவங்க முடிவுப்படி முஸ்லிமா மாறத்தயாராயிட்டோம்'' என்றனர் ஆவேசமாக. இவர்கள், 'முஸ்லிம்களாய் மதம் மாறுவோம்' என்று சொன்னதோடு நிற்கவில்ல. அதற்குச் செயல்வடிவம் கொடுக்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள். இதுபற்றி ஊர்த்தலைவர் சிதம்பரம் செட்டியார் கூறும்போது, ''பிள்ளயார் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் மனுகொடுத்தும் பிரயோஜனம் இல்லை. எனவே, ஊர்க் கூட்டம் போட்டு மேல் நடவடிக்யாக என்ன செய்யலாம் என்று மக்களிடம் கேட்டோம். 'நம்மை மதிக்காத மதத்தில் இருந்த என்ன பயன்?' என்றே அனவரும் சொன்னார்கள். அப்போ, அதற்கு என்ன வழி என்று மக்களயே கேட்டோம். அதற்கு அவர்கள் 'பேசாம மதம் மாறிவிடுவோம்' என்று கூறினார்கள். முஸ்லிம் மதம்தான் நமக்குப் பாதுகாப்பு என்றும் அவர்கள் சொன்னார்கள். இதனத் தொடர்ந்தே தென்காசியில் உள்ள கனிபாய் என்பவரிடம் பேசினோம். அவர் பாளயங்கோட்டயில் உள்ள ஓர் அலுவலகத்திற்குக் கூட்டிச் சென்றார். அங்கே இருந்தவர்களிடம் 'வாணியச் செட்டியார் சமுதாயத்தச் சேர்ந்த நாங்க ஒட்டுமொத்தமா முஸ்லிம்களா மாறத் தீர்மானிச்சிருக்கிறோம்' என்று சொன்னோம். அதற்கு அவங்க, 'அதில் ஒண்ணும் பிரச்ன இல்ல. ஆனா எதுக்கும் நீங்க ஊருக்குப் போய் நிதானமா இன்னும் ஒரு தடவ யோசிச்சிட்டு வாங்க'ன்னு சொன்னாங்க. இதுல என்னத்தை யோசிக்கிறது? வரும் 4_ம்தேதி சில வரலேன்னா 5_ம் தேதி மதம் மாறுவதைத் தவிர வேறு வழியில்ல. இது நாங்களா எடுத்த முடிவுதானே தவிர, வேறு யார் தூண்டுதலிலும் எடுக்கவில்லை!'' என்றார் அவர்.

வாணியச் செட்டியார் சமுதாயத்தினரின் இந்தத் திடீர் முடிவு பற்றி மாற்றுச் சமுதாயமான சேனைத் தலவர் சமுதாயத்தினர் என்ன சொல்கிறார்கள்? அந்தச் சமுதாயத்தின் ஊர் நாட்டாண்மை அருணாசல முதலியாரைச் சந்தித்தோம்.

''அவங்க முஸ்லிமாவெல்லாம் மாற மாட்டாங்க. இது ஒரு மிரட்டல். அவ்வளவுதான். தவிர, பிள்ளயார் சிலையை அகற்றியது நாங்கள் அல்ல. அது பேரூராட்சிக்குச் சொந்தமான இடம். எனவே, ஆக்கிரமித்து வக்கப்பட்டிருந்த பிள்ளயார் சிலையை பேரூராட்சி நிர்வாகம் அகற்றியிருக்கிறது. பிள்ளயார் சில மட்டுமல்ல, நாங்க வச்ச சுடலமாடன் சில மற்றும் எட்டுக் கடைகளையும் கூட இடித்துத் தள்ளியிருக்கிறது பேரூராட்சி. ஆனா, இந்த ஆக்கிரமிப்பு அகற்றுதலுக்குக் காரணம் எங்க சமுதாயம்தான்னு தவறா நினச்சிக்கிட்டு இருக்காங்க. மற்றபடி நாங்க மெஜாரிட்டி சமுதாயம்ங்கிற உண்மைதான். அவங்களை அடக்கி ஆளணுமுன்னுல்லாம் நாங்க நினச்சதே கிடயாது!'' என்றார் அவர்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 21.01.07

==================
பின் குறிப்பு: இரு இந்து சமுதாயங்கள் தங்களுக்கிடையில் இருக்கும் பிரச்னைகளை தீர்த்துக் கொள்வதற்காக இஸ்லாத்தை பகடைக் காயாக பயன்படுத்துவதாகத்தான் இது தெரிகிறது. இது சரியான அணுகுமுறையாக தெரியவில்லை. சமூக விரோத சக்திகள் 'இந்த பிரச்னைக்கெல்லாம் முஸ்லிம்கள்தான் காரணம்' என்று திசை திருப்பவும் வாய்ப்பிருக்கிறது. 4-ம் தேதி சிலை வரலேன்னா 5-ம் தேதி முஸ்லிமா மாறுனவங்க 6-ம் தேதி சிலை வந்துடுச்சுன்னா என்ன செய்வாங்க என்பதையும் யோசிக்க வேண்டும்.

அப்படி இல்லாமல், இஸ்லாத்தின் அடிப்படைகளை அறிந்து கொண்டு, தங்கள் சமுதாயத்திற்கு இழைக்கப்படும் அநீதிக்கு இஸ்லாத்தில் விடிவு பிறக்கும் என்ற உறுதியான நம்பிக்கையோடு முஸ்லிம்களாக மாறுவதே எல்லாத் தரப்பினருக்கும் நல்லது. - மரைக்காயர்

Friday, January 26, 2007

இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!

நமது அருமை நண்பர் திரு.நீலகண்டன் அவர்கள் இங்கிலாந்தின் மசூதிகளில் எடுக்கப்பட்ட சில வீடியோக்களை தமது பதிவில் இட்டிருக்கிறார்.

அந்த வீடியோக்கள் சுட்டிக் காட்டும் சில உண்மைகள்:

1. அங்கு தொழ வருபவர்களிடையே ஜாதி வேறுபாடு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அண்ணல் அம்பேத்கர் எழுதியிருந்தது போல ஷேக், சைய்யது, மொகல், பதான் எல்லோரும் ஒருவரோடொருவர் இணைந்து நின்று தொழுகிறார்கள்.

2. மசூதிக்கு உள்ளே சென்று தொழ ஒரு பிரிவினருக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்றோ மற்றவர்கள் வெளியில் நின்று தொழ வேண்டும் என்றோ யாரும் கட்டுப்பாடுகள் போட்டிருப்பதாக தெரியவில்லை.

3. மசூதியில் தொழுபவர்கள் அனைவரும் ஒரே முறையில்தான் தொழுகிறார்கள்.

4. மசூதியில் தொழுகை நடத்த வருபவர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. அதிக கட்டணம் கொடுப்பவர்களுக்கு முதல் வரிசையில் இடம் என்பது போன்ற சலுகைகளும் இல்லை.

5. இங்கிலாந்து வெள்ளையர்கள் அதிகம் வசிக்கும் ஒரு நாடாக இருந்தபோதிலும் இங்கு உள்ள மசூதி ஒன்றில் கருப்பின முஸ்லிம் ஒருவர் சொற்பொழிவு நடத்த முடிகிறது. 'இங்கு சொற்பொழிவு நடத்த எங்களுக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது' என்று யாரும் காவல்துறையை அழைக்கவில்லை.

6. இங்கு தொழுகை நடத்தும் இமாம் கையில் தட்டேந்தி வந்திருப்பவர்களிடம் காசு கேட்கவில்லை.

7. மசூதிக்கு வந்திருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் கை கொடுத்து முகமன் சொல்லிக் கொள்ளலாம். தீண்டத்தகாதவர்கள் என்று யாரும் இங்கு இல்லை.

8. மசூதிக்கு வரும் முக்கியஸ்தர்களுக்கு பரிவட்டம் கட்டப்படுவதில்லை. முக்கியஸ்தர்கள் தாமதமாக வந்தாலும் தொழுகை அவர்களுக்காக காத்திருக்காது.

9. ஆண்களெல்லாம் சட்டையை கழட்டிவிட்டு வர வேண்டிய தேவையில்லை.

10. மிக முக்கியமாக, இஸ்லாத்தை வெறுப்பவர்கள் கூட மசூதி உள்ளே சென்று வீடியோ எடுக்க முடியும் என்ற அளவுக்கு இங்கு ரகசியங்கள் எதுவும் இல்லை!

என்னங்க.. அந்த பேச்சாளரோட பேச்சைப் பத்தி நான் ஒன்னுமே சொல்லலைங்கிறீங்களா? குர்ஆன், ஹதீஸ் இவற்றுக்கு மாற்றமான பேச்சுக்களை நாங்க ஒரு பொருட்டாவே எடுத்துக்குறதில்லை.

பர்தா எனக்கு சுதந்திர உணர்வு அளிக்கிறது - கமலா சுரையா

"The purdah makes me feel more liberal" என்று சொன்னவர் பிரபல மலையாள எழுத்தாளர் கமலா தாஸ் என்கிற சுரையா. Rediff.com-ல் ஒரு பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கமலா சுரையா 1999-ல் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபோது, தனது மதமாற்றத்திற்கு முக்கிய காரணம் முஸ்லிம் பெண்களின் பர்தா முறைதான் என்று குறிப்பிட்டார்.

வெறும் வாய்வார்த்தையாக அல்லாமல் இன்றளவும் பர்தா முறையை கடைப்பிடித்து வருகிறார் சுரையா. இவரை யாரும் வாள் முனையிலோ அரபு நாட்டு பணத்தை காட்டி ஆசை காட்டியோ மதம் மாற்றவில்லை.

அவரது பேட்டியிலிருந்து ஒரு பகுதி:




Q: Has Islam restricted you?

A: I chose the religion out of my convictions and therefore I am ready to work within the constraints and restrictions of Islam. Religion cannot chain one's creativity. Islam is tolerant. Allah is the god of love and forgiveness. My mind tells me that Allah has forgiven me my sins. People ask me why a liberated woman like me chose the purdah. But I tell you, the purdah makes me feel more liberal. Because when you wear a purdah you can travel anywhere in the world and you feel safe.

Nobody is going to make any disparaging remarks against a purdah-clad woman because they are always afraid of Muslim rage. Behind every purdah-clad Muslim woman, some Mussalman is lurking with a dagger to ensure her safety. So purdah is always safe. It protects you. It also keeps the dust, the heat and insects away from your body.

அவரது முழு பேட்டியும் படிக்க இங்கே சொடுக்கவும்.

பின் குறிப்பு: பலாப்பழம் கரடுமுரடாக பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கிறது என்று ஒருவர் சொன்னாராம். அவர் சொன்னதிலும் தவறில்லை. ஆனால் அவர் பலாப்பழத்தின் சுவையை அறியாதவர். அதன் சுவையை அனுபவித்து அறிந்த இன்னொருவரோ அதை சிலாகித்து கூறுகிறார். சிந்திக்கத் தெரிந்தவர்கள் இரண்டாமவரின் கூற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

Thursday, January 25, 2007

அம்பேத்காரும் இந்துவா?

"மநுஸ்மிருதி மற்றும் அதைப்போன்ற பிற நூல்களில், மிகவும் கீழ்த்தரமாகக் காணப்படும் கருத்துகள், மிக மோசமான வகையில் மனித உரிமைகளை மீறுவதாக இருக்கின்றன. எனவே, இம்மாநாடு மிக அழுத்தந்திருத்தமாக இதைக் கண்டிப்பதுடன் - அதன் ஒரு வெளிப்பாடாக, மநுஸ்மிருதியை எரிப்பது எனவும் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.''

- 25.12.1927 அன்று மகத் மாநாட்டில், டாக்டர் அம்பேத்கர் முன்மொழிந்த தீர்மானம்

புரட்சியாளர் அம்பேத்கர் மநுஸ்மிருதியை எரித்த (25.12.1927) 80ஆவது ஆண்டு தொடங்கியுள்ளது. இந்து பயங்கரவாதத்திற்கு எதிராக அவர் மூட்டிய தீ, நாடெங்கும் பற்றி எரிய வேண்டிய தேவையை, எவரும் எளிதாகப் புறந்தள்ளிவிட இயலாது. சமத்துவத்திற்கானப் போராட்டத்தின் தொடக்கப் புள்ளியே மநுஸ்மிருதி எரிப்பு. ‘மநுஸ்மிருதிகள் வழக்கொழிந்து விட்டன; இதை எரிப்பதன் மூலம் அம்பேத்கர் ஏன் அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்?' என்று அன்றே கேட்கப்பட்டது. இன்றும் இதுபோன்று கேள்வி எழுப்புகின்றவர்களுக்கும் சேர்த்து அம்பேத்கர் தெளிவாக பதிலளித்துள்ளார் : "இந்துக்கள் மநுஸ்மிருதியைப் பின்பற்றுவதால்தான், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அவர்கள் வன்கொடுமைகளை இழைக்கின்றனர். அது, வழக்கொழிந்துவிட்ட ஒரு நூல் என்பது உண்மை எனில், அதை யாராவது எரித்தால், அதற்கு இந்துக்கள் ஏன் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? இதை எரிப்பதால் என்ன கிடைக்கும் என்று கேட்கிறார்கள். காந்தி, அயல்நாட்டுத் துணிகளை எரித்ததால் என்ன கிடைத்தது? நியுயார்க்கில் மிஸ் மேயோ எழுதிய ‘அன்னை இந்தியா' என்ற நூலை எரித்ததால் என்ன சாதித்தார்கள்? அரசியல் சீர்திருத்தத்தை வலியுறுத்திய சைமன் குழுவைப் புறக்கணித்ததால், என்ன சாதிக்கப்பட்டது? இவற்றையெல்லாம் எதிர்ப்பதற்கு என்ன காரணமோ, மநுஸ்மிருதியை எரிப்பதற்கும் அதுதான் காரணம்.''

இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்துத்துவ வெறியைத் தூண்டும் ‘புனித ஆற்றலை' - மநுஸ்மிருதியும், பகவத் கீதையும், இந்து சாஸ்திரங்களும் தன்னகத்தே கொண்டிருக்கின்றன. இந்து வன்முறைகளுக்கு அவைதான் ஊற்றுக்கண். ஆனால், கீழ்த்தரமான இந்நூல்களை விமர்சித்தால், அதை விமர்சிப்பவர்களைத்தான் அரசு கைது செய்கிறது. ‘தமிழ் நாடு முஸ்லிம் மக்கள் கட்சி'யின் தலைவர் எஸ்.எம். பாஷா, மகாபாரதத்தை விமர்சித்து ஆங்கிலத்தில் எழுதியுள்ள நூலைத் தடை செய்ததோடு மட்டுமின்றி, அவரைக் கைது செய்துமிருக்கிறது (‘தினத்தந்தி' 30.12.06). ஆனால், ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ். சுதர்சனம், "சாதிப் பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டும்'' என்று பிரகடனப்படுத்தியதன் ஒரு பகுதியாக - ‘அகண்ட இந்து செயல்திட்டம்' ஒன்றை சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தி, மதமாற்றத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் சுதந்திரமாக சொல்ல முடிகிறது (‘தி இந்து' 3.1.07).

அரசியல் தளத்தில் மய்ய ஆட்சி அதிகாரத்தைப் பறிகொடுத்த பா.ஜ.க. மற்றும் அதன் சங்பரிவாரங்கள், தற்பொழுது மீண்டும் ‘ராமன் கோயிலைக் கட்டுவோம்' என்று கிளம்பியிருக்கின்றன. உத்திரப் பிரதேச தேர்தலைக் கவனத்தில் கொண்டும், வாஜ்பாய் சொல்வது போல, ‘லக்னோ வழியாக புதுதில்லி செல்லவும்' அவை திட்டமிட்டுள்ளன. அதற்கான அடிப்படைவாதப் பணிகளில் அவை ஈடுபட்டுள்ளன. இந்நாட்டு மக்களிடையே இந்து உணர்வைத் தூண்டி ‘ஓட்டுப் பொறுக்கும் அரசியல்'தான் அது என்று சொல்லப்பட்டாலும், அது இந்து முஸ்லிம் கலவரத்திற்குதான் வித்தூன்றும். இக்கலவரங்கள் மூலம் ‘இந்து ஒற்றுமை' வலுப்பெறுவதால், அதை செயல்படுத்துகின்றனர். இந்த அகண்ட சதித்திட்டத்தின் ஒரு பகுதியே பெரியார் சிலை உடைப்பு!

பன்முகத் தன்மை வாய்ந்த இந்தியாவை ஒரே தேசியமாக சித்தரித்து, இந்து பண்பாட்டைத் திணிக்க முயல்கின்றனர். எனவே, அதற்கு எதிராக நாம் முன்னிறுத்தும் பண்பாடு, மிகவும் வலிமை வாய்ந்ததாக - சாதி, மத ஒழிப்புப் பண்பாடாக இருந்தாக வேண்டும். தமிழ்ப் பண்பாடு என்று பொதுவாகக் கூறுவது போதாமையாகும். இதற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பார்வை சான்று பகர்வதாகவே இருக்கிறது: "... பார்ப்பன எதிர்ப்பை, இந்து மத எதிர்ப்பாக நாம் மாற்றக் கூடாது... மூடநம்பிக்கைகளை எதிர்க்க வேண்டும்; வர்ண சாதி ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டும். கடவுள் இல்லை என்பதைக் கருத்தியலாகப் பரப்ப வேண்டும். ஆனால், மதத்தோடும் கோயிலோடும் போர் புரிவது, எதிர்விளைவை உண்டாக்கும்'' (‘தமிழர் கண்ணோட்டம்' சனவரி 2007). பார்ப்பனர்களை எதிர்க்கலாம்; ஆனால், பார்ப்பனக் கடவுளர்களையும், அவர்களின் மதத்தையும், கோயிலையும் எதிர்க்க வேண்டாம் என்பது, கடைந்தெடுத்த முரண்பாடு இல்லையா?

பார்ப்பன ஆதிக்கம் - இந்து மதத்திலும், கோயில்களிலும், ‘புனித நூல்'களிலும்தான் மிக ஆழமாக வேர் கொண்டிருக்கிறது. அதனால்தான், ‘இத்தகைய வேதங்களையும், சாஸ்திரங்களையும், இந்து மதத்தையும் வெடி வைத்தே தகர்க்க வேண்டும்; வேறு எந்த செயலும் பயன் தராது' என்றார் அம்பேத்கர். எனவே, அம்பேத்கர் மற்றும் பெரியாரைப் பின்பற்றுவதன் மூலம்தான், நாம் இந்து பண்பாட்டுத் தேசியத்தை வேரறுக்க முடியும். இக்கருத்தியல்களை உள்ளடக்காத தமிழ்ப் பண்பாட்டை, இந்து பண்பாடு எளிதில் செறித்துவிடும்!

நன்றி: கீற்று.காம் - மநுஸ்மிருதியை எரிப்போம்!

Tuesday, January 23, 2007

சாமியையும் விட்டு வைக்காத சாதிப் பிரச்னை!

'இந்து மதத்திற்கு வாருங்கள்' என்று இனிய இஸ்லாமிய சகோதரர்களை அழைத்த சகோதரர் எழில் அவர்களுக்கு எனது இன்னொரு கேள்வி:

இதுவும் இந்து மதம்தானா?

இந்து மதம் எங்கே போகிறது, இருபத்தொராம் நூற்றாண்டில் இப்படியுமொரு கொடுமை, பார்ப்பனர்களின் சாதி வெறிக்கு சாமிகூடத் தப்பவில்லை.

சிங்கப்பூர் அரசின் Hindu Endowment Board இன் கீழ் வரும் நான்கு இந்துக் கோயில்களில் மாரியம்மன் கோயிலும் ஒன்றாகும், சிங்கப்பூரின் மிகவும் பழைமையான இந்துக் கோயிலாகிய இந்த மாரியம்மன கோயில் 1819 இல் சேர் ஸ்ரான்போட் றாபிள்ஸ் சிங்கப்பூரை உருவாக்க முன்பே இருந்து வந்துள்ளது.

இந்தக் கோயிலின் பிரதான பூசகராகிய பிராமணர், இந்தக் கோயிலின் முதன்மையான கடவுளாகிய, கருவறையிலுள்ள மாரியம்மனுக்குப் பூசை செய்ய மறுத்து விட்டார். அதனால் மாரியம்மனுக்கு பூசை செய்வது பிராமணரல்லாத, பண்டாரங்கள் என அழைக்கப்படும் தமிழர்கள்.

பிரதம பூசகராகிய பிராமணர் மாரியம்மனுக்குப் பூசை செய்ய மறுத்ததன் காரணம் என்னவென்றால், மாரியம்மன் தீண்டப்படாத தமிழர்களாகக் கருதப்படும் பறையர்களின் கடவுள் என்பது தான் அவரது கருத்தாம்.

பிராமணர்களால் உருவாக்கப்பட்ட புராணக் கதைகளின் படி மாரியம்மன் கூடத் தீண்டத்தகாதவராம் எப்படியிருக்கிறது கதை. மாரியம்மனைத் தீண்டத்தகாதவராக்கி, அவருக்குப் பண்டாரங்கள், அதாவது தமிழர்களைக் கொண்டு பூசையைச் செய்வித்துக் கொண்டு, பிராமணர்களால் உயர்சாதிக் கடவுளாகக் கருதப்படும் விக்கிரகங்களுக்கு மட்டும் தான் பிரதம பிராமண அர்ச்சகர் அர்ச்சனை, பூசைகளைச் செய்வாராம்.

இந்தச் செயல் மாரியம்மனை இழிவு படுத்தி, தமிழர்களின் கடவுள் என்ற காரணத்துக்காக அவமதிப்பது மட்டுமல்ல, தமிழர்களை அதாவது சிங்கப்பூர் தமிழர்களை மட்டுமல்ல உலகத் தமிழர்களனைவரும் அவமதிக்கும் செயலாகும் என்பது தான் பிராமணருக்கெதிராக வழக்குத் தொடர்ந்திருக்கும் சிங்கப்பூர்த் தமிழர் M. RAVI, அவர்களின் கருத்தாகும்.

எந்தவொரு உண்மையான இந்துவாவது, இந்துக்கள் பெருமளவில் வேறுமதங்களை நாடி ஒடுகிறார்களே, என்ன காரணமாக இருக்குமென காரணத்தைத் தேடினால், வேறெங்கும் பார்க்க வேண்டாம், இப்படியான பார்ப்பனர்கள் தான் இந்துக்கள், இந்துமதத்தை விட்டு ஓடுவதற்குக் காரணம்

இந்த பிராமண அர்ச்சகர் சிங்கப்பூர் தமிழர்களை அவமதித்தது மட்டுமல்ல, அவருக்குச் சோறு போடும் மாரியம்மனைத் தீண்டத்தகாதவராக்கியது மட்டுமல்ல, சிங்கப்பூர் அரசமைப்பின் படி , அரசாங்க மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழ் கோயிலில் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதையும் எதிர்த்து, சிங்கப்பூர் Hindu Endowment Board க்கும் மாரியம்மன் கோயில் சபைக்கும் எதிராக M. RAVI, C/O Messrs L. F. Violet Netto 101 Upper Cross Street #05-45 People’s Park Centre Singapore 058357 அவர்களால் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சிங்கப்பூர் மாரியம்மன் கீழ்சாதியாம்...!
நன்றி: உணர்வுகள்

Thursday, January 18, 2007

அன்புள்ள @@@@ அண்ணாவிற்கு!

வேறு எங்கோ போக வேண்டிய கடிதம் முகவரி மாறி என்னிடம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். அதை இங்கே வெளியிடுவதால் ஒருவேளை உரியவரை சென்று சேரக்கூடும் என்ற நம்பிக்கையில் இங்கு வெளியிடுகிறேன்.

அன்புள்ள @@@@ அண்ணாவிற்கு,

இயக்குனர் அய்யாவிற்கு நீங்க எழுதிய கடிதம் பார்த்தேன். ரொம்ப அருமை. சரியான சூடு கொடுத்திருக்கிறீர்கள். இது மாதிரி எழுத உங்களை விட்டா வேற யார் இருக்கா? நம்ம ஸ்ட்ராடெஜியை கரெக்டா ஃபாலோ பண்ணியிருக்கீங்க. நம்ம மேல ஒருத்தர் மலத்தை வீசுனா நாம அவரோட மலத்தையே எடுத்து இன்னொருத்தர் மேல வீசிடணும். நம்ம மேல பட்ட மலம் நாறுமே என்று கவலைப்பட வேண்டியதில்லை. இப்போ அந்த ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்குவாங்க. நாம ஒதுங்கி நின்னு கைதட்டி ரசிக்கலாம். எக்சலண்ட் அண்ணா! நீங்க எங்கேயோ போயிட்டேள்!

நம்ம ஆளு கே.பி. எடுத்த 'இரு கோடுகள்' படம் ஞாபகம் இருக்கா? அதுல ஒரு தத்துவம் வருமே, 'ஒரு கோட்டை அழிக்காமல் அதை சிறிய கோடாக மாற்ற வேண்டுமென்றால் அதற்குப் பக்கத்திலேயே அதைவிட பெரிய கோடு ஒன்றை வரைய வேண்டும்'.

இந்த தத்துவத்தை 'உல்டா' பண்ணியதுதான் நம்ம கொள்கை. அந்த சிறிய கோட்டை ஒன்னும் செய்யாமலேயே அதை பெருசா காட்டனும் என்றால் அதன் பக்கத்தில் உள்ள பெரிய கோட்டை அழித்து சின்னதா காட்டினால் போதும். முதல் கோடு தானாகவே பெரிதாக தெரியும்.

அந்த சின்ன கோடுதாண்ணா நம்ம மத நம்பிக்கைகள், புராணங்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லாம். அதை நாம் எப்பாடு பட்டாலும், எப்படி தலையால தண்ணி குடிச்சாலும் பெருசா காட்டவே முடியாது. இந்த உண்மையை நமக்குள்ளே மட்டுமாவது நாம ஒத்துண்டுதான் ஆகணும். அதுக்காக நாம சும்மா இருந்துட முடியுமா? இந்த சூத்ராள்லாம் சேர்ந்து நம்ம தலை மேல ஏறிட மாட்டாளா? அதனாலத்தானே நாம பக்கத்துல இருக்குற பெரிய கோட்டை அழிக்க ட்ரை பண்றோம்? அப்படியாவது நம்ம கோடு பெருசா தெரிஞ்சுடாதாங்குற ஒரு நப்பாசைதான். நான் பெரிய கோடுன்னு சொல்றது அந்த துலுக்க மதத்தைத்தாங்குறது உங்களுக்கு புரியாமலா போயிடும்?

நான் சொல்றதுல உங்களுக்கு நம்பிக்கை இல்லேன்னா நான் சொல்ற சில உதாரணங்களை பார்த்த பிறகு உங்களுக்கு நம்பிக்கை வந்துடும்.

* நம்ம மதத்தை பத்தி நல்லதா நாலு வார்த்தை சொல்லணும்னு யாருக்காவது ஆசை வரும். 'எங்க மதத்துக்கு வாங்க' என்று கட்டுரை எழுத ஆரம்பிப்பாங்க. ஆனா இஸ்லாம் மதத்தையோ முஸ்லிம்களையோ குறை சொல்லாம இவங்களால அந்த கட்டுரையை எழுதி முடிக்க முடியாது. காரணம் என்னங்கிறீங்க? பக்கத்து கோட்டை அழிச்சாதான் நம்ம கோடு பெருசா தெரியுங்கிற நம்ம பாலிசிதான்.

* கிரிக்கெட் விளையாட்டாக இருந்தாலும்,

வந்தேமாதரம் பாடுவதாக இருந்தாலும்,

அசைவம் சாப்பிடுவதாக இருந்தாலும்,

பொங்கல் கொண்டாடுவதாக இருந்தாலும்,

ஜல்லிக்கட்டாக இருந்தாலும்....

துலுக்கன்களை வம்புக்கு இழுக்காமல் நம்மால ஏதாவது செய்ய முடியுமா? நம்ம கோடு எப்படி இருந்தாலும் சரி.. துலுக்க கோட்டை கொஞ்சமாவது அழிக்க முடிஞ்சா அதுல கிடைக்குற அல்ப சந்தோஷத்துக்கு இணை உண்டா?

* 'பெரியார்' படத்தில் நம்மளோட கேவலமான மூடநம்பிக்கைகளை சுட்டிக் காட்டினால் அதுக்கு பதில் சொல்ல நமக்கு ஏது திராணி? அதுக்கும் துலுக்கனோட பின்பக்கத்தைத்தான் நம்ம முகர்ந்து பார்க்க வேண்டியிருக்கு! இந்த துலுக்க பசங்க யாராவது நம்மைப் பத்தி பெரியார் சொன்ன அத்தனை பொன்மொழிகளையும், சொல்ல மறந்த செய்திகளையும் தொகுத்து 'அன்புள்ள இயக்குனர் அய்யாவிற்கு' கடிதம் எழுதுனா என்ன ஆகும்கிறதுதான் கொஞ்சம் கிலியா இருக்கு.

இதுக்கெல்லாம் பயந்தா நாம பொளப்பு நடத்த முடியுமா? நீங்க நல்லா முகத்தை மூடிக்குங்க! அப்பத்தான் இதுமாதிரி இன்னும் நிறைய தடவை மலம் வீச முடியும். யாரோ ஒருத்தி கடைத்தெருவில திருடி மாட்டிக்கிட்டாளாம். போற வர்ரவங்கள்லாம் அவளையே பார்த்ததால அவளுக்கு ரொம்ப வெட்கமா போயிடுச்சாம். உடனே முகத்தை மூடிக்கிட்டாளாம்.. எப்படிங்கிறீங்க.. அவளோட பாவாடையை எடுத்து! எப்படியோ முகத்தை மூடிக்கிட்டா சரிதானே?

மொத்தத்துல முஸ்லிகளை சீண்டாம நம்மால ஒரு மண்ணும் பண்ண முடியாதுன்னு நிரூபிச்சுட்டீங்க! நடத்துங்க! நீங்க அடிச்சு ஆடுங்கண்ணா! நாங்கள்லாம் பின்னூட்டம் போட்டு பின்னிடறோம்!

இப்படிக்கு
&&&&&&&

Wednesday, January 17, 2007

மனதளவில் பாகிஸ்தானியர்கள்! - ஒரு அதிரடி சர்வே!

"தமிழ் நாட்டில் உள்ள, ஏன் இந்தியாவில் உள்ள பெரும்பாலான முஸ்லீம்கள் நம்முடைய பண்டைய கலாச்சாரங்களை மதிப்பதில்லை. இன்னும் அவர்கள் மனதளவில் பாகிஸ்தானியர்களாகவே இருக்கின்றனர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே கிரிக்கெட் மாட்ச் நடக்கும் போது இந்திய வீரர் அவுட்டானால் அதை கைதட்டி ரசிக்கும் கூட்டத்தை கீழக்கரை முகமது சதக் பொறியியல்
கல்லூரியில் காணலாம். இந்தியாவுக்கு ஆதரவாக எவனாவது கைதட்டினால் அவர் தகுந்த?! முறையில் கவனிக்கப்படுவார். "


இந்த தத்துவத்தை சகோதரர் நல்லடியாரின் பதிவில் ஒரு அன்பர் வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து தமிழ் வலைப்பதிவர்களிடையே ரகசியமாக நடத்தப்பட்ட ஒரு கற்பனை சர்வே மூலம் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக இருக்கின்றன. பங்கேற்ற அனைவரும் தங்கள் அடையாளங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் சாதி மத வேறுபாடின்றி இங்கு அனைவருமே அனானிமஸ்தான்.

அனானி1: "நான் துபாயிலே இருந்தப்போ பார்த்திருக்கிறேன். இந்திய முஸ்லிம்கள் டாக்ஸி ஏற வேண்டுமென்றால் பாகிஸ்தானியரின் டாக்ஸியில்தான் ஏறுவார்கள். சவுதியில் அரேபியர்கள் கூட இவர்களிடம் 'சலாம் அலேகும்' என்று ரகசிய மொழியில் பேசுவதையும் பார்த்திருக்கிறேன். அதனால் இவர்கள் இன்னும் மனதளவில் பாகிஸ்தானியர்களாகத்தான் இருக்கிறார்கள்"

அனானி2: "கூகுள் போய் 'கிஸ்' என்று தமிழில் டைப் பண்ணி பாருங்கள். பாகிஸ்தானுக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பு அப்படியே வெட்ட வெளிச்சமாக தெரியும். 'நர்கிஸ்' என்று இவர்களின் பத்திரிக்கை ஒன்று இருக்கிறது. பா'கிஸ்'தானில் உள்ள 'கிஸ்'ஸும் 'நர்கிஸ்'ஸில் உள்ள 'கிஸ்'ஸும் ஒன்றேதான். தமிழக முஸ்லிம்கள் தங்கள் மனைவிகளை 'கிஸ்' அடிப்பதாகவும் எனது முஸ்லிம் நண்பன் ஒருவன் சொல்லியிருக்கிறான்"

அனானி3: "1945-ல் நேருஜி சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தபோது என்னிடம் சொல்லி வருத்தப்பட்ட சம்பவம் இது. பாகிஸ்தானியர்களுக்கும் தமிழக முகமதியர்களுக்கும் உள்ள தொடர்பை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது. 1940-ல் நான்கு பாகிஸ்தானியர்கள் ஊர் சுற்றிப் பார்ப்பதற்காக மதறாஸ் வந்திருந்தபோது இங்கு முகமதியர்களால் நடத்தப்படும் அகமதியா உணவகத்தில் சாப்பிட்டிருக்கிறார்கள். அன்று பிளாட்பாரத்தில் செருப்பு தைத்துக் கொண்டிருந்த தொழிலாளி இதை நேரில் கண்ட சாட்சி. இதை யாராவது மறுத்து பேசினார்களென்றால் நான் (கொஞ்ச நாளைக்கு) எழுத மாட்டேன்."

அனானி4: "ஆபிரகாமிய மதவாதிகளைப் பற்றி 'இட்லிமாவோ ஆசதோசக்' தமது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். பிரபஞ்ச வெளியின் குறியீட்டுக் கனவின் வெளிப்பாடாக ஆன்மாவற்ற அடிப்படை மதிப்பீடுகள் திகழ்கின்றன என அவர் தெளிவாக விளக்கியுள்ளார். இக்கட்டுரைகளூடாக அவர் மைய நிலை அல்லது விளிப்புநிலை மானுடப்பரிமாணமாக விளக்க முயல்வது ஆபிரகாமிய மதங்களினிடையிலான ஒரு வெளிச்சப்புள்ளி இருத்தலின் சாத்தியத்தைத்தான் என்பதை விளங்கிக் கொண்டால் பாகிஸ்தானியருக்கும் தமிழக ஜிகாதி முஸ்லிம்களுக்கும் இடையில் உள்ள தொடர்பை புரிந்து கொள்ளலாம்."

அனானி5: "நாமெல்லாம் குரங்கிலேருந்து பிறந்தோம் என்று பெருமையா சொல்லிக்கிட்டிருக்குறப்போ இவனுங்க பாட்டுக்கு ஆதாம் ஏவாள்னு கதை விட்டுக்கிட்டிருக்காங்க. இதுலேருந்தே தெரியலையா இவங்க நம்ம கலாச்சாரத்தோட ஒத்து வரமாட்டாங்கன்னு"

அனானி6: "இவங்கள்லாம் பாகிஸ்தான்லேருந்து மண்ணை கடத்திக்கிட்டு வந்து தமிழகம் முழுக்க பரப்பி 'தமிழகத்தை பாகிஸ்தான் மண்'ணாக மாற்ற சதித்திட்டம் போட்டுக் கொண்டிருப்பதாக 'விஜயபாரதம்' பத்திரிக்கையில் ஆதாரத்துடன் போட்டிருக்கிறார்கள்."

அனானி7: "அதனாலத்தான் நான் 'எல்லோரும் இந்து மதத்திற்கு வாருங்கள்' என்று பதிவு போட்டுக் கொண்டிருக்கிறேன். 'இவர் எந்த இந்து மதத்தை சொல்கிறார்' என்று இந்து மதத்தில் உள்ளவர்களே மண்டையை பிச்சுக்கிட்டு யோசனை பண்றதுல மற்ற மதங்களைப் பத்தி யோசிக்கவே அவங்களுக்கு நேரம் இல்லாம போயிடும்."

Tuesday, January 16, 2007

பொழக்கத் தெரியாத மனுசன்!

சுட்டி


இந்த வீடியோவில் வித்தை செய்பவர் கிரிஸ் ஏஞ்சல் என்கிற அமெரிக்க மேஜிக் நிபுணர். சும்மா சொல்லக்கூடாது... வெறும் கையில விபூதி, வாயிலேருந்து லிங்கம் இதையெல்லாம் விட ரொம்ப அருமையாவே கிரிஸ் இந்த வித்தையை செய்யுறாரு.

ஆனா, பொழக்கத் தெரியாத மனுசனா இருக்கிறாரே! இவர் மட்டும் இந்தியாவில் இருந்திருந்தா மடம், பக்தர்கள், பணம், சொத்து, செல்வாக்கு என ஏகபோகமா இருந்திருக்கலாம். இது தெரியாம இவர் அமெரிக்க பார்க்லே வித்தை காட்டிக் கிட்டிருக்காரு :-(

Monday, January 08, 2007

கட்டுப்படுத்தப் படுவதா இறை?

சகோதரர் எழில் அவர்கள் நாத்திகர்களிடமும் முஸ்லிம்களிடமும் நல்ல பெயர் கிடைக்கும் என்று நினைத்து 'இயேசு என்ற கற்பனை?' என்ற அறிவார்ந்த பதிவு ஒன்றை வைத்து தொடர்ந்து சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருக்கிறார். அவருக்கு நம் வாழ்த்துக்கள்! நல்லாயிருங்க சார்!

இதே எழில்தான் இனிய இஸ்லாமிய சகோதரர்களின் மீது அக்கறை கொண்டு அவர்களை இந்து மதத்திற்கு அழைத்திருந்தார். 'எந்த இந்து மதத்தை சொல்கிறீர்கள்?' என்று நாம் கேட்ட பல கேள்விகளுக்கு இன்னும் அவரிடமிருந்து சரியான பதில் இல்லை என்பதை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

இந்த பதிவின் பின்னூட்டத்தில் எழில் சொல்கிறார். . "என் தூதரிடம் மட்டும்தான் சொன்னார். அதற்கு பிறகு எங்கும் சொல்லமாட்டார் என்று சொல்வதினாலும்,ஒரே இறைமகன் இவர்தான் என்று சொல்வதாலும் இந்த மதங்களின் அடிபப்டையே மற்ற மதங்களை இழிவு படுத்துவதிலிருந்து ஆரம்பிக்கின்றது. சில வேளைகளில் அப்படி இறையை கட்டுப்படுத்துவது அவர்கள் வைத்திருக்கும் "கட்டற்ற இறை" என்ற இலக்கணத்துக்கே பொருந்தாது என்பதை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது."

முஸ்லிம்களிடம் நல்ல பெயர் கிடைக்கும்(?) என்பதற்காக அவர் இட்ட பதிவில்தான் இந்த பின்னூட்டமும் வந்திருக்கிறது.

கிருஸ்துவம் இயேசு அவர்களை இறைமகன் என்று சொல்வதாலும், இஸ்லாம் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறுதி இறைத்தூதர் என்று சொல்வதாலும் இந்த மதங்கள் மற்ற மதங்களை இழிவு படுத்துகிறதாம். நான் கேட்கிறேன்.. கிருஸ்துவம், இஸ்லாம் இவற்றுக்கெல்லாம் முற்பட்டதுதானே இந்து மதம்? இன்றளவும் யார் யாரையோ நடமாடும் கடவுள்களாக வரித்துக் கொண்டிருக்கும் இந்து மதம் இந்த இருவரையும் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை? அப்படி ஏற்றுக் கொள்ளாததால் இந்த இரண்டு மதங்களையும் இந்து மதம் இழிவு படுத்துகிறதா?

இறை என்பது விளக்கத்திற்கு அப்பாற்பட்டது என்று முன்பு சொன்ன எழில், இஸ்லாம் இறையை கட்டுப் படுத்துகிறது என்கிறார். இஸ்லாம் இறையைப் பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?

'மேலும், நிச்சயமாக இப்பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுதுகோல்களாகவும், கடல் (நீர் முழுதும்) அதனுடன் கூட மற்றும் ஏழு கடல்கள் அதிகமாக்கப்பட்டு (மையாக) இருந்த போதிலும், அல்லாஹ்வின் (புகழ்) வார்த்தைகள் முடிவுறா; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.' (குர்ஆன் - 31:27)

சகோதரர் எழில் அவர்கள் ஒருமுறை குர்ஆன் மொழிபெயர்ப்பை படித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். படித்துப் பார்ப்பதால் என்ன வந்து விடப் போகிறது? இதை படிக்க அன்றும், இன்றும், என்றும் எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது.

இப்படிப்பட்ட இறையை யார் கட்டுப் படுத்துகிறார்கள் தெரியுமா? எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு தகவல் இப்படி சொல்கிறது;

இந்து மத வேதங்களைக் கற்றுணர்ந்து அதில் விற்பன்ன நிலை அடைந்த சஞ்சய் த்விவேதி ஆச்சாரியா என்பவர் இஸ்லாத்தை ஏற்று முஹம்மது அப்துல் முனீம் என பெயர் கொண்டிருக்கிறார். இவர் அஹமது பண்டிட் எனவும் அன்போடு அழைக்கப்படுகிறார்.

பள்ளிப் பருவத்திலேயே சக முஸ்லிம் மாணவன் ஒருவனின் ஐவேளைத் தொழுகைகளைப் பேணுதலுடன் பின்பற்றும் சீரிய ஒழுக்கம் முதலில் இவரைக் கவர்ந்திருக்கிறது. பள்ளி ஆசிரியர்களின் தண்டனைக்கு பயப்படாமல் அந்த முஸ்லிம் மாணவர் தனது தொழுகைகளை பின்பற்றியிருக்கிறார். இது பற்றி அஹமது பண்டிட் அந்த மாணவரிடம் 'பள்ளி நேரம் முடிந்த பிறகு தொழலாமே?' என்று வினவியபோது அவர் சொன்னார், "மன்னியுங்கள் பண்டிட்ஜி, நீங்கள் உங்கள் வீடுகளிலோ அலுவலகங்களிலோ ஒரு சிறிய இடத்தை ஒதுக்கிக் கொடுத்து உங்கள் கடவுளரை கட்டுப் படுத்தி வைத்திருக்கிறீர்கள். ஆனால் முஸ்லிம்களாகிய நாங்கள் அந்த இறைவனால் கட்டுப் படுத்தப் பட்டிருக்கிறோம். குறிப்பிட்ட நேரத்தில் நான் தொழவில்லை என்றால் மறுவுலகில் நான் அதற்கான தண்டனையை பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். அந்தத் தண்டனையோடு ஒப்பிட்டால் இந்த உலகில் எனக்கு கிடைக்கும் தண்டனை ஒன்றுமேயில்லை"

அந்த முஸ்லிம் மாணவரின் இந்த பதில்தான் ஆச்சார்யா சஞ்சய் த்விவேதியை அஹமது பண்டிட் ஆக்கியிருக்கிறது.

இப்போது சொல்லுங்கள், இறையை கட்டுப்படுத்துபவர்கள் யார்? இறைவனால் கட்டுப்படுத்தப் படுபவர்கள் யார்?

இந்த பதிவிலேயே சகோதரர் கால்கரி சிவா அவர்கள் இன்னொரு அறிவார்ந்த பின்னூட்டம் வைத்திருக்கிறார்கள்.

"நம் புராணங்கள் கதை என ஏற்றுக் கொள்ளும் அறிவு நம்மிடம் இருக்கிறது. இறைத்தூதன், இறைமகன் என்பவைகளும் கற்பனைகளே என ஏற்றுக்கொண்டுவிட்டால் ப்ரச்னைகள் இல்லையே. அந்த அறிவு இல்லாதால்தானே இவ்வளவு ப்ரச்னைகளும். "

உங்கள் புராணங்கள் கதை என்றால் மற்றவர்களின் நம்பிக்கைகளும் கதையாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? எவ்வளவு நாளைக்குத்தான் கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று சொல்லிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? கண்ணைத் திறந்து பாருங்கள் சார்!

Thursday, January 04, 2007

பாரதியும் இஸ்லாமும் - மாலன்

" மாரியம்மனிலிருந்து மகாவிஷ்ணு வரை எல்லாக் கடவுள்கள் மீதும் பாடல்கள் எழுதுகிறார். வேதத்தைப் புகழ்கிறார். உபநிஷதங்களின் அடிப்படையில் புதுக் கவிதை படைக்கிறார். கீதையை மொழி பெயர்க்கிறார். ஒருவேளை பாரதியார் என்னைப் போல இந்துத்வா ஆளோ? இஸ்லாம் பற்றி என்ன சொல்கிறார் 'உங்க' பாரதியார்?" என்று வம்பளக்க வந்தார் என் பக்கத்து வீட்டுக்காரர். ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் நேரம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போரடிக்கத் துவங்கியிருக்க வேண்டும். வம்புக்கு அலையும் அவர் என் வாயைக் கிளற வந்திருந்தார்.

"சொல்கிறேன், சொல்கிறேன். ஆனால் சொன்னால், அதை உம்மால் தாங்க முடியுமா என்றுதான் எனக்குக் கவலை"

"அப்படி என்ன ஐயா அதிர்ச்சி கொடுக்கப்போகிறீர்?"

"சொல்லட்டுமா? சொல்வதைக் கேட்டுவிட்டு, என்னைத் திட்டினால் கூட பரவாயில்லை. பாரதியைத் திட்டினால் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன்"

"சும்மா பூச்சி காட்டாதீரும். சொல்லும் அதையும்தான் கேட்போம்"

"நீங்கள் தினமும் பூஜை செய்து, விழுந்து கும்பிடுகிறீர்களே, அந்தக் கடவுள், அல்லாதான் என்கிறார்" என்றேன். என் இந்து நண்பர் முகத்தை சுருக்கினார்.கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், " என்ன சொன்னீர் மறுபடி சொல்லும்" என்றார்.

"பிரம்மம், பிரம்மம் என்று நீங்கள், அதாவது இந்துக்கள், சொல்கிறீர்களே அந்த பிரம்மம் அல்லா என்கிறார் பாரதியார்."

"நிஜமாவா? இல்லை நீர் கயிறு திரிக்கிறீரா?"

நான் என் மேஜை மீதிருந்த தராசு என்ற புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அது பாரதியார் எழுதிய நூல்களில் ஒன்று:

நேற்று பட்டணத்திலிருந்து ஒரு சாமியார் நம்ம கடைக்கு வந்திருந்தார்.அவர் சொன்னார்: ஹிந்துக்களுடைய வேதம் மிகவும் பழமையானது. அதிலும் நம்ம குரானைப் போல அல்லாவைத்தான் புகழ்ந்து பேசுகிறது. ஆனால் அல்லா என்கிறதற்கு அவர்களுடைய பாஷையிலே ப்ரஹ்ம என்கிறார்கள். அதில் ரிஷிகள் என்று பாடினவர்கள் அல்லாவினுடைய உண்மையை அறிந்தவர்கள்"

பக்கத்து வீட்டுக்காரர் புத்தகத்தை வாங்கிப்பார்த்தார்." இது பாரதியாரின் ஒரு பாத்திரத்தின் கூற்று. இதை எப்படி பாரதியின் கூற்றாக எடுத்துக் கொள்ள முடியும்?" என்று கேள்வி போட்டார். என்னை மடக்கி விட்டதாக அவருக்கு ஒரு பூரிப்பு.

"சரி, உமது திருப்திக்கு அப்படியே வைத்துக் கொள்ளும். ஆனால், அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் எழுதிய முகம்மதிய ஸ்திரீகளின் நிலமை என்ற கட்டுரையில், ' பரமாத்மாவான அல்லா ஹீத்த ஆலா அருள் புரிவாராக' என்று எழுதியிருக்கிறார். அது மட்டுமல்ல, இன்னொரு இடத்தில் இந்தியாவில் உள்ள இந்துக்கள் அக்பரை பூஜிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே அதற்கு என்ன சொல்கிறீர்?"

"இது என்ன புதுக் கதை?"

"இது கதை அல்ல. கதை போன்ற நடையில் எழுதப்பட்ட கட்டுரைகளில் சொல்லப்படுவதையே பாத்திரத்தின் கூற்று என்று தள்ளிவிடுகிற ஆள் நீங்கள்.அதனால் பாரதியாரின் கட்டுரை ஒன்றிலிருந்து வாசித்துக் காட்டுகிறேன். அதை நீர் அவருடைய கூற்று அல்ல என்று மறுக்க முடியாது."

"படியுமேன். கேட்போம்"

"நமது நாட்டில் தோன்றி நமது நன்மைக்குப் பாடுபட்ட மகான்களை எல்லோரும் ஒன்று சேர்ந்து பூஜிப்பதே நமது கடமை. இதை நாமெல்லோரும் நமது முகமதிய சகோதரர்களுக்குக் காரியத்தில் காட்ட, அக்பர் போன்ற மகமதிய மகான்களின் உற்சவத்தைக் கொண்டாட வேண்டும்"

"மதங்களிடையே சமரசம் நிலவ வேண்டும் என்ற கருத்தில் இதை சொல்லியிருப்பார். அக்பரை அவர் குறிப்பிட்டிருப்பதே அதற்குச் சான்று. அவர் இந்துக்களோடு நட்புப் பாரட்டியவர் அல்லவா?"

" 'மகமதிய சாஸ்திரங்களைப் படித்தால் இந்துக்களுக்கு அறிவு விசாலப்படும்' என்கிறார் பாரதியார். அதையாவது நம்புவீரா?"

"நீர் சொல்வதைப் பார்த்தால் கைவசம் ஆதாரம் வைத்திருக்கிறீர் என்று நினைக்கிறேன். எங்கே எடுத்து விடும் பார்ப்போம்"

நான் படித்துக் காட்டினேன்:" எல்லா வித்தைகளும் கலந்தால்தான் தேசத்தினுடைய ஞானம் பரிமளிக்கும். கலந்தால் பொது இன்பம். ஒன்றை ஒன்று கடித்தால் இரண்டுக்கும் நாசம். முகமதிய சாஸ்திரங்களைக் கற்றுக் கொண்டால் ஹிந்துக்களுக்கு அறிவு விசாலப்படும்."

"அதையெல்லாம் பாரதியார் படித்திருக்கிறாரா?"

"படித்திருக்கிறார் என்பது மட்டுமல்ல. அவற்றைப் பற்றி சரளமாக, தெளிவாகப் பேசுகிறார். மதங்கள் பற்றிய கட்டுரைகளில் மட்டும் அல்ல, அரசியல் பேசும் போதல்ல, பொது விஷயங்கள் பேசும் போது கூட அவற்றைக் குறிபிடுகிறார். நம்பிக்கையே காமதேனு என்ற தலைப்பில் அவர் எழுதியிருப்பதைப் படியுங்கள். முகமது நபியின் வாழ்க்கை சரித்திரத்தை இத்தனை சுருக்கமாக தெளிவாக இஸ்லாமியர் அல்லாத இன்னொருவர் எழுத முடியுமா என்று வியந்து போவீர்:

"பழைய பொய்ச் சிலைகளின் வணக்கத்தை ஒழித்து எங்கும் வியாபித்து நிற்கும் பிரம்மத்தையே தொழ வேண்டும் என்று முகமது நபி அலகிவஸ்லாம் அவர்கள் ஒரு புதிய மதம் உண்டாக்கினார் என்ற கோபத்தால், குராயிஷ் கூட்டத்தார் அவருடைய சிஷ்யர்களைப் பயமுறுத்தியும், கொலை செய்தும் அடக்கிவிட்டு நபியையும் கொல்ல வேண்டுமென்ற சதி செய்து கொண்டிருக்கையிலே அந்த மகான் மெக்கா நகரத்திலிருந்து தப்பி மெடீனா நகரத்திற்குச் செல்லும் போது, பின்னே அவரைப் பிடிக்கும் பொருட்டாகக் குராயிஷ் குதிரைப்படைத் துரத்திக் கொண்டு வந்தது. நபியானவர் தம்மோடு வந்த ஒரே சிஷ்யருடன், அங்கு ஒரு புதரில் ஒளிந்திருந்தார். துரத்தி வரும் குதிரைகளின் காலடி சமீபமாகக் கேட்டது. சிஷ்யன் பயந்து போய், "இனி என்ன செய்வது?" என்று தயங்கினான். அப்போது நபி, " அப்பா, நான் அல்லாவின் தர்மத்தை நிலை நிறுத்தும் பொருட்டாக வந்திருக்கிறேன். என் காரியம் நிறைவேறும் வரை எனக்கு மரணம் இல்லை." என்று சொல்லி அபயதானம் செய்தார். ஆபத்து வரவில்லை. குதிரைப்படையோர் இடம் தெரியாமல், ஏமாறித் திரும்பினார்கள். முகமது நபி பின்னிட்டுக் காலானுகூலம் பெற்று அந்த ராஜ்யத்துக்கெல்லாம் தானே ராஜேஸ்வரராய், தமது தரிசனத்தை என்றும் அழியாமல் நிலை நிறுத்திச் சென்றார். நம்பிக்கையே காமதேனு. அது கேட்டவரமெல்லாம் தரும்"

"கட்டுரைகளில் ஆங்காங்கே இஸ்லாம் பற்றிக் குறிப்பிட்டுள்ள பாரதி, கவிதைகளிலோ, கதைகளிலோ இஸ்லாமியர்கள் பற்றி எழுதியிருக்கிறாரா?"

பாரதியினுடைய முதல் சிறுகதையும், கடைசி சிறுகதையும் இஸ்லாமியர்களைப் பற்றியதாகவே அமைந்தது ஒரு தற்செயலான ஒற்றுமை. அவர் ஆசிரியராக இருந்த சக்ரவர்த்தினி என்ற பெண்கள் முன்னேற்றத்திற்கான இதழில், 1905ம் ஆண்டு நவம்பர் மாதம் அவரது முதல் கதை வெளியாயிற்று. துளசிபாயீ என்ற அந்தக் கதை உடன் கட்டை ஏற நிர்பந்திக்கப்பட்ட ஒரு ராஜபுத்திரப் பெண்ணை அப்சல்கான் என்ற முகமதிய இளைஞன் காப்பாற்றிக் காதலித்து மணம் செய்து கொள்வதைச் சொல்லும் கதை. இந்தக் கதை பிரசுரமாகிய காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் ஒரே மதத்திற்குள், ஒரே ஜாதிக்குள் காதல் என்பதே ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பாரதியாரோ, முரண்பட்டதாகக் கருதப்பட்ட இரு மதத்தைச் சேர்ந்தவர்கள் காதலிப்பது, ஒரு இந்து விதவையை இஸ்லாமிய இளைஞன் ஏற்று வாழ்வளிப்பது, உடன்கட்டை என்ற வழக்கத்தைக் கண்டிப்பது, ராஜபுத்ர வீரர்களோடு நடக்கும் சிறு சண்டையில் இந்து இளைஞன் ஒருவனின் தலை கொய்யப்படுவது என்று கதையை எழுதிக் கொண்டு போகிறார். அந்தக் காலகட்டத்தில் அது ஒரு புரட்சிகரமான கதையாகத்தான் இருந்திருக்க முடியும். இஸ்லாமியர்கள் மீதுள்ள அன்பினாலும், உடன்கட்டை போன்ற பெண்ணடிமை வழக்கங்கள் மீதிருந்த வெறுப்பினாலும் இந்தக் கதையை அவர் எழுதியிருக்க வேண்டும்.

அவரது கடைசிக் கதை இரயில்வே ஸ்தானம். அவர் காலமாவதற்கு சில மாதங்களுக்கு முன் எழுதிய கதை. சொத்துக்காக முன்று பெண்களை மணந்த இஸ்லாமியர் ஒருவர் படும்பாட்டைக் கதை விவரிக்கிறது. அந்தக் கதையும் ஒரு சர்ச்சைக்குள்ளானது. அந்தக் கதையில் இஸ்லாமியர் ஒருவர், சகோதரிகள் மூவரை மணந்து கொள்வதாக பாரதி எழுதியிருப்பார். கதை பிரசுரமான பிறகு ஒரு இஸ்லாமிய நண்பர், மனைவி உயிருடன் இருக்கும் போது, அவளுடன் பிறந்த மற்றொருத்தியைத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பது இஸ்லாமிய சாஸ்திரங்களின் கொள்கை என்பதை பாரதிக்கு சுட்டிக் காட்டுகிறார். தனது தவறை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் பாரதி, இந்துக்களிடையே இருக்கும் வழக்கம் இஸ்லாமியர்களிடமும் இருக்கும் என்றெண்ணி எழுதிவிட்டதாக ஒப்புக் கொள்கிறார்."

"அவருக்கு இஸ்லமிய நண்பர்கள் அதிகம் இருந்தார்களோ?"

"அவர் பிறந்து வளர்ந்த எட்டையபுரம், சீறாப்புராணம் பாடிய கவிஞர் உமறுப் புலவர் வாழ்ந்த ஊர். அவர் எட்டையபுரத்தின் அரசவைக் கவிஞராகவும் விளங்கியவர். அவரது கல்லறை இன்றும் அங்கு இருக்கிறது. எட்டையபுரத்தில் கணிசமான அளவில் இஸ்லாமியர்கள் வாழ்ந்திருக்கிறர்கள். எனவே இளம் வயதிலேயே அவருக்கு இஸ்லாமியருடன் பழக்கம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. புதுவையில் வாழ்ந்த காலத்தில், இஸ்லாமியர் ஒருவரது தேநீர்க் கடையில் 'தாடி ஐயர்' (பாரதிக்கு இப்படியும் ஒரு பட்டப் பெயர் உண்டு) தேநீர் பருகிய காட்சியைக் கண்டு அங்கிருந்தவர்கள் பலர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அன்று இந்துக்களும் இஸ்லாமியரும் பொது இடங்களில் ஒன்றாக அமர்ந்து உண்ணும் வழக்கமில்லை.' ஹிந்து-முகமதியர் கூட்டு விருந்து' என்று 1906 செப்டெம்பரில் சுதேசமித்ரன் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. இரண்டு சமயத்தாரும் ஒன்று சேர்ந்து உண்பது அத்தனை அபூர்வமாக இருந்தது. அதனால் பாரதி முகமதியரின் தேநீர் கடைக்குச் சென்று தேநீர் அருந்துவது அதிர்ச்சியோடு பார்க்கப்பட்டது. புதுவையிலிருந்து வெளியேறி தனது மனைவியின் ஊரான கடையத்தில் வாழ்ந்த போது இஸ்லாமியர்களோடு நட்புப் பாராட்டிய காரணத்தால் அவர் அக்கிரகாரத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். ஆனால் அதற்குப் பின்னும், 1918ம் ஆண்டு ராவண சமுத்திரம், பொட்டல் புதூர் ஆகிய ஊர்களில் இஸ்லாம் மார்க்கத்திஒன் மகிமை என்ற தலைப்பில் உரையாற்றி இருக்கிறார்."

"இஸ்லாம் மார்கத்தின் பெருமைகளைத்தான் பாரதி பேசுவாரா? அதன் மீது ஏதும் விமர்சனங்கள் ஏதும் கிடையாதா?"

"இஸ்லாமியர்களிடையே உள்ள இரண்டு வழக்கங்கள் மீது பாரதிக்கு உடன்பாடில்லை. ஒன்று அவர்களிடையே உள்ள, கோஷா என்னும் பர்தா அணியும் வழக்கம். அது அவர்களுக்குப் பாதுகாப்பு என்ற வாதத்தை பாரதி ஏற்பதில்லை.' கனி கண்டவன் தோலுரிக்கக் காத்திருப்பேனோ?' ' வன்ன முகத்திரையைக் களைந்திடென்றேன், நிந்தன் மதங் கண்டு துகிலினை வலிதுரிந்தேன்' என்றெல்லாம் எழுதி மூலம் ஒரு பெண்ணை அடைய நினைப்பவருக்கு இந்தத் துணித்திரை பெரும் அரண் அல்ல என்று சுட்டிக்காட்டுக்கிறார்.

பலதார மணத்தை இகழ்ந்துரைப்பதற்காகவே ரயில்வே ஸ்தானம் கதை எழுதப்படுகிறது. பலதார மணம் செய்து கொள்பவர்கள் ஒரு மனைவியைத் தவிர மற்றவர்களுக்கு மணவிலக்குக் கொடுத்து, அவர்கள் மற்றவர்களை மணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற யோசனை அந்தக் கதையில் வைக்கப்படுகிறது. இந்த யோசனையை முகமது நபியே தனது கனவில் தோன்றிச் சொன்னதாக பாரதி எழுதுகிறார்."

"ரொம்பத் துணிச்சல்தான்.அந்த துணிச்சலை இஸ்லாமியர்கள் இந்துக் கோயில்களை இடித்ததை விமர்சிக்கப் பயன்படுத்தியிருக்கலாமே?"

"அதைக் குறித்தும் அவருக்கு ஒரு கருத்து இருந்தது: " நாமும் அவர்கள் பேரில் பூர்வீகக் குற்றங்களை எடுத்துரைத்தல் தப்பிதம். அவர்களும் நம்மை உடன் பிறந்தவர்களெனெ பாவித்து நடக்க வேண்டும்" என்று ஓரிடத்தில் எழுதுகிறார்".

வம்பு கிடைக்காத ஏமாற்றத்தோடு எழுந்து கொண்டார் நண்பர்.

"ஓ! அப்படியா!அப்ப நான் வர்ரேன். உங்க 'பாய்' பாரதியாரிடமும் சொல்லுங்க!' என்றார் நண்பர் கிண்டலாக. நான் புன்னகைத்தேன்.

நன்றி: திசைகாட்டி

முன்மாதிரி எம்.எல்.ஏ ஹசன் அலி!

ராமநாதபுரம் எம்.எல்.ஏ ஹசன் அலி அவர்களைப் பற்றி இந்துத்துவவாதிகள் 'மத வெறியர்' என்ற ரேஞ்சிற்கு திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் அவர் காமராஜர் படத்திற்கு மாலை மரியாதை செய்ய மறுத்ததுதானாம். இந்துத்துவாக்களுக்கு காங்கிரஸ் தலைவர் காமராஜர் மேல் பாசம் பொத்துக் கொண்டு வழிகிறது பாருங்கள்.

இவர்கள் யாரை இப்படி திட்டித் தீர்க்கின்றார்களோ, அதே எம்.எல்.ஏ ஹசன் அலி அவர்களைப் பற்றி செப்-2006-ல் ஜுனியர் விகடனில் ஒரு கட்டுரை போட்டிருக்கிறார்கள். ஒரு முன்மாதிரி என்று சொல்லத் தக்க வகையில் தொகுதி நலனை கருத்தில் கொண்டு அவர் செய்யும் வித்தியாசமான ஒரு முயற்சியைப் பற்றி இந்தக் கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

'ஒரு முஸ்லிமுக்கு இப்படி நல்ல பெயர் கிடைப்பதா?' என்று இந்துத்துவாக்கள் வயிறெரிவதன் காரணம் உங்களுக்கே புரியும்.

**********
தமிழ்நாட்டில் ஒரு காங்கிரஸ் மந்திரிசபை!

‘‘முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழகத்தை ஆள ஒரு அமைச்சரவை இருப்பதுதான் உங்களுக்குத் தெரியும். ஆனால், ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி யிலும் ஒரு ‘செயின்ட் ஜார்ஜ் கோட்டை’ இருக்கிறது. அங்கும் ஒரு மினி அமைச்சரவை இயங்குகிறது... இந்த சங்கதி உங்களுக்குத் தெரியுமா?’’ என நம் நண்பர் ஒருவர் சொன்னபோது முதலில், ‘இதென்ன துக்ளக் தர்பார்?’ என்றுதான் நமக்குத் தோன்றியது.

ஆனால், ராமநாதபுரம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான ஹசன் அலியின் அலுவலகத்துக்கு நேரில் சென்று பார்த்தபோது, அவரைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.


வெளியூர்க்காரரான ஹசன் அலி ராமநாதபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டபோது, ‘ராமநாதபுரத்தை ஒரு முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்’ என அடித்துச் சொல்லியிருந்தார். இப்போது, தன் தலைமையில் முப்பது பேர்கொண்ட ஒரு மாடல் அமைச்சரவையை ஏற்படுத்தி, தான் தேர்தல் சமயத்தில் சொன்னதை செயலில் காட்டியிருக்கிறார் ஹசன் அலி. அவரது அலுவலகத்துக்குப் போனால் நிதி, மருத்துவம், கல்வி, உணவு, விவசாயம், மீன்வளம், அறநிலையம், சட்டம்-ஒழுங்கு, இளைஞர் நலன், காவல்துறை என எல்லாத் துறைகளுக்கும் ஒருவர் நியமிக்கப்பட்டு ‘அமைச்சரவை பட்டியல்’ ஒன்று போடப் பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். அந்தப் பட்டியலில் அமைச்சரவை உறுப்பினர்களின் பெயரோடு, எந்த நேரத்திலும் பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க, அவர்களின் மொபைல் போன் நம்பரும் இடம்பெற்றுள்ளது!

ஹசன் அலியை அவரது அலுவலகத்தில் சந்திக்கச் சென்றபோது, ஒருபக்கம் மனுக்கள் ஏந்திய கையோடு தொகுதியினரும், மறுபக்கம் வெள்ளை வேட்டி, சட்டையோடு சிலருமாகக் களை கட்டியிருந்தது அலுவலகம். ‘‘போக்குவரத்து மந்திரி யாருப்பா..? ஸ்கூல் விடுற நேரம் பெரியபட்டணத்துக்குப் போதுமான பஸ் வசதி இல்லையாம். டிரான்ஸ் போர்ட் ஆபீஸர்ஸ்கிட்ட பேசுங்க. இந்தாங்க, இந்த மனுவுக்கு ஒரு ரசீது நம்பர் போட்டுக் கொடுங்க..!’’ என்றும், ‘‘ஐயா, உங்க ஊர் குடிநீர் பிரச்னையை கலக்டெர்கிட்ட சொல்லிட்டேன். ஆர்டர் போடுறேன்னு சொல்லிட்டாரு. சந்தோஷமா போயிட்டு வாங்க’’ என்றும் பரபரப்பாக இருந்தார் ஹசன் அலி.

‘‘என்னென்னவோ கனவோடத்தாங்க எம்.எல்.ஏ. ஆனேன். நானே முன்ன நின்னு எல்லா வேலையையும் எடுத்துக்கட்டிப் பாக்கணும்னுதான் ஆசைப்பட்டேன். ஆனா, அது அவ்ளோ சுலபமில்லைனு தெரிஞ்சுபோச்சு. அதனால என்ன பண்றதுனு யோசிச்சேன். நான் மெட்ராஸ் பிரசிடென்சி காலேஜ்ல படிச்சப்ப, ‘மாதிரி மந்திரிசபை’னு பசங்களுக்குள்ள அமைச்சுக் கல்லூரி சம்பந்தமான நடவடிக்கைகளை ஆலோசனை பண்ணி எடுப்போம். அதே செட்-அப்பை இங்க செயல்படுத்துனா என்னனு தோணுச்சு. உடனே பொதுகாரியங்களைப் பண்றதுல ஆர்வமுள்ள முப்பது பேரைப் புடிச்சு ஒவ்வொருத்தருக்கும் தனித்தனி துறைகளை ஒதுக்கிக் கொடுத்துட்டேன். எந்த கோரிக்கையோட வந்தாலும் இந்த முப்பது துறைகள்ல ஏதாவது ஒண்ணுல அடங்கிடும். சம்பந்தப்பட்ட மந்திரி (மந்திரி என்றுதான் சரளமாகக் கூறுகிறார்!) அந்த மனுவை பரிசீலிச்சு, ஏத்துக்கிட்டு ஒரு ரசீது போட்டுக் கொடுப்பாங்க. அந்த மனுவுல என்னோட கையெழுத்தோட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஃபார்வர்ட் பண்ணி விரைவான நடவடிக்கைக்கு என்ன பண்ணணுமோ அதை பண்ணுவோம். இந்த நிர்வாகத்துக்கு என்னோட சொந்த பணத்தைதான் பயன்படுத்துறேன். அடிக்கடி மீட்டிங் போடுறோம். தொடர்ச்சியா மூணு மீட்டிங்கை அட்டெண்ட் பண்ணலைனா, அந்த உறுப்பினர தூக்கிட்டு வேற ஒருத்தர நியமிச்சுருவோம். சட்டசபைக் கூட்டம், வெளியூர் பயணம்னு நான் தொகுதியில் இல்லைனாலும், எல்லா வேலையும் ஸ்மூத்தா போயிட்டு இருக்கும். தி.மு.க. எங்களுக்கு மந்திரி சபைல இடம் கொடுக்கலைனாலும், இந்த மந்திரிசபைல தி.மு.க. உறுப்பினர்களும் இருக்காங்க’’ என்று வாய்விட்டுச் சிரித்தவர் மேலும் தொடர்ந்தார், ‘‘பொறுப்புகளைப் பகிர்ந்து கொடுத்தா வேலை சுலபமா முடியுங்கற சின்ன எண்ணத்தோட விரிவாக்கம்தான் இந்த மாடல் மந்திரிசபை. எனக்கு மக்களோட அடிப்படை வசதிகள் பூர்த்தியாகணும். அதுக்கு அப்புறம் பெரியபெரிய தொழிற் சாலைகள் வந்தா போதும். அதுக்கு இதைப்போல என்னா லான எல்லா முயற்சிகளையும் எடுப்பேன்..!’’ என்று கூறி விடை கொடுத்தார்.

தங்கள் பிரச்னைக்கு ஏதேனும் விடிவு காலம் ஏற்படாதா என்ற ஆதங்கத்துடன் ஹசன் அலியின் ஆபீஸுக்கு வரும் மக்களுக்குப் பொறுப்பான விசாரிப்புகளும், பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான முயற் சிகளும் பெரும் ஆறுதலாக இருக்கிறது. அதற்காகவாவது மனிதரைப் பாராட்டலாம்!

நன்றி: ஜூனியர் விகடன்

போட்டோ, மரியாதை, ஆரத்தி, எம்.எல்.ஏ!

எனது பதிவொன்றில் சகோதரர்கள் வாசகன், அழகு இருவரும் இட்ட பின்னூட்டங்கள் இவை. இவ்வளவு அருமையான தகவல்கள் பின்னூட்டத்திலேயே அமுங்கிப் போகலாமா? அதனால் அதை வைத்து ஒரு தனிப் பதிவு போட்டு விட்டேன்!

நன்றி வாசகன் அவர்களே!
நன்றி அழகு அவர்களே!



வாசகன் said...
மரைக்காயர் பாய்,

நீலகண்டன் என்கிற ஸ்யம் சேவக் தொண்டர் 'அலட்சியமாகக் கருதப்படும் ஆபத்தான விஷயங்கள்' என்கிற இஸ்லாமிய நூலுக்கு இலவச விளம்பரம்செய்து, 'இறைவனையன்றி யாருக்கும் தலைவணங்காத இஸ்லாமியக் கொள்கையை பதிவிட்டு
விளக்கிக்கொண்டிருக்கிறார்.

எம்.எல்.ஏ ஆகியபின்னரும் தன் கொள்கையில் உறுதியாக நிற்கும் முஸ்லிமை பாராட்ட மனமில்லாமல், இவ்விஷயத்தை வைத்து குளிர்காய முடியுமா? என்று பார்க்கிறார்.

நான் கேட்கிறேன், எம்.எல்.ஏ ஆனால் மத அடையாளங்களை / கொள்கைகளை விட்டுவிட வேண்டுமா என்ன?அப்படியென்றால், பிராமண எம்.எல்.ஏக்கள் பூணூலைக் கழற்றி வைத்துவிட்டா சட்டசபைக்கு போகின்றனர்?
3/1/07 6:54 PM


திரு. நீலகண்டன் அவர்களுக்கு நான் 2 விஷயங்களுக்காக நன்றி கூற விரும்புகிறேன்.

1. 'அலட்சியமாகக் கருதப்படும் ஆபத்தான குற்றங்கள்' என்ற நூலை தமிழ்மண வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தியதற்காகவும், தாருல் ஹுதா பதிப்பகத்திற்கும் இந்த புத்தகத்திற்கும் இலவச விளம்பரம் கொடுத்ததற்காகவும் எனது நன்றி. தாருல் ஹுதா பதிப்பகத்தின் முகவரியையும் அவரே குறிப்பிட்டிருக்கலாம். பரவாயில்லை.. அவர்களின் முகவரி இதுதான்.

தாருல் ஹுதா
புதிய எண்: 211 (102), முதல் மாடி,
லிங்கி செட்டி தெரு
மண்ணடி, சென்னை - 600 001

இணையத் தள முகவரி

மேலே குறிப்பிட்ட புத்தகம் தவிர மேலும் பல அரிய இஸ்லாமிய நூற்களை இவர்கள் வெளியிட்டு வருகிறார்கள். நண்பர்கள் இந்த நூற்களை வாங்கி படித்து பயனடையும்படி கேட்டுக் கொள்கிறேன்.

2. அரசியல்வாதியாக இருந்தாலும் கொள்கையில் உறுதியாக இருக்கும் எம்.எல்.ஏ ஹசன் அலி அவர்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

நீலகண்டன் அவர்கள் இது போன்ற அவரது சேவைகளை தொடர்ந்து செய்து வரும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

வாசகன் அவர்கள் கேட்டிருக்கும் கேள்விக்கும் நீலகண்டன் மறக்காமல் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

அழகு said...
வாசகன்,

பொதுவாக, சட்டமன்ற உறுப்பினரை மக்கள் தேர்ந்தெடுப்பது தங்கள் தொகுதிக்கு நல்லன செய்வார் என்ற நம்பிக்கையில்.

சிலைக்கு மாலை போடுவதற்கும் ஆரத்தியை ஏற்றுக் கொள்வதற்கும்தான் எம்.எல்.ஏ பதவி என்று உளறிக்
கொட்டுபவனுக்கெல்லாம் பதில் சொல்லத் தொடங்கினால் வாழ்நாள் போதாது.
4/1/07 12:11 AM
சரியா சொன்னீங்க அழகு அவர்களே! அதுல பாருங்க, காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள்ல கலந்துக்கிறதுக்காகவே ராம்நாடு மாவட்டம் முழுவதும் ஹசன் அலி அவர்கள் சென்றது இவங்களுக்கு பெருசா தெரியலையாம்! போட்டோவுக்கு மாலை போட மறுத்ததால் அவர் காமராஜரை புறக்கணிக்குறாராம். புறக்கணிக்குறவரு ஏன்யா பிறந்த நாள் கொண்டாட்டத்துல கலந்துக்க வர்றாரு?

நம்புங்கள் இளிச்சவாய் அப்பாவி ஜனங்களே! குஜராத்ல நடந்த இனச்சுத்திகரிப்பு தமிழ்நாட்டுக்கு வரும் நாள் வரை நம்பிக் கொண்டிருங்கள்!

Monday, January 01, 2007

எந்த இந்து மதத்தைச் சொல்கிறீர்கள்? - 2ம் பாகம்

சகோதரர் எழில் என்னுடைய 'கதை கதையாம் காரணமாம்' பதிவுக்கு பதில் பதிவு எழுதியிருக்கிறார். அவருக்கு என் நன்றி. என்னுடைய எந்த இந்து மதத்தைச் சொல்கிறீர்கள்? 1ம் பாகத்தில் கேட்ட கேள்விகளுக்கு அவர் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதுவரை மூன்றோ நான்கோ பதிவுகள் அவர் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால் எனது கேள்விகளுக்கு பதில் கிடைத்திருக்கிறதா?

எனது கேள்விகள்:

1. கடவுள் யார்? அல்லது யாவர்?
இந்தக் கேள்விக்கு எழில் சொன்ன பதில்கள்:


கடவுள் யார் என்பது உங்கள் கேள்வியாக இருக்கும்பட்சத்தில் அது தனி கேள்வி. அதற்கான விடையை ஒருவராலும் அளிக்க முடியாது. விண்டவர் கண்டிலர், கண்டவர் விண்டிலர். கடவுள் தன்னிடம் வந்து பேசினார் என்று கூறுபவர்களிடம் கடவுள் பேசவில்லை. இறையை கண்டவர்கள் அதனை பேசமாட்டார்கள். இறை என்பது விளக்கத்துக்கு அப்பாற்பட்டது. விளக்கத்துக்கு அப்பாற் பட்டதுஎன்பதே விளக்கமாகும்போது, விளக்கத்துக்குள்ளும் அடங்கியது.
அய்யா, கடவுளை கொண்டு வந்து என் முன்னே நிறுத்துங்கள் என்று நான் கேட்கவில்லை. கடவுளை define பண்ணுங்கள் என்றும் நான் கேட்கவில்லை. இந்து மதத்தினர் வணங்கும் கடவுள்களுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்கள்? அந்தப் பெயரைத்தான் நான் கேட்டேன். அந்த கடவுள்களின் தன்மை என்ன? கடவுள் ஒருவர் என்றால் அதற்கு விளக்கம் தேவையில்லை. பல கடவுள்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் ஒரு கடவுள் மற்றவரிடமிருந்து எப்படி வித்தியாசப் படுகிறார்கள்? இந்தக் கேள்விதான் நான் கேட்டது.

கடவுள் யார் என்ற கேள்விக்கு ஒருவராலும் விடை அளிக்க முடியாது என்றால்,
பன்றி - வராகமூர்த்தி
நாய் - பைரவமூர்த்தி
மாடு - கோமாதா
யானை - கணபதி
சிங்கம் - நரசிம்மாவதாரம்
மீன் - மச்சாவதாரம்
முதலை - கூர்மாவதாரம்
பெண்பித்தன் - கிருஷ்ணாவதாரம்
குரங்கு - அனுமன்
சுடலைப் பித்தன் - சிவன்
ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன் - ஐயப்பன்
பாம்பு- நாகராஜன்
மண்டயோடுமாலை அணிந்து ரத்தம் குடிக்கும் காளி
வீச்சரிவாளுடன் நிற்கும் அய்யனார்
(நன்றி: வணங்காமுடி அய்யா)

இவர்களெல்லாம் யார்? இந்த கடவுள்களை வணங்குபவர்களெல்லாம் இந்துக்கள் இல்லையா? அவர்களின் மதம் இந்து மதம் இல்லையா? அதனால்தான் கேட்கிறேன்,

நீங்கள் எந்த இந்து மதத்தை சொல்கிறீர்கள்?

2. ஆன்மீக வழிகாட்டிகள் யாவர்?
என்ற எனது அடுத்த கேள்விக்கு எழில் சொன்ன பதில்கள்:


இந்த வீட்டுக்கு பெரிய மனுஷர்கள் இருக்கிறார்கள். அவர்கள் காலம் காலமாக எழுதி வைத்திருக்கும் பல்வேறு ஆன்மீக புத்தகங்களும் அந்த ஆன்மீக புத்தகங்களிலிருந்து வியாக்கியானம் சொல்லும் கற்றறிந்தவர்களும் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறார்கள்.

அவர்கள் யார் என்றுதான் நான் கேட்டேன். நடைமுறையில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். ஒரு காவி உடை இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும் இந்து மதத்தில் சாமியாராகலாம். சாமியார் என்ற போர்வையில் போதை மருந்து கடத்தலாம், பெண்களை கற்பழிக்கலாம், அடியாள் வைத்து வேண்டாதவனை கொலை செய்யலாம், கருப்பு பணத்திற்கு பாதுகாவலராகலாம். திறமை இருந்தால் செல்வாக்கு வளர்த்துக் கொண்டு அரசியல் பண்ணலாம். அதிலும் Power Politics. இதுபோல போலி (ஆ)சாமிகளிடமிருந்து உங்கள் வீட்டு பெண்களை பாதுகாக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் எழில் சார்? இந்த (ஆ)சாமிகளெல்லாம் இந்துக்கள் இல்லையா? இந்த பெரியவா சின்னவா சொல்ற வியாக்கியானம் எல்லாம் இந்து மதத்துல சேர்த்தி இல்லையா?

நீங்க சொல்ற பெரியவங்க வியாக்கியானம் சொல்றவங்களெல்லாம் வேற எந்த இந்து மதத்தை சேர்ந்தவங்க எழில் சார்?

3. எந்த வேதங்களை பின்பற்றுவது? என்று நான் கேட்டதற்கு எழில் சொன்னார்:


ரிக், யஜூர் சாமம் அதர்வணம் ஆகிய வேதங்களும், நாலாயிர திவ்யபிரபந்தமும், திருவாசகமும், திருப்பாவையும் இன்று யாருடைய மேற்பார்வையும் இல்லாமல் தங்கு தடையின்றி படிக்கக் கிடைக்கின்றன. அவற்றை படித்து உணரவும், ஆன்மீக உணர்வு பெறவும் இன்று எதுவும் தடையில்லை.

இந்த 4 வேதங்களின் அடிப்படையிலதான் இந்து மதம் அமைஞ்சிருக்குங்களா? எனக்கு தெரிஞ்சவரை அந்த காலத்துல நம்ம நாட்டு மன்னர்களை எல்லாம் ஏமாத்தி கெட்ட கனா கண்டா ஒரு ஊரை எழுதி கொடுக்கனும்னு மிரட்டுறதுக்குதான் இந்த 4 வேதமும் பயன்பட்டிருக்கு. இல்லீங்களா?

அப்புறம், திருவாசகத்தை வைத்து கோவிலில் அர்ச்சனை செய்ய பிராமணர்கள் எதிர்ப்பது ஏன்? அப்ப பிராமணர்களோட இந்து மதம் வேற, மத்தவாளோட இந்து மதம் வேற தானே?

இதுல, நீங்க எந்த இந்து மதத்தை சொல்றீங்க?

4. இந்து மதத்திற்கு புதிதாக வருபவர்கள் எந்த ஜாதியில் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள்? என்ற எனது அடுத்த கேள்விக்கு எழில் சொன்னார்:
ஏன் இந்துமதத்தையும் ஜாதியையும் இணைத்து பார்க்கவேண்டும்? இந்துமதம் என்பது ஆன்மீகம். அது இறையை மனிதன் உணர அழைக்கிறது. மனுதர்மம், இந்திய அரசியலமைப்பு சட்டம், அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் போன்றது. அமெரிக்க அரசியலமைப்புச்
சட்டத்தையும் கிறிஸ்துவத்தையும் போட்டு குழப்பிக்கொள்வது இல்லை. அது போல, மனுதர்மத்தையும் இந்துமதத்தையும் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது.
கேட்க நல்லாத்தான் இருக்கு எழில் சார். ஆனால் நிஜம் இது இல்லையே! ஒரு தலித் இந்து கோவிலுக்கு சாமி கும்பிட போனால் இந்த பாழாப்போன மனுதர்மம்தானே அவனை கோவிலுக்கு உள்ளே போக விடாம தடுக்குது? மனுதர்மத்தையும் இந்துமதத்தையும் போட்டு குழப்பிக்கொள்ளக் கூடாது என்றால், நீங்கள் எந்த இந்து மதத்தை சொல்கிறீர்கள் எழில் சார்?

உங்கள் மதத்தைப் பற்றி நல்லதா நாலு வார்த்தை சொல்றதுக்கு கூட உங்களுக்கு ஒரு 'கருத்து தியாகி' தேவைப்படுகிறார். நாலு பதிவெழுதியும் இன்னதுதான் உங்கள் மதம் என்பதை தெளிவாக சொல்லக்கூட உங்களுக்கு முடியவில்லை. உங்கள் மதத்தைப் பற்றியே சரியாக புரிந்து கொள்ளாத நீங்கள், இஸ்லாம் பற்றி குறை கூறுகிறீர்களா? கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் வானம் ஏறி வைகுண்டம் போகும் பாதை கோணல் என்று சொல்ல வரலாமா?

மத்தவங்க மத விஷயத்துல மூக்கை நுழைக்குறதுக்கு முன்னாடி, போங்க சார், போய் உங்க மதத்தைப் பத்தி முதல்ல நல்லா தெரிஞ்சுக்குங்க! இந்த பதிவுல எழுதுன விஷயத்தையெல்லாம், யாராவது வெள்ளைக்காரங்க 'இந்தியான்னா பாம்பாட்டி நாடு'ன்னு நெனச்சுக்கிட்டு வருவாங்க, அவங்க கிட்ட போய் சொன்னீங்கன்னா நம்புவாங்க. ஆனா, நான் இந்தியாவுலேயே பிறந்து வளர்ந்து பல விதமான இந்துக்களோட பழகினவன்.

இஸ்லாம் மார்க்கம் தெளிவானது. அதில் எந்த குழப்பத்துக்கும் இடம் இல்லை. ஆனால் இஸ்லாத்தை சரியாக புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அதை முறையாக பின்பற்றாத முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குள் பிரச்னைகள் இருக்கின்றது. கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. அதெல்லாம் முஸ்லிம்களின் உள்விவகாரம். முஸ்லிம்களுக்குள் உள்ள பிரச்னைகளைப் பத்தி நாங்க பாத்துக்குறோம். எங்கள் தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

முஸ்லிம்களுக்கு இருப்பதை விட பன்மடங்கு பிரச்னைகளும் குழப்பங்களும் இந்து மதத்தில் இருக்கிறது. சீர்திருத்த வேண்டிய விஷயங்கள், தீர்க்க வேண்டிய பிரச்னைகள் எவ்வளவோ இருக்கின்றது. (சொல்லப் போனால் இந்து மதத்தில் உள்ளவர்களே வெட்கப்படும், பிற மதத்தவர் எள்ளி நகையாடும் இந்துமதத்தின் மூடநம்பிக்கைகளை ஓரளவுக்காவது ஒழிக்க முயற்சி எடுத்த தந்தை பெரியாரை இந்துமதத்தை சீர்திருத்த வந்த பெரிய மனுஷாளாக இந்துக்கள் கொண்டாட வேண்டும். அதுக்கு பதிலாக அவரது சிலையை உடைக்கிறாங்களே உங்க ஆட்கள்?) உங்களை மாதிரி உள்ளவர்கள் உங்கள் மதத்தில் இருக்கும் பிரச்னைகளை மறந்து விட்டு மற்ற மதத்தை குறை சொல்ல புறப்பட்டிருப்பதை ரொம்ப நாகரீகமான வார்த்தையில் சொல்லனும்னா 'அதிகப் பிரசங்கித்தனம்.'

எங்க வேலையை நாங்க பாக்குறோம். அது மாதிரி உங்க வேலையை நீங்க பாருங்க! என்ன சரியா?