Tuesday, July 10, 2007

"உயிரை எடுப்போம்!" - துறவி உமாபாரதி கர்ஜனை!


சேதுசமுத்திரத் திட்டத்தை எதிர்த்து திருச்சியில் பாரதீய ஜனசக்தி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவி செல்வி உமாபாரதி (முன்னாள் பாஜக) "ராமர் பாலத்தை மீட்க உயிரையும் எடுப்போம்" என்று கர்ஜித்தார். அவரது பேச்சை விளையாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதாலோ என்னவோ திருச்சி போலீசார் அவர் மீது கலவரத்தை தூண்டுதல், கொலை மிரட்டல் ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பெண்துறவியான உமாபாரதி, 'சேது சமுத்திர திட்டத்தினால் பாதிக்கப்படும் 10 லட்சம் பொது மக்களில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் என்று அனைத்து மதத்தினரும் உள்ளார்கள். ராமர் பாலத்தை இடிப்பதை எதிர்த்து குரல் கொடுக்க அவர்கள் முன்வரவேண்டும். ராமர் பாலத்தை காக்க நாங்கள் உயிரையும் கொடுப்போம். உயிரையும் எடுப்போம்' என்று பேசினார். அவரது இந்த பேச்சு பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக இருப்பதால்தான் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
துறவிகளெல்லாம் ஏன்தான் இப்படி 'உயிரை எடுக்குறாங்களோ', தெரியலை!

0 comments: