Showing posts with label தேசத்துரோகம். Show all posts
Showing posts with label தேசத்துரோகம். Show all posts

Wednesday, January 23, 2008

படாத பாடுபடும் பாரத ரத்னா!

"ஆத்தோட போற தண்ணி.. அய்யா குடி.. அம்மா குடி'-ன்னு சொல்வாங்களே அந்தக் கதையா ஆயிப் போச்சு பாரத ரத்னா!

நாட்டின் மிக உயரிய விருதான இதை முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு வழங்க வேண்டும் என்று பாஜகவின் அத்வானி கூறியிருந்தார். அ‌வரைத் தொட‌ர்‌ந்து க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி, அ‌க்க‌ட்‌சி‌‌யி‌ன் மூ‌‌த்த தலைவ‌ர்க‌ளி‌ல் ஒருவரான ஜோ‌திபாசு‌க்கு‌ம், பகுஜ‌ன் சமா‌ஜ் க‌ட்‌‌சி‌யி‌ன் மாயாவ‌தி‌ அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் ‌நிறுவன‌ர் க‌‌ன்‌சிராமு‌க்கு‌ம் அவ்விருதை வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ம‌த்‌திய அரசு‌க்கு கோ‌ரி‌க்கை ‌விடுத்‌திரு‌ந்தன‌ர்.

இதற்கிடையில் சிவசேனா தலைவர் பாக்தாக்கரேயும் அவர் பங்குக்கு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்; 'இ‌ந்த ‌விருது‌க்காக எனது பெய‌ர் ‌சிபா‌ரிசு செ‌ய்ய‌ப்ப‌ட்டு எ‌ன‌க்கு வழ‌ங்க நே‌ரி‌ட்டா‌ல் நா‌ன் ஒரு போது‌ம் ஏ‌ற்கமா‌ட்டே‌ன்'. நரி, திராட்சைப்பழக் கதை நினைவுக்கு வருகிறதா?

பாரத ரத்னா விருது, கலை, இலக்கியம், அறிவியல் போன்ற துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கும் மிகச் சிறப்பான முறையில் பொதுச்சேவையில் ஈடுபட்டவர்களுக்கும் வழங்கப்படுகிறது . இந்த விருதைப் பெற வாஜ்பாய் எப்படி தகுதியுடையவர் என்ற கேள்விக்கு பதிலாக 'ஆட்சியில் இருந்தபோதும், ஆட்சியில் இல்லாதபோதும் இந்தியாவின் ஜனநாயகம் தழைத்தோங்க வாஜ்பாய் பாடுபட்டுள்ளார் . அதைக் கெளரவிக்கும் வகையில், நாட்டின் உயரிய விருதான பாரதரத்னா அவருக்கு வழங்கப்பட வேண்டும்' என்கிறார் அத்வானி.

ஆனால் வரலாற்றின் பக்கங்களோ வேறு விதமான உண்மைகளை பறை சாற்றுகின்றன.

வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோதுதான் காந்தி பிறந்த மாநிலமான குஜராத்தில் மோடியின் ஆதரவோடு இந்துத்துவ பயங்கரவாதிகள் கோர வெறியாட்டம் போட்டனர். இன்றும் அம்மாநில சிறுபான்மை மக்களை அதிகபட்ச அச்சத்தில் ஆழ்த்தி வைத்திருக்கின்றன இந்துத்துவ சக்திகள். பிரதமர் பதவியை அனுபவித்துக் கொண்டிருந்த வாஜ்பாய் 'இனி வெளிநாட்டினர் முகத்தில் நான் எப்படி விழிப்பேன்' என்று வெட்கப் பட்டதைத் தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவோ குற்றவாளிகள் தண்டிக்கப்படவோ ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை. இவர்தான் ஜனநாயகம் தழைத்தோங்க பாடுபட்டாராம்.

1942-ல் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கு கொண்ட விடுதலைப் போராட்ட வீரர் வாஜ்பாய் என் சங்பரிவாரங்கள் அவருக்கு புகழ்மாலை சூட்டுகின்றன. ஆனால், 'சம்பவத்தன்று கூட்டத்தோடு கூட்டமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அறியாச் சிறுவன் நான். எந்தவித போராட்டத்திலும் நான் கலந்து கொள்ளவில்லை ' என்று வாஜ்பாயே கையெழுத்து போட்டு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் அந்தப் போராட்டத்தை தூண்டியவர்கள் என இரு நபர்களின் பெயர்களை அந்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டு அவர்களை வகையாக மாட்டியும் விட்டிருக்கிறார் வாஜ்பாய்.

சிறுவயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்-ஸில் தீவிர உறுப்பினராக இருந்தவர் வாஜ்பாய். ஆர்.எஸ்.எஸ் விடுதலைப் போராட்டத்தில் எவ்வகையிலும் பங்கு கொள்ளவில்லை. தவிர 'ஆங்கில ஆட்சியாளர்களுக்கு எந்த இடைஞ்சலும் தருவதில்லை' என்ற தனது வடிகட்டிய சந்தர்ப்பவாத சுயநலப் போக்கிலிருந்து அது சிறிதும் விலகாமலேயே இருந்தது. சிறுவயதிலிருந்தே இத்தகைய கொள்கைகள், சித்தாத்தங்களில் பயிற்சி பெற்று வந்த வாஜ்பாய் எப்படி விடுதலைப் போரில் பங்கேற்றிருப்பார்?

வாஜ்பாய் மட்டுமல்லாது, இதே ஆர்.எஸ்.எஸ்-ஸில் பயிற்சி பெற்று வந்தவர்கள்தான் அத்வானி, மோடி உள்ளிட்ட பெரும்பான்மையான பாஜக தலைவர்கள். உண்மையான விடுதலைப் போராட்ட வீரர்களை காட்டிக் கொடுத்தவர்கள், காந்திஜி கொலையில் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இன்று நாட்டின் உயர் பதவிகளை கைப்பற்றியிருக்கிறார்கள். நாட்டின் உயரிய விருதுகளும் அவர்களுக்கு வேண்டுமாம்!

இதோடு ஏன் நிறுத்த வேண்டும்? "அப்படியே சாவர்க்கருக்கு ஒரு பாரத ரத்னா, மோடிக்கு ஒரு பரம்வீர் சக்ரா, கோட்ஸேவுக்கு ஒரு பத்மபூஷன்... சூடா பார்சல்...!"

என்னங்கையா... உடுப்பி ஹோட்டல்ல நெய்தோசையா ஆர்டர் பண்றீங்க?

Thursday, June 14, 2007

RAW-விலிருந்து இன்னொரு 'தேசபக்தர்' மாயம்!

புதுடில்லி : பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகத்தில், "ரா' உளவுப் பிரிவில் உயர் அதிகாரியாக பணியாற்றிய வங்கதேச உளவாளி, 'தலைமறைவானவர்' என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில், பல்வேறு உளவு மற்றும் புலனாய்வுப்பிரிவுகள் உள்ளன. அவற்றில், முக்கியமானது, "ரா' என்று அழைக்கப்படும், "ரிசர்ச் அண்ட் அனலிசஸ் விங்க்!' இதில், துணை இயக்குனராக இருந்து வந்தவர் தேவன்சந்த் மாலிக். அவர் பற்றிய சந்தேகத்துக்கு இடமான தகவல்கள் வரவே, அவரைப்பற்றி விசாரித்துக் கொண்டிருந்தபோது, 2005ம் ஆண்டு மே மாதம் தலைமறைவானார்.

கேபினட் செயலகத்தில் உள்ள, "ஏவியேஷன் ரிசர்ச் சென்டர்' இயக்குனர் அனுஜ் பரத்வாஜ், லோதி காலனி போலீஸ் நிலையத்தில், மாலிக் தொடர்பாக அப்போது புகார் பதிவு செய்தார். போலீசாரும் தேடி வந்தனர். மேற்கு வங்க மாநிலத்தில், "24 பர்கானா' மாவட்டத்தை சேர்ந்தவர் மாலிக் என்று, அவர் பற்றிய அரசு பதிவேட்டில் விவரம் இருந்தது. அங்கு போய், அவர் முகவரியில் விசாரித்த போது தான், அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர்' என்பதே போலீசுக்கு தெரிந்தது.

இந்த விஷயத்தில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ரகசியம் காத்து வந்தனர். ஆனால், போலீஸ் நிலையத்துக்கு விஷயம் சென்றதை அடுத்து, திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத் துவங்கிவிட்டன. பிரதமர் அலுவலகத்தில், "டிசி' என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்தவர் தேவன்சந்த் மாலிக். 1999ம் ஆண்டில் இருந்து 2005ம் ஆண்டு மே மாதம் வரை பணியாற்றி இருக்கிறார். அப்போது, அவர் பற்றி விசாரணை நடக்கிறது என்று தெரிந்ததும், திடீரென காணாமல் போய்விட்டார். இப்போது அவர், "தலைமறைவானவர்' என்று பிரகடனப் படுத்தப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சகம் இது தொடர்பான அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் முக்கிய அலுவலகங்களில், உளவு பிரிவுகளில் உளவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது புதிதல்ல. கடந்த 2004ம் ஆண்டில், "ரா' உளவுப்பிரிவின் இணைச் செயலர் ரவீந்தர் சிங் என்பவர், உளவு சொல்கிறார் என்று தெரிந்ததும், அமெரிக்காவுக்கு முக்கிய ஆவணங்களுடன் தப்பியோடி விட்டார். கடந்த 2002ம் ஆண்டில், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி மாளிகையில் உளவு வேலை பார்த்ததாக 12 ஊழியர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. கடந்த 1985ம் ஆண்டு, "கூமர் நாராயண் உளவு சதி வழக்கு' பரபரப்பானது. இவர்கள் இப்போது, கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

நன்றி: தினமலர்

விளங்காத விஷயங்கள்:

RAW போன்ற சென்சிடிவான அமைப்புகளில் ஒருவரை வேலைக்கு சேர்க்குமுன்னரே அந்த நபரின் பிண்ணனியை ஆராய்ந்திருக்க மாட்டார்களா என்ன? தேசவிரோத சக்திகள் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி 1999-ல் இவரை இந்தப் பணியில் சேர்த்திருக்க வாய்ப்பிருக்கிறதா? சமீப காலத்தில் RAW, ராணுவம் போன்ற அதிமுக்கியமான துறைகளில் உளவாளிகள் கண்டுபிடிக்கப் படுவதும் 'காணாமல் போவதும்' அதிகரித்திருப்பதன் காரணம் என்ன?

தொடர்புடையை பழைய பதிவுகள்:

உளவுத்துறையில் ஒரு கருப்பு ஆடு!
ராணுவ ரகசியங்களை விற்க முயன்ற ராணுவ வீரர்
ராணுவத்தில் உளவாளிகள் ஊடுருவல்
முக்கிய ஆவணங்களை திருடிய முன்னாள் ராணுவ அதிகாரி கைது!
அரசு உயர்மட்டத்தில் தொடரும் நாட்டிற்கெதிரான துரோகங்கள்

Thursday, February 22, 2007

சாதி என்று ஒன்று உண்டென்றால் அது மனித சாதியாக இருக்கட்டும்!

சர்ப்பத்திற்கு மட்டுமா பிளவுண்ட நாக்கு?
சாதி சாதி என வேதம் ஓதும்
சாத்தான்களுக்கும் அது உண்டு!

"நாம எல்லாரும் ஒரே மதம்!
ஆனா என் கோவிலுக்கு நீ வராதே!
உன் சாமியை நான் பூஜிக்க மாட்டேன்!
ஆனா நாம எல்லாரும் ஒரே மதம்!"

அப்பாவிகள் மேல் ஏவிவிட
அடியாட்கள் வேணுமென்றால்
'எல்லாரும் நம்மவா'
'ஏறி அடியுங்கடா துலுக்கனை யெல்லாம்!'

காரியம் ஆன பிறகு
'சூத்திராள் நீ! நெருங்காதே என்னை!
சீ.. போடா அந்தாண்டை!'

சக மனிதனை மனிதனாக
மதிக்கத் தெரியாத இதுவெல்லாம்
மனிதத்தில் சேர்த்தியா என்ன?

வயிற்றுச் சிசுவை நெருப்பில் எறிந்து
'உலக சாதனை' புரிந்த
நர மாமிச பட்சினிகள்,
ரத்தக்கறை படிந்த தம் வாயால்
'பசுவைக் கொல்லாதே' என
போதனை செய்கின்றன.

பதுங்குகுழிகளிலிருந்து வெளிவருகின்றன
பசுத்தோல் போர்த்திய நரிகள்!
தேசப்பிதாவை கொன்று போட்டது
கொடியோர் கூட்டம் அன்று!
தேசபக்தி நாடகம் அரங்கேற்றம் இன்று!

அன்னியனிடம் மண்டியிட்டு
அபயம் தேடிய 'வீர' தலைவர்கள்!
அவர் தம் வழியில் தொண்டர்கள்!
மாற்றி எழுதப்படும் வரலாறுகள்!
என்றும் மாறாமல் பல்லிளிக்கும் பித்தளைகள்!

சமணன், பௌத்தம், நாட்டார் மதங்கள் எல்லாம்
உண்டு செரித்து ருசி கண்ட மலைப்பாம்பு
இஸ்லாமிய ரத்தம் கேட்டு ஏங்கி நிற்கிறது
தன் கோரப் பற்களை காட்டியவாறு!
ஆயிரம் ஆதிசேஷன்கள் சீறி வந்தாலும்
சூரியனை விழுங்க முடியுமா?

மமதை, தற்பெருமை, உன்மத்தம் தலைக்கேறி
மனிதம் மதிக்கத் தெரியா மாக்கள் - இவரா
எம் மார்க்கம் பற்றி பேசத் துணிந்தார்?

Wednesday, December 20, 2006

ஈஸ்வர அல்லா தேரே நாம்

தொண்டன் என்பவர் எனது பதிவில் ஒரு பின்னூட்டமிட்டிருந்தார்.

யதார்தத்தை சுள்ளென்று உறைக்கும்படி சொல்லும் ஒரு விஷயம்.

அது பின்னூட்டத்திலேயே அமுங்கி போகலாமா?

அதனால் அந்த பின்னூட்டத்தை முன் வைத்து இந்தப் பதிவு!

தொண்டன் said...

\\ஈஸ்வர அல்லா தேரே நாம் என்று
பெருங்குரலெடுத்துப் பாடி மகிழ்ந்திருப்போம்,
இணைவைத்த குற்றத்திற்காக நம்
குரல்வளை அறுக்கப்படும் நாள் வரும்வரைஇது ஒரு அனானியின் பின்னோட்டக் கவிதையாம் இது யாருக்கும் தெரியாம அழிஞ்சு போகக்கூடாதாம் அதுனால மீள் பதிவாம்.

நல்லாயிருக்கு.

ஆமா அரபு நாட்டுல வேலை பார்த்தப்போ ஈஸ்வரனுக்குப் பதிலா அல்லாவைத்தான் இவரு வணங்கியிருப்பாரோ. இருக்கும் இருக்கும் இல்லைனா இவர் தலை போயிருக்கனுமே!. இவர்தான் இப்படின்னா இன்னும் எத்தனையோ முஸ்லிமல்லாதவங்க அரபு நாட்டுல பணத்துக்காக அல்லாவை வணங்குறாங்களா?.

800 வருஷமா இஸ்லாமியருக்கு கீழேதானப்பா நம்ம நாடு இருந்துச்சு அப்ப இணைவைச்ச குற்றத்திற்கு எவ்வளவு கழுத்து அறுபட்டிருக்கனும். இல்ல இந்த நாட்டு மன்னரெல்லாம்
முஸ்லிம் மன்னனுக்குப் பயந்து அல்லாவுக்கு குல்லாவும் ஈஸ்வருக்கு அல்வாவும் கொடுத்துட்டாங்களா?. இன்னும் இதுமாதிரி பழய பல்லவி வேணாம் கேட்டு கேட்டு புலிச்சுப்போச்சு புதுசா ஏதாவது இருந்தா சொல்லுங்க.
20/12/06 4:38 PM

இது போன்ற ஒரு அரிய தகவலை பின்னூட்டத்தில் தந்த தொண்டன் அவர்களுக்கு நன்றி.

'ஈஸ்வர அல்லா தேரே நாம்' என்று தினமும் பிரார்த்தித்து வந்த மகாத்மா காந்தியை எந்த முஸ்லிமும் குரல்வளையை அறுக்கவில்லை. அந்த புண்ணிய காரியத்தை செஞ்சவங்க யாருன்னு தெரியும்தானே?

Sunday, November 12, 2006

அரசு உயர்மட்டத்தில் தொடரும் நாட்டிற்கெதிரான துரோகங்கள்

சனி, 11 நவம்பர் 2006
புதுதில்லி: தேசியப் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இந்திய இராணுவ இரகசியத்தைப் பணம் பெற்றுக் கொண்டு அந்நிய சக்திகளுக்கு விற்றதாக முன்னாள் கடற்படை அதிகாரியாக பதவி வகித்திருந்த கமாண்டர் J C கல்ராவை மத்திய உளவுத்துறை CBI நேற்று கைது செய்தது.

திரு. கல்ரா இந்தியக் கடற்டையில் இருந்து இவ்வாண்டு ஜனவரியில் விருப்ப ஓய்வு பெற்று இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட் (Hindustan Aeronautics Ltd) எனும் மத்திய அரசு நிறுவனத்தில் தற்போது வாடிக்கையாளர் தொடர்புப் பிரிவில் துணைப் பொது மேலாளராகப் பதவி வகித்து வருகிறார்.

நேற்று காலை SCOPE (Standing Conference Of Public Enterprises) Complex எனப்படும் மத்திய அரசு நிறுவனங்களின் அலுவலகங்கள் அமைந்திருக்கும் கட்டிடத்தில் அவரது அலுவலறையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். அதற்கு முன்னரே கல்ராவின் நோயிடாவில் உள்ள வீட்டிலும் அலுவலகத்திலும் மத்திய உளவுத்துறை தணிக்கைச் சோதனை நடத்தியிருந்தது. இவர் பல பாதுகாப்பு ரகசியங்களை அந்நிய சக்திகளுக்கு விற்றதற்கான ஆதாரங்களும் இச்சோதனையில் சிக்கின.

கடந்த வாரம் கைது செய்யப்பட்ட இந்தியக் கடற்படை கேப்டன் சலாம்சிங் ராத்தோரை விசாரிக்கும் பொழுது கல்ராவைக் குறித்த விவரங்கள் உளவுத்துறைக்குக் கிடைத்தன. அதன் அடிப்படையில் நடத்திய அதிரடிச் சோதனைகளில் இராணுவ இரகசியங்கள் கடத்தி விற்கப்பட்டதற்கான ஆதாரங்கள் அனைத்தும் கல்ராவிடமிருந்து கிடைத்ததாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கும் அபிஷேக் வர்மா என்ற தொழிலதிபரிடம் தொடர்ந்து உளவுத்துறை விசாரணை நடத்திவருகிறது. இவ்வழக்கின் முக்கிய எதிரியான ரவி சங்கரன் எனும் நபர் பிரிட்டனில் தலைமறைவாக இருப்பதாக நம்பப்படுகிறது. இவரைக் கைதுசெய்ய இண்டர்போல் உதவியை நாடியுள்ளதாகவும் CBI தெரிவித்துள்ளது.

இதற்குமுன்னர் RAW-வில் இருந்த சில உயரதிகாரிகளின் நாட்டிற்கெதிரான துரோகமும் இங்கே நினைவுகூரத் தக்கது.

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

பின் குறிப்பு: தேசிய கீதமாகக் கூட அங்கீகரிக்கப்படாத ஒரு பாடலை பாட விருப்பமில்லை என்று சொன்னதற்காக முஸ்லிம்களின் தேசபக்தியை சந்தேகப் பட்டவர்கள், ராணுவம், RAW போன்றவற்றின் அதி முக்கியத்துவம் வாய்ந்த ரகசியங்களை காசுக்காக விற்கும் இந்தத் தேசத்துரோகிகளைப் பற்றி ஏன் குரலெழுப்புவதில்லை என்பது இன்னும் புரியாத புதிர்!

Sunday, November 05, 2006

முக்கிய ஆவணங்களை திருடிய முன்னாள் ராணுவ அதிகாரி கைது!

புதுடெல்லி, நவ.5:
முக்கிய ஆவணங்களை திருடியதாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை சி.பி.ஐ. நேற்று முன்தினம் கைது செய்தது.

இது பற்றி சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

கடற்படை ரகசியம் கசிவு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ. ஒய்வு பெற்ற ராணுவ
கேப்டன் சலாம் சிங் ரத்தோர் வீட்டில் சோதனை நடத்தியது. அப்போது ராணுவம் தொடர்பான பல
முக்கிய ஆவணங்களை அவரது வீட்டில் சி.பி.ஐ. கைப்பற்றியது. இது அவரது வீட்டில்
இருந்ததை அலட்சியப்படுத்த முடியாது. ஆவணங்களை திருடி, ரத்தோர் விற்க
முயன்றுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து ராணுவ இயக்குனரகத்தின் அனுமதி பெற்று
ரத்தோர் மீது அரசு ஆவண ரகசிய சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நேற்று
முன்தினம் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

ராணுவத்திலிருந்து கடந்த ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார் ரத்தோர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினகரன் 5 நவம்பர் 2006

Wednesday, November 01, 2006

ரகுநாத் கோவில் தாக்குதல்: குற்றவாளிகள் யார்?

ஜம்மு நீதிமன்றம் ரகுநாத் கோவில் தாக்குதல் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட ஆறு பேரை தகுந்த ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்தது.

கடந்த 2002 மார்ச் 30 அன்று ஆயுதம் தாங்கிய இரண்டு தீவிரவாதிகள் ரகுநாத் கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்த பக்தர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதற்கு முன்னதாக அப்பாவி மக்கள் கூடும் ரகுநாத் பஜார் எனும் கடைவீதியில் கையெறி குண்டுகளை வீசி பல கடைகளையும் வாகனங்களையும் அவர்கள் சேதப்படுத்தியிருந்தனர். இத்தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்; மேலும் பலர் கடும் காயமடைந்தனர். காவல் படையினர் திருப்பித் தாக்கியதில் அந்த இருவரும் கொல்லப் பட்டனர்.

துணிகரமாக நிகழ்த்தப்பட்ட இந்த மாபாதகச் சம்பவம் தொடர்பாக ஆறு முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது காவல்துறை வழக்கு தொடுத்தது. இவ்வழக்கை விசாரித்த ஜம்மு நீதிமன்றம் நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு கூறியது. நீதிபதி சுபாஷ் சந்திர குப்தா தனது தீர்ப்பில் இவ்வழக்கின் விசாரணை அதிகாரிகளை மிகக்கடுமையாக சாடினார். இந்த வழக்கில் 84 பேர் சாட்சியம் அளித்திருந்த போதிலும், குற்றம் சுமத்தப் பட்ட ஆறு முஸ்லிம்களுக்கும் இக்கோயில் தாக்குதலில் தொடர்பு உள்ளதற்கான ஒரு ஆதாரம் கூட காவல் துறையால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் படவில்லை.

அதற்கு மாறாக, வீரேந்தர் சர்மா என்பவரிடமிருந்து ஏராளமான ஆயுதங்களையும் வெடிப்பொருட்களையும் காவல் துறையினர் கைப்பற்றியதற்கு இந்த வழக்கின் விசாரணை கோப்புகளில் போதுமான தகவல்களும் போதுமான முகாந்திரமும் இருந்த போதிலும் இவர் மீது குற்றம் சுமத்தப் படவோ, கைது செய்யப்படவோ இல்லை. குறைந்தபட்சம் இவர் விசாரிக்கப்பட கூடவில்லை. 'இவர் ஏன் கைது செய்யப்படவில்லை?' என்பதற்கு காரணம் தெரிவிக்கும்படி நீதிபதி சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

இக்கோயில் தாக்குதலில் குற்றம் சுமத்தப்பட்டு, இப்போது நீதிமன்றத்தால் நிரபராதிகள் என விடுவிக்கப் பட்டிருக்கும் அப்பாவிகளின் பெயர் விபரம் வருமாறு; மஹ்மூது அஹமது, மரூஃப் கான், சர்ஃப்ராஸ் கான், கபீர்தீன், முனீர் ஹுசைன் மற்றும் சபீர் அஹமது.

சத்திய மார்க்கம்.காம்

Wednesday, October 25, 2006

ராணுவத்தில் உளவாளிகள் ஊடுருவல்

புதுடெல்லி, அக்.24-: ராணுவத்தில் உளவாளிகளின் ஊடுருவலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மத்திய ராணுவ மந்திரி பிரணாப் முகர்ஜி கூறினார்.

இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர், ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாக சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி, டெல்லியில் ராணுவ மந்திரி பிரணாப் முகர்ஜியிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

காஷ்மீரிலும், டெல்லியிலும் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய ரிதேஷ்குமார், அனில் குமார் என்ற 2 பேர், பாகிஸ்தானின் உளவுப்படையான ஐ.எஸ்.ஐ. யுடன் தொடர்பு வைத்திருந்ததாக தகவல் கிடைத்து இருக்கிறது. அவர்கள் மீது ராணுவ விசாரணையும், போலீஸ் விசாரணையும் நடைபெறும். உள்துறையும் இதுபற்றி விசாரிக்கும். இந்த 3 விசாரணைகளின் மூலம், இதில் சம்பந்தப்பட்ட முக்கிய புள்ளி யார்? என்பது தெரிய வரும்.

இந்திய ராணுவ ரகசிய ஆவணங்கள், காஷ்மீரில் இருந்து, டெல்லி கொண்டு வரப்பட்டு, பின்னர் அவை காட்மாண்டு கொண்டு செல்லப்பட்டு, பாகிஸ்தானுக்கு அனுப்ப உளவாளிகள் திட்டமிட்டு இருந்தது, ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துஇருக்கிறது.

ராணுவம், கடற்படை, விமானப்படையில் உளவாளிகளின் ஊடுருவல் இருக்கிறதா? என்பது கண்டறியப்படும். உளவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

நன்றி: விகடன்.காம்

Monday, October 23, 2006

ராணுவ ரகசியங்களை விற்க முயன்ற ராணுவ வீரர்

ராணுவ ரகசியங்களை விற்க முயன்ற மேலும் ஒரு ராணுவ வீரர் கைது!

புதுடில்லி: ராணுவ ரகசியங்களை வெளிநாட்டு நபரிடம் விற்க முயன்ற ராணுவ வீரர் ஒருவரை டில்லி போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களில் கைது செய்யப்படும் இரண்டாவது ராணுவ வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டில்லியின் தெற்கு மேற்கு பகுதியில் உள்ள மகிபால்பூர் என்ற பகுதியில் வசிப்பவர் அனில் குமார். ஹவில்தாரான இவர் ராணுவ குழு காப்பீட்டு பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்திய ராணுவ ரகசியங்களை டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக டிரைவரிடம் இவர் அளிக்க முயன்றார். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு அனில் குமாரை டில்லி போலீசார் கைது செய்தனர். அந்த டிரைவரையும் போலீசார் அழைத்து விசாரித்தனர். அவரை சட்டவிரோதமாக கைது செய்து துன்புறுத்தியதாக பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து ஸ்ரீநகரில் இருந்து டில்லி வந்த விமானத்தில் பயணம் செய்த ரிதீஷ் குமார்(24) என்ற ராணுவ வீரரையும் டில்லி போலீசார் கைது செய்தனர். விமான நிலையத்தில் வைத்தே அவரை போலீசார் சுற்றி வளைத்தனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர் காஷ்மீரில் உள்ள லே பகுதியில் சிக்னல் மேனாக பணியாற்றுபவர். காத்மாண்டுவில் உள்ள சிலரிடம் இவர் இந்திய ராணுவ ரகசியங்களை விற்க முயற்சி செய்தது விசாரணையில் தெரிய வந்தது. ரிதீஷ் குமாரிடம் இருந்து கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தொழில்நுட்பமான பென் டிரைவ் மற்றும் சில முக்கிய ராணுவ ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று முன்தினம் ரிதீஷ் குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைத்து இருக்க கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து டில்லி போலீஸ் துணை கமிஷனர் (சிறப்பு பிரிவு) அலோக் குமார் கூறுகையில்,""பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., ஏஜென்ட் ஒருவர் காத்மாண்டுவில் உள்ளார். அவரிடம் முக்கிய ஆவணங்களை அளிக்கும் முயற்சியில் ரிதீஷ் குமார் ஈடுபட்டுள்ளார் என்று தகவல் எங்களுக்கு கிடைத்தது. இதையடுத்தே அவரை நாங்கள் கைது செய்தோம். கடந்த ஆண்டு டிசம்பர் முதல் ஐ.எஸ்.ஐ., அமைப்புக்கு ஆதரவாக ரிதீஷ் குமார் செயல்பட்டு வந்துள்ளார். இதற்கு முன்பு சில ஆவணங்களையும் அவர் அளித்துள்ளார். அவருக்கு இரண்டு முறை ஐ.எஸ்.ஐ., அமைப்பு பணம் அளித்துள்ளது. ரிதீஷ் குமார் ராணுவத்தில் சேர்ந்து மூன்று ஆண்டுகளாகிறது. ராணுவத்தில் மேலும் சிலர் இது போல் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு பணிபுரிகின்றனரா என்பதை அறிய, ரிதீஷ் குமாரிடம் விசாரணை நடத்த உள்ளோம்,'' என்றார்.


தினமலர்-23/10/06

Thursday, August 31, 2006

உளவுத்துறையில் ஒரு கருப்பு ஆடு!

துரோகி நம்பர் - 1
உளவுத்துறையில் ஒரு கருப்பு ஆடு!

நிழல் உலக தாதா கும்பல்களில் 'டபுள் ஏஜெண்ட்' என்ற வார்த்தை ரொம்ப பாப்புலர். ஒரு குழுவின் தலைவரிடம் விசுவாசமாக இருப்பது மாதிரி நடித்தபடி, போட்டியாக இருக்கும் இன்னொரு குழுவுக்கு உளவு பார்க்கிறவர்களுக்கு இப்படித்தான் பெயர்.

இந்திய அரசாங்கத்தின் பிரதான உளவுப்படை 'ரா' (Research and Analysis Wing). இதன் மிக முக்கிய பொறுப்பிலிருந்த உயர்அதிகாரி ஒருவர் கிட்டத்தட்ட இருபது வருடங்களாக அமெரிக்காவுக்காக உளவு பார்த்திருப்பது தெரிய வந்தது. விஷயம் வெளியில் கசிந்ததும் அந்த அதிகாரி அமெரிக்காவுக்கு தப்பி ஓடிவிட, இப்போது இந்தியா - அமெரிக்க உறவையே இது பாதித்து இருக்கிறது. பிரதமர் மன்மோகன்சிங், உச்சகட்ட டென்ஷன் அடைந்து கிடப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பிரதமரின் ஆலோசகர்கள் எம்.கே.நாராயணன், ஜே.என்.தீட்சித், 'ரா' நிறுவனத்தின் தலைவர் சகாய் ஆகியோர் படுகவலையோடு இந்த விவகாரம் பற்றி விவாதித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

அந்த தேச துரோக அதிகாரியின் பெயர் ரவீந்திரசிங். 'ரா' அமைப்பில் இணை செயலாளராக பதவி வகித்தவர். அவரது அலுவலக அறையில் இருந்த ஜெராக்ஸ் மெஷின் இருபது வருடங்களாக ஓவர்டைம் வேலை பார்த்திருக்கிறது. புதுடெல்லியின் லோதி ரோட்டில் இருக்கும் 'ரா' தலைமை அலுவலகத்தில் அந்தஸ்தான பதவியிலிருந்த ரவீந்திரசிங் 'எதையெல்லாம் ஜெராக்ஸ் பிரதியெடுத்து அமெரிக்காவுக்கு கொடுத்திருக்கக்கூடும்?' என்று பட்டியல் போட்டுப் பார்த்து அதிர்ந்துபோய்விட்டனர் பல அதிகாரிகள்.
பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரத்துக்காரர் இந்த ரவீந்திரசிங். இந்திய ராணுவத்தில் மேஜராக இருந்தவர். சீக்கியர்களின் புனித ஸ்தலமான பொற்கோயிலில் தீவிரவாதிகளை அழிக்க ராணுவம் நுழைந்தபோது அதில் தீவிரமாக பங்கு பெற்றவர். அடுத்த சில நாட் களிலேயே அமெரிக்க ராணுவ ரகசியங்கள் தொடர்பாக சில முக்கிய டாகுமெண்ட் களை இவர் எங்கிருந்தோ சுட்டுக்கொண்டு வந்துதர, அப்போதுதான் 'ரா' அமைப்பின் பார்வை இவர் மீது விழுந்தது. 'உளவு பார்ப்ப தில் கில்லாடியான ஆள்' என்று நினைத்து 'ரா' அமைப்பு இவரை ராணுவத்திலிருந்து தங்கள் துறைக்கு இழுத்து உயர்பதவி கொடுத்தது.

ஆனால், அதன் பின்னணி இப்போதுதான் தெரிகிறது. 'ரா' நிறுவனத்தின் உள்ளே நடக்கும் விஷயங்களை தெரிந்துகொள்ள வழி தெரியாமல் அமெரிக்கா தவித்து வந்தது. அதனால் சி.ஐ.ஏ. நிறுவனமே அந்த டாகுமெண்ட்களைக் கொடுத்து, ரவீந்திரசிங்கை பெரிய துப்பறியும் புலி மாதிரி காட்டி 'ரா'வில் சேர வழி செய்து கொடுத்ததாக இப்போது தெரிய வந்திருக்கிறது.

'ரா' அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் ஆபீஸிலிருந்து வீடு திரும்பும் போது கடுமையாக சோதிக்கப்பட்டுதான் வெளியேறுவார்கள். தங்கள் சொந்த பொருட்களைத் தவிர வேறெதையும் அவர்கள் எடுத்துப் போக முடியாது. அவர்கள் எங்கிருந்தாலும் போனில் பேசுவது, ஃபேக்ஸ் அனுப்புவது எல்லாமே கண்காணிக்கப்படும். டெல்லியின் டிஃபன்ஸ் காலனி பகுதியில்தான் நிறைய பேருக்கு வீடு. இவர்களது வீடுகளைக்கூட இன்னொரு மத்திய அரசின் உளவு நிறுவனமான 'இண்டெலிஜென்ஸ் பீரோ' அதிகாரிகள் ரகசியமாக கண்காணிப்பார்கள்.
நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்பு ரகசியங்களைக் கையாளும் இவர்கள் தேச துரோகிகள் ஆகிவிடக்கூடாதே என்ற கவலைதான் இதற்கு காரணம். அப்படி ஏற்கெனவே பலர் மாட்டியும் இருக்கிறார்கள். 'ரா' உயர் அதிகாரி ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க தூதரக பெண் அதிகாரி ஒருவரோடு ஜெய்ப்பூரில் உல்லாச விடுதி ஒன்றில் இருந்ததை, ஐ.பி. அதிகாரிகள் விடியோ எடுத்து, அதை வைத்து அவர் 'டபுள் ஏஜெண்ட்' ஆனதை நிரூபித்து தண்டனை வாங்கிக் கொடுத்தார்கள். இன்னொரு அதிகாரியும் இதேபோல் சென்னை மெரீனா பீச்சில் வைத்து, அமெரிக்க அதிகாரி ஒருவரோடு பேசியதை விடியோ எடுத்து மடக்கப் பட்டார். இப்படி மாட்டும் 'ரா' அதிகாரிகள் லேசில் தங்கள் தவறை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இதற்காகவே விடியோ எடுக்கப்படுகிறது.

'ரா' தலைமையகத்தில் கடுமையான சோதனை இருந்தாலும், இணை செயலாளர் அந்தஸ்துக்கு மேல் இருக்கும் யாரையும் சோதிப்பதில்லை. உயர் அதிகாரிகள் தப்பு செய்யமாட்டார்கள் என்ற எண்ணமும் மிகமேல் மட்டத்தில் சந்தேகப்படுவது சரியல்ல என்ற நாகரிகமும்(?)தான் காரணம். ரவீந்திரசிங்குக்கு இதுவே வசதியாகி விட்டது. பல டாகுமெண்ட்களை தனது அலுவலக அறையில் இருக்கும் ஜெராக்ஸ் மெஷினிலேயே 'காப்பி' செய்து, வீட்டுக்கு கொண்டு போய் வைத்துவிடுவார். இவருடைய அமெரிக்க உறவினர் ஒருவர் அவ்வப்போது, நேரடி விசிட் அடித்து டாகுமெண்ட்களைக் கையோடு அமெரிக்கா எடுத்துப்போய் விடுவார். இதனால், எந்த சந்தேக வலையிலும் சிக்காமல் அவர் தப்பி வந்திருக்கிறார். 'ரா' நிறுவனத்தின் எல்லா வேலைகளுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தியாவின் அண்டை நாடுகளில் நிலவும் அரசியல் சூழ்நிலை. விடுதலைப் புலிகள், நேபாள மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் போன்ற கலகக்குழுக்கள் பற்றிய விவரம், அங்கெல்லாம் நடக்கும் கவிழ்ப்பு முயற்சிகள், அந்நிய நாடுகளின் உளவுப்படைகளின் ஊடுருவல் என எல்லாவற்றையும் கண்காணித்து அறிக்கை தருவார்கள். சில சமயங்களில் 'ரா' அமைப்பேகூட இந்தியாவின் பாதுகாப்பு கருதி சதிவேலைகளில் ஈடுபட்டதாக சொல்லப்படுவது உண்டு.
இதுபோன்ற முக்கிய ஆவணங்கள் 'ரா' நிறுவனத்தின் டைரக்டர், பிரதமர், பாதுகாப்பு செயலாளர் போன்ற வர்களைத் தவிர யார் பார்வைக்கும் போகாது. இப்படிப்பட்ட ஆவணங் களைப் பாதுகாக்கும் 'ரா' தலைமையக அதிகாரிகள் பலரைக் கைக்குள் போட்டுக்கொண்டு எல்லாவற்றையும் பிரதி எடுத்து சி.ஐ.ஏ. கையில் ரவீந்திரசிங் கொடுத்திருக்கக்கூடும் என்று தற்போது பீதியடைந்திருக்கிறது மத்திய அரசு.

இந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் இவர் மீது முதல் சந்தேகப்புள்ளி விழுந்தது. ரவீந்திரசிங் அப்போது பொறுப்பு வகித்தது, 'தூரக்கிழக்கு ஆசிய நாடுகள்' செக்ஷனில். ஆனால், அவருக்கு சம்பந்தமில்லாத இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பணிபுரியும் பல அதிகாரிகள் டெல்லி வரும்போது அவர்களைக் கூப்பிட்டு ஏகப்பட்ட கேள்விகள் கேட்டிருக்கிறார். உயர் அதிகாரி கேட்கிறாரே என்று அவர்களும் தகவல்கள் சொன்னார்கள். இது ஏதோ இன்டர்வியூ மாதிரி தினசரி தொடர்கதையாக, இவரது இந்த ஆர்வம் குறித்து 'ரா' டைரக்டர் சகாய்க்கு தகவல் போனது.

உடனே ரவீந்திரசிங்கின் எல்லா போன்களும் 'டேப்' செய்யப்பட்டன. ஆனால், எதுவும் சிக்கவில்லை. அவர் யார் யாரைச் சந்திக்கிறார் என்று கண் காணித்தனர். ஆனால், மனிதர் ஆபீஸ் விட்டால் வீடு... வீட்டில் கிளம்பினால் ஆபீஸ் என்று படு சமர்த்தாக இருந்தார்.

'இவர் ஏதோ தப்பு செய்கிறார். ஆனால், என்ன செய்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை' என்பதை உணர்ந்த 'ரா' மேலிடம், விஷயத்தை ஐ.பி. அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. ஐ.பி. அதிகாரிகள் ரவீந்திரசிங்கின் அலுவலகத்தை அதிரடியாகக் கண்காணித்து, அவர் முக்கிய டாகுமெண்ட்களை ஜெராக்ஸ் எடுப்பதை விடியோ படமாகவே எடுத்து விட்டனர். ஏப்ரல் பத்தொன்பதாம் தேதி இது 'ரா' டைரக்டர் கவனத்துக்குப் போக, அன்று 'டைரக்டர் உள்ளிட்ட எல்லோரையும் வீட்டுக்கு போகும்போது சோதனை போடுங்கள்' என்று அவரே உத்தரவு போட்டார். ஆனால், விஷயம் ரவீந்திரசிங்குக்கு முன்கூட்டியே தெரிந்துவிட, அன்று சோதனை போட்டபோது அவரது காரில் இருந்தது தண்ணீர் பாட்டிலும், காலி சாப்பாட்டு கேரியர் மட்டும்தான். தனக்காகத்தான் இந்த சோதனை என்பதை உணர்ந்துகொண்ட அவர் மறுநாளே, 'அமெரிக்காவிலிருக்கும் என் மகளைப் பார்க்கப் போகிறேன்' என்று காரணம் சொல்லி லீவ் கேட்டார். ஆனால், உடனே அவரது லீவ் லெட்டர் நிராகரிக்கப்பட்டது. அதன்பின் கடுமையான கண்காணிப்பு! ஆபீஸில், வீட்டில், போகும் வழியில் என எங்கும் ஐ.பி. அதிகாரிகள் அவரைத் தொடர்ந்தார்கள். எந்த நிமிடமும் தான் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவோம் என்பது புரிந்தது அவருக்கு. ஏப்ரல் 30 இரவு... டிஃபன்ஸ் காலனியில் இருக்கும் வீட்டுவாசலில் காரை நிறுத்திவிட்டு உள்ளே போன அவர் உடனே படுக்கை அறைக்குள் நுழைந்தார். அவர் தூங்கி விட்டார் என நினைத்து வெளியே கண்காணித்த ஐ.பி. அதிகாரிகள் அசட்டையாக இருக்க, தன் மனைவியுடன் பின்பக்க வழியாக எகிறிக்குதித்து வெளியேறிய அவர், தயாராக இருந்த மைத்துனர் காரில் ஏறி நேபாள எல்லைக்குப் பறந்தார். அவருக்கு அமெரிக்க பாஸ்போர்ட்டும், விசாவும் வைத்துக்கொண்டு சிஐ.ஏ. ஏஜெண்டுகள் தயாராக இருக்க, உடனடியாக அமெரிக்காவுக்கும் பறந்துவிட்டார். இப்போது அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டு பாதுகாப்பான ஒரு மறைவிடத்தில் ரவீந்திரசிங் குடும்பம் வைக்கப் பட்டிருக்கிறதாம்.

கிட்டத்தட்ட ஒருமாத காலம் இந்த விஷயம் 'ரா' அதிகாரிகளால் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இந்த வியாழக்கிழமைதான் பிரதமர் கவனத்துக்கு விஷயம் கொண்டு செல்லப்பட்டு, ரவீந்திரசிங் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் ஏகப்பட்ட மர்மமான கேள்விகள் எழுகின்றன. ரவீந்திரசிங் டபுள் ஏஜெண்ட் ஆக இருக்கிறார் என்பது தெரிந்தும் ஏன் அவர் தப்பி ஓடும் வரை அசந்து இருந்தனர்? 'ரா'வில் இன்னும் நிறைய பேர் அவருக்கு உடந்தையாக இருந்திருப்பார்கள