Tuesday, June 26, 2007

இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் (வருங்கால) குடியரசுத் தலைவரே?

ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திருமதி பிரதிபா பாட்டீல் அவர்களை ஆதரிக்கப் போவதாக பாஜக-வின் முக்கிய கூட்டணித் தலைவர்களுள் ஒருவரான பால் தாக்கரே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

பாஜக கூட்டணியின் ஆதரவு பெற்ற திரு செகாவத் அவர்களும் போட்டியில் இருக்கும்போது, காங்கிரஸ் வேட்பாளரான திருமதி பாட்டீலை சிவசேனா ஆதரிப்பதாக சொல்வது சாதாரணமாக யாரையும் வியப்பில் ஆழ்த்தும் ஒரு விஷயம்தான். ஆனால் இம்முறை இந்த அறிக்கை ஒருவகையில் எதிர்பார்க்கப் பட்டதுதான் என்பதால் இது யாருடைய புருவத்தையும் உயர்த்தி யிருக்காது.

திருமதி பாட்டீலின் பெயர் ஜனாதிபதி பதவிக்கு முன்மொழியப் பட்டதுமே அவர் ஒரு காரியம் செய்தார். இந்தியாவில் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் உடை பழக்கத்தைக் குறித்து, "இது முகலாய மன்னர்களால் விளைந்த தீமை, அவர்களின் காலத்தில் அவர்களிடமிருந்து தப்பிக்க இந்திய பெண்கள் கடைபிடிக்க துவங்கியதே இந்த பர்தா முறை" என்று அவர் கருத்து தெரிவித்தார்.

எந்நேரமும் தலையில் முக்காடிட்ட வண்ணம் காட்சி தரும் ஒரு பெண்மணி, 'பர்தா' எனப்படும் இஸ்லாமியப் பெண்கள் அணியும் ஆடை முறை குறித்து இப்படி ஒரு நகைப்பிற்குறிய ஒரு கருத்தை தெரிவித்திருப்பது அவரது அறியாமையை காட்டுகிறதா என்றால் நிச்சயமாக இல்லை.

'காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் தான் ஒரு இந்துத்துவ சிந்தனை உடையவர்' என்று காட்டிக் கொண்டு இந்துத்துவாக்களையும் திருப்தி படுத்தி அவர்களின் ஆதரவும் வாக்குகளும் தனக்கே கிடைக்கே வேண்டும் என்ற லட்சியத்தில்தான் இவர் இப்படி பேசியிருக்க வேண்டும். சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தினரின் வாக்குகளையும் இவர் வாங்கினால்தால் ஜனாதிபதி பதவியில் அமர முடியும் என்ற நிலை இல்லை அல்லவா!

தான் திட்டமிட்டபடியே முதல் கட்டமாக சிவசேனாவை 'மடக்கிய'தன் மூலம், தான் ஒரு கைதேர்ந்த அரசியல்வாதி என்பதை நமது வருங்கால குடியரசுத் தலைவர் நிரூபித்திருக்கிறார்.

வாழ்க வளமுடன்!

பின் குறிப்பு:

நான் ஏன் 'குடியரசுத் தலைவரே' என்று தலைப்பிட்டிருக்கிறேன்?

ராஷ்டபதி ஆண்பாலா பெண்பாலா என்ற பிரச்னை ஒரு புறமிருக்க, மரியாதைக்குரிய பதவியில் இருக்கும் ஒரு பெண்மணியை 'தலைவி' என்று அழைப்பது சரியா? தலைவன், தலைவி ஆகியவை முறையே ஆண்பாலுக்கும் பெண்பாலுக்குமான ஒருமை விளிச்சொற்கள் அல்லவா? 'தலைவர்' என்பதுதானே இருபாலாருக்கும் பொதுவான மரியாதை விளிச்சொல்? அப்படியென்றால், 'குடியரசுத் தலைவர்' என்று அழைப்பதுதானே முறை? தெரிஞ்சவங்க யாராவது விளக்கம் கொடுத்தால் நல்லா இருக்கும்.

Monday, June 18, 2007

கொலையும் செய்வார் பார்ப்பனர்!

ஆர்குட்டில் பிராமணர்கள் ஒரு குழு அமைத்திருக்கிறார்கள் Brahmin என்ற பெயரில். அந்தக் குழுமத்தில் 7,710 உறுப்பினர்கள் இருக்கிறார்களாம்.

இந்தக்குழுவில் சமீபத்தில் ஒரு வாக்கெடுப்பு (poll) தொடங்கியிருக்கிறார்கள். தலைப்பு என்ன தெரியுங்களா? Is it the right time to kill Muslims?



முஸ்லிம்களை கொல்வதற்கு இது சரியான தருணமா?



இதற்கு இதுவரை 7 பேர் 'ஆம்' என்றும் 5 பேர் 'இல்லை' என்றும் பதில் சொல்லியிருக்கிறார்கள். இல்லை என்று சொன்னவர்கள், 'இந்த தருணம் சரியில்லை. வேறொரு தருணத்தில் கொல்லலாம்' என்ற எண்ணத்தில் வாக்களித்திருப்பார்கள் போலிருக்கிறது. ஒருவர் கூட இப்படி ஒரு தலைப்பில் வாக்கெடுப்பு நடத்துவது தவறு என்று சுட்டிக்காட்டவில்லை.

கொலைகாரப் பசங்க..! என்னதான் உயர்ந்த ஜாதி, படிச்சவனுங்க என்று சொல்லிக் கொண்டாலும் உள்மனதில் கொலைகார எண்ணம்தான் ஓடும் போல. காந்தியிலிருந்து காஞ்சிபுரம் வரை இதற்கு நிறைய உதாரணங்களை சுட்டிக் காட்டலாம்.

இந்தியாவில் உள்ள முஸ்லிம்களையெல்லாம் கொன்னுட்டு, கிருஸ்துவர்களை உயிரோடு எரித்து விட்டு, தலித்துகளை புத்தமதத்திற்கு விரட்டிவிட்டு,

2% நீங்க மட்டும் நல்லா இருங்கடே!

Thursday, June 14, 2007

RAW-விலிருந்து இன்னொரு 'தேசபக்தர்' மாயம்!

புதுடில்லி : பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகத்தில், "ரா' உளவுப் பிரிவில் உயர் அதிகாரியாக பணியாற்றிய வங்கதேச உளவாளி, 'தலைமறைவானவர்' என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில், பல்வேறு உளவு மற்றும் புலனாய்வுப்பிரிவுகள் உள்ளன. அவற்றில், முக்கியமானது, "ரா' என்று அழைக்கப்படும், "ரிசர்ச் அண்ட் அனலிசஸ் விங்க்!' இதில், துணை இயக்குனராக இருந்து வந்தவர் தேவன்சந்த் மாலிக். அவர் பற்றிய சந்தேகத்துக்கு இடமான தகவல்கள் வரவே, அவரைப்பற்றி விசாரித்துக் கொண்டிருந்தபோது, 2005ம் ஆண்டு மே மாதம் தலைமறைவானார்.

கேபினட் செயலகத்தில் உள்ள, "ஏவியேஷன் ரிசர்ச் சென்டர்' இயக்குனர் அனுஜ் பரத்வாஜ், லோதி காலனி போலீஸ் நிலையத்தில், மாலிக் தொடர்பாக அப்போது புகார் பதிவு செய்தார். போலீசாரும் தேடி வந்தனர். மேற்கு வங்க மாநிலத்தில், "24 பர்கானா' மாவட்டத்தை சேர்ந்தவர் மாலிக் என்று, அவர் பற்றிய அரசு பதிவேட்டில் விவரம் இருந்தது. அங்கு போய், அவர் முகவரியில் விசாரித்த போது தான், அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர்' என்பதே போலீசுக்கு தெரிந்தது.

இந்த விஷயத்தில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ரகசியம் காத்து வந்தனர். ஆனால், போலீஸ் நிலையத்துக்கு விஷயம் சென்றதை அடுத்து, திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத் துவங்கிவிட்டன. பிரதமர் அலுவலகத்தில், "டிசி' என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்தவர் தேவன்சந்த் மாலிக். 1999ம் ஆண்டில் இருந்து 2005ம் ஆண்டு மே மாதம் வரை பணியாற்றி இருக்கிறார். அப்போது, அவர் பற்றி விசாரணை நடக்கிறது என்று தெரிந்ததும், திடீரென காணாமல் போய்விட்டார். இப்போது அவர், "தலைமறைவானவர்' என்று பிரகடனப் படுத்தப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சகம் இது தொடர்பான அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் முக்கிய அலுவலகங்களில், உளவு பிரிவுகளில் உளவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது புதிதல்ல. கடந்த 2004ம் ஆண்டில், "ரா' உளவுப்பிரிவின் இணைச் செயலர் ரவீந்தர் சிங் என்பவர், உளவு சொல்கிறார் என்று தெரிந்ததும், அமெரிக்காவுக்கு முக்கிய ஆவணங்களுடன் தப்பியோடி விட்டார். கடந்த 2002ம் ஆண்டில், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி மாளிகையில் உளவு வேலை பார்த்ததாக 12 ஊழியர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. கடந்த 1985ம் ஆண்டு, "கூமர் நாராயண் உளவு சதி வழக்கு' பரபரப்பானது. இவர்கள் இப்போது, கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

நன்றி: தினமலர்

விளங்காத விஷயங்கள்:

RAW போன்ற சென்சிடிவான அமைப்புகளில் ஒருவரை வேலைக்கு சேர்க்குமுன்னரே அந்த நபரின் பிண்ணனியை ஆராய்ந்திருக்க மாட்டார்களா என்ன? தேசவிரோத சக்திகள் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி 1999-ல் இவரை இந்தப் பணியில் சேர்த்திருக்க வாய்ப்பிருக்கிறதா? சமீப காலத்தில் RAW, ராணுவம் போன்ற அதிமுக்கியமான துறைகளில் உளவாளிகள் கண்டுபிடிக்கப் படுவதும் 'காணாமல் போவதும்' அதிகரித்திருப்பதன் காரணம் என்ன?

தொடர்புடையை பழைய பதிவுகள்:

உளவுத்துறையில் ஒரு கருப்பு ஆடு!
ராணுவ ரகசியங்களை விற்க முயன்ற ராணுவ வீரர்
ராணுவத்தில் உளவாளிகள் ஊடுருவல்
முக்கிய ஆவணங்களை திருடிய முன்னாள் ராணுவ அதிகாரி கைது!
அரசு உயர்மட்டத்தில் தொடரும் நாட்டிற்கெதிரான துரோகங்கள்

Wednesday, June 13, 2007

லஞ்சம் கொடுப்பதற்காகவே ஒரு கரன்ஸி நோட்டு!

அண்மையில் ஒரு போக்குவரத்துக் காவலர், போக்குவரத்து விதிகளை மீறியதாக சரவணன் என்ற ஆட்டோ ஓட்டுனரை நிறுத்தினார். அவர் இலஞ்சம் கேட்க, ஓட்டுனர் ஒரு பெறும் தொகையுடைய நோட்டை கொடுத்திருக்கிறார். காவலருக்கோ ஆச்சரியம்! மகிழ்ச்சியோடு வாங்கிய காவலரின் முகம் ரூபாயில் எழுதப் பட்டிருந்த தொகையை கண்டவுடன் சிவந்து விட்டது.

ஏனெனில் மதிப்பு எழுதப்படும் இடத்தில் 'பூஜ்ய ரூபாய்' என்ற எழுத்துக்களுடன் காந்தி சிரித்துக் கொண்டிருந்தார். ரூபாயின் மேல்பகுதியில் 'அனைத்து மட்டத்திலும் இலஞ்சத்தை ஒழிப்போம்' என பொறிக்கப் பட்டிருந்தது. மேலும் வழக்கமாக ரூபாயின் 'I Promise to pay..' என எழுதப் பட்டிருக்கும் இடத்தில் 'நான் இலஞ்சம் கொடுக்கவோ வாங்கவோ மாட்டேன் என உறுதியளிக்கிறேன்' என எழுதப் பட்டிருந்தது.

அந்தக் காவலரின் முகத்தில் முதலில் மகிழ்ச்சி; பிறகு ஏமாற்றம்; அடுத்து கோபம்; எனக்கூறும் சரவணன், அந்த ரூபாயை திருப்பிப் பார்க்கச் சொல்ல, காவலரும் அச்சத்துடன் திருப்பிப் பார்க்கிறார். அதன் பின் பகுதியில் 'சமூகத்தில் அனைத்து மட்டத்திலிருந்தும் இலஞ்சத்தை ஒழிக்க ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஊக்கமும், அதிகாரமும் அளியுங்கள்' என்பதாக எழுதப் பட்டிருக்கிறது. அதன் கீழேயே, சாதாரண மக்களும் இலஞ்சத்திற்கெதிராக எவ்வாறு போராடுவது எனப் பயிற்றுவிக்கும் 'ஐந்தாவது தூண்' (5th Pillar) என்ற சமூக சேவை நிறுவனத்தின் முகவரியும் தொலைபேசி எண்ணும் இருக்கிறது.


'இதுதான் சாலையில் இலஞ்சத்தால் நேரடியாக பாதிக்கப்படும் சாதாரண மனிதன் அதை எதிர் கொள்ள வேண்டிய வழி' எனக் கூறும் திரு M.B. நிர்மல்தான் இந்த ஐந்தாவது தூணின் நிறுவனர். 'ஐந்தாவது தூண் சேவைக்காக இருக்கிறது. எங்கள் இயக்கத்தின் சின்னமாக காந்தியின் கைத்தடியை பயன்படுத்துகிறோம். ஏனெனில் அவர்தான் சேவையின் உண்மையான பிதா' என்கிறார் நிறுவனர்.




இந்த நிர்மல்தான் இருபது ஆண்டுகளுக்கு முன் 'எக்ஸ்னோரா' என்ற அமைப்பை நிறுவியவர். இன்று சாலை தூய்மை பணியில் ஒரு பெரும் சேவை நிறுவனமாக அது வளர்ந்திருக்கிறது.


நன்றி: சமரசம் 1-15 மே 2007