Saturday, November 24, 2007

தஸ்லிமா நஸ்ரினுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுக்கலாமா?

தனது தாய்நாடான பங்களாதேசிற்கு திரும்பினால் வழக்கு விசாரணைகளை ச்ந்திக்க நேரும் என்பதால் கடந்த பத்தாண்டு காலமாக வெளிநாடுகளில் சுற்றிக் கொண்டிருக்கும் தஸ்லிமா நஸ்ரினுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுக்கணுமாம். சொல்றது யாருன்னா விகே மல்ஹோத்ரா என்கிற பிஜேபி தலைவர்.

முஸ்லிம்கள் என்பதற்காகவே குஜராத் மக்களை கூட்டம் கூட்டமாக எரித்துக் கொன்ற அதே சங்பரிவார கும்பலைச் சேர்ந்த பிஜேபி தலைவர் ஒருவர்தான் இந்த முஸ்லிம் அம்மணி மேல் இவ்வளவு அக்கறை காட்டியிருக்கிறார்.
காரணம் என்னன்னா கருத்துச் சுதந்திரமாம்!

இந்துக் கடவுள்களை நிர்வாணமாக வரைந்தார் என்பதற்காக ஓவியர் ஹுசைனை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியவர்களும் இதே பிஜேபியினர்தான். அப்போ இவங்களோட கருத்துச் சுதந்திரம் எங்கே புல் புடுங்க போயிருந்துச்சுன்னு தெரியலை!

பிரபல இந்திய எழுத்தாளர் கமலா சுரையா முஸ்லிமாக மாறினார் என்பதற்காக அவரைக் கொல்ல முயற்சி செய்ததும் இதே இந்துத்துவ சக்திகள்தான்! கமலா சுரையாவின் கருத்துக்களுக்கு சுதந்திரம் கிடையாதா என்ன?

சரி போகட்டும்! தஸ்லிமாவுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுத்துடலாம்! நரேந்திர மோடி போன்றவைகளெல்லாம் நடமாடும் பேறு பெற்ற இந்தியாவாச்சே! தஸ்லிமாவுக்கு அடைக்கலம் கொடுக்குறதால ஒன்னும் குறைஞ்சு போயிடாது.

ஆனா, அதுக்கு முன்னாடி ஒரு விஷயம்..!

'Oh You Hindu! Awake!' என்ற பெயரில் இந்துக்களை விழிப்புணர்வு பெறச் செய்யும் நூலை எழுதியவர் Dr. சட்டர்ஜி என்பவர். அரிய பல கருத்துக்களை உள்ளடக்கிய இந்நூலை எழுதியதற்காக இந்தியரான Dr. சட்டர்ஜிக்கு பாரத ரத்னா விருது கொடுத்துவிட்டு அதன்பிறகு பங்களாதேஷ் தஸ்லிமாவுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுப்பதைப் பற்றி யோசிக்கலாம். என்ன நாஞ்சொல்றது?

65 comments:

said...

தஸ்லிமா நஸ்ரினுக்கு தடை என்பது கண்டணத்துக்குரியதுதான். தஸ்லிமா எழுதியது தவறெனில் அதனை அம்பலப்படுத்தி அவர்களை தனிமைப்படுத்துவதே சரியான நிலைப்பாடு.அதைவிட்டு அடிப்பதும் துரத்துவதும் ஏற்கனவே இருக்கும் இஸ்லாமியர்கள் குறித்த பிம்பங்ளை மீட்டுருவாக்கம் செய்வதுதூன்.

நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள சாட்டர்ஜி கட்டுரைக்கு பாராட்டுக்கள்.

said...

பிஜேபி சங்பரிவார் என்ன சொல்கிறது என்பதைப் பற்றிக் கவலை இல்லை.

ஆனால் தஸ்லீமாவிற்கு அடைக்கலம் கொடுக்கலாமா என்றால் கொடுக்கலாம் என்றே சொல்வேன்.

சட்டர்ஜிக்கு பாரத் ரத்னா பொருந்துமென்றால் அது தஸ்லீமாவுக்கும் பொருந்தும். பிஜேபிக்காரர்கள் கொடுக்கச் சொல்கின்ற காரணத்தினாலேயே தஸ்லீமாவுக்கு அடைக்கலம் கொடுப்பது தவறாகிவிடாது.

பிஜேபியின் தவறைச் சுட்டிக்காட்டுவது வேறு..தஸ்லீமாவிற்கு அடைக்கலம் கொடுப்பது வேறு. இரண்டிற்கும் என்னுடைய ஆதரவு உண்டு.

said...

தஸ்லீமாவிற்கு அடைக்கலம் கொடுப்பது இருக்கட்டும் சுமார் ஈராண்டுகளாக துபாயிலே இருந்து கொண்டு தாய்நாடு திரும்ப வேண்டும் எனும் ஓவியர் ஹுசைனை வரவேண்டாம் உங்கள் உயிருக்கு சங்பரிவார்களால் ஆபத்து என்கிறது நம் அரசு அதற்கென்ன செய்யலாம் ?

இதே சங்பரிவார்கள் சல்மான் ருஷ்டியின் புத்தகத்தை (Satanic Verses) தடை செய்தது சரியல்ல என ஆர்ப்பாட்டம் செய்தது நினைவிருக்கலாம்

said...

ஐயா,

Dr. சட்டர்ஜிக்கு எதிரான காவிக்கூட்டத்தின் நிலைப்பாடு அடிப்படைவாதமேன்றால், தஸ்லீமாவிற்கு எதிரான ஒரு சில முஸ்லீம் அமைப்புகளின் நிலைப்பாடும் அடிப்படைவாதத்தின் ஒரு முகம்தானே.

இதுகுறித்து என்னுடைய பதிவில் விரிவாகவே எழுதியிருக்கிறேன்

said...

ஒரு சிலர் கூறுவதாவது: ஹுசைன் செய்தது தவறு என்றால் தஸ்லீமா செய்தது தவறுதானே

வேறு சிலர் கூறுவதாவது: தஸ்லிமா செய்தது தவறு என்றால் ஹுசைன் செய்தது தவறுதனே

ஒரு சிலர் கூறுவதாவது: ஹுசைனைத் துறத்திவிட்டு தஸ்லீமாக்கு மட்டும் அடைகலம் ஏன் ?

வேறு சிலர்: தஸ்லீமாவை அரசாங்கம் அப்புறப் படுத்தியது போல ஹுசைனை ஏன் செய்யவில்லை.



இவ்வாறு ஒப்பீடளவில் எல்லோரும் எண்ணத்தை வெளிப்படுத்துகிறோமே தவிற, அவரவர்கள் நேரடியாக கருத்துக் கூற முன்வருவதில்லை. தஸ்லீமாவின் எழுத்தினை எதிர்த்து ஆர்பாட்டம் செய்ய ஜனனாயக ரீதியில் இடமுண்டு. ஆனால் தஸ்லீமா வெளியேற்றப் படவேண்டும் என போராடுவது ஜன நாயகத்திற்கு எதிரானது. தஸ்லீமா பற்றிய எழுத்தினை விமர்சனம் செய்யலாம். ஆனால் அத்தோடு நின்று விடாமல் தஸ்லீமா வெளியேற வேண்டும் என போராடுபவர்களின் செயல் சரியா தவறா என கருத்துக் கூறினால் உங்கள் பதிவு முமையானதாக இருக்கும்.

said...

ஜி.ரா, மாலிக் கருத்துக்களுடன் அப்படியே ஒத்துப் போகிறேன்.

அவன் பண்ணான். நான் பண்ணக் கூடாதா" எனும் குரல்கள் சமீப காலங்களில் அதிகமாய்ப் பெருகிக் கொண்டே போகிறது.

ஒரு கருத்தைச் சொன்னதற்காக குஷ்பூவை தமிழ்நாட்டை விட்டே வெளியேற்று என்று சொல்லும் கூட்டத்திற்கும், இதற்கும் ஒன்றும் அதிக வித்தியாசம் இருப்பதாய்த் தெரிய வில்லை.

மத சம்பந்தப் பட்ட விஷயங்களில் எல்லாம் தயவு செய்து பி.ஜே.பியை உதாரணமாய்க் காட்டாதீர்கள். அவர்கள் எப்படி ஒருதலைபட்சமாய் நடந்துக் கொள்வார்கள் என்பது தெரியாதா என்ன?

எழுத்தை விமர்சனம் செய்யுங்கள். நாடு கடத்துங்கள் என்று சொல்ல எவருக்கும் உரிமையில்லை.

said...

எனக்கென்னவோ தஸ்லிமாவிற்கு இங்கு அடைக்கலம் கொடுத்திருப்பதே அரசியலாகத்தான் தெரிகிறது.

அவர் ஒரு விளம்பரப் பிரியை போலத் தான் செயல் படுகிறார்; எழுத்தாளர் போல இல்லை.

இதில் bjp எரிகிற கொள்ளியில் குளிர் காய்கிறது. கருத்து சுதந்திரம் பற்றி யார் பேசுவது என்ற விவஸ்தையே இல்லையா.??

said...

நண்பருக்கு..

நேற்று நண்பர் ஒருவர் சாட்டில் உரையாடும்போது இது குறித்து தெரிவித்த கருத்தை முன்வைக்கிறேன்:

"அவர்களை நானும் ஆதரிக்கிறேன்.ஆனால் அவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கண்டிக்கிற அளவுக்கு இந்து பாசிசத்தை கண்டிப்பதில்லையே..தவிறவும் வங்காளதேசத்தை விட இந்தியாவில் சகிப்புத்தன்மை அதிகம் உள்ளது என்கிற குரலை அடிக்கடி பதிவு செய்கிறாரே அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.."

"இந்து அமைப்புகளை எந்த இடத்திலும் அவர் விமர்சித்ததில்லை..முஸ்லீம் அடிப்படைவாதிகளின் கோபம் இந்த புள்ளியில் இருந்தும் கூட துவங்க நியாயம் இருக்கிறது..எப்படியானாலும் அவரை இப்படி அலைக்கழிக்க விடுவதை நாம் அனைவரும் கடுமையாக கண்டிக்க வேண்டும்.."

இவ்விரண்டு கருத்துமே எனது கருத்தும்.

சல்மான ருருஷ்தி பற்றிய பேச்சு வந்ததால்..

1. அவரை பத்வா செய்தது கோமெய்னி. அதன் காரணம் உலக இஸ்லாமியர்களின் தலைமைத்துவத்திற்கான சியா -சன்னி அரசியலே.

2. இந்திய காங்கிரஸ் அதை தடை செய்தது ஓட்டிற்காக.

3. இதுவரை அந்நூல் குறித்து ஏதெனும் விமர்சனங்கள் அல்லது மறுப்பு வந்துள்ளதா? என எனக்கு தெரியவில்லை. தெரிந்தால் அவற்றை படித்து மேலதிக புரிதல் கொள்ளலாம்.

4. சல்மான ருஷ்தி அதன்பின் 'த மூர்ஸ் லாஸ்ட் சைட்' என்று ஒரு நாவல் இந்து பாசிசம் குறிப்பாக பால்தாக்கரேவை முக்கிய பாத்திரமாகக் கொண்டு எழுதியுள்ளதாக விமர்சனங்களில் படித்துள்ளேன்.

எழுத்தாளன் என்பவன் எந்த பின்புலத்தில் செயல்படுகிறான் என்பதும் இதில் கவனிக்கத்தக்கது.

நிற்க. தஸ்லிமாவை ஆதரிப்பதும் அவரை அம்பலப்படுத்துவதும் (அப்படி அவர் தவறாக எதாவது எழுதி இருந்தால்) அவசியம். அவரை விரட்ட நினைப்பது ஜனநாயக விரோதமானது என்பதே எனது நிலைப்பாடு. பாசிசத்தில் இந்து இஸ்லாம் எல்லாம் ஒன்றுதான். இரண்டும் எதிர்க்கப்பட வேண்டியவையே.

said...

//இந்து அமைப்புகளை எந்த இடத்திலும் அவர் விமர்சித்ததில்லை..முஸ்லீம் அடிப்படைவாதிகளின் கோபம் இந்த புள்ளியில் இருந்தும் கூட துவங்க நியாயம் இருக்கிறது..//

அவர் சார்ந்திருக்கும் மதத்தைப் பற்றி அவர் பேசுவதற்கே உரிமை இல்லாத சூழ்நிலை நிலவும் போது
மற்ற மதத்தைப் பற்றி அவர் என்ன சொல்லி விட முடியும்?

சங்பரிவார்கள் செய்வதும் தவறு தான் . இஸ்லாமிய அடிப்படைவாதிகள் செய்வதும் தவறு தான்.

இதற்கு அது சரி என்று கூறுபவர்கள் முட்டாள்கள்

முற்று பெறாத பதிவை எழுதியதன் நோக்கம் என்னவோ?

said...

தஸ்லிமா நஸ்ரினுக்கு இந்தியாவில் கொடுக்கப்பட்டிருக்கும் அடைக்கலம் மனிதாபிமான அடிப்படையில் நீட்டிக்கப்படவேண்டும்.

அதே சமயத்தில் தஸ்லிமாவின் வாழ்வாதாரத்துக்கு மத்திய (அ)மாநில அரசு பொறுப்பேற்றுக்கொள்வதன் மூலம் - மதங்களை இழிவு செய்து எழுதி 'பிழைப்பு' நடத்தவேண்டிய அவரின் நிலையை தடுப்பதோடு - 'விஷ' எழுத்துக்களின் மூலம் 'அடைக்கலம்' கொடுத்த நாட்டில் உருவாகும் மதகாழ்ப்புணர்வு-மோதல்களையும் தடுக்கலாம்.

said...

//இந்துக் கடவுள்களை நிர்வாணமாக வரைந்தார் என்பதற்காக ஓவியர் ஹுசைனை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியவர்களும் இதே பிஜேபியினர்தான்.//

ஹூசைனுக்கும் தஸ்லிமா பிரச்சினைக்கும் உள்ள முக்கியமான வித்தியாசத்தை பெரும்பாலும் (தங்கள் லாபத்திற்காக!) மறந்துவிடுகின்றனர். தஸ்லிமா தான் சார்ந்திருந்த மதத்தை விமர்சித்தார். ஆனால், ஹுசைன் இன்னொரு மத்தத்தில் கடவுளாக வணங்கும் கடவுளை நிர்வாணமாக வரைந்தார். அதனால், இரண்டுக்கும் பெருத்த வித்தியாசம் உள்ளது. தஸ்லிமா விவகாரம் இஸ்லாமியர்களின் பிரச்சினை தான், அவர் இந்தியாவிற்குள் நுழையாதவரை. ஆனால், இப்பொழுது அவரை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு நம் அரசாங்கத்திற்கு உள்ளது.

இஸ்லாமை விட இந்துக்கள் விமரிசணங்களை தாங்கும் அதிக பக்குவம் உள்ளவர்கள் என்றே நினைக்கிறேன். காரணம், ஹுசைன் விவகாரம் கூட சரசுவதியை வரைந்திருந்தால் பிரச்சினை வந்திருக்காது. ஆனால் நிர்வாணமாக வரைந்தது தான் பிரச்சினை...ஆனால் 'பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்காத மதம் தனக்கு தேவையில்லை' என்று சொன்னதற்காக 'தலை'யெடுப்பது என்பது கலைஞரின் தலையை எடுக்க சொன்ன வேதாந்தி போல காட்டுமிராண்டித்தனமானது. (இந்த பின்னூட்டம் பிரசுரிக்கப்பட்டால் மகிழ்ச்சி)

said...

//தஸ்லீமாவின் எழுத்தினை எதிர்த்து ஆர்பாட்டம் செய்ய ஜனனாயக ரீதியில் இடமுண்டு. ஆனால் தஸ்லீமா வெளியேற்றப் படவேண்டும் என போராடுவது ஜன நாயகத்திற்கு எதிரானது. //

மத்திய காங்கிரஸ் அரசின் 1-2-3 அமெரிக்க அணு ஒப்பந்தத் திட்டத்திற்கு ஆப்பு வைத்த கம்யூனிஸ்டுகளுக்கு ஆப்படிக்க நந்திகிராம் பிரச்சினை உதவியது. நந்திகிராம் பிரச்சினையைத் திசைதிருப்ப, தஸ்லிமா விவகாரம் மேற்கு வங்க கம்யூனிஸ்ட் அரசுக்கு உதவியுள்ளது. நந்திகிராம்,தஸ்லிமா பிரச்சினைகளால் மன்மோகன்சிங் அரசின் மீதான விமர்சனங்கள் மறக்கடிக்கப்பட்டு கருத்துச் சுதந்திரம், கன்றாவிச் சுதந்திரம் என்று கத்திக் கொண்டிருக்கிறோம்.

மும்பை குண்டு வெடிப்புகளுக்குக் குற்றம் சாட்டப்பட்டு பாகிஸ்தானில் அடைக்கலம் புகுந்துள்ள தாவூத் இப்றாஹிமை ஒப்படைக்க வலியுத்திக் கொண்டே, பங்களாதேஷில் தண்டனைக்குறிய குற்றம் செய்த தஸ்லிமா நஸ்ரினுக்கு அடைக்கலம் கொடுக்கச் சொல்வது முரனானது. தஸ்லிமா நஸ்ரினோ அல்லது ஒசாமா பின்லாடனோ அடைக்கலம் கொடுப்பதும் மறுப்பதும் இந்திய சட்டத்தின்பாற்பட்டது.

தஸ்லிமா, முஹம்மது நபியையும் குர்ஆனையும் இழிவாக எழுதியதால் பங்களாதேஷ் சட்டப்படி தண்டனைக்குறிய குற்றம் என்பதால் இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளார். நம்நாட்டுச் சட்டப்படியும் துவேசமாக எழுதுவது தண்டனைக்குறிய குற்றமே. ஒரு குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுப்பது எந்தவகையில் நியாயம் என்று தெரியவில்லை.

என்னைப் பொருத்தவரை, தஸ்லிமாவை மீண்டும் பங்களாதேஷ் அரசிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு, நந்திகிராம் மற்றும் அமெரிக்க நலன்பேணும் 123 ஒப்பந்தத்தை எதிர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

said...

மரைக்காயர்,

இந்திய மருமகள் சோனியா காந்தியையின் தியாகத்தை விட தஸ்லிமா ஒன்றும் இந்தியாவிற்குச் செய்துவிடவில்லை. ஒருபக்கம் சோனியாவை எதிர்த்துக் கொண்டே இன்னொரு பக்கம் தஸ்லீமாவுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் பிஜேபியின் இரட்டை முகத்தைக் கிழிக்க இன்னொரு தெகல்கா வேண்டும்.

கருத்துச் சுதந்திரம் பற்றி ஒப்பாரி வைக்கும் இவர்கள்தான் பெரியார் எழுதிய இராமயண இந்திப் பதிப்பைத் தடைச் செய்யச் சொல்லி உ.பியில் சாமியாடினார்கள்

said...

//ஜமாலன் said...
தஸ்லிமா நஸ்ரினுக்கு தடை என்பது கண்டணத்துக்குரியதுதான். தஸ்லிமா எழுதியது தவறெனில் அதனை அம்பலப்படுத்தி அவர்களை தனிமைப்படுத்துவதே சரியான நிலைப்பாடு.அதைவிட்டு அடிப்பதும் துரத்துவதும் ஏற்கனவே இருக்கும் இஸ்லாமியர்கள் குறித்த பிம்பங்ளை மீட்டுருவாக்கம் செய்வதுதூன். //

நன்றி ஜமாலன். தஸ்லிமா எழுதியதும் தவறு. அவரை அடிப்பதும் துரத்துவதும் தவறு என்பதுதான் எனது நிலைப்பாடும். ஆனால் இந்தப் பதிவில் நான் சுட்டிக்காட்ட விரும்புவது, கருத்துச்சுதந்திரத்திற்கு ஆதரவு என்ற போர்வையில் அரசியல் ஆதாயம் பெற முனையும் காவிகளின் இரட்டை வேடத்தைத்தான்.

said...

//G.Ragavan said...
பிஜேபி சங்பரிவார் என்ன சொல்கிறது என்பதைப் பற்றிக் கவலை இல்லை.

ஆனால் தஸ்லீமாவிற்கு அடைக்கலம் கொடுக்கலாமா என்றால் கொடுக்கலாம் என்றே சொல்வேன்.//

உங்கள் கருத்திற்கு நன்றி ராகவன். தஸ்லிமாவை தாக்க முனைவது தவறு. அதே நேரத்தில் அவருக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரவு அளிக்க வேண்டிய தேவையும் இந்தியாவுக்கு இல்லை என்பது என் கருத்து.

said...

//koothanalluran said...
தஸ்லீமாவிற்கு அடைக்கலம் கொடுப்பது இருக்கட்டும் சுமார் ஈராண்டுகளாக துபாயிலே இருந்து கொண்டு தாய்நாடு திரும்ப வேண்டும் எனும் ஓவியர் ஹுசைனை வரவேண்டாம் உங்கள் உயிருக்கு சங்பரிவார்களால் ஆபத்து என்கிறது நம் அரசு அதற்கென்ன செய்யலாம்? //

நன்றி கூத்தாநல்லூரான். இதுதான் இந்துத்துவாக்களின் இரட்டை வேடம். கருத்துச் சுதந்திரம் பற்றி பேச இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

said...

தஸ்லீமாவை யாரும் துன்புறுத்த வேண்டாம், ஏனெனில் அவர் அடைக்கலம் தேடி நம் நாட்டுக்கு வந்திருக்கிறார். எனவே, நம் வரிப்பணத்தில் அவருக்கு வேண்டிய பாதுகாப்பும் பிற வசதிகளும் செய்து கொடுக்கலாம்.

said...

//உறையூர்காரன் said...
ஐயா,

Dr. சட்டர்ஜிக்கு எதிரான காவிக்கூட்டத்தின் நிலைப்பாடு அடிப்படைவாதமேன்றால், தஸ்லீமாவிற்கு எதிரான ஒரு சில முஸ்லீம் அமைப்புகளின் நிலைப்பாடும் அடிப்படைவாதத்தின் ஒரு முகம்தானே.//

நன்றி உறையூர்க்காரன். தஸ்லீமாவை எதிர்க்க நினைப்பவர்கள் அவரை தாக்கும் அளவிற்க்கு போயிருக்கத் தேவையில்லை. மற்றபடி அவர்களின் எதிர்ப்பிற்கு காரணம் அடிப்படைவாதமா அல்லவா என்ற விவாதத்திற்கு நான் போக விரும்பவில்லை. காரணம், 'அடிப்படைவாதம்' என்றால் என்ன என்பதற்கான வரையறையை யாராலும் தீர்மானிக்க இயலாது.

said...

தஸ்லீமா பற்றிய செய்திகளின் பிண்ணனியில் நந்திகிராம் பற்றிய செய்திகள் சற்று பின்வாங்கிவிட்டது உண்மைதான்.

நந்திகிராமில் நடந்த உரிமைமீறல்களுக்காகப் போராடும்போது, அப்பிரச்சனையின் வீரியத்தைத் தனது நோக்கத்திற்கு திருப்ப, இப்பிரச்சனையில் சம்பந்தமே இல்லாத தஸ்லீமா பற்றிய பிரச்சனையினைச் சேர்த்துக் கொண்டனர், இத்ரீஸ் அலி தலைமையில் போராடியவர்கள்.

இதன் காரணமாக, நல்லடியார் கூறுவது போல் உண்மையாக விவாதிக்க வேண்டிய‌ பிரச்சனை விவாத‌த்திலிருந்து பின் தள்ளப்பட்டுவிட்டது. இது தனது இஷ்டங்களை சந்தர்பத்தினை பயன்படுத்தி இடையே செலுத்தியதால் நிகழ்ந்துவிட்டது.

வங்கதேச அரசு தாமாக தஸ்லீமாவை ஒப்படைக்கக் கேட்டுக் கொள்ளாத‌ வரையில் இந்தியாவாக அவரை அங்கு அனுப்பினால், சந்தர்ப்பவாதிகளுக்கு செவிசாய்த்தது போலாகிவிடும்.

நந்திகிராமைப் பற்றி மத்திய அரசின் விசாரனை, கமிஷன் ஆகியவைகளை தவிர்க்க இடதுசாரியினர் அணு விஷயத்தில் இசைந்துள்ளனர் என்பதும் உண்மைதான்.

எங்கும் சந்தர்ப்பவாதம். பாதிப்போ நந்திகிராமிற்கு

said...

நிச்சயமாக அடைக்கலம் கொடுத்தாக வேண்டும்.கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா போன்ற நாடுகளே தடுக்காமல் விட்டால் வேறு யார் செய்வது? இங்கு யாரும் என்ன கருத்தும் சொல்லும் உரிமை எல்லோருக்கும் உண்டு. சிலரின் மனம் புண்படும் என்றெல்லாம் பார்த்தால் புதிய கருத்துக்கள் உருவாகாமல் போய்விட வாய்ப்புண்டு.
கடவுள் படங்களையும்,சிலைகளையும் செருப்பால் அடித்த இயக்கங்கள் இன்றுகூட வலிமையாகத்தான் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. எல்லாம் கருத்துச் சுதந்திரம்தான்.மத அடிப்படை வாதிகள் சொல்லுகிறர்கள் என்பதற்காக நஸ்ரினை திருப்பி அனுப்பக்கூடாது.

said...

பண, பதவி வெறி பிடித்த காட்டுமிராண்டிகளான பிஜேபியின் இன்னொரு சந்தர்ப்பவாதம் தான் இது!

நியாயம், நேர்மை என்பவை சிறிதளவாவது இருந்தால் பிணந்தின்னி மோடியை குறைந்தபட்சம் கட்சியை விட்டாவது நீக்கி இருக்கமாட்டார்களா.!!

உசேனை சொல்வது ஸ்ரீசரண், சீனுவுக்கு உவப்பாக இல்லாத நிலையில், தீபாமேத்தா, அம்பேத்கர் நினைவுக்கு வருகின்றனர்.

இந்துமதத்தின் விநோதங்கள் என்று அம்பேத்கர் எழுதிய புத்தகத்துக்குத் தடைவிதித்தது ஏன்?

இந்துத்துவ நரிகள் ஒரு தஸ்லீமா நஸரீனை எடுத்து முற்போக்கைப் போர்த்திக்கொள்ள முற்படுவதைப்போல
'அதே கருத்துச்சுதந்திரத்தின் போர்வையில்' "இந்துமதத்தின் விநோதங்கள்" என்ற நூலை இஸ்லாமியர்கள் கடைப் பரப்பினால் இந்த மடையர்கள் ஒத்துக் கொள்வார்களா?

டாக்டர் சாட்டர்ஜி விவகாரமும் இவர்களின் பொய்முகத்தை வெளிக்காட்டும். இசுலாமியர்கள் அதை முன்னெடுக்கலாம்.

said...

//மு மாலிக் said...
...தஸ்லீமாவின் எழுத்தினை எதிர்த்து ஆர்பாட்டம் செய்ய ஜனனாயக ரீதியில் இடமுண்டு. ஆனால் தஸ்லீமா வெளியேற்றப் படவேண்டும் என போராடுவது ஜன நாயகத்திற்கு எதிரானது. தஸ்லீமா பற்றிய எழுத்தினை விமர்சனம் செய்யலாம். ஆனால் அத்தோடு நின்று விடாமல் தஸ்லீமா வெளியேற வேண்டும் என போராடுபவர்களின் செயல் சரியா தவறா என கருத்துக் கூறினால் உங்கள் பதிவு முமையானதாக இருக்கும்.//

நன்றி மாலிக். தஸ்லிமாவின் கருத்துக்களை முக்கியப்படுத்தி அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஜமாலன் சொன்னதுபோல இப்படிப்பட்டவர்களை உதாசீனம் செய்வதே சரியான வழி.

ஆனால், தனது தரங்கெட்ட எழுத்தால் தனது நாட்டிலேயே சர்ச்சைகளை எழுப்பி தேவையற்ற பிரச்னைகளை வளர்த்துவிட்ட ஒரு நபரை ஏன் இந்தியா அடைக்கலம் கொடுத்து பாதுகாக்க வேண்டும்? இந்துத்துவாக்கள் வேண்டுமானால் அவர்களின் அரசியலுக்கு உதவுவார் என்பதற்காக ஆதரவுக்கரம் நீட்டலாம். ஆனால், கருத்துச்சுதந்திரம் புண்ணாக்கு மண்ணாங்கட்டி என்று சொல்லிக்கொண்டு இவர்கள் இதை நியாயப்படுத்த முடியாது.

இந்தியாவில் காவிப்படைகளின் புண்ணியத்தில் ஏற்கனவே மதங்களுக்கிடையிலான உறவுகள் மிக சேதமடைந்திருக்கிறது. தஸ்லிமாவின் வருகை அதை மேலும் மோசமாக்கும் என்பதால் அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோர ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உரிமை இருக்கிறது. இதுதான் ஜனநாயகம்.

said...

அதே போலத்தான் ஒவ்வொரு இந்தியனுக்கும் அவருக்கு அடைக்கலம் கொடுக்கும்படி அரசை நிர்பந்திக்க உரிமை உள்ளது...இதுவும் ஜனநாயகம்தான்.தலிபானிஸமும், இந்துத்துவா பாசிஸமும் ஒழிக்கப் பட வேண்டிய விசயங்களாகும்.

said...

//நந்தா said...
..எழுத்தை விமர்சனம் செய்யுங்கள். நாடு கடத்துங்கள் என்று சொல்ல எவருக்கும் உரிமையில்லை.//

நன்றி நந்தா. நாம் ஒரு இந்தியரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கவில்லை. பிரச்னைக்குரிய ஒரு வெளிநாட்டு நபரைப் பற்றி பேசுகிறோம். அந்த நபரை இங்கே தங்க அனுமதித்தால் மேலும் பிரச்னைகள் அதிகமாகும் என்றால் அவரை வெளியேறச் சொல்வது நாடுகடத்துவதாகாது.

ஆனால், ஒரு இந்தியக் குடிமகனான ஓவியர் ஹுசைன் இந்துத்துவ பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலால் இந்தியாவிற்குள் நுழைய முடியாமல் இருக்கிறார். இது அவரை நாடுகடத்தியிருப்பதற்கு ஒப்பாகும். அவரை இந்நிலைக்கு ஆளாக்கியிருக்கும் அதே கும்பலே ஒரு வெளிநாட்டு நபருக்கு வக்காலத்து வாங்கி பேசுவது வேதனையான வேடிக்கை.

said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
எனக்கென்னவோ தஸ்லிமாவிற்கு இங்கு அடைக்கலம் கொடுத்திருப்பதே அரசியலாகத்தான் தெரிகிறது.

அவர் ஒரு விளம்பரப் பிரியை போலத் தான் செயல் படுகிறார்; எழுத்தாளர் போல இல்லை.

இதில் bjp எரிகிற கொள்ளியில் குளிர் காய்கிறது. கருத்து சுதந்திரம் பற்றி யார் பேசுவது என்ற விவஸ்தையே இல்லையா.??//

ரொம்பச் சரியா சொன்னீங்க ஜ்யோவ்ராம் சுந்தர். நன்றி.

said...

இதே தஸ்லிமா நஸ்ரின்தான் இஸ்லாத்திற்கும் தீவிரவாதத்திற்கும் துளியும் தொடர்பில்லை; தீவிரவாதத்துடன் இது யூத, கிறிஸ்தவ மிஷனரிகளின் சூழ்ச்சி, இஸ்லாம்போபியா" என்றெல்லாம் சொன்னதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.கருத்துச் சுதந்திரத்தின் காவலர்கள் இதுபற்றி என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?

பிஜேபியை பொருத்தவரை பெண்ணுரிமை, கருத்துச் சுதந்திரம் ஆகியவை இஸ்லாத்திற்கு எதிராக இருந்தால்தான் ஆதரிப்பார்கள்.உண்மையில் அதில் இவர்களுக்கு ஆர்வமிருந்திருந்தால் சென்ற வாரம் சபரி மலை ஐயப்பனைத் தரிசிக்கச் சென்ற பெண்ணை அடித்து விரட்டும்போதும் ஆர்ப்பரித்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.ஏனென்றால் ஆகம விதிப்படி சன்னிதியில் ஒரு பெண் 'உரிமை'யுடன் புழங்குவது ஹராம்!

said...

பேராசிரியர் முகத்தில் கரியை பூசிய கட்சித் தொண்டர்கள்
ராய்ப்பூர் :இந்து தெய்வங்களை அவமதித்த மருத்துவ கல்லுõரி பேராசிரியர் முகத்தில் கரியை பூசி, பாரதிய ஜனசக்தி மற்றும் பஜ்ரங் தள் ஆதரவாளர்கள் அவமானப்படுத்தினர்.
சட்டீஸ்கார் மாநிலம் ராய்ப்பூரில், ஜவகர்லால் நேரு மருத்துவ கல்லுõரி உள்ளது. அங்கு பேராசிரியராக இருப்பவர் வி.கே.ஜெயின். சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்த கல்லுõரியில் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த விழாவில், பாடல் ஒன்றுக்கு விளக்கம் அளித்த போது, பேராசிரியர் ஜெயின் இந்து தெய்வங்களை பற்றி தவறாக பேசியுள்ளார். அதற்கு, சில டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே, ஜெயின் மன்னிப்பு கேட்டார்.

எனினும், அந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பாரதிய ஜனசக்தி மற்றும் பஜ்ரங் தள் ஆதரவாளர்கள், நேற்று முன் தினம் அந்த கல்லுõரியை முற்றுகை இட்டனர். பேராசிரியர் ஜெயின் வகுப்பை முடித்து விட்டு, வெளியில் வந்ததும், அவருடைய முகத்தில் கரியை பூசி, அவரை அவமானப்படுத்தினர்.அந்த ஆர்ப்பாட்டங்கள் முடிந்து, நெடுநேரம் கழித்த பிறகு, அந்த இடத்திற்கு வந்த போலீசார், பேராசிரியரை மீட்டனர்.

**********
பத்திரிகை அலுவலகம் சூறை
மும்பை : சிவசேனா தலைவர் பால் தாக்கரேயை வில்லனாக சித்தரித்த, "அவுட்லுக்' ஆங்கில வார இதழின் மும்பை அலுவலகத்தை, சிவசேனா கட்சியினர் சூறையாடினர்.
"அவுட்லுக்' வார இதழின் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது. இந்த இதழில், வில்லன்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப் பட்டு இருந்தது. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர் அசாருதீன் ஆகியோருடன் சிவசேனா தலைவர் பால் தாக்கரே பெயரும், கேலிச் சித்திரமும் வெளியிடப்பட்டு இருந்தது. ஹிட்லர் போன்ற தோற்றத்தில், பால் தாக்கரே சித்தரிக்கப் பட்டு இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சிவசேனா தொண்டர் கள், "அவுட்லுக்' இதழின் அலுவலகத்துக்குள் நேற்று புகுந் தனர். அங்கிருந்த பொருட் களை சூறையாடினர்.

DINAMALAR 15/08/07

ANY COMMENTS?

said...

நண்பர் மரைக்காயர்,

தஸ்லீமாவின் அந்த பிரச்சனைக்குள்ளான கருத்து என்னவென்று தெரிந்து கொள்ளலாமா?

said...

//தஸ்லிமாவை ஆதரிப்பதும் அவரை அம்பலப்படுத்துவதும் (அப்படி அவர் தவறாக எதாவது எழுதி இருந்தால்) அவசியம். அவரை விரட்ட நினைப்பது ஜனநாயக விரோதமானது என்பதே எனது நிலைப்பாடு. பாசிசத்தில் இந்து இஸ்லாம் எல்லாம் ஒன்றுதான். இரண்டும் எதிர்க்கப்பட வேண்டியவையே.//

தஸ்லிமாவை விரட்டுவது என்பதைவிட இந்தியாவில் மதரீதியிலான பிரச்னைகள் உருவாக வெளிநாட்டினரான அவரும் அவரது பேச்சுக்களும் காரணமாக அமைந்துவிடும் விடும் என்பதால் அதை அனுமதிக்கக்கூடாது என்பதே சரியாக படுகிறது. இந்தியாவில் இருக்கும் பிரச்னைகள் போதாது என்று வேலியில போறதையும் எடுத்து வேட்டிக்குள்ள விட்டுக்கலாமா?

இஸ்லாமில் பாசிஸம் என்று எதைச் சொல்கிறீர்கள்?

said...

//இஸ்லாமில் பாசிஸம் என்று எதைச் சொல்கிறீர்கள்?//

பாசிஸத்தின் முதல்கூறு கருத்துச் சுதந்திரத்தை மறுப்பது. இஸ்லாம் பெயரால் அதனை செய்தால் அதுவும் பாசிஸமே என்பதே நான் சுட்டிக் காட்டியது.

said...

//பாசிசத்தில் இந்து இஸ்லாம் எல்லாம் ஒன்றுதான். இரண்டும் எதிர்க்கப்பட வேண்டியவையே.//

சகோதரர் ஜமாலன்

மேற்கண்ட வரிகளிலிருந்து என்னக் கூற வருகிறீர்கள்?. இஸ்லாத்தில் பாசிசம் உண்டு என்றா?.

வந்தேறிப் பார்ப்பனர்களின் மத அடிப்படையே பாசிசம் தான். இதனை பார்ப்பன மதத்தின் வேதங்களை வைத்துத் தெளிவாக நிரூபிக்க இயலும்.

அதே போன்று இஸ்லாத்திலும் பாசிசம் எனில், இஸ்லாமிய மார்க்கத்தின் வேதத்தைக் கொண்டு அதனை நிரூபிக்க வேண்டும்.

லஜ்ஜையில்லாமல் தன் கர்ப்பப்பாத்திரத்தை தான் கட்டிக்கொண்டவன் அல்லாமல் தான் விரும்பும் அனைவருக்கும் கொடுக்கும் சுதந்திரம் பெண்களுக்கு வேண்டும் எனக் கூறும் தஸ்லீமாவிற்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுப்பதும் கொடுக்காததும் இந்திய அரசின் விவகாரம்.

இதில் இஸ்லாம் எங்கிருந்து வந்தது?. விபச்சாரம் செய்யும் சுதந்திரம் பெண்ணுக்கு வேண்டும் என நவீனப் பெண்ணியம் பேசும் தஸ்லீமாவிற்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுக்கக்கூடாது என இஸ்லாம் உங்களிடம் கூற வந்ததா?.

சில அதிகப்பிரசங்கிகள் இஸ்லாத்தின் பெயரால் ஏதாவது உளறிக் கொட்டுகின்றார்கள் எனில் உங்களின் பாசிசக் கருத்துக்கள் அவர்களுக்கு எதிராக இருக்கட்டும். அடிப்படையில்லாமல் அல்லது தெரியாமல் இஸ்லாத்தின் மீது வரம்பு மீறிய அவதூறு வார்த்தைகளை அவசரப்பட்டு விட வேண்டாம்.

இறை நேசன்.

said...

//ஸ்ரீசரண் said...
அவர் சார்ந்திருக்கும் மதத்தைப் பற்றி அவர் பேசுவதற்கே உரிமை இல்லாத சூழ்நிலை நிலவும் போது
மற்ற மதத்தைப் பற்றி அவர் என்ன சொல்லி விட முடியும்?
சங்பரிவார்கள் செய்வதும் தவறு தான் . இஸ்லாமிய அடிப்படைவாதிகள் செய்வதும் தவறு தான். இதற்கு அது சரி என்று கூறுபவர்கள் முட்டாள்கள்
முற்று பெறாத பதிவை எழுதியதன் நோக்கம் என்னவோ//

ஸ்ரீசரன், தான் சார்ந்த மதத்தைப் பற்றி பேசும் ஒருவருக்கு சம்பந்தமில்லாமல் சங்பரிவாரங்கள் பரிந்துகொண்டு வருவதன் காரணம் என்னவோ? இவர்கள் என்ன கருத்துச் சுதந்திரத்தின் காவலர்களா? சகோதரர் நல்லடியார் அவரது பின்னூட்டத்தில் இரு சம்பவங்களை குறிப்பிட்டிருக்கிறார். அதற்கு என்ன பதில்? இவர்களைப் போல 'கருத்து சொல்கிறேன்' என்ற பெயரில் தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்து உளறிக் கொட்டுபவர்கள்தான் அடிமுட்டாள்கள் என்று நான் நினைக்கிறேன்.

ஒரு பதிவு என்ற வகையில் இது முற்றுப்பெற்றுதான் இருக்கிறது. ஆனால் அதன் கருத்துக்கள் மீதான விவாதங்கள்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

said...

//பிறைநதிபுரத்தான் said...
தஸ்லிமா நஸ்ரினுக்கு இந்தியாவில் கொடுக்கப்பட்டிருக்கும் அடைக்கலம் மனிதாபிமான அடிப்படையில் நீட்டிக்கப்படவேண்டும். //

நன்றி பிறைநதிபுரத்தான். தஸ்லிமா ஏதோ போக்கிடம் இல்லாமல் இந்தியாவில் வந்து அடைக்கலம் புகுந்திருப்பதுபோல நினைத்து சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் உண்மை நிலவரம் அதுமாதிரி தெரியவில்லை. இது போல போலி சீர்திருத்தம் பேசுபவர்களை கவுரவித்து அவார்டுகள் கொடுப்பதற்கென்றே சில நாடுகளும் அமைப்புகளும் இருக்கின்றன. அத்தகைய ஒரு நாட்டில் போய் இவர் அடைக்கலம் கேட்கலாமே! இந்தியாவிற்கு இருக்கும் தலைவலிகள் போதாதா?

said...

//சீனு said...
ஹூசை