Wednesday, January 25, 2012

சவுதி ஓஜர் தொழிலாளர் பிரச்னை: தீர்வு என்ன?

வினவு இணையத் தளத்தில் சவூதி ஓஜர் நிறுவனத்தைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறார்கள். அதாகப்பட்டது, சௌதி ஓஜர் நிறுவனம் சௌதி, லெபனான் நாடுகளை ஆளும் கும்பலின் கூட்டு நிறுவனமாகும். இதில் பலவகைகளில் தொழிலாளர் நலன் நசுக்கப் படுகிறது.. ப்ளா.ப்ளா.ப்ளா..ப்ளா.. உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைத் தானே மேற்கொள்கின்றன, இதில் சௌதி மட்டும் விதிவிலக்காகிவிட முடியுமா? என்று பொதுமைப்படுத்த முடியாதபடி இதில் இன்னொரு செய்தியும் இருக்கிறது. சௌதி ஓஜரின் உரிமையாளர்களான ஹரிரி குடும்பத்தினரின் பினாமி நிறுவனம் தான் லிபனெட். ஒரு நாட்டின் ஆளும் வர்க்கமாக இருந்து நாட்டை சூறையாடுவதோடு அவர்கள் திருப்தியடையவில்லை. விதியோ, கடவுள் நம்பிக்கையோ அவர்கள் செயலில் குறுக்கிடவில்லை. ஏழை தொழிலாளியின் வயிற்றிலடிப்பதற்கும் வெறித்தனமாய் திட்டமிடுகிறார்கள்.

டீடெய்லா படிக்கணும்னா வினவு பதிவிலேயே படிச்சுக்குங்க.

இந்தப் பதிவுக்கு வினவு வைத்திருக்கும் தலைப்பு: சௌதி ஓஜர்: தொழிலாளர்களை கொடுமைப் படுத்தும் அல்லாவின் தேசம்!

என்னாது? சௌதி ஓஜர் = சவுதி அரேபியா = அல்லாவின் தேசமா? ஆமாங்க.. அப்படித்தான் போட்டிருக்காங்க. ஏன்னா, லெபனான் மற்றும் சவுதி அரேபியா நாடுகளின் ஆட்சியாளர்கள்தான் இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களாம். இந்த இரண்டு குடும்பத்தினர்தான் சவூதி அரேபியா நாடு. சவூதி அரேபியா நாடுதான் அல்லாவின் தேசம். நம்புங்க மக்களே! சவுதியிலேயே இருக்கும் வினவு செய்தியாளரே இதை எழுதியிருக்காரு. அவரு சொன்னா சரியாத்தான் இருக்கும்.

அப்படின்னா 'ஓஜர்' என்ற பெயருக்குச் சொந்தக்காரர்களான www.ogerinternational.com என்ற ஃப்ரான்ஸ் நாட்டு நிறுவன குழுமத்திற்கு என்ன நேர்ந்தது? ஓ... அவங்க வேற இருக்காங்களா? அப்படின்னா ஃப்ரான்ஸ் தேசத்தையும் அல்லாவின் தேசம்னு அறிவிச்சுடுவோம். மேட்டர் சால்வ்டு! என்ன வந்தாலும் வச்ச தலைப்பை மட்டும் நாங்க மாத்த மாட்டோம்ல!

ஒருவழியா தலைப்பு மேட்டரை செட்டில் பண்ணியாச்சு.. இனி பதிவுக்கு போவோம்.

சவுதியிலிருந்து வினவு செய்தியாளர் என்ன சொல்றார்னா, அல்லாவின் தேசமான சவுதியின் ஆட்சியாளர்களுக்குச் சொந்தமான சவுதி ஓஜர் நிறுவனத்தில் தொழிலாளர்கள் நசுக்கப் படுகிறார்கள். ஒடுக்கப் படுகிறார்கள். அடக்குமுறைக்கு ஆளாக்கப் படுகிறார்கள். இத்யாதி..இத்யாதி.. உண்மைதானே? ஆமாம். உண்மையாகத்தான் இருக்கும். சவுதியிலிருந்து அந்த செய்தியாளரே அந்தக் கொடுமைகளையெல்லாம் நேரடியாக பார்ப்பதால்தானே அப்படி எழுதியிருக்கிறார்?

ஆனா, நமக்கு இதுல புரியாத ஒரு விஷயம் என்னன்னா அந்த செய்தியாளரையும் அடக்குமுறைக்கு எதிரா போராடுற மற்ற உழைப்பாளர்களையும் சவுதி ஓஜர் நிறுவனம் ஆள் வைத்து கடத்திக் கொண்டுபோய் சவூதியில் வைத்து கொத்தடிமைகளாக நடத்திக் கொண்டிருக்கிறார்களா என்ன? தப்பிச்சு கிப்பிச்சு வர முடியாதபடி சங்கிலி கிங்கிலி போட்டு கட்டி வச்சிருக்காங்களோ என்னவோ! இதையே நான் வினவு கிட்டே வினவினேனுங்க. அவரு அதுக்கு இன்னும் பதில் சொல்லலை. ஒருவேளை 'நான்தான் வினவு. நான் மட்டும்தான் வினவுவேன். மத்தவங்கள்லாம் வினவக்கூடாது'ன்னு ஏதும் பாலிஸி வச்சிருக்காரோ என்னவோ! சரி.. அது போகட்டும் விடுங்க!

அடுத்ததாக, இந்த பிரச்னைக்கு சவுதியிலிருந்து வினவு செய்தியாளர் என்ன தீர்வு சொல்கிறார் என்று பார்ப்போம்.

சௌதி ஓஜரின் உரிமையாளர்கள் ஆளும் வர்க்கம் + முதலாளி வர்க்கம் = சுரண்டும் வர்க்கம்.

தொழிலாளர்கள் = சுரண்டப்படும் வர்க்கம் + ஒன்றிணைய வேண்டிய வர்க்கம் + போராட வேண்டிய வர்க்கம்

அதாவது, நம்ம சட்டசபையில் இருக்கிறதல்லவா, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி? அது மாதிரி இங்கே முதலாளி கட்சி, தொழிலாளி கட்சி! முதலாளி கட்சியில எல்லோரும் கெட்ட பசங்க.. தொழிலாளி கட்சியில உள்ளவங்க எப்பவுமே போரடிக்கிட்டே இருக்க வேண்டியவங்க. தொழிலாளி ஒருத்தர் கொஞ்சம் பணம் சேர்த்து முதலாளி ஆயிட்டார்னு வச்சுக்குங்க.. அப்ப அவரும் கெட்ட பையனா ஆயிடுவாரு.

வினவு சொல்வதுபோல தொழிலாளி வர்க்கத்தினர் எல்லோரும் ஒருங்கிணைந்து முதலாளி வர்க்கத்திற்கு எதிராக போராடினால் என்ன ஆகும்? இந்த நான்கு விளைவுகளில் ஏதோ ஒன்று நிகழலாம்:

1. முதலாளி வர்க்கம் அடிபணிந்து தொழிலாளர் வர்க்கத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்புக் கொள்ளலாம்.

2. 'நான் அப்படித்தான் செய்வேன். உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ' என்று வீம்பு பிடிக்கலாம்.

3. போராடும் தொழிலாளர்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பிவிட்டு வேறு நாட்டு தொழிலாளர்களை வரவழைத்துக் கொள்ளலாம்.

4. 'எனக்கு இந்த நிறுவனமே வேண்டாம்' என்று அதை பூட்டிப் போட்டுவிட்டு வேறு தொழிலைப் பார்க்க போய்விடலாம்.

இதில் முதலாவது விளைவு நிகழ வேண்டுமென்பதுதான் வினவின் கனா. ஆனால் அது நிகழ்வதற்கான சாத்தியக்கூறு மிகவும் குறைவு என்பது கொஞ்சம் யோசித்தாலே தெரியும். மற்ற மூன்று விளைவுகளில் ஒன்று நிகழ்ந்தால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் கதி என்னவாகும்?

எனவே, வர்க்கப் பாகுபாடு, ஒருங்கிணைந்த போராட்டம் என்பதெல்லாம் இந்தப் பிரச்னைக்கு தீர்வே அல்ல. மாறாக, தீர்வைத் தேடும் ஒரு வழிமுறை மட்டுமே. அதுவும் தோற்றுப் போவதற்கான சாத்தியங்களே அதிகம்.

அப்படியானால், இந்தப் பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன? முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கம் என்ற பாகுபாடுகள் இல்லாமல் இரு தரப்பினருக்கும் பொதுவான ஒரு தலைமை வேண்டும். அந்தத் தலைமை இரு தரப்பினருக்கும் அவரவரின் உரிமை மற்றும் கடமைகளை வரையறுக்க வேண்டும். அவ்வாறு ஏற்கனவே வரையறுக்கப் பட்டிருந்தால் அவற்றை அவர்களுக்கு நினைவுறுத்த வேண்டும். அவற்றை மீறுபவர்களை தண்டிக்கும் அதிகாரமும் அந்தத் தலைமைக்கு இருக்க வேண்டும். இவையெல்லாம் ஏற்கனவே இஸ்லாத்தில் இருக்கின்றன தோழர்களே!

தொழிலாளியின் வியர்வை உலருமுன் அவனுடைய ஊதியத்தை அவனுக்கு கொடுத்துவிடும்படி முதலாளிகளுக்கு கட்டளையிடும் இஸ்லாம், தொழிலாளர்கள் முதலாளிகளிடம் நடந்துக் கொள்ள வேண்டிய விதத்தையும் சொல்லித் தருகிறது.

அந்த கட்டளைகளை முதலாளி மீறினால் என்னவாகும்? அந்த வயதான தொழிலாளி நரைத்துப் போன தன் தாடியை தடவிக் கொண்டே சொன்னாரே, “நாங்கள் தொழுது பிரார்த்திக்கிறோம், எங்களுக்கான பதிலை கடவுள் அவர்களிடம் வாங்கியே தீருவார்”. நிச்சயம் அது நடக்கும்!

ருஷ்டிக்கு ஆப்பு! வச்சது யாரு?

ல்ல இலக்கியங்களைப் படைத்து பேர் வாங்கும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். வெவகாரமா எதையாவது எழுதி பேர் வாங்கும் எழுத்தாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சல்மான் ருஷ்டி இதில் இரண்டாம் ரகம். இரண்டாம் தரம் (Second rated) என்றும் சொல்லலாம். நானா சொல்லலீங்க.. டெய்லி மெய்ல் இணையத் தளத்துல அப்படித்தான் போட்டிருக்காங்க. நேரம் இருந்தா இந்தக் கட்டுரையை கொஞ்சம் படிச்சுப் பாருங்க. செம நக்கலா இருக்கும்.

25 வருசத்துக்கு முன்னாடி 'மிட்நைட் சில்ட்ரன்' அப்படின்னு ஒரு புத்தகம் எழுதினாராம் ருஷ்டி. அதுக்கு 'புக்கர் ப்ரைஸ்' எனப்படும் விருது கொடுத்தார்களாம். அதற்குப் பிறகு அவர் எழுதிய எல்லா புத்தகங்களுமே 'படிக்கவே முடியாத திராபைகள்' என்கிறது இந்த இணையத் தளம். இந்த அழகுல, அவரோட இன்னொரு புத்தகத்துக்கும் 'புக்கர் ப்ரைஸ்' கிடைக்கலேன்னு விழா நடந்த மண்டபத்து டாய்லெட்டுக்குள்ள போய் தேம்பித் தேம்பி அழுதாராம் பார்ட்டி! கோழைத்தனமான, திமிர் பிடித்த, அகம்பாவக்காரர் ருஷ்டி என்றும் இந்த இணையத்தளம் குறிப்பிடுகிறது.

சரி, அந்த பழங்கதையெல்லாம் கிடக்கட்டும். நாம லேட்டஸ்ட் மேட்டருக்கு வருவோம்..

ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்துக் கொள்ள தயாராகிக் கொண்டிருந்த ருஷ்டிக்கு விழா அமைப்பாளர்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்களாம். மஹராஷ்டிராவிலிருந்து வந்த உளவுத்துறை தகவலின்படி மும்பை தாதா ஒருவர் ருஷ்டியை ஒழித்துக் கட்டுவதற்காக பணம் மற்றும் ஆயுதங்களைக் கொடுத்து இரண்டு அடியாட்களை ஜெய்ப்பூருக்கு அனுப்பியிருப்பதாகவும், அதனால் அவரை விழாவுக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாகவும் அந்த மின்னஞ்சலில் சொல்லப்பட்டிருந்ததாம். அதே மின்னஞ்சலில் ராஜஸ்தான் உயர் மட்ட அரசு அதிகாரிகள் சிலருக்கும் காப்பி அனுப்பப்பட்டிருந்ததாம்.

ஈரான் கொமெய்னியின் பிரபல ஃபத்வாவிற்குப் பிறகு 'எங்கே இருக்கிறார்?' என்றே தெரியாமல் நாடு நாடாக ஒளிந்து திரிந்துக் கொண்டிருந்த ருஷ்டி இப்பத்தான் வெளியுலகத்திற்கு வந்து மாடல் அழகிகளுடன் சல்லாபம், திருமணம், விவாகரத்து என்று வாழ்க்கையை என்ஜாய் பண்ணிக் கொண்டிருக்கிறார். 'மறுபடியும் முதல்லேருந்தா?' என்று அதிர்ந்து போனார் அவர்.

'அவிங்க யாருன்னாச்சும் சொல்லுங்கய்யா..' என்று ருஷ்டி கேட்டுக்கொண்டதால் மூன்று நபர்களின் பெயர்களை அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். மும்பையில் உள்ள தமது நண்பர்கள் மூலம் இந்த நபர்களை பற்றி விசாரித்திருக்கிறார் ருஷ்டி.

அதில் ஒரு பெயர் சகிப் நச்சன். இவர் தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்துடன் தொடர்புடையவராம். எந்த சிமி? இந்தியாவுல எங்கேயாவது குண்டு வெடிச்சா வெடி சத்தம் அடங்குறதுக்குள்ள டிவியிலே எல்லாம் சொல்வாங்களே, 'குண்டு வெடிப்புக்கு இவங்கதான் காரணம்'னு, அதே சிமிதான். மற்ற இரண்டு பெயர்களைப் பற்றி ருஷ்டியின் நண்பர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால், இந்த மூன்று பெயர்களையும் படித்து விட்டு மும்பை போலிஸ்காரங்க விழுந்து விழுந்து சிரிச்சாங்களாம், அப்படி யாருமே இல்லேன்னு.! என்ன கொடுமை சார் இது?

அப்படின்னா, எந்த மும்பை தாதாவும் இவரை ஒழித்துக்கட்ட அடியாட்களை அனுப்பவில்லையா? அப்ப ஏன் மஹராஷ்டிரா உளவுத்துறை அப்படி ஒரு தகவலை அனுப்புனாங்க என்று கேட்டால், 'நாங்க அப்படி எதுவும் சொல்லவில்லையே!' என்று அவர்கள் மறுத்து விட்டார்களாம். அப்படின்னா மத்திய உளவுத்துறையா இருக்கும்னு டெல்லியில கேட்டா, 'எங்களுக்கும் ஒன்னும் தெரியாது'ன்னு கையை விரிச்சுட்டாங்களாம். அப்ப ராஜஸ்தான் போலீஸ்? அங்கேயும் அதே பதில்!

நேரில்தான் கலந்துக் கொள்ள முடியவில்லை.. வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாகவாவது விழாவில் பேசலாம் என்று எதிர்பார்த்திருந்தவருக்கு அதிலும் ஆப்பு வைத்து விட்டார்கள்.

கடுப்பாகிப்போன ருஷ்டி, 'இதற்கெல்லாம் காரணம் காங்கிரஸ் கட்சிதான். உ.பி.யில் நடக்க இருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு அவர்கள்தான் இந்த சதித்திட்டத்தை நடத்தி இருக்கிறார்கள்' என்று ஒரு பேட்டியில் கூற, 'எங்களுக்கு இதுதான் வேலையா?' என்று காட்டமாக பதிலளித்திருக்கிறார் காங்கிரஸ் பேச்சாளர் அபிஷேக் மனு சிங்வி.

இப்ப பிரச்னை என்னன்னா, ருஷ்டிக்கு இந்த ஆப்பை வச்சது யாரு?

எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய்யுங்கையா!