Sunday, October 21, 2007

மோடியை துரத்தும் குஜராத் பேய்கள்!



CNN-IBN தொலைக்காட்சியின் "Devil's Advocate" (சாத்தானின் வழக்குறைஞர்) என்ற Talk Show வில் தோன்றும் கரண் தாப்பர் அவ்வப்போது பிரபலங்களை நேர்காணல் செய்து பரபரப்பை உண்டாக்குவார். இவருடன் நேர்காணலுக்கு வரும் பிரபலங்களில் பலர் கலங்கியவாறே பேட்டியை முடித்துக் கொள்வர்.

சில வருடங்களுக்கு முன்னர் முன்னாள் இந்திய கிரிக்கெட் காப்டன் கபில்தேவுடனான நேர்காணலில் கண்கலங்க வைத்தார். அதேபோல் இருவருடங்களுக்கு முன் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடனான நேர்முகத்தில் நிதானம் இழக்கச் செய்தார். பாதிக்கப் பட்ட பிரபங்களும் நேயர்களும் இவரை உண்மையிலேயே சாத்தானாகப் பார்க்கும் அளவுக்கு இவரின் கேள்விகள் அவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்.

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த முஸ்லிம் இனச்சுத்திகரிப்புகளால் இந்தியாவை உலக அரங்கில் தலைகுனிய வைத்ததோடு, வாஜ்பாயின் முகத்தையும் கிழித்த (எந்த முகத்தை வைத்துக் கொண்டு இனி உலக நாட்டுத் தலைவர்களை சந்திப்பேன் என்று வாஜ்பாயே சொன்னதை நினைவில் கொள்ளவும்) நரேந்திர மோடியின் முகத்தில் அறைந்தாற்போல் கேள்விகளைக் கேட்டு திண்டாடச் செய்துள்ளார். குஜராத்தில் முஸ்லிம்கள் பலரை அகதிகளாக வெளியேறச் செய்த நரேந்திர மோடி, கரன் தாப்பருடனான பேட்டியிலிருந்து கிழிந்த முகத்துடன் வெளியேறியுள்ளார். ஐந்து நிமிடமே நடந்த் பேட்டியின் விபரம் வருமாறு:

கரண்: ஹலோ Devil's Advocate நிகழ்ச்சிக்கு வருக.

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அவர்களுக்குத் தோற்றக் கோளாறு (Image Problem) உள்ளதா? மேலும் வரவிருக்கும் குஜராத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராக முடிசூடுவாரா? இவையே இன்றைய நேர்காணலின் முக்கிய அம்சம்.

திரு. மோடி, உங்களைப் பற்றிப் பேசுவோமா? கடந்த ஆறு வருடங்களில் நீங்கள் முதல்வராக இருந்தபோது, மிகச்சிறந்த நிர்வாகியாக ராஜீவ் காந்தி பவுண்டேசன் தேர்ந்தெடுத்தது. இந்தியா டுடே வெவ்வேறு பதிப்புகளில் மிகவும் திறமையான நிர்வாகியாக அடையாளம் காட்டியது. உங்களின் முகத்திற்கெதிராகவே மக்கள் உங்களை கொடூர கூட்டுக் கொலையாளியாகவும் (Mass Murderer), முஸ்லிம்களை அச்சுறுத்தியதாகவும் முற்றிலும் இருவேறுவிதமாகப் பேசப்படுகிறீர்கள். உங்களிடம் ஏதேனும் தோற்றப்பிழை இருக்கிறதா?

மோடி: மக்கள் சொல்கிறார்கள் என்று சொல்லப்படுவதை சரியல்ல என்றே சொல்வேன். இருவர் அல்லது மூவர் மட்டுமே இவ்வாறு என்னைப் பற்றி சொல்கிறார்கள். அவர்களைக் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்பதே என்னுடைய பதில்.

கரண்: அதாவது இதை சிலரின் சூழ்ச்சி என்கிறீர்களா?

மோடி: நான் அவ்வாறு சொல்லவில்லை.

கரண்: ஆனால் நீங்கள்தான் சொன்னீர்கள். ஒருசிலர் மட்டுமே என்றீர்கள்.

மோடி: நானறிந்தவையில் இது மக்களின் குரல் அல்ல!

கரண்: 2003 செப்டம்பரில் உங்கள் அரசு மீதான நம்பிக்கையை இழந்து விட்டதாகஉச்ச நீதிமன்றம் சொன்னதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஏப்ரல் 2004-ல் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உங்களை நவீன நீரோ மன்னனாகவே வர்ணித்ததார். ஆதரவற்ற குழந்தைகளும் அப்பாவி பெண்களும் எரித்துக் கொல்லப் பட்டுக் கொண்டிருந்தபோது வேறு பக்கத்தில் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தவர் அவர். உச்சநீதிமன்றத்தின் உங்கள் மீதான கண்ணோட்டத்தில்தான் ஏதோ பிரச்னை உள்ளது.

மோடி: கரண்! தயவு செய்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை ஒருமுறை வாசியுங்கள் என்று வேண்டுகிறேன். அதில் எங்கேனும் எழுத்துப்பூர்வமாகச் சொல்லப்பட்டிருந்தால்காட்டலாம்; மகிழ்வடைவேன்.

கரண்: அப்படி எதுவும் எழுத்துப்பூர்வமாகச் சொல்லப்படவில்லை. இருந்தாலும் இதுஒரு புரிந்து கொள்ளல்.

மோடி: தீர்ப்பில் அவ்வாறு சொல்லப்பட்டிருந்தால், உங்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதில் மகிழ்ச்சியடைவேன்.

கரண் : ஆனாலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் குட்டப்பட்டது ஒன்றும் பெரிய விசயமில்லை என்று சொல்ல வருகிறீர்களா?

மோடி: என்னுடைய தாழ்மையான வேண்டுகோள், நீதிமன்றத் தீர்ப்பை வாசித்து விட்டு உங்களின் கூற்று மெய்யென்றால் மக்களிடம் கொண்டு செல்லலாம்.

கரண்: நன்று. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்து வெளிப்படையாக சொல்லப்பட்டது மட்டுமல்ல. 2004 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட 4600 மொத்த வழக்குகளில் சுமார் 2100 வழக்குகள், கிட்டத்தட்ட 40% வழக்குகளில் குஜராத்தி(முஸ்லிம்)களுக்கு நீதி மறுக்கப் பட்டுள்ளதாகக் கருதப்பட்டு அவ்வழக்குகள் மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

மோடி: வழக்கு மன்றம் நல்ல தீர்ப்பை வழங்கினால் சந்தோசப்படுவேன்.

கரண்: இந்தியா டுடே,உங்களை மிகச்சிறந்த முதலமைச்சராகவும், ராஜிவ் காந்தி பவுண்டேசன் குஜராத்தின் திறமையான நிர்வாகியாகவும் தேர்ந்தெடுத்தபோதிலும், மோடி முஸ்லிம்கள் விஷயத்தில் நியாயமின்றி நடந்து கொண்டார் என்று சொல்லப்படுவதால்தான் கேட்டேன், உங்களுக்குத் தோற்றப்பிழை (Image Problem) உள்ளதா என்று!

மோடி: நியாயமாக என் மீதான பிம்பம் பற்றி கவலைப்பட ஒருநிமிடமாவது ஒதுக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். நான் குஜராத்திற்காக ஏற்றுக்கொண்ட என்னுடையப் பணிகளில் மூழ்கியுள்ளேன். நான் ஒருபோதும் என்னுடைய பிம்பத்தைப் பற்றி பேசியதில்லை; அதற்காக ஒரு நிமிடம் கூட ஒதுக்காததும் அத்தகைய குழப்பத்திற்குக் காரணம்.

கரண்: என்ன பிரச்சினை என்றால், ஐந்து வருடங்கள் கழிந்தும் 2002 ஆம் ஆண்டு குஜராத் படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களின் ஆவிகள் உங்களைத் விரட்டுகிறது. அந்த பிரச்னையை தீர்க்க (அந்த ஆவிகளை நண்பர்களாக்க?) நீங்கள் ஏன் ஒன்றுமே செய்யவில்லை?

மோடி: கரண் தாப்பர் மாதிரியான ஊடகவியலாளர்களிடம் இதை கொடுத்து விட்டேன். அவர்கள் அனுபவிக்கட்டும்! (?)

கரண்: நான் ஒரு ஆலோசனை சொல்லட்டுமா?

மோடி: எனக்கு ஆட்சேபனையில்லை.

கரண்: குஜராத் படுகொலைகளுக்காக ஏன் நீங்கள் வருத்தம் தெரிவிக்கக் கூடாது? அரசு அவர்களைக் காக்கத் தவறி விட்டது என்று ஏன் ஒப்புக் கொண்டிருக்கக் கூடாது?

மோடி: நான் என்ன சொல்ல வேண்டுமோ அதையெல்லாம் அந்த நேரத்திலேயே சொல்லிவிட்டேன். எனது பழைய அறிக்கைகளை தேடிப்பாருங்கள்.

கரண்: திரும்ப அதைச் சொல்லலாமே!

மோடி: அவசியமில்லை! 2007 தேர்தலைப் பற்றி நான் நிறைய பேச வேண்டியுள்ளது.

கரண்: ஆக, அதை மீண்டும் சொல்லாததன் மூலம்,உங்கள் அறிக்கையை மக்களை மீண்டும் கேட்கவிடாததன் மூலம், உங்கள் மீதான பிம்பம் தொடர அனுமதிக்கிறீர்கள். அதை மாற்றுவது உங்கள் கையில்தான் உள்ளது.

மோடி: நான் ஓய்வெடுக்க வேண்டும்; குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?

கரண்: தண்ணீர் ப்ளீஸ்...!

(இந்த இடத்தில் கரண் தாப்பரிடமிருந்து பார்வையை விலக்கிக் கொண்டு, வேறு பக்கம் பார்க்கிறார் மோடி. அப்போது அவர் முகத்தில் தெரிகிறது பாருங்கள் அப்பட்டமான குற்ற உணர்ச்சி! வெல்டன் கரண்!!!)

Modi: Dosti bani rahe.bas. I'll be happy. You came here. I am happy and thankful to you. I can't do this interview. It's okay your things are. Apne ideas hain aap bolte rahiye aap karte rahiye. 3-4 questions I've already enjoyed… nahin please.

Karan Thapar: But Modi Sahab..

Narendra Modi: Nahi please, Karan.

Karan Thapar:But Modi saab..

Narendra Modi: Karan dekho main dostana sambhand rakhna chahta hoon, aap usko koshish kariye.

Karan Thapar: Mujhe ek cheez samjhayee sir. I am not talking about doing anything wrong. I am saying why can't you correct your image?

Narendra Modi: This is not the time. Uske liye aap mujhe 2002 mein mile hote 2003 mein mile hote mein sab kar leta.

11 comments:

said...

சாதரணமாகவே கரண் டாப்பர் எல்லாப் பிரபலங்களையும் கண் கலங்க வைப்பவர். அவருக்கு உள்ள சுதந்திரம் மற்றவர்க்கு இல்லை. செய்யும் தொழிலிலும், வகிக்கும் பதவிகளிலும் ஏற்படும் செய்யப்படும் செயல்களுக்கு தார்மீகப் பொறுப்பு ஏற்கலாமே தவிர வேறு ஒன்றுமே செய்ய முடியாது. எடுக்கும் முடிவுகள் அனைத்துமே அந்தந்த சூழ்நிலைகளில் எடுக்கப்பட்டவை. மற்ற சூழ்நிலைகளில் அவை சரியானவையாக இருக்காது.

said...

வெல்கம் பேக் மரைக்கார்ஜி,
பதிவுலக மோடிகளைத் துரத்தும் உங்கள் பதிவுகள் தொடரட்டும்.

said...

பேய்களை துரத்தும் மோடி மஸ்தான்களையே இன்று பேய்களும் துரத்துகின்றதா? விபரம் அறிந்த பேய்கள்தான் போங்கள்!

கூட்டம் கூடி சிறுபான்மை நலிந்த மக்களை கொலை செய்தே ருசி கண்ட இந்த இரத்தம் உறிஞ்சி மோடி பேய்கள் கரண் டாப்பர் போன்ற விபரம் அறிந்த ஆண்களை களத்தில் தனியாக நேருக்கு நேர் எதிர்க்க திராணியற்ற இழி குணம் கொண்ட அற்ப ஜீவிகள் என நன்றாக காண்பித்து போயிருக்கிறான் இந்த மோடி எனும் சொறி நாய்.

வீரமற்ற கோழையாக அல்பத்தனமான உயிர் வாழ்வு வாழ்வதைவிட, இவன் தூக்குமாட்டிக்கொண்டு தற்கொலை செய்து செத்து தொலையலாம்!

இதற்காக யாரும் ஒப்பாரி வைக்கப்போவதும் இல்லை.

பலபடுகொலைகளை செய்த பின்னும் இன்றும் அவையில் உட்கார்ந்து கருத்து சொல்ல உரிமைகள் கொடுக்க பட்டிருக்கிறது.

கேவலம்! அபத்தம்!

said...

குற்ற உணர்ச்சி கொண்ட மோடியின் அழுத்தமான வேதனையை வீடியோவிலும் தமிழிலும் ஒரு சேர இங்கே படிக்கக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி மரைக்காயர்.

தான் செய்த மனித சுத்திகரிப்புக்கு "மேலிடத்தில்" உச்சிமுகரப்படும் இவர் இதுநாள் வரை இழைத்த கொடுமைகளுக்கு மக்கள் மன்றம் முன் இவர் தப்பித்து விட்டதுபோல் தோன்றினாலும், இறைவனிடம் இருந்து தப்பமுடியாது.

said...

//cheena (சீனா) said...
..செய்யும் தொழிலிலும், வகிக்கும் பதவிகளிலும் ஏற்படும் செய்யப்படும் செயல்களுக்கு தார்மீகப் பொறுப்பு ஏற்கலாமே தவிர வேறு ஒன்றுமே செய்ய முடியாது...//

பின்னூட்டத்திற்கு நன்றி சீனா. ரயில் விபத்து போன்ற எதிர்பாரா நிகழ்வுகளுக்குக்கூட தார்மீக பொறுப்பேற்று அமைச்சர்கள் பதவி விலகிய முன்னுதாரணங்கள் இந்தியாவில் உண்டு. ஆனால், குஜராத் வன்முறை ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்பதுதான் பலரின் கணிப்பு. இதற்க்கு தார்மீக பொறுப்பேற்கக் கூட மோடி முன்வரவில்லை.

ஆதரவற்ற குழந்தைகளும் அப்பாவி பெண்களும் எரித்துக் கொல்லப் பட்டுக் கொண்டிருந்தபோது வேறு பக்கத்தில் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தவன் நீரோ மன்னன். அதற்காகவே இன்றளவும் அவன் வரலாற்றில் நினைவுகூரப் படுகிறான். மோடியும் தன் பங்கிற்கு குஜராத் கொடூரங்களுக்காக காலம் உள்ள அளவும் நினைவுகூரப் படுவார்.

said...

//சுட்டுவிரல் said...
வெல்கம் பேக் மரைக்கார்ஜி,
பதிவுலக மோடிகளைத் துரத்தும் உங்கள் பதிவுகள் தொடரட்டும்.//

பின்னூட்டத்திற்கு நன்றி சுட்டுவிரல்.

said...

//மாசிலா said...
பேய்களை துரத்தும் மோடி மஸ்தான்களையே இன்று பேய்களும் துரத்துகின்றதா? விபரம் அறிந்த பேய்கள்தான் போங்கள்!//

மாசிலா, உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

said...

//அபூ ஸாலிஹா said...
..இவர் இதுநாள் வரை இழைத்த கொடுமைகளுக்கு மக்கள் மன்றம் முன் இவர் தப்பித்து விட்டதுபோல் தோன்றினாலும், இறைவனிடம் இருந்து தப்பமுடியாது.//

நன்று சொன்னீர்கள் அபூ ஸாலிஹா. இவரால் மக்கள் மன்றத்தின் கேள்விக்கணைகளையும் எதிர் கொள்ள முடியாது என்பதைத்தான் கரண் தாப்பர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

Anonymous said...

Saturday, October 27, 2007
தெஹல்கா ஆபரேஷன்: டிவி சானல்கள் இருட்டடிப்பு!
தெஹல்கா ஆபரேஷன்: டிவி சானல்கள் இருட்டடிப்பு!

அகமதாபாத்: குஜராத் கலவரம் குறித்த தெஹல்கா பத்திரிக்கையின் ஸ்டிங் ஆபரேஷன் குறித்த செய்தியை ஒளிபரப்பிய ஆங்கில-இந்தி சேனல்களை அம் மாநில அரசு இருட்டடிப்பு செய்துள்ளது.குஜராத் கலவரம் குறித்த பல பரபரப்புத் தகவல்களுடன் கூடிய ஸ்டிங் ஆபரேஷனை தெஹல்கா இதழ் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த ஆபரேசனை தெஹல்காவுடன் இணைந்து நடத்திய இந்தியா டுடேவின் ஹெட்லைன்ஸ் டுடே டிவி மற்றும் அதன் இந்தி டிவியான ஆஜ் தக் ஆகியவையும் நேற்று முதல் குஜராத் முழுவதும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.அதே போல இந்த செய்திகளை வெளியிட்ட சிஎன்என்-ஐபிஎன், டிவி 18 ஆகிய டிவிக்களின் ஒளிபரப்பும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.செய்திகள் இல்லாத பிற சானல்கள் மட்டும் தெரிந்தன.சர்ச்சைக்குரிய செய்திகள், குறிப்பாக மோடிக்கு எதிரான செய்திகள் வந்தால், உடனடியாக அந்த சேனல்களை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கட் செய்து விடுவது குஜராத்தில் வழக்கமாக உள்ளது.சமீபத்தில் கரண் தாப்பர் நரேந்திர மோடியை பேட்டி கண்டபோது கலவரம் குறித்து கேட்க கோபமடைந்த மோடி பாதியில் எழுந்து சென்றுவிட்டார். அந்தப் பேட்டி ஒளிபரப்பானபோதும் அந்த சேனலின் ஒளிபரப்பு துண்டிக்கப்பட்டது.குஜராத்தில் சிட்டி கேபிள் மற்றும் அந்தரிக்ஷ் என இரு பெரிய கேபிள் டிவி நிறுவனங்கள் உள்ளன. இவைதான் குஜராத் முழுவதும் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களைக் கட்டுப்படுத்துகின்றன.சேனல்கள் தெரியாதது குறித்து அந்த நிறுவனங்கள் கூறுகையில், 'தொழில்நுட்பக் கோளாறு' காரணமாக அந்த சேனல்களை காட்ட முடியாமல் போனதாக கூறியுள்ளனர்.
thanks; satrumun

said...

மோடியின் ராம ராஜ்ஜியம்.

சில நேரங்களில் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி முடிக்க வார்த்தைகளைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. ஆயிரக்கணக்கான கட்டுரைகள் இந்துத்துவ பாசிஸ்டுகளை கண்டித்தும் அம்பலப்படுத்தியும் எழுதப்பட்டிருக்கும்.. ஆனாலும் உண்மைகளை ஒவ்வொரு முறை நேரடியாக பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வார்த்தைகள் செத்துப் போகிறது. இதை எழுதும் போதோ கைகள் நடுங்குகிறது. இந்த பாசிஸ்ட் நாய்களின் குடலை உருவும் வாய்ப்புக் கிடைக்காதா என்று ஆற்றாமையில் தொண்டை விம்முகிறது.

இந்த நாய்களைப் பாதுகாத்து நிற்கும் இந்த நீதி மன்றங்களையும், அரசு இயந்திரத்தையும் நொறுக்கித் தள்ள முடியவில்லை இன்னும் என்கிற உண்மையால் வெட்கம் வருகிறது.

எல்லோருக்கும் தெரியும் நரேந்திர மோடி என்னும் கொலைகாரன் இரண்டாயிரத்தியிரண்டில் எப்படியெல்லாம் முஸ்லிம் மக்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தான் என்று. எத்தனையோ கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டது. எத்தனையோ முறை காறித்துப்பியாகி விட்டது.

ஆனால் நம்மால் இது மட்டும் தான் முடிந்திருக்கிறது என்பது எத்தனைக் குறைவானதொன்று என்பது நேற்று தெகல்கா பத்திரிக்கை குஜராத்தின் கொலைகாரர்களின் பெருமிதம் ததும்பும் பேச்சுக்களை அம்பலத்திற்கு கொண்டுவந்தபோது புரிந்தது.

அந்தக் கொலைகள் வெறும் ஆத்திரத்திலோ சொந்த விவகாரங்களுக்காகவோ நடத்தப்பட்ட கொலைகள் அல்ல. அது ஒரு இன அழிப்பு! நேற்றுக் காண நேர்ந்த வீடியோக் காட்சி ஒன்றில் இந்துத்துவ வெறியன் ஒருவன் எப்படி கர்பவதியான ஒரு முஸ்லிம் பெண்மணியின் வயிற்றைக் கிழித்து இன்னும் உலகத்தைக் கூட காணாமல் உறங்கிக் கிடந்த கருவை வெளியே எடுத்து கிழித்து எறிந்தோம் என்று சொன்னதைக் கேட்ட போது இந்த பாசிஸ்டுகளையும் இவர்கள் இந்த முறையில் அமைக்கப் போவதாய் அறிவித்திருக்கும் இராம ராஜ்ஜியத்தையும் இவர்கள் நாயகனான இராமனையும் இவர்கள் காட்டிய கொடூரத்தைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு கொடூரத்தைக் காட்டி எதிர்த்தழிக்க வேண்டியதன் அவசியம் மண்டையில் உறைக்கிறது.

தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸைச் சேர்ந்த ஒரு வயதான முஸ்லிம் பிரமுகரின் வீட்டுக்குள் அடைக்கலம் புகுந்துள்ளனர் சில முஸ்லிம்கள். அந்த வீட்டை நாலாபுறமும் இருந்து சுற்றி வளைத்துக் கொண்ட இந்து வெறியர்கள், சுற்றிலும் தீ மூட்டி இருக்கிறார்கள். அந்தப் பிரமுகர் “வேண்டுமானால் பணம் கொடுக்கிறேன். தயவு செய்து எங்களைக் கொல்ல வேண்டாம்” என்று கெஞ்சி இருக்கிறார். “சரி பணத்தைக் கொடு விட்டு விடுகிறோம்” என்று கூறி வெளியே வருமாறு அழைத்திருக்கின்றனர். அவர் வெளியே வந்ததும் ஒருவன் அவரை உதைத்துக் கீழே தள்ளி இருக்கிறான். ஒருவன் அவர் கால்களை வெட்டியிருக்கிறான். நான்கைந்து பேர் சேர்ந்து அவரை தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள். ஒருவன் அவன் இரண்டு கைகளையும் வாளால் துண்டித்திருக்கிறான். பின்னர் அவருடைய பிறப்புறுப்பு அறுத்தெறியப்பட்டிருக்கிறது…. கடைசியில் அவரை உயிரோடு எரித்துக் கொன்றிருக்கிறார்கள். இத்தனையையும் செய்தவர்கள், தெகல்காவின் காண்டிட் காமெராவின் முன் மிகவும் பெருமிதமாகச் சொல்லிப் பூரித்துப் போகிறார்கள்.

ஒருவன் தன்னுடைய மனைவியை அருகில் வைத்துக் கொண்டு சொல்கிறான், “முஸ்லிம் பெண்கள் பழங்களைப் போன்று இருந்தார்கள்… நாங்களெல்லாம் சுவைத்தோம்… வேண்டுமானால் வி.ஹெச்.பி ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களைக் கேட்டுப் பாருங்களேன்; அவர்களும் கூடத்தான் சுவைத்தார்கள். இதோ என் எதிரே சாமிப் படம் இருக்கிறது, என் அருகே என் மனைவி இருக்கிறாள்.. நான் பொய் சொல்ல மாட்டேன்; நானும் கூட ஒருத்தியை சுவைத்தேன்.. பின் அவளைக் கொன்றேன்” இவர்களுக்கு நல்ல சாவு வருமா? இவர்கள் இன்னும் உயிரோடு அலைவது என்பது மானமும் ரோஷமும் உள்ள நாகரீக மனிதன் எவனால் பொருத்துக் கொண்டிருக்க முடியும்? இவர்கள் இந்து ராஷ்டிரம் அமைக்கப் போகும் முறை இது தான்.

இதோ இது தான் ராம ராஜ்ஜியம்! இதைத்தான் இந்துத்துவ இயக்கங்கள் அமைக்கப்போவதாக சொல்கிறார்கள். இவர்களின் நாயகன் தான் ராமன். இவர்களைத்தான் தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆதரிக்கிறாள். இவர்களைத்தான் ஒரு மாநிலத்தின் அத்துனை அரசு இயந்திரமும், அரசாங்கமும் பொத்திப் பொத்திப் பாதுகாத்தது. இவர்களில் ஒருவனான பாபு பஜ்ரங்கி என்பவனுக்குத் தான் நரேந்திர மோடி மவுண்ட் அபு என்னும் இடத்தில் இருக்கும் குஜராத்தி பவனில் ஐந்து மாதம் அடைக்கலமும் கொடுத்து, பின்னர் மூன்று நீதிபதிகளை மாற்றி விடுதலை செய்வித்தான். மேலே விவரிக்கப்பட்டிருக்கும் சம்பவங்கள் நூறில் ஒரு சதவீதம் கூடக் கிடையாது. மேற்கொண்டு விவரிக்க எனக்கு மனதிடமும் கிடையாது.. ஆனால் இதைத்தான் இந்துக்களின் பதிலடி என்று அன்றைக்கு ஜெயலலிதா சொன்னதோடு மோடியை ஆதரித்து அறிக்கையும் விடுத்தாள்!

ஒட்டுமொத்த கொலைகளையும் பின்னிருந்து இயக்கியது மோடி. அத்தனைக் கொலைகளையும் மூடி மறைத்தது அம்மாநிலத்தின் அரசு இயந்திரங்களான நீதித்துறை, காவல்துறை. பொய் சாட்சிகளை உருவாக்கியது அரசு வழக்கறிஞர்கள்.. அதனை ஊக்குவித்தது நீதிபதிகள். தெளிவாகத் தெரிகிறது இந்த அரசு இயந்திரங்கள் யாருக்கானது என்று. ஒழித்துக்கட்டப்பட வேண்டியது பாஜாகா ஆர்.எஸ்.எஸ் போன்ற பாசிஸ்டுகள் மட்டுமல்ல; மாறாக இவர்களுக்கு இந்த தைரியம் உண்டாவதற்குக் மூல காரணமான அரசு இயந்திரமும் தான்!

மக்களுக்கான நீதியை இந்த அமைப்புக்குள் தேடுவது எப்பேர்பட்ட மடத்தனம் என்பதை நேற்றுப் பார்த்த காட்சிகள் உணர்த்துகிறது. உயிரைக்காப்பாற்றிக் கொள்ள மறைந்திருக்கும் முஸ்லிம் சகோதரர்களை வி.ஹெச்.பியினருக்கு அடையாளம் காட்டிக் கொடுத்து ஆள்காட்டி வேலை செய்தது காவல் துறை. இவர்களைத் தான் நாம் இன்னும் நாம் நம்பப் போகிறோமா? “நீதி தேவைதையின்” முன்னே குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டிய அரசு வக்கீலும், நீதிபதியும் தான் பொய் சாட்சிகளைத் தயார்படுத்தியது.. இவர்களைத் தான் நாம் நம்பப் போகிறோமா?

இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கான தண்டனையை இந்திய அரசு அமைப்பு கொடுக்காது. அதற்கான அருகதையோ யோக்கியதையோ அதற்குக் கிடையாது. கோவை குண்டு வெடிப்புக்காக முஸ்லிம்களுக்கு தண்டனை வழங்கிய அதே நீதித்துறை, அதற்கு சில மாதங்கள் முன்பு நடந்த நவம்பர் கலவரத்திற்குக் காரணமான பார்ப்பனத் பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு இதே குஜராத் பாணியில் எங்கேயெல்லாம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள், எங்கேயெல்லாம் அவர்களின் கடைகள் இருக்கின்றன என்பதை காட்டிக் கொடுத்து உதவிய காவல் துறையையும் ஏன் தண்டிக்கவில்லை?

அவர்கள் தண்டிக்க மாட்டார்கள். தண்டிக்கவும் முடியாது. இந்திய ஆளும் வர்கம் என்பது பார்ப்பன பயங்கரவாதிகளுக்குக் கொட்டை தாங்கும் வர்க்கம் என்பதைக் கண் முன்னாள் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது நேற்றைய தெகல்கா வீடியோக்கள்.

ஒரே நம்பிக்கை மக்கள் தான்! உழைக்கும் மக்கள் தான் இவர்களுக்கான தண்டனையை, இவர்களுக்கான தீர்ப்பை வழங்குவார்கள். இவர்கள் சொறி நாயைப் போல தெருவில் கல்லாலேயே அடித்துக் கொல்லப்பட வேண்டியவர்கள். அதில் முதல் கல்லை நக்சல்பாரிகளே வீசுவார்கள்!

நன்றி: கார்கி KARGIPAGES

said...

மோடி இருக்க வேண்டிய இடம் தூக்குமேடை

தெஹல்கா தோலுரித்துக் காட்டிய குஜராத் கலவர உண்மைகள் குறித்து ?

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் (அது ஒரு விபத்து என்று முடிவான வேறு விஷயம்) நடந்து முடிந்தவுடன் முஸ்லிம்களைப் பழி வாங்கும் திட்டம் அங்கிருந்த மத வெறியர்களிடம் தோன்றிவிட்டது. அவர்களுக்குத் தேவையெல்லாம் தலைவர் மோடியின் கண்ணசைப்புத்தான்.

வந்தார் மோடி. போலீஸ அழத்து அவர்களை ‘கை கட்டி வாய் பொத்தி வேடிக்கை பாருங்கள், அல்லது இவர்களோடு சேர்ந்து கொண்டு அவர்களை அடித்துக் கொல்லுங்கள்’ என்று கட்டளையிட்டார்.

இந்திய_ பாகிஸ்தான் பிரிவினைக்கு அப்புறம் மகா கோரமான இனப்படுகொலை ஆரம்பித்த. மனிதக்கறி தின்னும் ஓநாய்கள் வெறியுடன் பாய்ந்தன.

படுகொலைகளை, கற்பழிப்புகளை, உடல் உறுப்புகளை அறுத்து எறிந்ததை எவ்வளவு ஆனந்தத்துடன் தெஹல்காவிடம் சொல்கிறார்கள் அந்தக் கொலைகாரர்கள். (‘ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றக் கிழித்து உள்ளே இருந்த குழந்தையைக் கொன்றேன்’).

ஒரு மாநிலத்தின் சட்ட ஒழுங்கக் காப்பாற்ற வேண்டியவர் ரத்த வெறி பிடித்த வானரப்படையத் தூண்டி விட்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்த கொடூரம் காந்தி பிறந்த மாநிலத்திலா நடந்தது?

எத்தனை பேர் அந்தப் படுகொலைகளை சைக்கோத்தனத்துடன் விவரிக்கிறார்கள். எவ்வளவு மகிழ்ச்சியுடன் அந்த சம்பவங்களை அசை போடுகிறார்கள்.

ஒருவர் சொல்கிறார் ”மோடி மட்டும் முதல்வராக இல்லாதிருந்தால் அவரே முஸ்லிம் பகுதியில் குண்டுகளை வீசியிருப்பார்.’’

கொலைகாரர்களை வீடு தேடி வந்து பாராட்டிய ஒரு வெறிநாய், முதல்வர் பதவியில் இருப்பது வெட்கக்கேடு. இருக்க வேண்டிய இடம் தூக்குமேடை..

"அரசு பதில்" குமுதம் 7.11.2007
http://www.kumudam.com/magazine/Kumudam/2007-11-07/pg15.php