Tuesday, March 25, 2008
Thursday, March 01, 2007
அந்த மூன்று கேள்விகள்!
எனது முந்திய பதிவில் நீலகண்டனுக்கும் அவரது சகாக்களுக்கும் நான் கேட்ட மூன்று கேள்விகள் இவை.
1. இந்து ஒற்றுமை, இந்து தர்மம், என்றெல்லாம் வெட்டி முறிக்கிற உங்களுக்கு எல்லாம் காஞ்சிபுர மடத்தை இழுத்து மூட வேணாம், இப்ப இருக்குற மட அதிபதிகளை விரட்டிவிட்டு ஒரு தலித்தை சங்கராச்சியாரா நியமிக்கணும்னு கோரிக்கை எழுப்பவாவது வக்கு இருக்கிறதா?
2. RSS கூட்டத்துக்கு தலைவரா நீலநிற கண்களை உடைய ஒரு 'சித்பவன்' பிராமணர் மட்டும்தான் வரமுடியுமாமே? ஏன் அப்படி? சித்பவன் பிராமணர்கள் என்றால் யார்? பிராமணர்களிலேயே இவங்க உசத்தியா? RSS கூட்டத்திற்கு யாராவது ஓரு தலித் இதுவரை தலைவரா வந்திருக்கிறாரா? இல்லையென்றால் ஏன்?
3. ஏமாறதவன் என்பவர் சொல்கிறார், "நான் நம் இணைய இஸ்லாமிய சகோதரர்களை கெஞ்சி கேட்பது இதுதான். அறியாமல் நீங்கள் உங்கள் வருங்கால சந்ததிகளையும் இந்த படுகுழியில் தள்ளாதீர்கள்." இவர் தன் வருங்கால சந்ததிகளை எந்த படுகுழியில் தள்ளியிருக்கிறார்? அது இஸ்லாத்தை விட எந்த வகையில் உயர்ந்தது? இவரோட கொள்கை வெளியில கவுரவமா சொல்லிக்கிற மாதிரி கொள்கையா இருந்தா தைரியமா அதைப் பத்தி சொல்லலாமே?
ஜோரா உங்க ஜல்லிகளை கொண்டு வந்து கொட்டுங்க பார்ப்போம்! என்று அழைப்பு விடுத்திருந்தும் நீலகண்டனிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. ஜல்லி ஸ்டாக் தீர்ந்து விட்டது போலும்! ஒரு கவன ஈர்ப்பு முயற்சியாக இக்கேள்விகளை மறுபதிவு செய்கிறேன்.
இதில் 'உங்கள் வருங்கால சந்ததிகளையும் இந்த படுகுழியில் தள்ளாதீர்கள்' என்று இணைய இஸ்லாமிய நண்பர்களை கெஞ்சிக் கேட்ட ஏமாறாதவன் என்பவர் மட்டும் 'இவர் எந்தப் படுகுழியில் கிடக்கிறார்?' என்ற நமது 3-வது கேள்விக்கு பதிலளிக்க ரொம்பவே அசிங்கப் பட்டுக் கொண்டு, கடைசியில் தான் எந்தப் போக்கிடமும் இல்லாத அனாதை என்று சமாளித்திருக்கிறார். இவர் தனது சந்ததிகளையும் அப்படியே அலைய விடப்போகிறாரா என்பது தெரியவில்லை. தனது இருப்பிடம் இன்னது என்று சொல்ல முடியாத இந்த நபர் இஸ்லாமிய நண்பர்களையும் தன்னைப் போலவே பரதேசிகளாகும்படி அழைப்பு விடுப்பதை வேடிக்கை என்பதா? வேதனை என்பதா?
'எல்லா மதங்களும் பொய்' என்று சொல்லியிருக்கும் ஏமாறாதவனின் சார்பாகவும் எனது முதல் கேள்வியை நீலகண்டன் அவர்களிடம் சமர்ப்பிக்கிறேன். இதற்கு நேர்மையான பதிலை தருவார் என்று எதிர்பார்க்கிறேன்.
சவூதி அரேபியாவின் மன்னராட்சி பற்றி தமிழ் முஸ்லிம்களிடம் கேள்வி கேட்ட நண்பர் நீலகண்டன், அவர் அங்கத்தினராக இருக்கும் RSS பற்றிய எனது இரண்டாவது கேள்விக்கும் நேர்மையான விளக்கம் அளிப்பார் என்று நம்புகிறேன்.
Posted by
மரைக்காயர்
at
2:37 PM
5
comments
Labels: இந்துத்துவா, விவாதங்கள்
Tuesday, February 06, 2007
HINDHU அவர்களின் பதில்!
எனது முந்திய பதிவுக்கு HINDHU அவர்கள் பதிலளித்திருக்கிறார்கள். அவருக்கு என் நன்றி.
அன்பு மரைக்காயர் ஐயா உங்களுக்கு எனது நன்றிகள் தாங்கள் நினைப்பது போல் எழில் ஐயா அவர்கள் இந்து மதம் பற்றி அதிகம் அறியாதவர் அல்ல சொல்லப்போனால் நான் தான் அதிகம்எழில் ஐயாவை நான் அறிந்தவனல்ல. ஆனால் இருபத்தி ஒரு வயதே நிரம்பிய உங்களின் எழுத்துக்களில் தெரியும் பெருந்தன்மையும் கண்ணியமும் எழில் அவர்களின் எழுத்துக்களில் தெரிவதில்லை. அதில் தெரிவதெல்லாம் இஸ்லாமிய துவேஷம், காழ்ப்புணர்வு, வெறுப்பு மட்டுமே! குறை குடம் தளும்பத்தானே செய்யும்!
அறியாதவனாய் இருக்க வேண்டும் ஏனென்றால் நான் ஒன்றும் அதிகம் கற்றவன் அல்ல எனக்கு இன்னும் இருபத்தி ஒரு வயது கூட பூர்த்தியாகவில்லை.
என்வகையில் சொல்லப்போனால் எழில் அவர்கள் தெரிவித்த கருத்துக்களை கொஞ்சம் எளிய நடையில் சொன்னதாகவே படுகிறது. எனக்கு என்ன வருத்தம் என்னவென்றால் தாங்கள் இந்து
மதத்தினது உட்கருத்துக்களை புரிந்து கொள்ளாமல் தவறான அபிப்பிராயத்துடன் விமர்சிக்க முற்படுவதே ஆகும்.
இஸ்லாம் மார்க்கத்தின் உட்கருத்துக்களை புரிந்து கொள்ளாமல் தவறான அபிப்ராயத்துடன் எழில் விதண்டாவாதம் செய்ததால்தான் நான் இந்து மதத்தை விமர்சிக்க நேர்ந்தது. இன்னொரு மார்க்கத்தைப் பற்றி விமர்சனம் செய்யும் எழிலுக்கு தனது மதத்தைப் பற்றிய கேள்விகளுக்கு ஆதாரங்களுடன் பதிலளிக்க ஏன் முடியவில்லை? அவரது கருத்துப்படி ஒரு இஸ்லாமிய கொள்கை தவறானது என்றால் அதற்கு எழிலின் இந்து மதம் என்ன தீர்வு வைத்திருக்கிறது? 'இது தவறு' என்று சொல்ல முடிந்தவர் 'எது சரி?' என்பதையும் சொல்ல வேண்டும்தானே?
//எனது பதிவுகள் சில நேரங்களில் உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் மனதை புண்படுத்தியிருக்கலாம். அதற்காக நான் வருந்துகிறேன். ஆனால் இஸ்லாமிய துவேஷ பதிவுகள் வந்துக் கொண்டிருக்கும் வரை அவற்றுக்கு பதில் கொடுக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன்.//இஸ்லாமிய கொள்கைகள் தவறு என்று சொன்ன எழில் அவர்கள் முஸ்லிம்களை இந்து மதத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். இப்படி அழைப்பு விடுப்பதில் ஒரு தவறுமில்லை. ஆனால் இந்து மதத்திற்கு அழைத்த நண்பர் 'எந்த இந்து மதத்தை சொல்கிறீர்கள்?' என்று நாம் கேட்டால் தெளிவாக விளக்கம் கொடுக்க வேண்டாமா? ஆனால் அந்தக் கேள்விகள் உங்களைப் போன்றவர்களுக்கு நான் இந்து மதத்தை சாடுவது போல தெரிகின்றன. 'இந்து மதம் பற்றி இது போல கேள்விகள் எழுவதற்கு நான்தான் காரணம்' என்று பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டிய எழில் அவர்கள், இப்போது விலகி ஓடுகிறார்.
எனக்கு எந்த மனவருத்தமும் கிடையாது ஆனால் தாங்களும், தங்களைப் போன்றவர்களும் இந்து மதத்தைப்பற்றி செய்யப்படும் விமர்சனங்கள் தவறான கருத்துப் புரிதல்களுடன் மேற் கொள்ளப்படுவதால் தான் நான் வருந்துகிறேன். தங்களின் மீதான மதத் துவேஷப்பதிவுகளுக்கு தாங்கள் அவரவர்களைத்தான் சாட வேண்டுமே ஒழிய இந்துமதத்தை அல்ல. அவர்கள் தவறாக விமர்சித்தால் தாங்களும் அவர்களைப்போலவே செய்ய வேண்டுமா என்ன?
தாங்கள் சொல்வதைப்போல் பல இஸ்லாமியர்களின் பதிவுகள் இந்துமதத்தை கேவலப்படுத்துவதாக காணப்படுகின்றன நான் அவற்றிற்கும் மறுத்து பதிவெழுத வேண்டும். தாங்கள் எனக்கும்
இஸ்லாமிய துவேஷம் என்று கருத வேண்டாம். ஏனென்றால் இந்து மதமெனது தாய் எனது தாயின் குணங்கள் எனக்குத்தான் தெரியும் அக்குணங்களை அயல் வீட்டுக்காரர் தவறான புரிதல்களுடன் விமர்சிக்க முற்படுவாராயின் அது தவறானது என்று விளக்கும் கடமையும், அதேநேரம் அயல் வீட்டுக்காரரின் தாயை பழிக்கும் படியாக அமையக்கூடாது என்ற பொறுப்பும், கண்ணியமும் எனக்கு இருக்கிறது.
'இந்து மதமெனது தாய்' என்கிற உங்கள் மதப்பற்றை மதிக்கிறேன். இந்து மதத்தைப் பற்றி நன்கு புரிதலுள்ள உங்களைப் போன்றவர்கள் அதிகம் எழுத வேண்டும் என்று விரும்புகிறேன். இஸ்லாமியர்கள் யாரேனும் அனாவசியமாக இந்து மதத்தை கேவலப்படுத்தி எழுதினார்களென்றால் அது கண்டிக்கத் தக்கது. என்னுடையை பதிவுகளிலேயே கூட சில முஸ்லிம் சகோதரர்கள் என்னை கண்டித்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஏனென்றால் பிற மத கடவுள்களை நிந்திக்க வேண்டாம் என்று இஸ்லாம் கட்டளையிட்டிருக்கிறது. பிற மதங்களின் விஷயத்தில் வரம்பு மீற வேண்டாம் என்றும் எச்சரிக்கிறது. இஸ்லாம் பற்றி எடுத்துச் சொல்வதுதான் ஒரு முஸ்லிமின் கடமை.
ஆனால் ஒரு முஸ்லிம் பதிவரை மற்ற முஸ்லிம்கள் கண்டிப்பதைப் போல எழில், நேசகுமார் போன்றவர்களை பிற இந்துக்கள் கண்டிப்பதை நான் பார்க்கவில்லை. 'நமக்கேன் வம்பு' என்று மற்ற இந்துக்கள் பேசாமல் இருப்பதை எழில் போன்றவர்கள் மவுன அங்கீகாரமாக, ஆதரவாக எடுத்துக் கொள்கிறார்கள் போலிருக்கிறது. அதனால்தான் சொல்கிறேன், உங்களைப்போல இந்துமத பற்றாளர்கள் எழில் போன்றவர்கள் வீண்வம்பை விலைக்கு வாங்கும்போது மவுனமாக இருக்காமல் கண்டிக்க முன்வர வேண்டும்.
ஆனால் இஸ்லாம் பற்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் பல பதிவர்கள் தவறான விமர்சனங்களை முன்வைப்பதை நான் பார்த்திருக்கிறேன். இவர்கள் நான் முன்பு சொன்னது போல தங்கள் மதங்களின் மீது நம்பிக்கை இழந்தவர்கள். இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தினால் மட்டும்தான் தனது மதத்தை கொஞ்சமாவது காப்பாற்ற முடியும் என்று இவர்கள் நம்புகிறார்கள். இஸ்லாத்தின் கொள்கைகள் தவறு என்று சொல்லத் தெரிந்த இவர்களுக்கு அதற்கு மாற்றுக் கருத்து அவர்களின் மதத்தில் இருக்கிறதா என்றால் பதில் சொல்லத் தெரியாது.
இந்த இஸ்லாமிய துவேஷ பதிவர்களுக்கு பல முஸ்லிம் பதிவர்கள் தெளிவாக பலமுறை விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அதற்கெல்லாம் அவர்களின் துவேஷ மனங்கள் சமாதானமடையாது. மேலும் மேலும் கேள்விகள், நக்கல் வசனங்கள், துவேஷ வலைப்பக்கங்களிலிருந்து copy & Paste-கள், வரலாற்றுப் புரட்டுகள் என பல வகை தாக்குதல்களை முஸ்லிம்கள் சந்தித்திருக்கிறார்கள். அதனால்தான் நான் எதிர்க்கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன். 'இஸ்லாமிய கொள்கை தவறு என்றால் அதற்கு உங்கள் மதத்தில் மாற்றுக் கருத்து என்ன இருக்கிறது? ஆதாரத்துடன் விளக்க முடியுமா? இஸ்லாமிய கொள்கைகள் சீர்திருத்தப்பட வேண்டும் என்று சொல்லுவதற்கு முன் உங்கள் மதத்தில் உள்ள கேவலமான கொள்கைகளை சீர்திருத்தி முடித்து விட்டீர்களா?' இதைத்தான் நான் கேட்கிறேன்.
இஸ்லாம் மீது தவறான கருத்துக்கள் தெறிவிக்கப்படுமாயின் தாங்கள் மறுக்கலாம், ஆனால் அவை மிகவும் கீழ்தரமான சொற்பிரயோகங்களால் மேற்கொள்ளப்படக்கூடாது தங்களின்கீழ்த்தரமான சொற்பிரயோகங்களில் எனக்கும் நம்பிக்கை இல்லை. ஆனால் என்னை எதிர்ப்பவர்கள் இதற்கு எதிர்மாறான நம்பிக்கையில் இருக்கிறார்கள். எனக்கு வரும் பல பின்னூட்டங்களை நான் அனுமதிப்பதில்லை. அதையெல்லாம் பார்த்தீர்களென்றால் வன்முறையை யார் வளர்க்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
பதிவுகளில் இது இல்லை ஆனாலும் வேறும் பலரின் பதிவுகளில் காணப்படுகிறது. இவ்வாறான விடயங்கள் முறையான கருத்துப் பகிர்வுக்கு வழிவகுக்காது மாறாக வன்முறையையே வளர்க்கும்.
தாங்கள் ஒருபதிவில் "நாலு பதிவெழுதியும் இதுதான் இந்துமதம் என்று தெரிவிக்க முடியவில்லை" என்று கூறியிருந்தீர்கள் நாலு பதிவில்லை நாலாயிரம் கோடி பதிவெழுதினாலும் இந்துமதத்தின் பேருண்மைகளை எளிதில் விளக்கி விட முடியாது.உண்மைதான். இதை நான் ஒப்புக் கொள்கிறேன். இஸ்லாத்தின் பேருண்மைகளைப் பற்றி ஓரிரு பதிவுகளை படித்துவிட்டு மட்டும் முடிவு செய்ய முடியாது என்பதையும் தங்களின் அரைகுறை அறிவை வைத்துக் கொண்டு இஸ்லாத்தைப் பற்றி 'அது சரியல்ல, இது தவறு' என்றெல்லாம் 'கருத்து' சொல்வது அடிமுட்டாள்தனம் என்பதையும் எழில் போன்றவர்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் நான் அப்படி சொல்லியிருந்தேன்.
நான்கூட பதிவை தொடங்கும் போது எந்த மதத்தையும் விமர்சிக்க கூடாது என்றும், எனது பதிவு முற்றிலுமாக இந்துமதத்தை விளக்க மட்டுமே பயன் பட வேண்டும் என்றும் தான் கருதினேன். ஆனால் இன்று தங்களின் பதிவுகளுக்கு எதிர்ப்பதிவு எழுதும் நிலைக்கு வந்துவிட்டது. அத்துடன் தங்களின் ஏனைய இந்துமதம் பற்றிய பதிவுகளுக்கு என்னிடம் இருந்து எதிர்ப்பதிவு வந்தே தீரும். ஆயினும் நமது கருத்துக்களே மோதவேண்டும், தவிர நாம் அல்ல என்பதையும் மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் சொல்வதைப்போல் நானும் இந்துமதம் பற்றிய தவறான கருத்துக்களை தாங்கி வரும் பதிவுகளுக்கு என்னிடம் இருந்தும் எதிர்ப்பதிவு வரும் என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன். என்வகையில் தங்கள் கருத்துக்களே எனக்கு எதிர் என்பதையும் தாங்கள் அல்ல என்பதையும், தாங்களும் இப்படியே கருத வேண்டும் என்றும் கருதுகிறேன்.நன்றி
தாராளமாக எழுதுங்கள். உங்களைப் போல இந்து மதப் பற்றாளர்கள் இந்து மதத்தை பற்றி அதிகம் எழுத வேண்டும் என்பதைத்தான் நானும் விரும்புகிறேன். ஆனால் நீங்கள் இந்து மதத்தைப் பற்றி எழுதுவதால் எழில் போன்றவர்கள் பொறுப்பிலிருந்து விலகி விட்டதாக பொருளல்ல. அவர் இஸ்லாத்தை பற்றி சொன்ன கருத்துகளுக்கு பதிலாகத்தான் நான் இந்து மதத்தைப் பற்றிய கேள்விகளை அவர் முன் வைத்தேன். அதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது.
Posted by
மரைக்காயர்
at
9:29 AM
9
comments
Labels: இந்து மதம், விவாதங்கள்
Friday, February 02, 2007
HINDHU அவர்களுக்கு!
எழில் என்பவரிடம் இந்துமதம் பற்றி நான் கேட்ட சில கேள்விகளுக்கு HINDHU என்ற நண்பர் பதிலளித்திருக்கிறார். அவருக்கு என் நன்றிகள். இந்து மதம் பற்றி நன்கு புரிதலுள்ள இவரைப் போன்றவர்கள் அதிகம் எழுத வேண்டும் என்றும் விரும்புகிறேன். தொடர்ந்து எழுதுங்கள் HINDHU அவர்களே!
//அன்பு மரைக்காயர் ஐயார் அவர்களே தாங்கள் இந்துமதம் பற்றி கொண்டிருக்கும் கருத்து தவறானது. தாங்கள் எழில் ஐயா அவர்களிடம் கேட்ட வினாக்களுக்கு விடையளிக்கிறேன் இந்துமதத்தை பற்றி விளக்கவேண்டியது ஒரு இந்துவின் கடமை..// என்று HINDHU அவர்கள் தம் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
ஐயா, நான் வெளிப்படையாக சொல்கிறேன். எனது பதிவுகள் எல்லாமே ஒரு வகையில் 'பின் வினை' பதிவுகள்தான். இங்கு சில வலைப்பதிவர்கள் இருக்கிறார்கள். தங்களை இந்து மத காவலர்கள் போல காட்டிக் கொள்வார்கள். ஆனால் இந்து மதத்தைப் பற்றி அவர்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது. அவர்களின் பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் இஸ்லாமையும் முஸ்லிம்களையும் தாக்குவதிலேயே குறியாக இருப்பார்கள். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போற பாதை கோணலாயிருக்கு என்று குறை சொன்னானாம். அந்த கதைதான் இவர்களின் கதை!!
TATA நிறுவனம் Corus-ஐ வாங்கியதை சொல்லும் பதிவாக இருந்தாலும் அதிலும் முஸ்லிம்களை தாக்க வேண்டும் இவர்களுக்கு. இந்துத்துவ பயங்கரவாதி பால்தாக்கரேயை கண்டிக்கும் பதிவாக இருந்தாலும் அதிலும் முஸ்லிம்களை தாக்குவார்கள். தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை. முஸ்லிம்களுக்கு ரெண்டு கண்ணும் போக வேண்டும் என்ற நல்லெண்ணம் போலிருக்கு இவர்களுக்கு!
இப்படிப்பட்ட பதிவர்களுக்கு பதில் சொல்வதற்காகத்தான் நான் எழுத ஆரம்பித்தேன். இஸ்லாத்தைப் பற்றியோ, முஸ்லிம்களைப் பற்றியோ குறை சொல்லி பதிவு எழுத இவர்களுக்கெல்லாம் எந்த அருகதையும் கிடையாது என்பதை சுட்டிக் காட்டுவதுதான் எனது பதிவுகளின் நோக்கம்.
எனது பதிவுகள் சில நேரங்களில் உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் மனதை புண்படுத்தியிருக்கலாம். அதற்காக நான் வருந்துகிறேன். ஆனால் இஸ்லாமிய துவேஷ பதிவுகள் வந்துக் கொண்டிருக்கும் வரை அவற்றுக்கு பதில் கொடுக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன்.
இப்படிப்பட்ட பதிவர்களில் ஒருவர்தான் நம் எழில். இந்து மதத்தைப் பற்றிய எனது கேள்விகளே உங்களுக்கெல்லாம் வருத்தம் அளிக்கிறது என்றால், இஸ்லாம் பற்றி எழில் சொன்ன கருத்துக்களை என்னவென்று சொல்வது? இதையெல்லாம் முஸ்லிம்கள் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? //“இறைதூதர் என்ற கருத்தே தவறு என்பது என் கருத்து. அதுவும் இறுதி இறைதூதர் என்ற கருத்து மிக மிகத்தவறு என்பது என் கருத்து.”// என்று சொன்னவர் எழில். இதை சொல்ல இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? இதற்குகூட பல முஸ்லிம் பதிவர்கள் கோபப்படாமல் தெளிவாக பதிலளித்தபிறகும் 'கேஜி படிக்கும் குழந்தைக்குக் கூட புரியும் அளவுக்கு ஒரு அடையாளம் இருப்பவர்தான் இறைத்தூதராக இருக்க முடியும்' என்று விதண்டாவாதம் செய்தவர்தான் இந்த எழில். தான் ரொம்ப லாஜிக்கலாக பேசுவதாக அவருக்கு எண்ணம் போலிருக்கிறது.
இன்னொரு மதத்தைப் பற்றி இப்படி expert opinion கொடுக்கக்கூடிய ஒரு நபர் தனது சொந்த மதத்தை பற்றி அக்குவேறு ஆணிவேறாக தெரிந்து வைத்திருக்க வேண்டாமா? 'இந்து மதம் வாருங்கள்' என்று முஸ்லிம்களை அழைத்துகூட ஒரு பதிவு எழுதினார் இவர். ஆனால் இந்து மதம் பற்றி நான் இவரிடம் கேட்ட கேள்விகளுக்கு இவரால் பதில் சொல்ல முடிந்ததா என்றால் இல்லை. இவரிடம் நான் கேட்ட கேள்விகளுக்கு HINDHU ஐயா நீங்கள் வந்து பதில் சொல்ல வேண்டியதாகி விட்டது. எனக்கு எழில் பதில் சொல்வார், இறைத்தூதர்கள் விஷயத்தில் இவர் கேட்ட 'லாஜிக்கலான' கேள்விகளை நானும் கேட்கலாம் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் இவரால் பதில் சொல்ல முடியவில்லையே? சட்டியில் ஒன்றும் இல்லையா? அகப்பை காலியாகவே வருகிறதே? இந்த காலி அகப்பையை வைத்துக் கொண்டுதானா இவர் இஸ்லாமை கிண்ட வந்தார்?
'இந்து மதம் வாருங்கள்' என்ற இவரது பதிவே கூட இவர் எழுதியது அல்ல. யாரோ ஒருவர் எழுதிக் கொடுத்ததைத்தான் இவர் தனது பதிவில் இட்டிருந்தார். தனது சொந்த மதத்தைப் பற்றி நல்லதாக நாலு வார்த்தை சொல்ல முடியாத, அது பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூட வக்கில்லாத இந்த நபர் இன்னொரு மதத்தைப் பற்றி கருத்து சொல்ல என்ன அருகதை இருக்கிறது? இவரைப் போன்றவர்களால் இவர் சார்ந்திருக்கும் இந்து மதத்திற்குத்தான் இழுக்கு!
இவர்களது நடவடிக்கைகள் வெளிப்படுத்தும் உண்மை என்ன தெரியுமா? 'நம் இந்து மதத்தில் உயர்வாக பேச ஒன்னுமேயில்லை. நாம் எப்பாடு பட்டாலும் அதை தூக்கி நிறுத்த முடியாது. அதனால் இஸ்லாமை தாக்கி அதன் வளர்ச்சியை தடுத்து நிறுத்தினால்தான் நம் மதத்தை ஓரளவுக்காவது காப்பாற்ற முடியும்' என்று இவர்கள் உள்மனதில் நம்புகிறார்கள் போலிருக்கிறது. தங்கள் மதத்தின் மீது அந்த அளவுக்கு நம்பிக்கை இழந்து போயிருக்கிறார்கள் இவர்கள் பாவம். HINDHU ஐயா போன்றவர்கள் எழில் போன்றவர்களிடம் மிக ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். போலிச்சாமியார்கள் போன்ற போலி ஆ'சாமி'கள் இவர்கள். இவர்களால்தான் இந்து மதத்திற்கே களங்கம் ஏற்படுகிறது.
HINDHU அவர்களின் பதிவில் பின்னூட்டமிட்டிருந்த ச.திருமலை அண்ணன் அவர்கள் //மரக்காயர் குரங்கு பிடிக்கக் கிளம்பியதில் எங்களுக்கு எல்லாம் இன்னொரு பிள்ளையார் கிடைத்திருக்கிறார்// என்று குறிப்பிட்டிருந்தார். திருமலை அண்ணன் அவர்கள் பிள்ளையார் பக்தராக இருக்கலாம். அதற்காக அனுமாரை கிண்டலடித்திருக்க வேண்டியதில்லை. :-)
திருமலை ஐயா, 'இதுவரை பிடிக்கக் கருதியது நன்றாகவே பிடிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. இனி, பிடிக்கக் கருதுவதும் நன்றாகவே பிடிக்கப் படும்!'
Posted by
மரைக்காயர்
at
5:15 PM
16
comments
Labels: இந்து மதம், விவாதங்கள்
Monday, January 08, 2007
கட்டுப்படுத்தப் படுவதா இறை?
சகோதரர் எழில் அவர்கள் நாத்திகர்களிடமும் முஸ்லிம்களிடமும் நல்ல பெயர் கிடைக்கும் என்று நினைத்து 'இயேசு என்ற கற்பனை?' என்ற அறிவார்ந்த பதிவு ஒன்றை வைத்து தொடர்ந்து சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருக்கிறார். அவருக்கு நம் வாழ்த்துக்கள்! நல்லாயிருங்க சார்!
இதே எழில்தான் இனிய இஸ்லாமிய சகோதரர்களின் மீது அக்கறை கொண்டு அவர்களை இந்து மதத்திற்கு அழைத்திருந்தார். 'எந்த இந்து மதத்தை சொல்கிறீர்கள்?' என்று நாம் கேட்ட பல கேள்விகளுக்கு இன்னும் அவரிடமிருந்து சரியான பதில் இல்லை என்பதை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.
இந்த பதிவின் பின்னூட்டத்தில் எழில் சொல்கிறார். . "என் தூதரிடம் மட்டும்தான் சொன்னார். அதற்கு பிறகு எங்கும் சொல்லமாட்டார் என்று சொல்வதினாலும்,ஒரே இறைமகன் இவர்தான் என்று சொல்வதாலும் இந்த மதங்களின் அடிபப்டையே மற்ற மதங்களை இழிவு படுத்துவதிலிருந்து ஆரம்பிக்கின்றது. சில வேளைகளில் அப்படி இறையை கட்டுப்படுத்துவது அவர்கள் வைத்திருக்கும் "கட்டற்ற இறை" என்ற இலக்கணத்துக்கே பொருந்தாது என்பதை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது."
முஸ்லிம்களிடம் நல்ல பெயர் கிடைக்கும்(?) என்பதற்காக அவர் இட்ட பதிவில்தான் இந்த பின்னூட்டமும் வந்திருக்கிறது.
கிருஸ்துவம் இயேசு அவர்களை இறைமகன் என்று சொல்வதாலும், இஸ்லாம் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறுதி இறைத்தூதர் என்று சொல்வதாலும் இந்த மதங்கள் மற்ற மதங்களை இழிவு படுத்துகிறதாம். நான் கேட்கிறேன்.. கிருஸ்துவம், இஸ்லாம் இவற்றுக்கெல்லாம் முற்பட்டதுதானே இந்து மதம்? இன்றளவும் யார் யாரையோ நடமாடும் கடவுள்களாக வரித்துக் கொண்டிருக்கும் இந்து மதம் இந்த இருவரையும் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை? அப்படி ஏற்றுக் கொள்ளாததால் இந்த இரண்டு மதங்களையும் இந்து மதம் இழிவு படுத்துகிறதா?
இறை என்பது விளக்கத்திற்கு அப்பாற்பட்டது என்று முன்பு சொன்ன எழில், இஸ்லாம் இறையை கட்டுப் படுத்துகிறது என்கிறார். இஸ்லாம் இறையைப் பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?
'மேலும், நிச்சயமாக இப்பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுதுகோல்களாகவும், கடல் (நீர் முழுதும்) அதனுடன் கூட மற்றும் ஏழு கடல்கள் அதிகமாக்கப்பட்டு (மையாக) இருந்த போதிலும், அல்லாஹ்வின் (புகழ்) வார்த்தைகள் முடிவுறா; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.' (குர்ஆன் - 31:27)
சகோதரர் எழில் அவர்கள் ஒருமுறை குர்ஆன் மொழிபெயர்ப்பை படித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். படித்துப் பார்ப்பதால் என்ன வந்து விடப் போகிறது? இதை படிக்க அன்றும், இன்றும், என்றும் எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது.
இப்படிப்பட்ட இறையை யார் கட்டுப் படுத்துகிறார்கள் தெரியுமா? எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு தகவல் இப்படி சொல்கிறது;
இந்து மத வேதங்களைக் கற்றுணர்ந்து அதில் விற்பன்ன நிலை அடைந்த சஞ்சய் த்விவேதி ஆச்சாரியா என்பவர் இஸ்லாத்தை ஏற்று முஹம்மது அப்துல் முனீம் என பெயர் கொண்டிருக்கிறார். இவர் அஹமது பண்டிட் எனவும் அன்போடு அழைக்கப்படுகிறார்.
பள்ளிப் பருவத்திலேயே சக முஸ்லிம் மாணவன் ஒருவனின் ஐவேளைத் தொழுகைகளைப் பேணுதலுடன் பின்பற்றும் சீரிய ஒழுக்கம் முதலில் இவரைக் கவர்ந்திருக்கிறது. பள்ளி ஆசிரியர்களின் தண்டனைக்கு பயப்படாமல் அந்த முஸ்லிம் மாணவர் தனது தொழுகைகளை பின்பற்றியிருக்கிறார். இது பற்றி அஹமது பண்டிட் அந்த மாணவரிடம் 'பள்ளி நேரம் முடிந்த பிறகு தொழலாமே?' என்று வினவியபோது அவர் சொன்னார், "மன்னியுங்கள் பண்டிட்ஜி, நீங்கள் உங்கள் வீடுகளிலோ அலுவலகங்களிலோ ஒரு சிறிய இடத்தை ஒதுக்கிக் கொடுத்து உங்கள் கடவுளரை கட்டுப் படுத்தி வைத்திருக்கிறீர்கள். ஆனால் முஸ்லிம்களாகிய நாங்கள் அந்த இறைவனால் கட்டுப் படுத்தப் பட்டிருக்கிறோம். குறிப்பிட்ட நேரத்தில் நான் தொழவில்லை என்றால் மறுவுலகில் நான் அதற்கான தண்டனையை பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். அந்தத் தண்டனையோடு ஒப்பிட்டால் இந்த உலகில் எனக்கு கிடைக்கும் தண்டனை ஒன்றுமேயில்லை"
அந்த முஸ்லிம் மாணவரின் இந்த பதில்தான் ஆச்சார்யா சஞ்சய் த்விவேதியை அஹமது பண்டிட் ஆக்கியிருக்கிறது.
இப்போது சொல்லுங்கள், இறையை கட்டுப்படுத்துபவர்கள் யார்? இறைவனால் கட்டுப்படுத்தப் படுபவர்கள் யார்?
இந்த பதிவிலேயே சகோதரர் கால்கரி சிவா அவர்கள் இன்னொரு அறிவார்ந்த பின்னூட்டம் வைத்திருக்கிறார்கள்.
"நம் புராணங்கள் கதை என ஏற்றுக் கொள்ளும் அறிவு நம்மிடம் இருக்கிறது. இறைத்தூதன், இறைமகன் என்பவைகளும் கற்பனைகளே என ஏற்றுக்கொண்டுவிட்டால் ப்ரச்னைகள் இல்லையே. அந்த அறிவு இல்லாதால்தானே இவ்வளவு ப்ரச்னைகளும். "
உங்கள் புராணங்கள் கதை என்றால் மற்றவர்களின் நம்பிக்கைகளும் கதையாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? எவ்வளவு நாளைக்குத்தான் கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று சொல்லிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? கண்ணைத் திறந்து பாருங்கள் சார்!
Posted by
மரைக்காயர்
at
8:58 AM
26
comments
Labels: விவாதங்கள்
Monday, January 01, 2007
எந்த இந்து மதத்தைச் சொல்கிறீர்கள்? - 2ம் பாகம்
சகோதரர் எழில் என்னுடைய 'கதை கதையாம் காரணமாம்' பதிவுக்கு பதில் பதிவு எழுதியிருக்கிறார். அவருக்கு என் நன்றி. என்னுடைய எந்த இந்து மதத்தைச் சொல்கிறீர்கள்? 1ம் பாகத்தில் கேட்ட கேள்விகளுக்கு அவர் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதுவரை மூன்றோ நான்கோ பதிவுகள் அவர் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால் எனது கேள்விகளுக்கு பதில் கிடைத்திருக்கிறதா?
எனது கேள்விகள்:
1. கடவுள் யார்? அல்லது யாவர்?
இந்தக் கேள்விக்கு எழில் சொன்ன பதில்கள்:
கடவுள் யார் என்பது உங்கள் கேள்வியாக இருக்கும்பட்சத்தில் அது தனி கேள்வி. அதற்கான விடையை ஒருவராலும் அளிக்க முடியாது. விண்டவர் கண்டிலர், கண்டவர் விண்டிலர். கடவுள் தன்னிடம் வந்து பேசினார் என்று கூறுபவர்களிடம் கடவுள் பேசவில்லை. இறையை கண்டவர்கள் அதனை பேசமாட்டார்கள். இறை என்பது விளக்கத்துக்கு அப்பாற்பட்டது. விளக்கத்துக்கு அப்பாற் பட்டதுஎன்பதே விளக்கமாகும்போது, விளக்கத்துக்குள்ளும் அடங்கியது.அய்யா, கடவுளை கொண்டு வந்து என் முன்னே நிறுத்துங்கள் என்று நான் கேட்கவில்லை. கடவுளை define பண்ணுங்கள் என்றும் நான் கேட்கவில்லை. இந்து மதத்தினர் வணங்கும் கடவுள்களுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்கள்? அந்தப் பெயரைத்தான் நான் கேட்டேன். அந்த கடவுள்களின் தன்மை என்ன? கடவுள் ஒருவர் என்றால் அதற்கு விளக்கம் தேவையில்லை. பல கடவுள்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் ஒரு கடவுள் மற்றவரிடமிருந்து எப்படி வித்தியாசப் படுகிறார்கள்? இந்தக் கேள்விதான் நான் கேட்டது.
கடவுள் யார் என்ற கேள்விக்கு ஒருவராலும் விடை அளிக்க முடியாது என்றால்,
பன்றி - வராகமூர்த்தி
நாய் - பைரவமூர்த்தி
மாடு - கோமாதா
யானை - கணபதி
சிங்கம் - நரசிம்மாவதாரம்
மீன் - மச்சாவதாரம்
முதலை - கூர்மாவதாரம்
பெண்பித்தன் - கிருஷ்ணாவதாரம்
குரங்கு - அனுமன்
சுடலைப் பித்தன் - சிவன்
ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன் - ஐயப்பன்
பாம்பு- நாகராஜன்
மண்டயோடுமாலை அணிந்து ரத்தம் குடிக்கும் காளி
வீச்சரிவாளுடன் நிற்கும் அய்யனார்
(நன்றி: வணங்காமுடி அய்யா)
இவர்களெல்லாம் யார்? இந்த கடவுள்களை வணங்குபவர்களெல்லாம் இந்துக்கள் இல்லையா? அவர்களின் மதம் இந்து மதம் இல்லையா? அதனால்தான் கேட்கிறேன்,
நீங்கள் எந்த இந்து மதத்தை சொல்கிறீர்கள்?
2. ஆன்மீக வழிகாட்டிகள் யாவர்?
என்ற எனது அடுத்த கேள்விக்கு எழில் சொன்ன பதில்கள்:
அவர்கள் யார் என்றுதான் நான் கேட்டேன். நடைமுறையில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். ஒரு காவி உடை இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும் இந்து மதத்தில் சாமியாராகலாம். சாமியார் என்ற போர்வையில் போதை மருந்து கடத்தலாம், பெண்களை கற்பழிக்கலாம், அடியாள் வைத்து வேண்டாதவனை கொலை செய்யலாம், கருப்பு பணத்திற்கு பாதுகாவலராகலாம். திறமை இருந்தால் செல்வாக்கு வளர்த்துக் கொண்டு அரசியல் பண்ணலாம். அதிலும் Power Politics. இதுபோல போலி (ஆ)சாமிகளிடமிருந்து உங்கள் வீட்டு பெண்களை பாதுகாக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் எழில் சார்? இந்த (ஆ)சாமிகளெல்லாம் இந்துக்கள் இல்லையா? இந்த பெரியவா சின்னவா சொல்ற வியாக்கியானம் எல்லாம் இந்து மதத்துல சேர்த்தி இல்லையா?இந்த வீட்டுக்கு பெரிய மனுஷர்கள் இருக்கிறார்கள். அவர்கள் காலம் காலமாக எழுதி வைத்திருக்கும் பல்வேறு ஆன்மீக புத்தகங்களும் அந்த ஆன்மீக புத்தகங்களிலிருந்து வியாக்கியானம் சொல்லும் கற்றறிந்தவர்களும் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறார்கள்.
நீங்க சொல்ற பெரியவங்க வியாக்கியானம் சொல்றவங்களெல்லாம் வேற எந்த இந்து மதத்தை சேர்ந்தவங்க எழில் சார்?
3. எந்த வேதங்களை பின்பற்றுவது? என்று நான் கேட்டதற்கு எழில் சொன்னார்:
இந்த 4 வேதங்களின் அடிப்படையிலதான் இந்து மதம் அமைஞ்சிருக்குங்களா? எனக்கு தெரிஞ்சவரை அந்த காலத்துல நம்ம நாட்டு மன்னர்களை எல்லாம் ஏமாத்தி கெட்ட கனா கண்டா ஒரு ஊரை எழுதி கொடுக்கனும்னு மிரட்டுறதுக்குதான் இந்த 4 வேதமும் பயன்பட்டிருக்கு. இல்லீங்களா?ரிக், யஜூர் சாமம் அதர்வணம் ஆகிய வேதங்களும், நாலாயிர திவ்யபிரபந்தமும், திருவாசகமும், திருப்பாவையும் இன்று யாருடைய மேற்பார்வையும் இல்லாமல் தங்கு தடையின்றி படிக்கக் கிடைக்கின்றன. அவற்றை படித்து உணரவும், ஆன்மீக உணர்வு பெறவும் இன்று எதுவும் தடையில்லை.
அப்புறம், திருவாசகத்தை வைத்து கோவிலில் அர்ச்சனை செய்ய பிராமணர்கள் எதிர்ப்பது ஏன்? அப்ப பிராமணர்களோட இந்து மதம் வேற, மத்தவாளோட இந்து மதம் வேற தானே?
இதுல, நீங்க எந்த இந்து மதத்தை சொல்றீங்க?
4. இந்து மதத்திற்கு புதிதாக வருபவர்கள் எந்த ஜாதியில் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள்? என்ற எனது அடுத்த கேள்விக்கு எழில் சொன்னார்:
ஏன் இந்துமதத்தையும் ஜாதியையும் இணைத்து பார்க்கவேண்டும்? இந்துமதம் என்பது ஆன்மீகம். அது இறையை மனிதன் உணர அழைக்கிறது. மனுதர்மம், இந்திய அரசியலமைப்பு சட்டம், அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் போன்றது. அமெரிக்க அரசியலமைப்புச்கேட்க நல்லாத்தான் இருக்கு எழில் சார். ஆனால் நிஜம் இது இல்லையே! ஒரு தலித் இந்து கோவிலுக்கு சாமி கும்பிட போனால் இந்த பாழாப்போன மனுதர்மம்தானே அவனை கோவிலுக்கு உள்ளே போக விடாம தடுக்குது? மனுதர்மத்தையும் இந்துமதத்தையும் போட்டு குழப்பிக்கொள்ளக் கூடாது என்றால், நீங்கள் எந்த இந்து மதத்தை சொல்கிறீர்கள் எழில் சார்?
சட்டத்தையும் கிறிஸ்துவத்தையும் போட்டு குழப்பிக்கொள்வது இல்லை. அது போல, மனுதர்மத்தையும் இந்துமதத்தையும் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது.
உங்கள் மதத்தைப் பற்றி நல்லதா நாலு வார்த்தை சொல்றதுக்கு கூட உங்களுக்கு ஒரு 'கருத்து தியாகி' தேவைப்படுகிறார். நாலு பதிவெழுதியும் இன்னதுதான் உங்கள் மதம் என்பதை தெளிவாக சொல்லக்கூட உங்களுக்கு முடியவில்லை. உங்கள் மதத்தைப் பற்றியே சரியாக புரிந்து கொள்ளாத நீங்கள், இஸ்லாம் பற்றி குறை கூறுகிறீர்களா? கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் வானம் ஏறி வைகுண்டம் போகும் பாதை கோணல் என்று சொல்ல வரலாமா?
மத்தவங்க மத விஷயத்துல மூக்கை நுழைக்குறதுக்கு முன்னாடி, போங்க சார், போய் உங்க மதத்தைப் பத்தி முதல்ல நல்லா தெரிஞ்சுக்குங்க! இந்த பதிவுல எழுதுன விஷயத்தையெல்லாம், யாராவது வெள்ளைக்காரங்க 'இந்தியான்னா பாம்பாட்டி நாடு'ன்னு நெனச்சுக்கிட்டு வருவாங்க, அவங்க கிட்ட போய் சொன்னீங்கன்னா நம்புவாங்க. ஆனா, நான் இந்தியாவுலேயே பிறந்து வளர்ந்து பல விதமான இந்துக்களோட பழகினவன்.
இஸ்லாம் மார்க்கம் தெளிவானது. அதில் எந்த குழப்பத்துக்கும் இடம் இல்லை. ஆனால் இஸ்லாத்தை சரியாக புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அதை முறையாக பின்பற்றாத முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குள் பிரச்னைகள் இருக்கின்றது. கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. அதெல்லாம் முஸ்லிம்களின் உள்விவகாரம். முஸ்லிம்களுக்குள் உள்ள பிரச்னைகளைப் பத்தி நாங்க பாத்துக்குறோம். எங்கள் தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
முஸ்லிம்களுக்கு இருப்பதை விட பன்மடங்கு பிரச்னைகளும் குழப்பங்களும் இந்து மதத்தில் இருக்கிறது. சீர்திருத்த வேண்டிய விஷயங்கள், தீர்க்க வேண்டிய பிரச்னைகள் எவ்வளவோ இருக்கின்றது. (சொல்லப் போனால் இந்து மதத்
