Sunday, September 07, 2008

தினமலரைப் புறக்கணிப்போம்!


டென்மார்க் நாளிதழ் ஒன்றில் வெளியாகி உலகெங்கும் முஸ்லிம்களின் எதிர்ப்பினை சம்பாதித்த கேலிச்சித்திரங்களில் ஒன்றை, மிகச்சரியாக ரமலான் முதல் நாள் அன்று வெளியிட்டு, தனது இஸ்லாமிய எதிர்ப்புணர்வை மிகத் தெளிவாக மீண்டுமொருமுறை பறைசாட்டியிருக்கிறது தினமலர் நாளேடு!

ஆம், இது முதல் முறையல்ல! சென்ற வருடம் அக்டோபரில், நோன்புப் பெருநாள் நேரத்தில் மற்றொரு டென்மார்க் கேலிச்சித்திரத்தை வெளியிட்டிருந்தது தினமலர். அப்போது அதற்கு பெரிதாக எதிர்ப்புக்குரல் எழும்பாததாலோ என்னவோ, மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் தனது செயலை இந்த வருடமும் அரங்கேற்றியிருக்கிறது இந்த பார்ப்பனீய நாளேடு!

பலமான எதிர்ப்பு கிளம்பிய பிறகு அதற்கு 'வருத்தம்' தெரிவித்த தினமலர் ஆசிரியர், 'தவறான கார்ட்டூன் வெளியிட்டதற்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஒருவர்தான் காரணம்' என சப்பைக்கட்டு கட்டியுள்ளார்.

என்ன கொடுமை சார் இது? தினமலரில் என்ன கார்ட்டூன் போடுவது என்பதை ஒரு கம்ப்யூட்டர் ஆபரேட்டர்தான் முடிவு செய்கிறாராமா?

அப்படம் வெளியான 'கம்ப்யூட்டர் மலருக்கு' பொறுப்பாசிரியர் யாரும் கிடையாதா?

வேலூர், திருச்சி, ஈரோடு, சேலம், ஆகிய நான்கு பதிப்புகளின் பொறுப்பாளர்கள் யார்?

இவர்கள் அத்தனை பேரின் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டா இப்படம் வெளியானது?

இது தெரியாமல் நடந்த தவறு என்றால், தொடர்ந்து இரண்டு வருடங்களாக சரியாக ரமலான் நேரத்தில் இது ஏன் நடக்க வேண்டும்?

மதநல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் தினமலர் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒரு நச்சுக் கிருமி!

நன்றி: அபூமுஹை