Tuesday, February 05, 2008

சொந்த செலவில் குண்டு வைத்துக் கொண்ட இந்துத்துவ பயங்கரவாதிகள்!


கடந்த 24-01-08 அன்று தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வெடித்தது தொடர்பாக முன்னாள் இந்து முண்ணனி தலைவர் குமார பாண்டியனின் சகோதரர் ரவி பாண்டியன் உள்ளிட்ட மூன்று பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். குண்டு வெடித்த சூழ்நிலையை கவனித்துப் பார்த்தால், ஒரு பெரும் மதக்கலவரத்தை உண்டு பண்ணும் நோக்கிலேயே இச்சதித் திட்டத்தை இந்த பயங்கரவாதிகள் நிறைவேற்றியிருக்கிறார்கள் என்பது புலப்படும்.


இரவு 9:30 மணியளவில் அந்த அலுகலகத்தில் யாரும் இல்லாத நேரம் பார்த்து குண்டு வீசப் பட்டிருக்கிறது. குண்டு வீச்சு சம்பவம் நடப்பதற்கு முன்பு இரவு 7 மணி வரை இந்து முண்ணனி அமைப்பாளர் ராஜூ அங்கு இருந்துள்ளார். சம்பவம் நடப்பது இரண்டரை மணி நேரத்துக்கு முன்னதாக அவர் வெளியேறியிருக்கிறார். உண்மையிலேயே ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு சேதம் விளைவிக்க வேண்டும் என்று தாக்குதல் நடத்தியவர்கள் கருதியிருந்தால் அந்த அலுவலகம் இயங்கிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே அதை செய்திருக்கலாம்.


சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பும் சம்பவம் நடந்த பின்னரும் இந்து முண்ணனித் தலைவர் ராம கோபாலன் தென்காசிக்கு வந்து முஸ்லிம்களை குறித்து அவதூறுகளை வீசியிருக்கிறார். சம்பவத்தை காரணம் காட்டி பாஜக ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.


சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு செல்லச்சாமி என்பவர் நாட்டு வெடிகுண்டுகளுடன் போலீசாரிடம் பிடிபட்டு, அவரை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இச்செய்தி பெரும்பாலான ஊடகங்களில் வரவில்லை.


இந்த குண்டு வெடிப்பு மூலம் முஸ்லிம்கள் மீது பழி சுமத்தி மதக்கலவரத்தை தூண்டுவதற்காகவே இவர்கள் திட்டமிட்டிருக்க வேண்டும். இச்சமூக விரோதிகளின் திசைதிருப்பல்களில் சிக்காமல் கவனமாக செயல்பட்டு உண்மைக் குற்றவாளிகளை பிடித்த காவல்துறையினர் பாராட்டுக்குரியவர்கள்.


நன்றி: தமுமுக, The Hindu