Sunday, October 21, 2007

மோடியை துரத்தும் குஜராத் பேய்கள்!



CNN-IBN தொலைக்காட்சியின் "Devil's Advocate" (சாத்தானின் வழக்குறைஞர்) என்ற Talk Show வில் தோன்றும் கரண் தாப்பர் அவ்வப்போது பிரபலங்களை நேர்காணல் செய்து பரபரப்பை உண்டாக்குவார். இவருடன் நேர்காணலுக்கு வரும் பிரபலங்களில் பலர் கலங்கியவாறே பேட்டியை முடித்துக் கொள்வர்.

சில வருடங்களுக்கு முன்னர் முன்னாள் இந்திய கிரிக்கெட் காப்டன் கபில்தேவுடனான நேர்காணலில் கண்கலங்க வைத்தார். அதேபோல் இருவருடங்களுக்கு முன் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடனான நேர்முகத்தில் நிதானம் இழக்கச் செய்தார். பாதிக்கப் பட்ட பிரபங்களும் நேயர்களும் இவரை உண்மையிலேயே சாத்தானாகப் பார்க்கும் அளவுக்கு இவரின் கேள்விகள் அவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்.

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த முஸ்லிம் இனச்சுத்திகரிப்புகளால் இந்தியாவை உலக அரங்கில் தலைகுனிய வைத்ததோடு, வாஜ்பாயின் முகத்தையும் கிழித்த (எந்த முகத்தை வைத்துக் கொண்டு இனி உலக நாட்டுத் தலைவர்களை சந்திப்பேன் என்று வாஜ்பாயே சொன்னதை நினைவில் கொள்ளவும்) நரேந்திர மோடியின் முகத்தில் அறைந்தாற்போல் கேள்விகளைக் கேட்டு திண்டாடச் செய்துள்ளார். குஜராத்தில் முஸ்லிம்கள் பலரை அகதிகளாக வெளியேறச் செய்த நரேந்திர மோடி, கரன் தாப்பருடனான பேட்டியிலிருந்து கிழிந்த முகத்துடன் வெளியேறியுள்ளார். ஐந்து நிமிடமே நடந்த் பேட்டியின் விபரம் வருமாறு:

கரண்: ஹலோ Devil's Advocate நிகழ்ச்சிக்கு வருக.

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அவர்களுக்குத் தோற்றக் கோளாறு (Image Problem) உள்ளதா? மேலும் வரவிருக்கும் குஜராத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராக முடிசூடுவாரா? இவையே இன்றைய நேர்காணலின் முக்கிய அம்சம்.

திரு. மோடி, உங்களைப் பற்றிப் பேசுவோமா? கடந்த ஆறு வருடங்களில் நீங்கள் முதல்வராக இருந்தபோது, மிகச்சிறந்த நிர்வாகியாக ராஜீவ் காந்தி பவுண்டேசன் தேர்ந்தெடுத்தது. இந்தியா டுடே வெவ்வேறு பதிப்புகளில் மிகவும் திறமையான நிர்வாகியாக அடையாளம் காட்டியது. உங்களின் முகத்திற்கெதிராகவே மக்கள் உங்களை கொடூர கூட்டுக் கொலையாளியாகவும் (Mass Murderer), முஸ்லிம்களை அச்சுறுத்தியதாகவும் முற்றிலும் இருவேறுவிதமாகப் பேசப்படுகிறீர்கள். உங்களிடம் ஏதேனும் தோற்றப்பிழை இருக்கிறதா?

மோடி: மக்கள் சொல்கிறார்கள் என்று சொல்லப்படுவதை சரியல்ல என்றே சொல்வேன். இருவர் அல்லது மூவர் மட்டுமே இவ்வாறு என்னைப் பற்றி சொல்கிறார்கள். அவர்களைக் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்பதே என்னுடைய பதில்.

கரண்: அதாவது இதை சிலரின் சூழ்ச்சி என்கிறீர்களா?

மோடி: நான் அவ்வாறு சொல்லவில்லை.

கரண்: ஆனால் நீங்கள்தான் சொன்னீர்கள். ஒருசிலர் மட்டுமே என்றீர்கள்.

மோடி: நானறிந்தவையில் இது மக்களின் குரல் அல்ல!

கரண்: 2003 செப்டம்பரில் உங்கள் அரசு மீதான நம்பிக்கையை இழந்து விட்டதாகஉச்ச நீதிமன்றம் சொன்னதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஏப்ரல் 2004-ல் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உங்களை நவீன நீரோ மன்னனாகவே வர்ணித்ததார். ஆதரவற்ற குழந்தைகளும் அப்பாவி பெண்களும் எரித்துக் கொல்லப் பட்டுக் கொண்டிருந்தபோது வேறு பக்கத்தில் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தவர் அவர். உச்சநீதிமன்றத்தின் உங்கள் மீதான கண்ணோட்டத்தில்தான் ஏதோ பிரச்னை உள்ளது.

மோடி: கரண்! தயவு செய்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை ஒருமுறை வாசியுங்கள் என்று வேண்டுகிறேன். அதில் எங்கேனும் எழுத்துப்பூர்வமாகச் சொல்லப்பட்டிருந்தால்காட்டலாம்; மகிழ்வடைவேன்.

கரண்: அப்படி எதுவும் எழுத்துப்பூர்வமாகச் சொல்லப்படவில்லை. இருந்தாலும் இதுஒரு புரிந்து கொள்ளல்.

மோடி: தீர்ப்பில் அவ்வாறு சொல்லப்பட்டிருந்தால், உங்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதில் மகிழ்ச்சியடைவேன்.

கரண் : ஆனாலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் குட்டப்பட்டது ஒன்றும் பெரிய விசயமில்லை என்று சொல்ல வருகிறீர்களா?

மோடி: என்னுடைய தாழ்மையான வேண்டுகோள், நீதிமன்றத் தீர்ப்பை வாசித்து விட்டு உங்களின் கூற்று மெய்யென்றால் மக்களிடம் கொண்டு செல்லலாம்.

கரண்: நன்று. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்து வெளிப்படையாக சொல்லப்பட்டது மட்டுமல்ல. 2004 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட 4600 மொத்த வழக்குகளில் சுமார் 2100 வழக்குகள், கிட்டத்தட்ட 40% வழக்குகளில் குஜராத்தி(முஸ்லிம்)களுக்கு நீதி மறுக்கப் பட்டுள்ளதாகக் கருதப்பட்டு அவ்வழக்குகள் மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

மோடி: வழக்கு மன்றம் நல்ல தீர்ப்பை வழங்கினால் சந்தோசப்படுவேன்.

கரண்: இந்தியா டுடே,உங்களை மிகச்சிறந்த முதலமைச்சராகவும், ராஜிவ் காந்தி பவுண்டேசன் குஜராத்தின் திறமையான நிர்வாகியாகவும் தேர்ந்தெடுத்தபோதிலும், மோடி முஸ்லிம்கள் விஷயத்தில் நியாயமின்றி நடந்து கொண்டார் என்று சொல்லப்படுவதால்தான் கேட்டேன், உங்களுக்குத் தோற்றப்பிழை (Image Problem) உள்ளதா என்று!

மோடி: நியாயமாக என் மீதான பிம்பம் பற்றி கவலைப்பட ஒருநிமிடமாவது ஒதுக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். நான் குஜராத்திற்காக ஏற்றுக்கொண்ட என்னுடையப் பணிகளில் மூழ்கியுள்ளேன். நான் ஒருபோதும் என்னுடைய பிம்பத்தைப் பற்றி பேசியதில்லை; அதற்காக ஒரு நிமிடம் கூட ஒதுக்காததும் அத்தகைய குழப்பத்திற்குக் காரணம்.

கரண்: என்ன பிரச்சினை என்றால், ஐந்து வருடங்கள் கழிந்தும் 2002 ஆம் ஆண்டு குஜராத் படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களின் ஆவிகள் உங்களைத் விரட்டுகிறது. அந்த பிரச்னையை தீர்க்க (அந்த ஆவிகளை நண்பர்களாக்க?) நீங்கள் ஏன் ஒன்றுமே செய்யவில்லை?

மோடி: கரண் தாப்பர் மாதிரியான ஊடகவியலாளர்களிடம் இதை கொடுத்து விட்டேன். அவர்கள் அனுபவிக்கட்டும்! (?)

கரண்: நான் ஒரு ஆலோசனை சொல்லட்டுமா?

மோடி: எனக்கு ஆட்சேபனையில்லை.

கரண்: குஜராத் படுகொலைகளுக்காக ஏன் நீங்கள் வருத்தம் தெரிவிக்கக் கூடாது? அரசு அவர்களைக் காக்கத் தவறி விட்டது என்று ஏன் ஒப்புக் கொண்டிருக்கக் கூடாது?

மோடி: நான் என்ன சொல்ல வேண்டுமோ அதையெல்லாம் அந்த நேரத்திலேயே சொல்லிவிட்டேன். எனது பழைய அறிக்கைகளை தேடிப்பாருங்கள்.

கரண்: திரும்ப அதைச் சொல்லலாமே!

மோடி: அவசியமில்லை! 2007 தேர்தலைப் பற்றி நான் நிறைய பேச வேண்டியுள்ளது.

கரண்: ஆக, அதை மீண்டும் சொல்லாததன் மூலம்,உங்கள் அறிக்கையை மக்களை மீண்டும் கேட்கவிடாததன் மூலம், உங்கள் மீதான பிம்பம் தொடர அனுமதிக்கிறீர்கள். அதை மாற்றுவது உங்கள் கையில்தான் உள்ளது.

மோடி: நான் ஓய்வெடுக்க வேண்டும்; குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?

கரண்: தண்ணீர் ப்ளீஸ்...!

(இந்த இடத்தில் கரண் தாப்பரிடமிருந்து பார்வையை விலக்கிக் கொண்டு, வேறு பக்கம் பார்க்கிறார் மோடி. அப்போது அவர் முகத்தில் தெரிகிறது பாருங்கள் அப்பட்டமான குற்ற உணர்ச்சி! வெல்டன் கரண்!!!)

Modi: Dosti bani rahe.bas. I'll be happy. You came here. I am happy and thankful to you. I can't do this interview. It's okay your things are. Apne ideas hain aap bolte rahiye aap karte rahiye. 3-4 questions I've already enjoyed… nahin please.

Karan Thapar: But Modi Sahab..

Narendra Modi: Nahi please, Karan.

Karan Thapar:But Modi saab..

Narendra Modi: Karan dekho main dostana sambhand rakhna chahta hoon, aap usko koshish kariye.

Karan Thapar: Mujhe ek cheez samjhayee sir. I am not talking about doing anything wrong. I am saying why can't you correct your image?

Narendra Modi: This is not the time. Uske liye aap mujhe 2002 mein mile hote 2003 mein mile hote mein sab kar leta.