Tuesday, February 27, 2007

நீலகண்டன் கேட்ட ஜல்லி!

நண்பர் நீலகண்டன் சவூதி அரேபியா பற்றி ஒரு பதிவு எழுதி 'மிதந்து கொண்டிருக்கிற வெளி முதல் சுவனத்து ப்ரியர் வரை மரக்காயர் முதல் இறைநேச வசை வரைக்குமாக சமாளிப்பு ஜல்லியடிகள் சமத்துவ முலாம் பூசி வரும்' என்பதாக அழைப்பு விடுத்திருந்தார். ஒரு விஷயத்தைப் பத்தி மத்தவங்க கருத்து சொல்றதுக்கு முன்னாடியே அதை 'ஜல்லியடிகள்' என்று முலாம் பூசுறதுல ஒரு சூட்சுமம் இருக்கிறது. வர்ற பதில் நெத்தியடியா இருந்தால்கூட 'ஹி..ஹி.. இதத்தான் நான் ஜல்லியடின்னு முன்னமே சொன்னேன்' அப்படின்னு சமாளிச்சுக்கலாம் பாருங்க!

சரி போகட்டும்.. நாம விஷயத்துக்கு வருவோம். நீலகண்டனோட சந்தேகங்களை ஒன்னொன்னா பார்ப்போம்.



//இரு மசூதிகளின் பொறுப்பாளன் எனும் புகழ்மிக்க அரபு பட்டத்தை சுமந்து கொண்டிருப்பவர் சவூதியின் பட்டத்து அரசர். அந்த குலத்தின் சந்ததிகளுக்கு மட்டுமே உரிய பட்டம் இது. 'இஸ்லாமில் சமத்துவம் உண்டே அதனால் ஒரு தலித் முஸ்லீம் ஆனால் அவர் இஸ்லாமிய அறிஞர்களிலேயே பேரறிஞரானால் அந்த பட்டம் இவருக்கு அளிக்கப்படுமா?' என்றால் 'இல்லை' என்கிற பதிலுக்கு.. - நீலகண்டன்//
இந்திய அரசியல் சாசன சட்டத்தை நல்லா கரைச்சு குடிச்ச ஒரு பேரறிஞர் இருக்கிறார். அவருக்கு 'நாடாளுமன்ற சபாநாயகர்' என்ற பட்டம் அளிக்கப்படுமா? என்று யாராவது கேட்டால் நமக்கு சிரிப்புதான் வரும். ஏனென்றால் 'சபாநாயகர்' என்பது ஒரு பட்டமல்ல.. அது ஒரு பதவி என்பது பிரைமரி படிக்கிற பிள்ளைகளுக்கு கூட தெரிஞ்ச விஷயம். இப்படிப்பட்ட ஒரு கேள்வியைத்தான் நம்ம நண்பர் நீலகண்டர் கேட்டிருக்கிறார். சவூதி அரேபியாவின் மன்னராக இருப்பவர் இரு புனித தலங்களின் பாதுகாவலராகவும் பதவி வகிப்பார். இது அவரது மார்க்க அறிவை வைத்து கொடுக்கப்படும் பட்டமல்ல.

அவர் சவூதி அரேபியா என்ற நாட்டின் மன்னரே தவிர, உலக முஸ்லிம்கள் அனைவரின் தலைவரல்ல. கிருஸ்துவர்களுக்கு போப் இருப்பது போல முஸ்லிம்களுக்கும் ஒரு உலகளாவிய தலைவர் இருந்து, அந்த பதவிக்கு ஒரு எளிய குடும்பத்தைச் சார்ந்த மார்க்க அறிஞர் வர முடியுமா என்று நீலகண்டன் கேட்டிருந்தால் அதில் நியாயம் உண்டு. அப்படி ஒரு பதவி இருந்தால் அது இனம், குலம் சாராத, தகுதியை மட்டும் அடிப்படையாக கொண்டதாக இருக்கும். இதுதான் இஸ்லாம் காட்டும் சமத்துவம்.


//"The system of government in the Kingdom of Saudi Arabia is that of a monarchy....Citizens are to pay allegiance to the King in accordance with the holy Koran and the tradition of the Prophet, in submission and obedience, in times of ease and difficulty, fortune and adversity." என்று சவூதி அரசாங்கம் சொல்லுகிற வரிகள் குரானை அவமதிப்பதாகாதா? - நீலகண்டன்//
'நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் இறைவனையும் இறுதி நாளையும் நம்பி இருந்தால் இறைவனுக்குக் கட்டுப்படுங்கள். இத்தூதரான முஹம்மதுக்கும் உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள். ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை இறைவனிடமும் இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள். இதுவே சிறந்ததும் மிக அழகிய விளக்கமுமாகும்.'-(குர்ஆன் 4 : 59)

முஸ்லிம்கள் தேசப்பற்றுடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் நாட்டுத்தலைவருக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் இறைவனே கட்டளையிடுவதற்கு ஒரு ஆணித்தரமான ஆதாரம் இந்த திருமறை வசனம். நீலகண்டன் சுட்டிக் காட்டியிருக்கும் சவூதி அரசாங்கத்தின் கொள்கையும் இதைத்தான் வலியுறுத்துகிறது. தலைமைக்கு கட்டுப்படுவது என்பதில் ஒரு கண்டிஷன் இருக்கிறது. தலைவர் காட்டும் வழி மார்க்கத்திற்கு முரண்படாததாக இருக்க வேண்டும்.

அதுவும் தவிர, சவுதி அரசாங்கத்தின் இந்த சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள் சவூதி குடிமக்கள்தானே? எல்லா முஸ்லிம்களும் அல்லவே?

//சவூதி அரேபியா போல சமத்துவத்தை பேணும் சொர்க்கத்துக்கு....
இஸ்லாமிய சுவர்க்கத்தின் மண்ணுலக மாடலை... //
இப்படியெல்லாம் யார் சொன்னாங்க?

//இந்தியாவிலிருந்து வீட்டு வேலைக்காக அரபு நாடுகளுக்கு ஏராளமான பெண்கள் செல்கின்றனர். ஆனால் இவர்களுக்கு வேலை வாய்ப்பு நிறுவனங்களில் குறிப்பிட்டபடி சம்பளம் கொடுப்பதில்லை. இது தவிர பாலியல் கொடுமை உட்பட பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். -நீலகண்டன்//

புனிதத் தலங்கள் இருக்கும் நாடு என்பதால் சவூதி அரேபியா முஸ்லிம்களுக்கு புனித பூமி. அதற்காக அங்கே இருப்பவர்களெல்லாம் புனிதர்களாகி விடுவார்களா? எந்த சமுதாயமாக இருந்தாலும் அதில் சில கேடுகெட்ட கயவர்களும் கலந்துதான் இருப்பார்கள். கொஞ்ச நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் நடந்ததை எல்லாம் மறந்து விட்டீர்களா? துறவி என்ற போர்வையில் சிறு வயது சினிமா நடிகை முதல் வயதான பெண் எழுத்தாளர் வரை தனது காம சபலத்தை அடக்க முடியாமல் கைவைத்து அசிங்கப்பட்டு அவமானப்பட்டு நின்றவர்களை மறக்கத்தான் முடியுமா?

சவூதியின் கயவர்களுக்கும் காஞ்சிபுர _ _ _ _ களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? சவூதியில் பாலியல் குற்றம் செய்தவன் சட்டத்தின் முன் நிறுத்தப் பட்டால் அதிக பட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும். இதுதான் இஸ்லாம் காட்டும் வழிமுறை. ஆனால் காஞ்சிபுரத்திலோ, இந்த குற்றவாளிகள் இன்னும் 'நடமாடும் கடவுள்'களாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களால் கோடிக்கணக்கான இந்துக்களுக்கும் இந்திய திருநாட்டிற்குமே பெருத்த அவமானம்!

இனி, நீலகண்டனுக்கும் அவரது சகாக்களுக்கும் என்னுடைய கேள்விகள் சில. ஜோரா உங்க ஜல்லிகளை கொண்டு வந்து கொட்டுங்க பார்ப்போம்!

1. இந்து ஒற்றுமை, இந்து தர்மம், என்றெல்லாம் வெட்டி முறிக்கிற உங்களுக்கு எல்லாம் காஞ்சிபுர மடத்தை இழுத்து மூட வேணாம், இப்ப இருக்குற மட அதிபதிகளை விரட்டிவிட்டு ஒரு தலித்தை சங்கராச்சியாரா நியமிக்கணும்னு கோரிக்கை எழுப்பவாவது வக்கு இருக்கிறதா?

2. RSS கூட்டத்துக்கு தலைவரா நீலநிற கண்களை உடைய ஒரு 'சித்பவன்' பிராமணர் மட்டும்தான் வரமுடியுமாமே? ஏன் அப்படி? சித்பவன் பிராமணர்கள் என்றால் யார்? பிராமணர்களிலேயே இவங்க உசத்தியா? RSS கூட்டத்திற்கு யாராவது ஓரு தலித் இதுவரை தலைவரா வந்திருக்கிறாரா? இல்லையென்றால் ஏன்?

3. ஏமாறதவன் என்பவர் சொல்கிறார், "நான் நம் இணைய இஸ்லாமிய சகோதரர்களை கெஞ்சி கேட்பது இதுதான். அறியாமல் நீங்கள் உங்கள் வருங்கால சந்ததிகளையும் இந்த படுகுழியில் தள்ளாதீர்கள்." இவர் தன் வருங்கால சந்ததிகளை எந்த படுகுழியில் தள்ளியிருக்கிறார்? அது இஸ்லாத்தை விட எந்த வகையில் உயர்ந்தது? இவரோட கொள்கை வெளியில கவுரவமா சொல்லிக்கிற மாதிரி கொள்கையா இருந்தா தைரியமா அதைப் பத்தி சொல்லலாமே?

Friday, February 23, 2007

லேப்டாப்பில் மாட்டிறைச்சி தேடிய பஜ்ரங்தள்!

வெளிநாட்டுப் பயணிகளிடம் வழிப்பறி செய்த பஜ்ரங்தள் கொள்ளையர்கள் கைது!

சங்பரிவார் இயக்கத்தினர் தென்னாப் பிரிக்காவைச் சேர்ந்த கோர்டன் (44) மற்றும் ஜேக்கப் (52) என்ற இருவரிடம் வழிப்பறி செய்து கையும் களவுமாக பிடிபட்டனர்.

இந்தச் சம்பவம் பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் மத்தியப் பிரதேசத்தில் சிண்ட்வாரா மாவட்டத்தில் உள்ள பாஜிபானி கிராமத்தில் நடந்துள்ளது.
வெளிநாட்டுக்காரர்களான கோர்டனும் ஜேக்கப்பும் Western Coal Fields Limited என்ற நிலக்கரி நிறுவனத்துக்காக பணி செய்ய வந்துள்ளனர். இவர்கள் தங்களின் பணி தொடர்பாக நாக்பூரிலுள்ள தலைமை அலுவலகம் நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது 20 பேர் கொண்ட பஜ்ரங்தள் குண்டர் கும்பல் அவர்கள் இருவரையும் வழிமறித்து தாக்கியது. வாகனத்தை நொறுக்கியதோடு லேப்டாப் கம்ப்யூட்டரையும் மொபைல் போன்களையும், பணம் வைக்கப்பட்டிருந்த கைப்பைகளையும் திருடிக் கொண்டு ஓடியிருக்கின்றனர். இதுதொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டிருப் பதாகவும் மேலும் 11 பேர் விரைவில் பிடிபடுவார்கள் எனவும் சின்ட்வார மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.கே.சிஹோர் தெரிவித்தார்.

வெளிநாட்டுக்காரர்கள் இருவரும் தங்கள் தலைமை அலுவலகம் இருக்கும் நாக்பூருக்கு சென்றுவிட்டு பின்னர் சொந்த நாடான தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்த இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் வழிப்பறி செய்யப்பட்டு தாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் முறை யான முதலுதவி மற்றும் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவர்கள் தாய்நாடு புறப்பட்டனர்.

'இது தவறாக நடந்துவிட்டது. வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் நம் நாட்டில் தாக்கப் பட்டது, வழிப்பறிக்கு உள்ளாக் கப்பட்டது மிகவும் கேவலமானது' என்றும், இதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்பதாகவும் சின்ட்வாரா பகுதியின் முக்கிய பஜ்ரங்தள் பிரமுகர் ராஜு கர்னாகர் முதலில் கூறினார்.

ஆனால் பிறகு அந்தர்பல்டி அடித்த அவர் 'வெளிநாட்டுக்காரர்கள் இருவரும் மாட்டிறைச்சி கொண்டு செல்வதாக எங்கள் ஆட்களுக்கு தகவல் கிடைத்தது. எனவே, அவர்களை சோதனைதான் செய்ததாக' மழுப்பினார்.

மாட்டிறைச்சிக்காக சோதனை செய்தவர்கள் லேப்டாப்பையும் மொபைல் போன்களையும் பணப்பைகளையும் ஏன் பறிக்க வேண்டும்? மாட்டிறைச்சியை லேப்டாப்பிலா கொண்டு போவார்கள்?

மத்தியப் பிரதேச - மகாராஷ்டிரா எல்லை வழியாக ஆயிரக்கணக்கான மாடுகள் இறைச்சிக்காக கொண்டு செல்லப்படுவதாகவும் அதனை தாங்கள் தொடர்ந்து தடுத்து வருவதாகவும் எந்த நிலையிலும் எங்கள் மாடு பிடிக்கும்(!) லட்சியத்தைக் கைவிட மாட்டோம் என்றும் அவர் மேலும் கூறினார்.

இவை அனைத்துமே பொய் என்கிறது போலீஸ். வெளிநாட்டுக்காரர்கள் கொண்டு சென்ற இறைச்சியை கால்நடை மருத்துவ பரிசோதனைக் கூடத்தில் சோதனை செய்து பார்த்தபோது கோழி இறைச்சி என்பது தெரிய வந்தது என தெரிவித்த காவல்துறை அதிகாரிகள் ஒருவேளை மாட்டிறைச்சியையே இரண்டு வெளிநாட்டுக்காரர்களும் கொண்டு சென்றிருந்தாலும் கூட அதைத் தடுக்க இவர்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என தெரிவித்தனர்.

அதோடு தீவிர சோதனைக்குப் பிறகு காவிக் கும்பலால் களவாடப்பட்ட மொபைல் போன்களும், பணப்பையும், லேப்டாப் கம்ப்யூட்டரும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மத்தியப் பிரதேச - மராட்டிய எல்லையில் வாகனங்களைத் தடுத்து நிறுத்துவதிலும் வழிப்பறியிலும் பஜ்ரங்தள் இயக்கத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அப்பாவி முஸ்லிம்களும் ஏழை தலித்களும் இவ்வாறு முடக்கப் பட்டு தீங்குகள் இழைக்கப்பட்டபோது ஓடிவராத பாஜக ஆளும் மத்தியப் பிரதேச அரசின் காவல்துறை, வெளிநாட்டுக்காரர்கள் தாக்கப்பட்ட பின் ஓடி வந்ததற்கு ஒரு 'தந்திர' காரணம் உண்டு என்றும் அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பொதுவாக இன்றைய அரசுகள் எல்லாம் அந்நிய முதலீடுகளுக்காக ஆலாய் பறந்துவரும் சூழலில் வெளிநாட்டுக்காரர்களிடம் திருடினால், தாக்குதல் நடத்தினால் அந்நிய முதலீடுகள் நின்றுவிடும், எனவே அரசுகளுக்கு பொல்லாத(!) கோபம் வந்துவிட்டது. எனவே, தங்களது செல்ல குரங்குப் படையைக் கூட கைது செய்ய வேண்டிய நிலைக்கு மத்தியப் பிரதேச பாஜக அரசு தள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக்காரர்களை வழிப்பறி செய்ததின் மூலமாக சர்வதேச அளவில் நாட்டின் மானத்தை கப்பலேற்றிய காவிகள் உருப்படுவது எப்போது?

நன்றி: சுட்டி1, சுட்டி2, சுட்டி3, சுட்டி4

Thursday, February 22, 2007

சாதி என்று ஒன்று உண்டென்றால் அது மனித சாதியாக இருக்கட்டும்!

சர்ப்பத்திற்கு மட்டுமா பிளவுண்ட நாக்கு?
சாதி சாதி என வேதம் ஓதும்
சாத்தான்களுக்கும் அது உண்டு!

"நாம எல்லாரும் ஒரே மதம்!
ஆனா என் கோவிலுக்கு நீ வராதே!
உன் சாமியை நான் பூஜிக்க மாட்டேன்!
ஆனா நாம எல்லாரும் ஒரே மதம்!"

அப்பாவிகள் மேல் ஏவிவிட
அடியாட்கள் வேணுமென்றால்
'எல்லாரும் நம்மவா'
'ஏறி அடியுங்கடா துலுக்கனை யெல்லாம்!'

காரியம் ஆன பிறகு
'சூத்திராள் நீ! நெருங்காதே என்னை!
சீ.. போடா அந்தாண்டை!'

சக மனிதனை மனிதனாக
மதிக்கத் தெரியாத இதுவெல்லாம்
மனிதத்தில் சேர்த்தியா என்ன?

வயிற்றுச் சிசுவை நெருப்பில் எறிந்து
'உலக சாதனை' புரிந்த
நர மாமிச பட்சினிகள்,
ரத்தக்கறை படிந்த தம் வாயால்
'பசுவைக் கொல்லாதே' என
போதனை செய்கின்றன.

பதுங்குகுழிகளிலிருந்து வெளிவருகின்றன
பசுத்தோல் போர்த்திய நரிகள்!
தேசப்பிதாவை கொன்று போட்டது
கொடியோர் கூட்டம் அன்று!
தேசபக்தி நாடகம் அரங்கேற்றம் இன்று!

அன்னியனிடம் மண்டியிட்டு
அபயம் தேடிய 'வீர' தலைவர்கள்!
அவர் தம் வழியில் தொண்டர்கள்!
மாற்றி எழுதப்படும் வரலாறுகள்!
என்றும் மாறாமல் பல்லிளிக்கும் பித்தளைகள்!

சமணன், பௌத்தம், நாட்டார் மதங்கள் எல்லாம்
உண்டு செரித்து ருசி கண்ட மலைப்பாம்பு
இஸ்லாமிய ரத்தம் கேட்டு ஏங்கி நிற்கிறது
தன் கோரப் பற்களை காட்டியவாறு!
ஆயிரம் ஆதிசேஷன்கள் சீறி வந்தாலும்
சூரியனை விழுங்க முடியுமா?

மமதை, தற்பெருமை, உன்மத்தம் தலைக்கேறி
மனிதம் மதிக்கத் தெரியா மாக்கள் - இவரா
எம் மார்க்கம் பற்றி பேசத் துணிந்தார்?

Tuesday, February 20, 2007

நான் ஏன் முஸ்லிமானேன்? - யுவான் ரிட்லி

சகோதரி யுவான் ரிட்லி லண்டனில் இயங்கும் இஸ்லாம் சேனல் தொலைக் காட்சியின் அரசியல் எடிட்டர் மற்றும் 'In the Hands of Taliban: Her Extra ordinary Story' என்ற நூலின் இணையாசிரியர் ஆவார்.

மேலும்,2001-ம் வருடம் இவர் தாலிபான்களிடம் சிக்கி இஸ்லாத்தின் மீது ஆர்வம் கொள்ள வைத்த சுவையான சம்பவம் குறித்து இவரது நேரடி பேட்டி அப்போது 'நியூஸ் வீக்' பத்திரிக்கையில் பரபரப்பாக வெளியாகி இருந்தது.

இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டி இது:



தொடர்புடைய சுட்டி: ஹிஜாபைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்?

Thursday, February 08, 2007

நூற்றாண்டுகளை கடக்க மறுப்பவர்கள்!

கணவன் தன் மனைவியை எந்த முறைகளில் கண்டிக்கலாம்? எந்த சூழ்நிலையில் அடிக்கலாம்? அப்படி அடிப்பதன் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? என்பதை ஒரு இஸ்லாமிய அறிஞர் விளக்கும் வீடியோ காட்சி ஒன்றை எழில் அவர்கள் தனது வலைப்பதிவில் பதிந்து வைத்திருந்தார். அதே பதிவில் எம்.ஐ.டி-யில் இயற்பியல் பாடங்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதைக் காட்டும் ஒரு வீடியோ காட்சியையும் பதிந்திருந்தார்.

அந்த பதிவில் அனானிமஸாக பின்னூட்டமிட்ட அவரது நண்பர் ஒருவர் இந்த இரண்டு வீடியோ காட்சிகளையும் ஒப்பிட்டு ஒரு பின்னூட்டமிட்டிருந்தார். அதில் அவர் சொல்கிறார், "இந்த எம். ஐ. டி காட்சிக்கும் அந்த அல் ஜசீரா காட்சிக்கும்தான் எத்தனை தூரம்? இரண்டு விடியோக்களில் பல நூற்றாண்டுகளை நாம் கடக்கிறோம், கடக்க மறுக்கும் சிலரை அவர் விருப்பப் படியே பின்னே விட்டு விட்டு."

குடும்பம் சீர்குலையாமல் இருப்பதற்காக பொறுப்பற்று இருக்கும் மனைவியை கண்டிப்பது பற்றி இஸ்லாம் சொல்லும் பரிந்துரையை, எம்.ஐ.டி-யில் உயர் தொழில் நுட்பம் பயன்படுத்தப் படுவதோடு ஒப்பிட்டு, தாம் நூற்றாண்டுகளை கடந்து சென்று கொண்டிருப்பதாகவும் மற்றவர்கள் அங்கேயே நின்று கொண்டிருப்பதாகவும் நம்பிக்கொண்டு மற்றவர்களையும் நம்பச் சொல்கிறார்கள் இவர்கள். பாவம்.. தன் நிலை என்னவென்பதை சுயபரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளப் பிடிக்காமல் மாற்றானை பழிப்பதில் தற்காலிக இன்பம் பெறும் பரிதாபத்திற்குரியவர்கள் இவர்கள்.

உங்கள் ஓப்பீடு சரியல்ல நண்பர்களே! அது எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் சொல்கிறேன்.

ஜூனியர் விகடன் 28-01-07 தேதி இதழில் ஒரு செய்தி வந்திருக்கிறது. நாகப்பட்டினம் அருகே உள்ள மீனவ கிராமம் ஒன்றில் கடற்கரையில் ஒரு இளம் பெண்ணின் சடலம் ஒதுங்குகிறது. காவல்துறையினர் விசாரணை செய்து கொண்டிருந்தபோது ஆறுமுகம் என்பவர் தனது மூத்த மகன் ரவிச்சந்திரனுடன் வந்து, ‘இறந்து போனது எனது மகள் பரிமளாதான். அவளை நாங்கள்தான் கொலை செய்துவிட்டோம்’ என்கிறார்.

தந்தையே தனது மகளின் கையையும் காலையும் கட்டி நடுக்கடலில் தூக்கி எறிந்து கொன்றிருக்கிறார். இதில் இன்னொரு கொடுமை, இந்தக் கொலைக்கு அவர் தனது மகனையும் துணைக்கு அழைத்துக் கொண்டதுதான்!

இந்தக் கொடூர கொலைக்கு காரணம் என்ன? பரிமளாவுக்கும் அதே ஊரைச் சேர்ந்த வினோத் என்பவருக்கும் காதல் அரும்பியிருக்கிறது. ஆனால், இது அவரது குடும்பத்துக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம், வினோத்தின் ஜாதி வேறு என்பதுதான்.

எழிலான நண்பர்களே, இந்த நிகழ்வு ஒரு சிறு உதாரணம் மட்டுமே! எம்.ஐ.டி-யின் தொழில் நுட்பத்தை கொஞ்ச நேரம் ஓரமாக வைத்து விட்டு, இந்த சமுதாய அவலத்தைப் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள். சாதி வேறுபாடு ஒரு தந்தை தான் பெற்ற மகளையே கொலை செய்ய தூண்டுகிறது. இதை ஒப்பீடு செய்து பாருங்கள். 1500 ஆண்டுகளுக்கு முன் காட்டரபிகள் பெண் குழந்தைகளை உயிரோடு புதைப்பார்களாம். அத்தகைய மடத்தனங்களுக்கு முடிவு கட்டிய இஸ்லாம் இன்று பல நூற்றாண்டுகளை கடந்து வந்து விட்டது. உங்கள் சமுதாயம் இன்னும் அங்கேயே நின்று கொண்டிருக்கிறது. அதைப் பற்றி கவலைப்பட வேண்டிய நீங்கள் எம்.ஐ.டி-யின் உயர் தொழில் நுட்பத்தில் உங்கள் பிரச்னைகளை மறைக்க அல்லது மறக்க முயல்கிறீர்கள்.

பிரச்னைகளை எதிர் கொள்ள முடியாமல் நீங்கள் simply sweeping them under the carpet! இந்த அணுகுமுறை பயன் தராது நண்பர்களே! மற்றவர்களிடம் என்ன பிரச்னை இருக்கிறது என்று தூண்டித்துருவி உலகின் கவனத்தை அவர்கள் பக்கம் திருப்புவதாலும், உங்கள் பிரச்னை தீர்ந்து விடாது. Be brave and Face it! மாற்றாரின் குறைகளை மட்டும் ஆராய்ந்து கொண்டிருந்த எந்த சமுதாயமும் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை!

இன்றைக்கு இஸ்லாத்தை பழித்து என்ன பதிவு போடலாம் என்று YouTube-ல் தேடிக் கொண்டிருப்பதை விடுத்து நான் மேலே சுட்டிக் காட்டிய ஜூனியர் விகடன் கட்டுரை போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள். இது போன்ற சமுதாய கொடுமைகளுக்கு எப்படி தீர்வு காணலாம் என்று ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள்.

பிராமணர் ஒருவரால் வளர்க்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் ஏன் இந்து மதத்தை விட்டு வெளியேறினார் என்பதை பற்றி சிந்தியுங்கள். இந்துவாக இருந்து பின் சீர்திருத்தவாதியாக மாறிய தந்தை பெரியாரின் கொள்கைகளை கொஞ்சம் நடுநிலையான கண்ணோட்டத்தில் சிந்தித்து பாருங்கள். அன்று மீனாட்சிபுர மக்கள் ஏன் இந்து மதத்தை விட்டு வெளியேறினார்கள் என்பதை யோசியுங்கள். இன்றும் நெல்லை ஆய்குடி மக்கள் ஏன் ''நாங்கள் முஸ்லிம்களாய் மதம் மாறுவோம்!'' என்று போர்க்கொடி தூக்குகிறார்கள் என்பதையும் யோசியுங்கள். நீங்கள் பயணிக்க வேண்டிய தூரம் ரொம்ப அதிகம் நண்பர்களே!

உங்கள் முன் இரண்டு choices இருக்கின்றன:

1. "எங்கள் சமுதாயத்தில் எந்த பிரச்னையும் இல்லை" என்று கண்ணை மூடிக் கொண்டு சாதிப்பது. இதைத்தான் உங்களில் பலர் செய்து கொண்டிருக்கிறீர்கள். இந்த அணுகுமுறையால் பலனேதும் இல்லை. கார்ப்பெட்டிற்கு அடியில் உள்ள குப்பை அப்படியேதான் இருக்கும்!

2. சமுதாய அவலங்களைப் பற்றி சிந்தித்து அவற்றிற்கு ஆக்கபூர்வமான தீர்வுகளை கண்டறிய முயல்வது.

The Choice is Yours! வாழ்த்துக்கள்!

Tuesday, February 06, 2007

HINDHU அவர்களின் பதில்!

எனது முந்திய பதிவுக்கு HINDHU அவர்கள் பதிலளித்திருக்கிறார்கள். அவருக்கு என் நன்றி.


அன்பு மரைக்காயர் ஐயா உங்களுக்கு எனது நன்றிகள் தாங்கள் நினைப்பது போல் எழில் ஐயா அவர்கள் இந்து மதம் பற்றி அதிகம் அறியாதவர் அல்ல சொல்லப்போனால் நான் தான் அதிகம்
அறியாதவனாய் இருக்க வேண்டும் ஏனென்றால் நான் ஒன்றும் அதிகம் கற்றவன் அல்ல எனக்கு இன்னும் இருபத்தி ஒரு வயது கூட பூர்த்தியாகவில்லை.
எழில் ஐயாவை நான் அறிந்தவனல்ல. ஆனால் இருபத்தி ஒரு வயதே நிரம்பிய உங்களின் எழுத்துக்களில் தெரியும் பெருந்தன்மையும் கண்ணியமும் எழில் அவர்களின் எழுத்துக்களில் தெரிவதில்லை. அதில் தெரிவதெல்லாம் இஸ்லாமிய துவேஷம், காழ்ப்புணர்வு, வெறுப்பு மட்டுமே! குறை குடம் தளும்பத்தானே செய்யும்!


என்வகையில் சொல்லப்போனால் எழில் அவர்கள் தெரிவித்த கருத்துக்களை கொஞ்சம் எளிய நடையில் சொன்னதாகவே படுகிறது. எனக்கு என்ன வருத்தம் என்னவென்றால் தாங்கள் இந்து
மதத்தினது உட்கருத்துக்களை புரிந்து கொள்ளாமல் தவறான அபிப்பிராயத்துடன் விமர்சிக்க முற்படுவதே ஆகும்.

இஸ்லாம் மார்க்கத்தின் உட்கருத்துக்களை புரிந்து கொள்ளாமல் தவறான அபிப்ராயத்துடன் எழில் விதண்டாவாதம் செய்ததால்தான் நான் இந்து மதத்தை விமர்சிக்க நேர்ந்தது. இன்னொரு மார்க்கத்தைப் பற்றி விமர்சனம் செய்யும் எழிலுக்கு தனது மதத்தைப் பற்றிய கேள்விகளுக்கு ஆதாரங்களுடன் பதிலளிக்க ஏன் முடியவில்லை? அவரது கருத்துப்படி ஒரு இஸ்லாமிய கொள்கை தவறானது என்றால் அதற்கு எழிலின் இந்து மதம் என்ன தீர்வு வைத்திருக்கிறது? 'இது தவறு' என்று சொல்ல முடிந்தவர் 'எது சரி?' என்பதையும் சொல்ல வேண்டும்தானே?



//எனது பதிவுகள் சில நேரங்களில் உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் மனதை புண்படுத்தியிருக்கலாம். அதற்காக நான் வருந்துகிறேன். ஆனால் இஸ்லாமிய துவேஷ பதிவுகள் வந்துக் கொண்டிருக்கும் வரை அவற்றுக்கு பதில் கொடுக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன்.//

எனக்கு எந்த மனவருத்தமும் கிடையாது ஆனால் தாங்களும், தங்களைப் போன்றவர்களும் இந்து மதத்தைப்பற்றி செய்யப்படும் விமர்சனங்கள் தவறான கருத்துப் புரிதல்களுடன் மேற் கொள்ளப்படுவதால் தான் நான் வருந்துகிறேன். தங்களின் மீதான மதத் துவேஷப்பதிவுகளுக்கு தாங்கள் அவரவர்களைத்தான் சாட வேண்டுமே ஒழிய இந்துமதத்தை அல்ல. அவர்கள் தவறாக விமர்சித்தால் தாங்களும் அவர்களைப்போலவே செய்ய வேண்டுமா என்ன?
இஸ்லாமிய கொள்கைகள் தவறு என்று சொன்ன எழில் அவர்கள் முஸ்லிம்களை இந்து மதத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். இப்படி அழைப்பு விடுப்பதில் ஒரு தவறுமில்லை. ஆனால் இந்து மதத்திற்கு அழைத்த நண்பர் 'எந்த இந்து மதத்தை சொல்கிறீர்கள்?' என்று நாம் கேட்டால் தெளிவாக விளக்கம் கொடுக்க வேண்டாமா? ஆனால் அந்தக் கேள்விகள் உங்களைப் போன்றவர்களுக்கு நான் இந்து மதத்தை சாடுவது போல தெரிகின்றன. 'இந்து மதம் பற்றி இது போல கேள்விகள் எழுவதற்கு நான்தான் காரணம்' என்று பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டிய எழில் அவர்கள், இப்போது விலகி ஓடுகிறார்.


தாங்கள் சொல்வதைப்போல் பல இஸ்லாமியர்களின் பதிவுகள் இந்துமதத்தை கேவலப்படுத்துவதாக காணப்படுகின்றன நான் அவற்றிற்கும் மறுத்து பதிவெழுத வேண்டும். தாங்கள் எனக்கும்
இஸ்லாமிய துவேஷம் என்று கருத வேண்டாம். ஏனென்றால் இந்து மதமெனது தாய் எனது தாயின் குணங்கள் எனக்குத்தான் தெரியும் அக்குணங்களை அயல் வீட்டுக்காரர் தவறான புரிதல்களுடன் விமர்சிக்க முற்படுவாராயின் அது தவறானது என்று விளக்கும் கடமையும், அதேநேரம் அயல் வீட்டுக்காரரின் தாயை பழிக்கும் படியாக அமையக்கூடாது என்ற பொறுப்பும், கண்ணியமும் எனக்கு இருக்கிறது.

'இந்து மதமெனது தாய்' என்கிற உங்கள் மதப்பற்றை மதிக்கிறேன். இந்து மதத்தைப் பற்றி நன்கு புரிதலுள்ள உங்களைப் போன்றவர்கள் அதிகம் எழுத வேண்டும் என்று விரும்புகிறேன். இஸ்லாமியர்கள் யாரேனும் அனாவசியமாக இந்து மதத்தை கேவலப்படுத்தி எழுதினார்களென்றால் அது கண்டிக்கத் தக்கது. என்னுடையை பதிவுகளிலேயே கூட சில முஸ்லிம் சகோதரர்கள் என்னை கண்டித்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஏனென்றால் பிற மத கடவுள்களை நிந்திக்க வேண்டாம் என்று இஸ்லாம் கட்டளையிட்டிருக்கிறது. பிற மதங்களின் விஷயத்தில் வரம்பு மீற வேண்டாம் என்றும் எச்சரிக்கிறது. இஸ்லாம் பற்றி எடுத்துச் சொல்வதுதான் ஒரு முஸ்லிமின் கடமை.

ஆனால் ஒரு முஸ்லிம் பதிவரை மற்ற முஸ்லிம்கள் கண்டிப்பதைப் போல எழில், நேசகுமார் போன்றவர்களை பிற இந்துக்கள் கண்டிப்பதை நான் பார்க்கவில்லை. 'நமக்கேன் வம்பு' என்று மற்ற இந்துக்கள் பேசாமல் இருப்பதை எழில் போன்றவர்கள் மவுன அங்கீகாரமாக, ஆதரவாக எடுத்துக் கொள்கிறார்கள் போலிருக்கிறது. அதனால்தான் சொல்கிறேன், உங்களைப்போல இந்துமத பற்றாளர்கள் எழில் போன்றவர்கள் வீண்வம்பை விலைக்கு வாங்கும்போது மவுனமாக இருக்காமல் கண்டிக்க முன்வர வேண்டும்.

ஆனால் இஸ்லாம் பற்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் பல பதிவர்கள் தவறான விமர்சனங்களை முன்வைப்பதை நான் பார்த்திருக்கிறேன். இவர்கள் நான் முன்பு சொன்னது போல தங்கள் மதங்களின் மீது நம்பிக்கை இழந்தவர்கள். இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தினால் மட்டும்தான் தனது மதத்தை கொஞ்சமாவது காப்பாற்ற முடியும் என்று இவர்கள் நம்புகிறார்கள். இஸ்லாத்தின் கொள்கைகள் தவறு என்று சொல்லத் தெரிந்த இவர்களுக்கு அதற்கு மாற்றுக் கருத்து அவர்களின் மதத்தில் இருக்கிறதா என்றால் பதில் சொல்லத் தெரியாது.

இந்த இஸ்லாமிய துவேஷ பதிவர்களுக்கு பல முஸ்லிம் பதிவர்கள் தெளிவாக பலமுறை விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அதற்கெல்லாம் அவர்களின் துவேஷ மனங்கள் சமாதானமடையாது. மேலும் மேலும் கேள்விகள், நக்கல் வசனங்கள், துவேஷ வலைப்பக்கங்களிலிருந்து copy & Paste-கள், வரலாற்றுப் புரட்டுகள் என பல வகை தாக்குதல்களை முஸ்லிம்கள் சந்தித்திருக்கிறார்கள். அதனால்தான் நான் எதிர்க்கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன். 'இஸ்லாமிய கொள்கை தவறு என்றால் அதற்கு உங்கள் மதத்தில் மாற்றுக் கருத்து என்ன இருக்கிறது? ஆதாரத்துடன் விளக்க முடியுமா? இஸ்லாமிய கொள்கைகள் சீர்திருத்தப்பட வேண்டும் என்று சொல்லுவதற்கு முன் உங்கள் மதத்தில் உள்ள கேவலமான கொள்கைகளை சீர்திருத்தி முடித்து விட்டீர்களா?' இதைத்தான் நான் கேட்கிறேன்.


இஸ்லாம் மீது தவறான கருத்துக்கள் தெறிவிக்கப்படுமாயின் தாங்கள் மறுக்கலாம், ஆனால் அவை மிகவும் கீழ்தரமான சொற்பிரயோகங்களால் மேற்கொள்ளப்படக்கூடாது தங்களின்
பதிவுகளில் இது இல்லை ஆனாலும் வேறும் பலரின் பதிவுகளில் காணப்படுகிறது. இவ்வாறான விடயங்கள் முறையான கருத்துப் பகிர்வுக்கு வழிவகுக்காது மாறாக வன்முறையையே வளர்க்கும்.
கீழ்த்தரமான சொற்பிரயோகங்களில் எனக்கும் நம்பிக்கை இல்லை. ஆனால் என்னை எதிர்ப்பவர்கள் இதற்கு எதிர்மாறான நம்பிக்கையில் இருக்கிறார்கள். எனக்கு வரும் பல பின்னூட்டங்களை நான் அனுமதிப்பதில்லை. அதையெல்லாம் பார்த்தீர்களென்றால் வன்முறையை யார் வளர்க்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

தாங்கள் ஒருபதிவில் "நாலு பதிவெழுதியும் இதுதான் இந்துமதம் என்று தெரிவிக்க முடியவில்லை" என்று கூறியிருந்தீர்கள் நாலு பதிவில்லை நாலாயிரம் கோடி பதிவெழுதினாலும் இந்துமதத்தின் பேருண்மைகளை எளிதில் விளக்கி விட முடியாது.
உண்மைதான். இதை நான் ஒப்புக் கொள்கிறேன். இஸ்லாத்தின் பேருண்மைகளைப் பற்றி ஓரிரு பதிவுகளை படித்துவிட்டு மட்டும் முடிவு செய்ய முடியாது என்பதையும் தங்களின் அரைகுறை அறிவை வைத்துக் கொண்டு இஸ்லாத்தைப் பற்றி 'அது சரியல்ல, இது தவறு' என்றெல்லாம் 'கருத்து' சொல்வது அடிமுட்டாள்தனம் என்பதையும் எழில் போன்றவர்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் நான் அப்படி சொல்லியிருந்தேன்.

நான்கூட பதிவை தொடங்கும் போது எந்த மதத்தையும் விமர்சிக்க கூடாது என்றும், எனது பதிவு முற்றிலுமாக இந்துமதத்தை விளக்க மட்டுமே பயன் பட வேண்டும் என்றும் தான் கருதினேன். ஆனால் இன்று தங்களின் பதிவுகளுக்கு எதிர்ப்பதிவு எழுதும் நிலைக்கு வந்துவிட்டது. அத்துடன் தங்களின் ஏனைய இந்துமதம் பற்றிய பதிவுகளுக்கு என்னிடம் இருந்து எதிர்ப்பதிவு வந்தே தீரும். ஆயினும் நமது கருத்துக்களே மோதவேண்டும், தவிர நாம் அல்ல என்பதையும் மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் சொல்வதைப்போல் நானும் இந்துமதம் பற்றிய தவறான கருத்துக்களை தாங்கி வரும் பதிவுகளுக்கு என்னிடம் இருந்தும் எதிர்ப்பதிவு வரும் என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன். என்வகையில் தங்கள் கருத்துக்களே எனக்கு எதிர் என்பதையும் தாங்கள் அல்ல என்பதையும், தாங்களும் இப்படியே கருத வேண்டும் என்றும் கருதுகிறேன்.நன்றி

தாராளமாக எழுதுங்கள். உங்களைப் போல இந்து மதப் பற்றாளர்கள் இந்து மதத்தை பற்றி அதிகம் எழுத வேண்டும் என்பதைத்தான் நானும் விரும்புகிறேன். ஆனால் நீங்கள் இந்து மதத்தைப் பற்றி எழுதுவதால் எழில் போன்றவர்கள் பொறுப்பிலிருந்து விலகி விட்டதாக பொருளல்ல. அவர் இஸ்லாத்தை பற்றி சொன்ன கருத்துகளுக்கு பதிலாகத்தான் நான் இந்து மதத்தைப் பற்றிய கேள்விகளை அவர் முன் வைத்தேன். அதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது.

Friday, February 02, 2007

HINDHU அவர்களுக்கு!

எழில் என்பவரிடம் இந்துமதம் பற்றி நான் கேட்ட சில கேள்விகளுக்கு HINDHU என்ற நண்பர் பதிலளித்திருக்கிறார். அவருக்கு என் நன்றிகள். இந்து மதம் பற்றி நன்கு புரிதலுள்ள இவரைப் போன்றவர்கள் அதிகம் எழுத வேண்டும் என்றும் விரும்புகிறேன். தொடர்ந்து எழுதுங்கள் HINDHU அவர்களே!

//அன்பு மரைக்காயர் ஐயார் அவர்களே தாங்கள் இந்துமதம் பற்றி கொண்டிருக்கும் கருத்து தவறானது. தாங்கள் எழில் ஐயா அவர்களிடம் கேட்ட வினாக்களுக்கு விடையளிக்கிறேன் இந்துமதத்தை பற்றி விளக்கவேண்டியது ஒரு இந்துவின் கடமை..// என்று HINDHU அவர்கள் தம் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

ஐயா, நான் வெளிப்படையாக சொல்கிறேன். எனது பதிவுகள் எல்லாமே ஒரு வகையில் 'பின் வினை' பதிவுகள்தான். இங்கு சில வலைப்பதிவர்கள் இருக்கிறார்கள். தங்களை இந்து மத காவலர்கள் போல காட்டிக் கொள்வார்கள். ஆனால் இந்து மதத்தைப் பற்றி அவர்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது. அவர்களின் பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் இஸ்லாமையும் முஸ்லிம்களையும் தாக்குவதிலேயே குறியாக இருப்பார்கள். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போற பாதை கோணலாயிருக்கு என்று குறை சொன்னானாம். அந்த கதைதான் இவர்களின் கதை!!

TATA நிறுவனம் Corus-ஐ வாங்கியதை சொல்லும் பதிவாக இருந்தாலும் அதிலும் முஸ்லிம்களை தாக்க வேண்டும் இவர்களுக்கு. இந்துத்துவ பயங்கரவாதி பால்தாக்கரேயை கண்டிக்கும் பதிவாக இருந்தாலும் அதிலும் முஸ்லிம்களை தாக்குவார்கள். தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை. முஸ்லிம்களுக்கு ரெண்டு கண்ணும் போக வேண்டும் என்ற நல்லெண்ணம் போலிருக்கு இவர்களுக்கு!

இப்படிப்பட்ட பதிவர்களுக்கு பதில் சொல்வதற்காகத்தான் நான் எழுத ஆரம்பித்தேன். இஸ்லாத்தைப் பற்றியோ, முஸ்லிம்களைப் பற்றியோ குறை சொல்லி பதிவு எழுத இவர்களுக்கெல்லாம் எந்த அருகதையும் கிடையாது என்பதை சுட்டிக் காட்டுவதுதான் எனது பதிவுகளின் நோக்கம்.

எனது பதிவுகள் சில நேரங்களில் உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் மனதை புண்படுத்தியிருக்கலாம். அதற்காக நான் வருந்துகிறேன். ஆனால் இஸ்லாமிய துவேஷ பதிவுகள் வந்துக் கொண்டிருக்கும் வரை அவற்றுக்கு பதில் கொடுக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன்.

இப்படிப்பட்ட பதிவர்களில் ஒருவர்தான் நம் எழில். இந்து மதத்தைப் பற்றிய எனது கேள்விகளே உங்களுக்கெல்லாம் வருத்தம் அளிக்கிறது என்றால், இஸ்லாம் பற்றி எழில் சொன்ன கருத்துக்களை என்னவென்று சொல்வது? இதையெல்லாம் முஸ்லிம்கள் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? //“இறைதூதர் என்ற கருத்தே தவறு என்பது என் கருத்து. அதுவும் இறுதி இறைதூதர் என்ற கருத்து மிக மிகத்தவறு என்பது என் கருத்து.”// என்று சொன்னவர் எழில். இதை சொல்ல இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? இதற்குகூட பல முஸ்லிம் பதிவர்கள் கோபப்படாமல் தெளிவாக பதிலளித்தபிறகும் 'கேஜி படிக்கும் குழந்தைக்குக் கூட புரியும் அளவுக்கு ஒரு அடையாளம் இருப்பவர்தான் இறைத்தூதராக இருக்க முடியும்' என்று விதண்டாவாதம் செய்தவர்தான் இந்த எழில். தான் ரொம்ப லாஜிக்கலாக பேசுவதாக அவருக்கு எண்ணம் போலிருக்கிறது.

இன்னொரு மதத்தைப் பற்றி இப்படி expert opinion கொடுக்கக்கூடிய ஒரு நபர் தனது சொந்த மதத்தை பற்றி அக்குவேறு ஆணிவேறாக தெரிந்து வைத்திருக்க வேண்டாமா? 'இந்து மதம் வாருங்கள்' என்று முஸ்லிம்களை அழைத்துகூட ஒரு பதிவு எழுதினார் இவர். ஆனால் இந்து மதம் பற்றி நான் இவரிடம் கேட்ட கேள்விகளுக்கு இவரால் பதில் சொல்ல முடிந்ததா என்றால் இல்லை. இவரிடம் நான் கேட்ட கேள்விகளுக்கு HINDHU ஐயா நீங்கள் வந்து பதில் சொல்ல வேண்டியதாகி விட்டது. எனக்கு எழில் பதில் சொல்வார், இறைத்தூதர்கள் விஷயத்தில் இவர் கேட்ட 'லாஜிக்கலான' கேள்விகளை நானும் கேட்கலாம் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் இவரால் பதில் சொல்ல முடியவில்லையே? சட்டியில் ஒன்றும் இல்லையா? அகப்பை காலியாகவே வருகிறதே? இந்த காலி அகப்பையை வைத்துக் கொண்டுதானா இவர் இஸ்லாமை கிண்ட வந்தார்?

'இந்து மதம் வாருங்கள்' என்ற இவரது பதிவே கூட இவர் எழுதியது அல்ல. யாரோ ஒருவர் எழுதிக் கொடுத்ததைத்தான் இவர் தனது பதிவில் இட்டிருந்தார். தனது சொந்த மதத்தைப் பற்றி நல்லதாக நாலு வார்த்தை சொல்ல முடியாத, அது பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூட வக்கில்லாத இந்த நபர் இன்னொரு மதத்தைப் பற்றி கருத்து சொல்ல என்ன அருகதை இருக்கிறது? இவரைப் போன்றவர்களால் இவர் சார்ந்திருக்கும் இந்து மதத்திற்குத்தான் இழுக்கு!

இவர்களது நடவடிக்கைகள் வெளிப்படுத்தும் உண்மை என்ன தெரியுமா? 'நம் இந்து மதத்தில் உயர்வாக பேச ஒன்னுமேயில்லை. நாம் எப்பாடு பட்டாலும் அதை தூக்கி நிறுத்த முடியாது. அதனால் இஸ்லாமை தாக்கி அதன் வளர்ச்சியை தடுத்து நிறுத்தினால்தான் நம் மதத்தை ஓரளவுக்காவது காப்பாற்ற முடியும்' என்று இவர்கள் உள்மனதில் நம்புகிறார்கள் போலிருக்கிறது. தங்கள் மதத்தின் மீது அந்த அளவுக்கு நம்பிக்கை இழந்து போயிருக்கிறார்கள் இவர்கள் பாவம். HINDHU ஐயா போன்றவர்கள் எழில் போன்றவர்களிடம் மிக ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். போலிச்சாமியார்கள் போன்ற போலி ஆ'சாமி'கள் இவர்கள். இவர்களால்தான் இந்து மதத்திற்கே களங்கம் ஏற்படுகிறது.

HINDHU அவர்களின் பதிவில் பின்னூட்டமிட்டிருந்த ச.திருமலை அண்ணன் அவர்கள் //மரக்காயர் குரங்கு பிடிக்கக் கிளம்பியதில் எங்களுக்கு எல்லாம் இன்னொரு பிள்ளையார் கிடைத்திருக்கிறார்// என்று குறிப்பிட்டிருந்தார். திருமலை அண்ணன் அவர்கள் பிள்ளையார் பக்தராக இருக்கலாம். அதற்காக அனுமாரை கிண்டலடித்திருக்க வேண்டியதில்லை. :-)

திருமலை ஐயா, 'இதுவரை பிடிக்கக் கருதியது நன்றாகவே பிடிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. இனி, பிடிக்கக் கருதுவதும் நன்றாகவே பிடிக்கப் படும்!'