Thursday, May 17, 2007
Sunday, May 06, 2007
விபச்சாரிகளின் வங்கி!
தலைப்பைப் பார்த்துவிட்டு யாரும் கோபம் கொள்ள வேண்டாம். நம் நாட்டுச்சட்டப்படி விபச்சாரம் தண்டனைக்குறிய குற்றம். இருப்பினும் இங்கே ஒரு சாதனையாகச் சொல்லப்பட்டுள்ள செய்தியை படிக்கும்போது விபச்சாரம் ஒரு தேசிய தொழிலோ என்று எண்ணத் தோன்றுகிறது.
செக்ஸ் தொழிலாளர்கள் நடத்தும் வங்கியின் சாதனை
மே 05, 2007 கொல்கத்தா:
விபச்சாரப் பெண்களால் நடத்தப்படும் ஒரு வங்கி ரூ. 9 கோடி அளவுக்கு முதலீடுகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. கொல்கத்தாவில் கடந்த 1995ம் ஆண்டு உஷா பன்னோக்கு கூட்டுறவு சங்கம் என்ற கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டது. மேற்கு வங்க மாநில கூட்டுறவு வங்கியின் ஆதரவுடன் இந்த வங்கியை, தர்பார் மகிளா சம்மனய் சமிதி என்ற அமைப்பு தொடங்கியது. இந்த வங்கியை முழுக்க முழுக்க விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களே தொடங்கி நிர்வகித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தின் 5 மாவட்டங்களில் 8500 உறுப்பினர்கள் இதில் சேர்ந்துள்ளனர். இதன் முதலீடு ரூ. 9 கோடியைத் தொட்டு சாதனை படைத்துள்ளது.
மேற்கு வங்கத்தின் ரெட் லைட் ஏரியாவான சோனாகாச்சி பகுதியில்தான் முதலில் இந்த வங்கியின் கிளை தொடங்கப்பட்டது. அங்கு கணிசமான அளவு விபச்சாரப் பெண்கள் உறுப்பினராக சேர்ந்தனர். அதன் பின்னர் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விபச்சாரப் பெண்களும் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.
இந்த கூட்டுறவு வங்கி ரூ . 15 லட்சம் வரை கடன் வழங்கி சாதனை படைத்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பெண்களைத் தேடிப் போய் அவர்களுக்கு இந்த வங்கி சேவை செய்து வருகிறது.
கொல்கத்தாவில் 2, தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கனா, நாடியா, முர்ஷிதாபாத் ஆகிய மாவட்டங்களில் தலா ஒன்றும் என மொத்தம் 7 கிளைகளை இந்த வங்கி கொண்டுள்ளது. வங்கியன் கடன் வழங்கும் பிரிவுக்குத் தலைமை வகிக்கும் சாந்தனு சாட்டர்ஜி வங்கியின் செயல்பாடுகள் குறித்துக் கூறுகையில், செக்ஸ் உழைப்பாளிகளின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தவே இந்த வங்கியை தொடங்கினோம். இப்போது தினசரி ரூ. 50 ஆயிரம் வரை முதலீடு செய்யப்படுகிறது என்றார்.
இந்த வங்கியின் தலைவரும் , செக்ஸ் உழைப்பாளியுமான அமிதா தாஸ் கூறுகையில், இன்னும் நிறைய சிவப்பு விளக்குப் பகுதிகளில் கிளைகள் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
வங்கியின் ஆண்டு முதலீட்டின் அளவு ரூ. 9 கோடியைத் தொட்டு விட்டதாம்.
இந்த வங்கியில் கணக்குத் தொடங்க எந்தவிதமான அடையாள ஆவணங்களும் கேட்கப்படுவதில்லை. குறைந்தபட்ச முதலீடு ரூ. 15 தான். தினசரி தாங்கள் சம்பாதிக்கும் பணத்திலிருந்து ஒரு பகுதியை வங்கியில் சேமித்து வைக்குமாறு விபச்சாரப் பெண்களிடம் இந்த வங்கி பிரசாரம் செய்கிறது. அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது.
சோனாகாச்சி பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்களில் பலர் வசதி இல்லாதவர்கள் . தங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் ஆணுறைகளைப் பயன்படுத்த மறுக்கும் நேரத்தில் தங்களிடம் பண வசதி இல்லாததால், தாங்களே வாங்கி வைத்துக் கொள்ளக் கூட முடியாத நிலையில் இருப்பவர்கள். தற்போது வங்கி வசதி வந்து விட்டதால் இவர்களே ஆணுறைகளை வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். மருத்துவ சோதனைகளையும் அவ்வப்போது செய்து கொள்ள முடிகிறதாம்.
இந்த வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் விபச்சாரப் பெண்கள் தங்கள் குழந்தைகளின் படிப்புக்கு கடன் பெற்று பயன் அடைந்து வருகின்றனராம்.
====
விபச்சாரிகள்- செக்ஸ் தொழிலாளர்களாம்!
தொழிலாளர்களின் ஆட்சி என்று சொல்லப்படும் கம்யூனிஸ்டுகள் ஆளும் மேற்கு வங்கத்தில்தான் இந்தக் கொடுமை நடக்கிறது! பாலியல் சுகத்திற்காகவும் பணத்திற்காகவும் கண்டவனுக்கும் முந்தானை விரிக்கும் விபச்சாரிகளின் செயலை உழைப்பு என குறிப்பிடுவது சரியா? காடு-கழனிகளில் அரைவயிற்றுடன் ஒருநாளின் மூன்றில் இரண்டு பங்கு கால்கடுக்க, உடல்நோக உழைக்கும் விவசாயினுடைய உழைப்பும் இதுவும் ஒன்றா?
விபச்சாரத்தில் ஈட்டும் பணத்தை சேமிக்க வேண்டுமாம்! நாடு உருப்படுமா? அதேபோல் 'குடிமகன்'களுக்கும் வங்கி லோன் வழங்கி அரசே உதவலாமே! வங்கி வழங்கும் கடன்தொகையால் ஆணுறையை போதுமான அளவுக்கு இருப்பு வைத்துக் கொள்ள முடியுமாம். இந்த கடனை அவலமான இந்த தொழிலிலிருந்து வெளிப்பட்டு வேறு தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு கொடுக்கலாமே!
இத்தகைய அவலங்களைக் கண்டுகொள்ளாமல் போனால் வெகுசீக்கிரம் அன்னை பாரதம் என்று அறியப்படும் நம்நாடு வேறு பெயரில் அறியப்படும் அபாயம் இருக்கிறது.
Posted by
மரைக்காயர்
at
6:18 PM
6
comments
Labels: இந்தியா, விபச்சாரம்
Saturday, May 05, 2007
காதலை எதிர்க்கும் இந்துத்துவாக்கள்!
அந்தச் செய்தியில் சம்பந்தப் பட்டவர்களின் பெயர்களோ, அவர்கள் சார்ந்த சமூகங்களோ குறிப்பிடப் படாமலிருந்தால், 'வழக்கமான காதல் பிரச்னைதானே..!' என்று அதை கடந்து போயிருப்பீர்கள். ஆனால் அதில் சம்பந்தப்பட்ட ஆண் ஒரு முஸ்லிமாகவும் பெண் சிந்தி சமூகத்தைச் சேர்ந்த ஒரு இந்துவாகவும் இருந்து தொலைத்து விட்டதால், மத்தியப் பிரதேச இந்துத்துவாக்களுக்கு 'அரசியல்' பண்ண ஒரு காரணம் கிடைத்து விட்டது. பேனையே பெருமாளா ஆக்குறவங்களுக்கு பெருச்சாளியே கிடைத்தால் சும்மா விடுவார்களா என்ன?
குஜராத்துக்கு அடுத்து சிந்தி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ள மாநிலம் மத்தியப் பிரதேசம். இதன் தலைநகரமான போபாலில் உள்ள ஈத்கா ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த பிரியங்கா வட்வாணி, பி.காம். இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி. அகமதாபாத் ஏரியாவில் பிரியங்கா குடும்பம் வசித்து வந்தபோது, பக்கத்து வீட்டு முகமது உமர் என்ற இளைஞரோடு அவருக்குக் காதல் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் 2-ம் தேதி தேர்வு எழுத கல்லூரிக்குப் போன பிரியங்கா, அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், இரு வீட்டாருக்கும் ஒரு கடிதம் வந்திருக்கிறது. அதில், ''நாங்க ரெண்டு பேரும் மேஜர். ஒருத்தரை ஒருத்தர் உயிருக்கு உயிரா காதலிக்கிறோம். எங்க காதலைக் கண்டிப்பா யாரும் ஏத்துக்க மாட்டாங்க. அதனால நாங்க இந்த ஊரை விட்டுப்போய் கல்யாணம் பண்ணிக்கிறோம். நாங்க போன பிறகு யாரும் எந்த கலவரமும் செய்யாதீங்க'' என காதல் ஜோடியான உமரும், பிரியங்காவும் எழுதிக் கையெழுத்துப் போட்டிருக்கின்றனர்.
பிரியங்காவின் கடிதத்தைப் பார்த்துக் கொதித்துப் போன அவளுடைய பெற்றோர், உமர் தங்கள் மகளைக் கடத்திக்கொண்டு போய்விட்டதாகப் புகார் கொடுத்தனர்.
ஈத்கா ஹில்ஸ் காவல் நிலைய போலீஸ், உமரின் சகோதரர் ஷகீல் என்பவரைத் தூக்கிவந்து சட்ட விரோதமாக சிறையில் அடைத்து, 'உமர் எங்கே?' என மிரட்டியது. இப்படி ஷகீல் காவல் நிலையத்தில் சித்ரவதை செய்யப்படும் காட்சிகளை எப்படியோ உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று ரகசியமாகப் படம் பிடித்து வெளியிட்டது. அதன் பிறகு கவர்னர் தலையிட்டு, ஷகீல் விடுதலை செய்யப்பட்டர். இந்த விவகாரம் எல்லா மீடியாக்களிலும் பரபரப்பான விஷயமாக... போபால் நகரம் சூடாகியது.
வி.ஹெச்.பி., பஜ்ரங்தளம் போன்ற இந்து அமைப்புகள் ஒன்றுசேர்ந்து நடத்திவரும் 'இந்து கன்னிகள் பாதுகாப்பு மன்றம்' இந்தக் காதல் பிரச்னையைக் கையில் எடுத்துக் கொண்டு, 'பிரியங்காவை மீட்டு உமரைக் கைது செய்ய வேண்டும்' என போராட்டத்தில் குதித்தது. அதன் உச்சக் கட்டமாக ஏப்ரல் 14-ம் தேதி போபால் நகரம் முழுக்க பந்த் நடத்தி தங்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள்.
இந்துத்துவ கும்பல் இரட்டை முகம் கொண்டவை என்பதற்கு இது ஒரு உதாரணம். 'இந்து கன்னிகளை பாதுகாக்க போராட்டம்' நடத்தும் இதே கும்பலைச் சேர்ந்தவன்தான் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட சொக்ராபுத்தீனின் அப்பாவி மனைவி கவுசர்பீ-யை கற்பழித்து எரித்து கொலை செய்ய காரணமாக இருந்த கயவன் வன்சாரா . இவன் RSS கும்பலில் உறுப்பினனாக இருந்தவன் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
இப்படி ஒருபுறம் காதலுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்க... மும்பையில் ஒரு கோயிலில் தனது பெயரை உமேஷ் என மாற்றி இந்துவாக மாறினார் உமர் . அதே கோயிலில் பிரியங்காவை திருமணமும் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு கோர்ட்டுக்குப் போன தம்பதி, ''எங்கள் திருமணத்தை அங்கீகரித்து, எங்கள்மீது போலீஸ் நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும்'' என மனு செய்தனர். அவர்கள் கேட்ட படியே உத்தரவிட்டது கோர்ட். ஆனாலும் பிரச்னை ஓய்ந்துவிடவில்லை.
உமர் உமேஷாக மாறிய பிறகும் ஏன் பிரச்னை ஓயவில்லை? 'யார் வேண்டுமானாலும் இந்து மதத்திற்கு மாறி வரலாம்' என்று இணையத்தில் பிரச்சாரம் செய்பவர்கள் இதற்கு பதிலளிப்பார்களா? ஒருவேளை உமர் ஆர்யசமாஜிடம் போய் ஐயாயிரமோ பத்தாயிரமோ கொடுத்து ஒரு சர்டிபிகேட் வாங்கியிருந்தால் இந்த பிரச்னை தீர்ந்திருக்குமா?
சிந்தி சமூகத்தின் போபால் நகரத் தலைவரும், உமாபாரதியின் பாரதிய ஜனசக்தி கட்சியின் தலைவர்களில் ஒருவருமான பகவன்தாஸ் சம்தானி என்பவரின் கருத்தைப் பாருங்கள்..!
''பிரியங்காகிட்ட செல்போன் இருக்கு. அதோடு டூவீலர்ல காலேஜ் போயிருக்கா. செல்போனும் டூவீலரும்தான் எல்லா பிரச்னைக்கும் காரணம். காதலர்கள் துப்பட்டாவால் முகத்தை மூடிக்கிட்டு ஊரு சுத்த ஆரம்பிச்சிடுறாங்க. எங்க சிந்தி இனப் பெண்கள் இனி வெளியே போகும்போது துப்பட்டாவுல முகத்தை மூடக் கூடாது. செல்போன், டூவீலர் பயன்படுத்தக் கூடாதுன்னு தடை விதிச்சிருக்கோம். பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் கொடுக்காம பெற்றோருடைய கண்காணிப்பிலேயே வச்சிருக்க சொல்லி இருக்கோம்''
என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு பாருங்கள்..! இந்த விஞ்ஞான யுகத்தில் உலகம் படுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கையில், இவர்கள் நூற்றாண்டுகளை கடக்க மறுத்து அங்கேயே நின்று கொண்டிருக்கிறார்கள்.! இவங்கதான் சொல்றாங்க, இஸ்லாம் பெண்களுக்கு சுதந்திரம் கொடுப்பதில்லை என்று!
இதையெல்லாம் தூக்கி சாப்புடுற மாதிரி ஒரு கண்டுபிடிப்பு இருக்கு..! அதை கண்டுபிடிச்சவர் இந்த இந்துத்துவ கும்பலை சேர்ந்தவர்தான். வி.எச்.பி தலைவர் ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர் என்பவரின் வாயிலிருந்து உதிர்ந்த முத்து இது..! "இந்துப் பெண்கள் முஸ்லிம் ஆண்களிடம் மயங்குவதற்கு உடல்ரீதியான காரணம் ஒன்று இருக்கிறது. முஸ்லிம்கள் விருத்த சேதனம் (circumcision) செய்து கொள்வதால் அவர்களால் இந்துப் பெண்களுக்கு அதிக உடல் சுகம் (Sharirik anand) கொடுக்க முடிகிறது . இந்து ஆண்கள் இதை செய்து கொள்வதில்லை". 'இது'தான் முஸ்லிம் ஆண்களின் 'ரகசிய ஆயுதம்' என்பது இவரது கண்டுபிடிப்பு..!!!!!
அடப்பாவிகளா! இந்து மத அமைப்பு ஒன்றின் தலைவராக இருப்பவர் பேசுற பேச்சா இது? இந்து சகோதரிகளை இதை கேவலமாக வேறு யாராவது அவமானப் படுத்த முடியுமா?
பிரியங்கா வீட்டிலும் சரி, உமரின் வீட்டிலும் சரி... யாரும் பேசத் தயாராக இல்லை. போபால் முஸ்லிம் சமூகத்தின் முக்கியஸ்தரும், 'ஜமாத்-ஏ-உலமா-ஹிந்த்'தின் செய்தித் தொடர்பாளருமான ஹையத் யூசுப், ''இது உமரோட சொந்தப் பிரச்னை. இதுல நாங்க தலையிட ஒண்ணுமே கிடையாது. ஏற்கெனவே இங்கே அடிக்கடி இந்து-முஸ்லிம் பிரச்னை உருவாகும் சூழ்நிலையில் வி.ஹெச்.பி. மற்றும் பஜ்ரங்தள அமைப்புகள் இந்த விவகாரத்தை அரசியலாக்கி ஆதாயம் தேடுவதை நிறுத்த வேண்டும். ரெண்டு குடும்பமும் பேசித் தீர்த்துக்க வேண்டிய பிரச்னையை ஊதிப் பெருசாக்க நினைக்கக் கூடாது'' என்றார் வருத்தத்தோடு.
பற்றி எரியும் இந்தப் பிரச்னை பற்றிய வீடியோ செய்தியையும் கண்டு களியுங்கள்!
நன்றி: ஜூனியர் விகடன், சிந்த் டைம்ஸ்
Posted by
மரைக்காயர்
at
8:19 PM
11
comments
Labels: இந்துத்துவா, பெண்ணுரிமை
Thursday, April 12, 2007
இந்துக்களை புண்படுத்தியதா எலிசபெத்தின் திருமணம்?
பிரபல மாடல் அழகி எலிசபெத் ஹர்லி அருண் நாயர் என்ற இந்தியரை கடந்த மார்ச் மாதம் ஜோத்பூரில் மிக ஆடம்பரமாக நடத்தப் பட்ட திருமண வைபவத்தில் கைப்பிடித்தார். இந்து மத முறைப்படி நடத்தப் பட்ட அந்தத் திருமணம் இப்போது சர்ச்சைக்கு உள்ளாகி யிருக்கிறது. அத்திருமணத்தில் 'இந்து மத சம்பிரதாயங்கள் கேலி செய்யப் பட்டிருப்பதாக' சிலர் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளனர்.
எலிசபெத் ஹர்லி முதல் காரியமாக ஆரிய சமாஜம் போன்ற இடங்களுக்கு போய் அஞ்சோ பத்தோ கொடுத்து ஒரு 'ஆரிய சமாஜி' சர்டிபிகேட் வாங்கி வைத்திருந்தார் என்றால் இந்த பிரச்னையே வந்திருக்காது.!!!
வலைப்பதிவு 'காப்பி & பேஸ்ட் வல்லுனர்' எழில் சார் அவர்களில் கண்களில் வழக்கம் போல இந்த செய்தி படவேயில்லை போலிருக்கிறது. இந்த பதிவை பார்த்த பிறகாவது,
1. இந்துமத சம்பிரதாயங்கள் என்றால் என்னென்ன?
2. அவற்றை யார் உருவாக்கினார்கள்?
3. இந்த சம்பிரதாயங்களை ஒரு வெளிநாட்டினர் கடைப்பிடித்தது ஏன் கேலியாக எடுத்துக் கொள்ளப்பட்டது?
4. கேலியில்லாமால் இந்த சம்பிரதாயங்களை கடைப்பிடிப்பது எப்படி?
5. 'இந்த சம்பிரதாயங்கள் எல்லாம் ஓகே' என்று ஆரிய சமாஜிடம் ஒரு 'No Objection Certificate' வாங்க வேண்டுமென்றால் என்ன செலவு வரும்?
போன்ற கேள்விகளுக்கு எல்கேஜி பிள்ளைங்களுக்கு புரியுற மாதிரி விளக்கி எழில் சார் அவர்கள் ஒரு பதிவு எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்.
Report: Hurley-Nayar wedding criticized
Model actress Elizabeth Hurley holds Damian, her four-year-old son, as husband Indian business man Arun Nayar, left, looks on, as they leave the airport after arriving in Jodhpur, India, in this March 7, 2007 file photo. A lawyer and Hindu religious activist has filed a complaint in a western Indian court saying that Hurley and Nayar's Hindu wedding made a "mockery of Hindu customs," a news report said Wednesday, April 11, 2007. Hurley and Nayar, were married in a lavish and traditional Hindu ceremony at a palace-turned-hotel in the western Indian city of Jodhpur on March 9, 2007.
NEW DELHI --A Hindu religious activist has filed a complaint in a western Indian court saying that Elizabeth Hurley and Arun Nayar's Hindu wedding made a "mockery of Hindu customs," a news report said Wednesday.
The 41-year-old British actress-model and Nayar, a 42-year-old Indian businessman, were married in a lavish Hindu ceremony at a palace-turned-hotel in the western Indian city of Jodhpur in March.
The couple first wed in a private civil ceremony in a castle outside London.
"This was a marriage for commercial purposes, but at the cost of religious feelings," Hasti Mal Saraswat, said in his complaint, The Times of India newspaper said. Saraswat is acting on behalf of Vishnu Khandelwal, a local businessman and religious activist.
Jasraj, a Hindu priest who uses just one name, also said that since the couple already had married before, they had no Hindu religious sanction to marry for a second time.
The complaint goes on to say that Hurley did not remove her footwear while walking around the sacred fire at the ceremony and wore revealing clothes.
The report had no details on when the complaint was likely to come up before a judge. India's legal system, burdened by a huge backlog of cases, is notoriously slow and it can take months and even years before complaints come up for hearing.
The petition was filed under a section of the Indian Penal Code that makes it an offense to upset any religious feelings with "deliberate and malicious intention."
Saraswat told the newspaper that Arun Nayar's father, Vinod Nayar, also will testify against the couple. Earlier this week, tabloids in England and India carried reports that Vinod Nayar has severed ties with his son after he was thrown out of the wedding on Hurley's urging.
Hurley and her husband have not commented on the reports or on the complaint.
Actress Hurley appeared in "Austin Powers: International Man of Mystery" and "Bedazzled," and for several years was the international face of Estee Lauder cosmetics. Her 4-year-old son, Damian, accompanied the couple on their trip to India.
Posted by
மரைக்காயர்
at
9:22 PM
2
comments
Labels: இந்து மதம்
Monday, April 09, 2007
இந்தியாவில் "கோமாதாவை விட மாதாவின் விலை மலிவு!" - தினமலர் செய்தி
'இந்து மதத்துக்கு வாங்க.. வாங்க' என்று ஒரு காலத்தில் கூவிக் கொண்டிருந்தார் எழில் என்பவர். ஏதோ இலவச அழைப்பா இருக்கும் என்று நினத்தால், இதெல்லாம் ஒரு வியாபார தந்திரம் என்பது பிறகுதான் தெரிந்தது. சும்மா இல்லைங்க.. யாராவது ஒரு ஏமாளி இந்து மதத்துக்கு மாறி வர்றேன்னு வந்தா ஐயாயிரம் பத்தாயிரம்னு பிடுங்கிட்டு ஒரு சர்டிபிகேட் கொடுப்பாங்களாம். இந்த ஏமாற்று கும்பலுக்கு தன்னோட வலைப்பதிவிலும் விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள் சிலர். கூட்டு களவாணித்துவமா இருக்குமோ?
தன்னோட மதத்தைப் பத்தி உசத்தியா சொல்லிக்கொள்ள ஒன்னுமில்லை என்பதால், 'சூடானில் அடிமை வியாபாரம் நடக்கிறது! மலேசியாவில் இந்துக்கோவில் இடிக்கப்பட்டது!! பாகிஸ்தானில் கோமாதாவை பிரியாணி போட்டார்கள்!' என்பது போன்ற உலகச் செய்திகளை, அவை இஸ்லாம் பற்றிய எதிர்மறையான செய்திகளாக இருந்தால் உச்சிக்குடுமி கூத்தாட அப்படியே காப்பி பேஸ்ட் செய்து ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறார் ஒருவர். இப்படிச் செய்தாலாவது தனது மத வியாபாரத்தை தூக்கி நிறுத்திவிட முடியாதா என்ற ஒரு நப்பாசைதான்!
இந்த 'காப்பி & பேஸ்ட் வல்லுனரின்' பார்வையில் படாத ஒரு செய்தி நம் கண்ணில் பட்டது. தினமலர் செய்திகளில் காவிப்பொடியை துடைத்துவிட்டுத் தேடினால் அரிதாக சில நல்ல செய்திகளும் தென்படும்! அந்தவகையில் தினமலரில் கண்ட செய்தியை அப்படியே காப்பி & பேஸ்ட் செய்கிறேன்.
வாசித்துவிட்டு வெறுமனே போய்விடாமல், இதற்கெல்லாம் யார் காரணம்?என்று கருத்துச் சொல்லவும் வேண்டுகிறேன். வெறுமனே சூடானையும், பாகிஸ்தானையும் பற்றி பஜனை பாடிக் கொண்டிருக்காமல், (அப்படி பஜனையடித்துக் கொண்டிருந்ததால்தான் சென்றமாதம் 30,00,000 இந்துக்கள் புத்தமதத்தை நோக்கி மாராத்தான் ஒட்டினார்கள்) இந்த சுதேசிப் பிரச்சினைக்கு தீர்வுகாணவும் முன்வர வேண்டுகிறேன். வெட்கம் மானம் சூடு சொரனை etc உள்ளவர்கள் இதைத்தான் செய்வார்கள்!
"இந்தியாவில் மாட்டின் விலையை விட, பெண்கள் மற்றும் குழந்தைகள் விலை மலிவாக உள்ளது. 500ல் இருந்து இரண்டாயிரம் ரூபாய் வரை இவர்கள் விற்கப்படுகின்றனர்' என்று பிரபல தன்னார்வ தொண்டு நிறுவனம் வேதனை தெரிவித்துள்ளது.
இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில் பெண்கள், குழந்தைகள் விற்கப்படுவது அதிகரித்து வருகிறது. விபசாரத்துக்குத் தான் பெண்களை இந்தியாவில் அதிகமாகக் கடத்துகின்றனர். கொத்தடிமை வேலைக்காக கடத்தப்படுவது, இப்போது ஓரளவுக்கு குறைந்துள்ளது. கோல்கட்டா நகரில் இயங்கி வருகிறது, "பச்சான் பச்சாவோ அந்தோலன்' என்ற தன்னார்வ அமைப்பு. குழந்தைகள், பெண்கள் கடத்தப்படுவதும், விற்கப்படுவதும் அதிகரிப்பதை தடுக்க, இது நடவடிக்கை எடுத்து வருகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதி புவன் ரிப்பு, சில திடுக்கிடும் தகவல்களை நிருபர்களிடம் வெளியிட்டார்.
அவர் கூறியதாவது:
தெற்காசிய நாடுகளில் பெண்கள், குழந்தைகள் கடத்தப்படுவது, விற்கப்படுவது அதிகரித்து வருகிறது. விபசாரத்தில் தள்ளவும், கொத்தடிமை வேலை செய்யவும் தான், இவர்கள் கடத்தி விற்கப்படுகின்றனர்.
திட்டமிட்டு சில சமூக விரோத கும்பல்கள், குழந்தைகளை இந்தியாவில் கடத்துகின்றன. சில மாநிலங்கள் தான், இந்த கும்பல்களைக் கண்காணித்து, போலீஸ் ஒடுக்குகிறது. "குழந்தையைக் காணவில்லை' என்று புகார் செய்யும் பெற்றோருக்கு, தங்கள் குழந்தை கடத்தப்பட்டு, விற்கப்படுவது பற்றிய தகவல் தெரிவதே இல்லை. போலீசும், குழந்தைகள் கடத்தல் பற்றிய விஷயத்தில் அக்கறை செலுத்துவதில்லை. உ.பி., பீகார் போன்ற மாநிலங்களில் குழந்தைகள் கடத்தல் நடந்தாலும், ஆங்காங்கு போலீஸ் நிலையங்களில், சாதாரண வழக்கு பிரிவில் தான், புகார் பதிவு செய்யப்படுகிறது. இந்தியாவில் உள்ள நிலைமை பற்றி சொல்ல வேண்டுமானால், மாட்டின் விலை கூட அதிகமாக உள்ளது. ஆனால், கடத்தி விற்கப்படும் குழந்தைகள், பெண்கள் விலை, 500 ரூபாயில் இருந்து அதிகபட்சம் இரண்டாயிரம் ரூபாய் தான். மத்திய அரசு, இது தொடர்பாக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் தான், குழந்தைகள், பெண்கள் கடத்தி விற்கப்படுவது அதிகரிப்பதை தடுக்க முடியும். இவ்வாறு புவன் ரிப்பு கூறியுள்ளார்.
http://www.dinamalar.com/2007april08/general_ind11.asp
இந்த செய்தியை படிச்ச பிறகாவது இவங்களுக்கெல்லாம் சொரணை வருதான்னு பார்ப்போம்!!!
Posted by
மரைக்காயர்
at
6:53 PM
4
comments
Sunday, March 25, 2007
விவேகானந்தர் பார்வையில் இஸ்லாம்!
இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளை நடத்திய புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு. சொக்கலிங்கம் உரையாற்றிய போது அவர் சொன்னார், "விவேகானந்தருக்கு இஸ்லாம் மிகவும் பிடித்திருக்கிறது. காரணம் என்ன? அவர் சொன்னார்: இந்திய சமூகம் எப்படி இருக்க வேண்டுமெனில் with vedantic brain and Islamic body. இது விவேகானந்தரே எழுதியவை. தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அனைத்தும் இதில் இருக்கிறது."
இதைப் படித்த பிறகுதான் அதுவரை விவேகானந்தரைப் பற்றி அதிகம் அறிந்திராத எனக்கு அவரைப் பற்றியும் அவரது கொள்கைகள், போதனைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் இந்துத்துவாவாதிகள் குரு என போற்றும் ஒரு ஆன்மீகத் தலைவர் இத்தகைய நல்லிணக்கக் கருத்துக்களையும் கொண்டிருப்பாரா என்ற ஆச்சரியமும் எனக்கு இருந்தது. ஏனென்றால் இந்துத்துவமும் மதநல்லிணக்கமும் mutually exclusive என்பது நாமெல்லாம் அறிந்த ஒன்றுதானே? இது இருக்கும் இடத்தில் அது இருக்காது!
விவேகானந்தரைப் பற்றி நான் இணையத்தில் தேடிக் கொண்டிருந்த போதுதான் எனக்கு அதிக சிரமம் வைக்காமல் அவரது கருத்துக்கள் என சிலவற்றை ஜடாயு என்பவர் தன் பதிவில் வைத்திருந்தார். அதைப் படித்தபோது இந்துத்துவாக்கள் ஏன் இவரைப் போற்றி புகழ்கிறார்கள் என்ற உண்மை வெளிப்பட்டது. ஆனால் ஒரு சிறந்த சிந்தனாவாதி என போற்றப் படும் விவேகானந்தர் இப்படியும் சொல்லியிருப்பாரா, அல்லது இன்றைய இந்துத்துவவாதிகள் அவரது கருத்துக்களை தங்களின் கருத்தியல்புகளுக்கு ஏற்ப திரித்து கூறுகிறார்களா என்ற சந்தேகமும் இருக்கிறது. ஏனென்றால் கருத்துத் திரிப்பு என்பது இவர்களுக்கு கை வந்த கலை ஆச்சே!
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மிஃராஜ் என்னும் விண்ணுலகப் பயணத்தைக் குறித்து விவேகானந்தரின் கருத்தாக இவர்கள் சொல்கிறார்கள்,
"ஒருநாள் கேப்ரியேல் தேவதை ஒரு குகையில் தம்மிடம் வந்ததாகவும், தன்னை ஹரக் என்ற தேவலோகக் குதிரையில் சுவர்க்கத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் முகமது கூறினார். இதை வைத்துக் கொண்டு, பின்னர் முகமது சில ஆச்சரியகரமான உண்மைகளைப் பற்றிப் பேசினார். நீங்கள் குரானைப் படித்தால் அதில் உள்ள பெரும்பாலான ஆச்சரியகரமான உண்மைகள் மூடநம்பிக்கைகளுடன் கலந்திருப்பதைப் பார்க்கலாம். அந்த மனிதர் உணர்ச்சி பெற்றார், வாஸ்தவம் தான், ஆனால் அந்த உணர்ச்சி தடுக்கி விழுந்ததால் ஏற்பட்டது. அவர் பயிற்சியடைந்த யோகி அல்லர், தான் என்ன செய்கிறோம் என்றே அவர் அறிந்திருக்கவில்லை."
மிஃராஜ் பயணத்தைப் பற்றி ஒரு சாதாரணர் இத்தகைய கருத்துக்களை கொண்டிருந்தால் அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் ஒரு சிந்தனாவாதியாகவும் வேதாந்தியாகவும் போற்றப்படும் விவேகானந்தர் இது போன்ற முதிர்ச்சியற்ற கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தால் அது ஆச்சரியமான ஒன்றுதான்.
தன்னை ஒரு யோகியாக கருதிக் கொண்டிருந்த விவேகானந்தர், நபி (ஸல்) அவர்களையும் தன்னைப் போல ஒரு யோகி என்ற பிம்பத்தில் அடைக்க முயன்றிருக்கிறார். ஆனால் மிஃராஜ் விண்ணேற்றம், வஹி எனப்படும் இறைவசன வெளிப்பாடுகள் போன்ற நிகழ்வுகள் யோகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் யாருக்கும் நேரக்கூடிய அனுபவங்களல்ல. ஒரு யோகி என தான் நினத்துக் கொண்டிருக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இத்தகைய அனுபவங்கள் நேர்ந்தது எப்படி என்பதை விவேகானந்தரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த சூழ்நிலையில் ஒரு சாதாரணர் வரும் முடிவுக்குத்தான் விவேகானந்தர் வந்திருக்கிறார். அதாவது நபி (ஸல்) அவர்களுக்கு நேர்ந்த அனுபவங்கள் கற்பனையானதாக வெறும் பிரமையாகத்தான் இருக்கும் என்ற முடிவு.
ஆனால் உண்மை என்ன? நபி (ஸல்) அவர்களை ஒரு யோகி என விவேகானந்தர் கற்பிதம் செய்திருந்ததுதான் தவறு. நபி (ஸல்) அவர்கள் ஒரு யோகி அல்லர். அவர் தன்னை ஒரு யோகி என்று என்றும் சொல்லிக் கொண்டதில்லை. ஒரு யோகிக்கு தேவையான பயிற்சிகளை அவர் மேற்கொண்டதில்லை. அவர் இறைத்தூதர். அவருக்கு நேர்ந்த அனுபவங்கள் ஒரு இறைத்தூதருக்கு நிகழக்கூடியதுதான்.
ஒரு சிந்தனாவாதியாக போற்றப்படும் விவேகானந்தருக்கு இந்த எளிய உண்மை விளங்காமல் போனது எப்படி? I think he just failed to think out of the box! அறிஞர் பெருமக்கள் தங்களுக்கு முழுதும் விளங்காத ஒன்றைப் பற்றி கருத்து தெரிவிக்க மாட்டார்கள். ஆனால் விவேகானந்தர் தான் அரைகுறையாக மட்டுமே அறிந்திருந்த மிஃராஜ் பற்றி தனது கருத்துக்களை வெளிப் படுத்தியிருப்பது நம்மை மேலும் ஆச்சரியத்திற்குள்ளாக்குகிறது.
அப்பட்டமாக ஒரு இந்துத்துவவாதியின் குரல் இங்கு வெளிப்படுகிறது! இஸ்லாம் (இங்கு முகமதியம் என்ற சொல்லை பயன்படுத்துகிறார் விவேகானந்தர்) ஒரு சகிப்புத் தன்மையற்ற மார்க்கம் என்று சொன்ன அதே விவேகானந்தர் இன்னொரு இடத்தில் இப்படி சொல்லியிருக்கிறார்.விவேகானந்தரின் கருத்தாக மேலும் சொல்கிறார்கள்;
பல முகமதியர்கள் இந்த விஷயத்தில் மிக வக்கிரமானவர்கள், மிக குழுவெறி கொண்டவர்கள். அவர்களது மந்திரம்: ஒரே கடவுள், முகமது அவரது இறைத்தூதர். இது அல்லாத மற்ற விஷயங்கள் எல்லாம் மோசமானவை மட்டுமல்ல, உடனே அழித்து ஒழிக்கப் படவேண்டியவை. ஒரு கண நேர முன்னறிவிப்பில் இதை முழுவதும் நம்பாத ஒவ்வோர் ஆணும், பெண்ணும், கொல்லப் படவேண்டும். இந்த வழிபாட்டு முறை இல்லாத மற்ற எல்லாம் உடனடியாக உடைத்து நொறுக்கப் படவேண்டும். இது தவிர வேறு எதையாவது கற்பிக்கும் எல்லா புத்தகங்களும் எரிக்கப் படவேண்டும். பசிபிக்கில் இருந்து அட்லாண்டிக் வரை 500 வருடங்கள் உலகம் முழுவதும் ரத்த ஆறு ஓடியது: அது தான் முகமதியம்!
...சமய உலகின் முடிந்த முடிபான தத்துவம் அத்வைதம். ஏனென்றால் அத்வைதம் என்ற நிலையில் இருந்து தான் ஒருவர் எல்லா சமயங்களையும், எல்லா இனங்களையும் அன்போடு நோக்க முடியும்.... ஆனால் மனிதகுலம் முழுவதையும் தன் ஆன்மா போலக் கருதும் நடைமுறை அத்வைதம் அதன் முழுமையான அளவில் இந்துக்களால் வளர்க்கப் படவில்லை. என் அனுபவத்தில், இந்த சமத்துவம் என்ற விஷயத்தை ஓரளவு பாராட்டத் தக்க வகையில் அணுகிய ஒரு மதம் இருக்குமென்றால், அது இஸ்லாம்.
'பிற சமயத்தவரை கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது' என்று சொன்ன அதே மனிதர் 'எல்லா சமயங்களையும் எல்லா இனங்களையும் அன்போடு நோக்கும் சமத்துவத்தை பாராட்டத்தக்க அளவில் அணுகிய மதம் இஸ்லாம்' என்றும் சொல்லியிருக்கிறார். என்ன ஒரு முரண்பாடு? ஒரு சிந்தனாவாதி இப்படியா முன்னுக்குப் பின் முரணாக பேசுவார்?
விவேகானந்தரின் இன்னொரு கூற்று:
வேதங்களைக் கடந்த, பைபிளைக் கடந்த, குரானைக் கடந்த ஓர் இடத்திற்கு மனிதகுலத்தை இட்டுச் செல்லவே நாம் விழைகிறோம். ஆனால் இதைச் செய்வதற்கு வேதங்களுக்கும், பைபிளுக்கும், குரானுக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தியாக வேண்டும். ஒருமை என்ற ஒரே மதத்தின் பல்வேறு மாறுபட்டவெளிப்பாடுகளே இந்த மதங்கள் எல்லாம் என்று மனிதகுலத்திற்குக் கற்றுக் கொடுக்க வெண்டும். தனக்குப் பொருத்தமான வழியை ஒவ்வொருவரும் தேர்ந்தெடுக்க அது வழிசெய்யும்.
கிருஸ்துவர்கள் பைபிளுக்கு இன்றும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். முஸ்லிம்களுக்கு குர்ஆன் இன்றளவும் வழிகாட்டியாக இருந்து வருகிறது. ஆனால் இந்துமத வேதங்கள் இந்துக்களாலேயே எப்பொழுதோ மறக்கப் பட்டு விட்டன. அவை வழக்கொழிந்து போய் பல காலமாகி விட்டது. மேற்கண்ட விவேகானந்தரின் கூற்றுக்கு ஒரு பொருள்தான் இருக்க முடியும், 'நாங்கள் ஏற்கனவே எங்கள் வேதங்களை புறக்கணித்து விட்டதைப் போல கிருஸ்துவர்களும் முஸ்லிம்களும் அவரவர் வேதங்களை புறக்கணிக்க வேண்டும்'.
இதையே கொஞ்சம் கொச்சையாக சொல்ல வேண்டுமெனில், 'ஏற்கனவே குப்பைக்கு போன உமியை நான் கொண்டு வர்றேன், நீ உன்னுடைய அவல் கொண்டு வா, அது ரெண்டையும் கலந்து குப்பையில வீசிட்டு நாம ரெண்டு பேரும் 'அம்போ'ன்னு நிப்போம்' என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஒரு ஆன்மீகவாதியான விவேகானந்தர் இப்படியா சொல்லியிருப்பார்? நம்ப முடியவில்லை!
பி.கு:
மேலே குறிப்பிட்ட பதிவை படிக்குமுன் விவேகானந்தரைப் பற்றி நான் உயர்வாகத்தான் நினைத்திருந்தேன். இப்போது, நான் அந்தப் பதிவை படித்திருக்கவே கூடாதோ என்று நினைக்கிறேன்.
Posted by
மரைக்காயர்
at
5:48 PM
11
comments
Labels: இந்துத்துவா, விவேகானந்தர்
Thursday, March 22, 2007
4. இந்துமத சுலோகங்கள் உணர்த்தும் உண்மைகள்
அதர்வண வேதம் 20-ம் நூல் 127வது காண்டம் சுலோகம் 1-13
சுலோகம் 1. அவர் நரசன்ஷா (புகழுக்குறியவர்) - முஹம்மது. அவருக்கு 60090 எதிரிகள் இருந்தும் அவர் பாதுகாப்புடன் கூடிய ஒரு சாந்திமிகு தலைவராக இருப்பார்.
சுலோகம் 2. அவர் ஒட்டகத்தில் சவாரி செய்யும் ஒரு ரிஷியாவார் ''மம்ஹா"
சுலோகம் 3. அவர் ரிஷியாவார். அவருக்கு 100 தங்க நாணயங்களும் பத்து கழுத்து அணிகலன்களும் 300 நல்ல குதிரைகளும் பத்தாயிரம் பசுக்களும் வழங்கப்படும்.
சுலோகம் 4. அவர் இறைவனை துதிப்பவராய் இருப்பார்.
சுலோகம் 5. வணக்க வழிபாடுகளில் தீவிர முயற்சி எடுப்பார்.
சுலோகம் 6. அவருக்கு இறைவன் புறமிருந்து அநேக அருள் வளங்கள் உண்டு.
சுலோகம் 7. அவர் சிறந்த அரசர், மனிதர், மனித சமுதாயத்திற்கு சிறந்த வழிகாட்டி.
சுலோகம் 8. அவரும் பாதுகாப்பில் இருப்பார். பிறருக்கும் பாதுகாப்பு வழங்குவார்.
சுலோகம் 9. உலக சாந்திக்கு உழைப்பார்.
சுலோகம் 10. அவரின் ஆட்சியில் மக்கள் வளமும், மகிழ்வும் பெறுவர். வறுமை அகன்று வளம் கொழிக்கும்.
சுலோகம் 11. அவர் அச்ச மூட்டி எச்சரிக்க தூண்டுவார்.
சுலோகம் 12. அவர் கொடைத் தன்மையும் தாராளமனமும் கொண்டவர்.
சுலோகம் 13. அவரைப் பின்பற்றுவோர் கொலை, கொள்ளை போன்ற கொடுமைகளிலிருந்து இறையருளால் பாதுகாப்பு பெற்று தம் தூதரையும் காத்தனர்.
சுலோகம் 14. இறைவனைப் போற்றிப் புகழ்ந்து தீய விளைவுகளில் இருந்தும் பாதுகாப்பு கோரினர்.
இந்த சுலோகங்களின் விளக்கங்களைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.
1. சமஸ்கிருத வார்த்தை ''நரஷன்ஸா" என்றால் புகழுக்குறியவர், அரபிய மொழியில் முஹம்மது ஆவார். சமஸ்கிருத வார்த்தை ''கௌரமா" சாந்தியைப் பரப்ப உழைப்பவர். மற்றொரு பொருள் இடம் பெயர்ந்து சென்றவர். அதாவது மக்காவிலிருந்து மதீனாவுக்கு இடம் பெயர்ந்து சென்றவர். அவரின் 60090 எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெற்றவர்.
2. இறைத்தூதர் ஒட்டகச் சவாரி செய்பவர். உறுதியாக இந்தியத் தூதர்களைக் குறிப்பிடவில்லை. எவரும் இந்தியாவில் ஒட்டகத்தின் மீது சவாரி செய்வதில்லை. பிராமணர்கள் ஒட்டகச் சவாரி செய்யத் தடை உள்ளது. (மனுஸ்மிருதி பாகம் 25, பக்கம் 472).
மனுஸ்மிருதி அத்தியாயம் 2, சுலோகம் 202 கூறுகிறது. ''ஒரு பிராமணன் ஒட்டகக் கழுதைச் சவாரி செய்வது தடை செய்யப்பட்டது. நிர்வாணமாய் குளிப்பதும் தடையாகும். அவனுடைய மூச்சால் அவனை சுத்தப்படுத்திக் கொள்ளவும்"
3. முஹம்மது எனும் இறைத்தூதர் பெயரை மம்ஹா எனும் ரிஷி என சுலோம் கூறுகிறது. சமஸ்கிருதத்தில் மஹ்மத் என்பது கெட்ட வார்த்தையாகும். ஆகவே மம்ஹா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
4. அவருக்கு வழங்கப்பட்ட நூறு தங்க நாணயங்கள் அவரின் சிறந்த தோழர்களைக் குறிக்கிறது. ஏகத்துவத்தை ஏற்ற அத்தோழர்களைக் குறிக்கிறது. ஏகத்துவத்தை ஏற்ற அத்தோழர்கள் மக்கத்து இணைவைப்போரால் துன்புறுத்தப்பட்டு அபீஷினியா, மதீனா இடம் பெயர்ந்தனர். பின்னர் மதீனாவில் ஒன்று கூடினர். அவருக்கு வழங்கப்பட்ட 10 கழுத்து அணிகலன்கள் இஸ்லாம் கூறும் ''அஸ்ரத்துல் முபஷ்ஷரா" ஆகும். சுவனத்திற்கு இறைத்தூதரால் நன்மாராயம் கூறப்பட்ட பத்துபேர் (நபித்தோழர்கள்). அவர்களாவன அபூபக்கர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அலி(ரலி), தல்ஹா(ரலி), ஜுபைர்(ரலி), அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி), ஸஆத் பின் அபீவக்காஸ்(ரலி), ஸஆத் பின் ஜைது(ரலி), அபூ உபைதா(ரலி). தூதருக்க வழங்கப்பட்ட 300 குதிரைகள் பத்ருப்போரில் போரிட்டு வெற்றி ஈட்டித்தந்த நபித்தோழர்களைக் குறிக்கும் மூன்று மடங்கு அதிகமாக இருந்த எதிரிகளை வெற்றி கொள்ளப் போரிட்ட இந்நபித்தோழர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்ததாக இஸ்லாம் கூறுகிறது. 10000 பசுகள் என்பது இறைத்தூதருடன் மக்கா வெற்றியின் பொது வந்த நபித்தோழர்களைக் குறிக்கிறது. அவர்கள் பரிசுத்தமான, போராடக் கூடிய தீரர்கள் என்பதை அருள் மறையின் கீழ்கண்ட வசனம் கூறுகிறது.
முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும் அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும் இதுவே தவ்றாத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது. பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.(48:29)
''ரெப்ஹ்" என்னும் சமஸ்கிருத வார்த்தையின் அர்த்தம் அரபியில் அஹ்மத் ஆகும். இது இறைத்தூதரின் மற்றொருபெயர்.
5. இறைத்தூதரும் அவரின் தோழர்களும் இறை வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துவர். அது போர்களமாக இருந்தாலும் சரியே.
குர்ஆனின் கீழ் கண்ட வசனம் இதைத் தெளிவுப்படுத்துகிறது.
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள் எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்குத் தவிர மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.(2:45)
(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும் அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப்பற்றியும், உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனக் குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து (தாக்கி) விடலாமென்று காஃபிர்கள் விரும்புகின்றனர்; ஆனால் மழையினால் உங்களுக்கு இடைஞ்சல் இருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருப்பதினாலோ, உங்களுடைய ஆயுதங்களைக் (கையில் பிடிக்க இயலாது) கீழே வைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது. எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான்.(4:102)
6. இறைத்தூதருக்கு வழங்கப்பட்ட அருள் வளங்களில் ஒன்று அருள் மறை குர்ஆன் ஆகும். அதனை இறைத்தூதர் தம் தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்தார், அவர்கள் அதனை மனனம் செய்தனர்.
குர்ஆனின் கீழ்கண்ட வசனங்கள் இதனைத் தெளிவுப்படுத்துகிறது.
(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.(21:107)
இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை. ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்(34:28)
மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.(68:4)
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.(33:21)
7. கஃபா (மக்காவில் உள்ள இறைவனின் ஆலயம்) புணர்நிர்மாணத்தின் போது அரபுக் கோத்திரங்களுக் கிடையில் எழுந்த போர் மூட்டத்தைக் போக்கி சமாதானம் நிலவச் செய்தவர். இறைத்தூதர் மக்கா வெற்றி கூட மிகப் பெரிய நிலப்பரப்பை இரத்த சேத மின்றி அறுர்மியவர். நபி(ஸல்), தம்மை எதிர்த்த மிகப்பெரும் விரோதிகளையும் மன்னித்த இறைத்தூதர்.
8. அறியாமைக்கால இருளில் மூழ்கிக்கிடந்த அரபுலக மக்களை தம் போதனைகளால் நேர்வழியின் பக்கம் அழைத்தவர்.
குர்ஆன் கூறுகிறது:
74:1 (போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே!
74:2 நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக.
74:3 மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.
3:159 அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள் எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும் பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.
114:1 (நபியே!) நீர் கூறுவீராக. மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
114:2 (அவனே) மனிதர்களின் அரசன்.
114:3 (அவனே) மனிதர்களின் நாயன்.
வேதங்களைப் பின்பற்றுவோர், இறைவனைப் போற்றிப்புகழ்ந்து இறைத்தூதரைப் பின்பற்றி நரக நெருப்பிலிருந்து விடுபட வேதங்கள் கூறும் சுலோகங்கள் தான் மேலே கூறப்பட்டவை.
ஆக்கம்: நெல்லை இப்னு கலாம் ரசூல்
நன்றி: இஸ்லாம்கல்வி.காம்
Posted by
மரைக்காயர்
at
7:30 AM
1 comments
Labels: இந்து மதம், இஸ்லாம், வேதங்கள்
Tuesday, March 20, 2007
3. இந்துமத புனித நூல்கள்!
இந்துவத்தில் புனிதம் வாய்ந்த இருவகை நூல்கள் உள்ளன 1) ஸ்ருதி 2) ஸ்மிருதி.
ஸ்ருதி
ஸ்ருதி என்றால் கேட்கப்பட்டு, உணரப்பட்டு, புரியப்பட்டது அல்லது அருளப்பட்டது, மிகப் பழமையான பிரசித்தி பெற்றது ஆகும். ஸ்ருதி இரு வகைப்படும் அவை 1) வேதங்கள் 2) உபநிஷங்கள்.
ஸ்மிருதி
ஸ்ருதி போல் புனிதம் வாய்ந்ததல்ல இருப்பினும் இந்துக்களால் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. "ஸ்மிருதி" என்றால் ஞாபகங்கள் அல்லது நினைவூட்டல்கள். இந்து இலக்கியங்கள் புரிந்து கொள்ள மிக எளிதானது. ஏனெனில் அவை உலகின் உண்மைகளை குறிப்பால் உணர்த்துகிறது. ஸ்மிருதி இறைவனிடம் இருந்து வந்த புனிதத் தன்மையின்றி இருந்தாலும் மனிதன் வாழ்வில் கடைபிடிக்கக் கூடிய அனைத்து வழிமுறைகளையும் கூறுகிறது. சமுதாயத்தில் நிலவும் ஒவ்வொரு செயலுக்கும் விதி முறைகளை கூறுகிறது. தர்மசாஸ்திரம் எனும் இதிகாச புராணங்கள் ஸ்மிருதியில் உள்ளன.
இந்து வேதங்களின் ஆய்வு
ஆக இந்துக்களின் புனித நூல்களாக வேதங்கள், உபநிஷங்கள், புராணங்கள் கருதப்படுகிறது
1. வேதங்கள்
அறிவு ஞானம் எனும் ''வித்" எனும் வேதச் சொல்லிருந்து வேதம் வந்தது. முக்கிய வேதங்கள் 4. ரிக், யஜுர், சாம, அதர்வணம் ஆகியவையாகும். முகாபாஷ்ய பாதாஞ்சலி கூற்றுப்படி ரிக்வேதத்தின் 21 கிளைகள், அதர்வனவேதத்தின் 9 கிளைகள், யஜுர் வேதத்தின் 101 கிளைகள், சாம வேதத்தின் 1000 கிளைகள் ஆக 1131 கிளைகள் உள்ளன. ஆனால் இவற்றில் 12 கிளைகள் இப்பொழுது காணக் கிடைக்கிறது.
ரிக், யஜுர், சாம வேதங்கள் பழமையானது இதனை ''தரை வித்யா" என அழைப்பர். அதர்வண வேதம் இறுதியில் வந்தது.
ஆர்ய சமாஜ் என்ற இயக்கத்தின் நிறுவனரான ஸ்வாமி தயானந்தர் கூற்றுப்படி 4 வேதங்களைத் தொகுத்த நாளில் ஒத்த கருத்து இல்லை. தயானந்தர் 1310 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வேதங்கள் அருளப்பட்டது எனக் கூறினார். சில அறிஞர்கள் 4000 ஆண்டுகள் முன்பு வேதங்கள் இறங்கின என்பர்.
வேதங்கள் இறங்கிய இடங்களிலும் ஒத்த கருத்து இல்லை. இறங்கிய வேதங்கள் ரிஷிகளிடம் வழங்கப்பட்டன என சிலர் கூறுகின்றனர். இந்த வேறுபட்ட கருத்துகள் இருந்த போதும் வேதங்கள் இந்து தர்மத்தின் ஆதாரப்பூர்வ நூல்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டவைகள்.
2. உப நிஷங்கள்
அருகில் இருந்து கற்றவை அறிந்தவை எனப் பொருள். அறியாமையை அகற்றக் கூடியது என மற்றொரு பொருளுமுண்டு.
இந்திய வரலாற்றுப் படி 200க்கும் அதிகமான உபநிஷங்கள் உண்டு. இருப்பினும் நடப்பில் உள்ளவை 10 அல்லது 18 ஆகும்.
உபநிஷங்களுக்கு வேதாந்தம் என்றும் பொருண்டு. தத்துவங்களைக் கூறும் உப நிஷங்களும் உள்ளன. வேதங்களுக்கு பின் தோன்றியவைகளே வேதாந்தம் எனும் இந்த உப நிஷங்கள்.
சிலபண்டிதர்கள் வேதங்களைக் காட்டிலும் உபநிஷங்கள் சிறந்தது எனக் கருதுகின்றனர்.
3. புராணங்கள்
வேத, உபநிஷங்களுக்குப் பின் இந்துக்ளின் புனிதமாக கருதப்படுவது புராணங்கள் ஆகும். உலகம் படைக்கப்பட்டது, முந்தய ஆரியர்களின் வரலாறு, தெய்வங்கள் பற்றிய குறிப்புகளை புராணங்கள் கூறுகின்றன. இவை நூல் வடிவில் அருளப்பட்டதாக கூறுவர். மகாரிஷி வியாசர் புராணங்களை 18 பாகங்களாய் பிரித்தார். அவற்றிக்கு பொருத்தமான தலைப்புகள் இட்டனர். பகவத் கீதை (மகாபாரதம்) இவரது எழுத்துத்திறனால் வெளிப்பட்ட புராணமே. புராணங்களில் முதன்மையானது பவிஷ்ய புராணம். எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறுவதால் இதற்கு இப்பெயர் வந்தது. இதனை இந்துக்கள் கடவுளின் வார்த்தை எனக் கூறுவர். மகாரிஷி வியாசர் இந்நூலை தொகுத்தவர் ஆவார்.
முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றிய இந்து வேதங்கள் மற்றும் புராணங்களின் கூற்று
பவிஷ்ய புராணம்ப்ரதி சாரக் பாகம் 3, காண்டம் 3, அத்தியாயம் 3, சுலோகம் 5 முதல் 8 வரை ''ஒரு வெளிநாட்டுக்காரர் வெளிநாட்டு மொழியினைச் சார்ந்த ஆன்மீக ஆசிரியர் ஒருவர் தோன்றுவார். அவருடன் தோழர்கள் இருப்பர் அவரின் பெயர் "முஹம்மது"
இந்த சுலோகங்கள் கீழ்கண்ட உண்மைகளை உணர்த்துகிறது.
1. நபியின் பெயர்
2. அவர் அரேபியாவைச் சார்ந்தவர் (சமங்கிருத மருஸ்தல் பாலைவன நிலத்தைக் குறிக்கும்)
3. அந்த நபிக்கு அநேக நபித்தோழர்கள் உண்டு
4. சமஸ்கிருத வார்த்தை ''பர்பதிஸ்நாத்" என்பதன் பொருள் அருட்கொடை
குர்ஆனின் கீழ்கண்ட வசனங்கள் இதை உறுதிச் செய்கிறது.
(நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர். (அல்குர்ஆன்-68:4)
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதாரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)
(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 21:107)
5. அவர் தீய செயல்களை விரட்டி (ஷைத்தானை) சிலை வணக்கம் அகற்றி ஏகத்துவ கொள்கையை நிலைநாட்டுவார்.
6. அந்த நபி இறைவன் புறமிருந்து பாதுகாப்பளிக்கப்படுவார். அந்த நபி பாவங்களற்றவர்.
பவிஷ்ய புராணம் ப்ரதி ஸாரக் பாகம் 3, காண்டம் 3, ஸ்லோகம் 10-27. மகாரிஷி வியாசர் கூறுகிறார்:
''அத்தூதர் அரேபியாவில் நிலவும் மூடப் பழக்க வழக்கங்களை ஒழிப்பார். ஆர்ய தர்மத்தை அந்நாட்டிலிருந்து அகற்றுவார். நேர்வழி காட்டும் அத்தூதர் முஹம்மது ஆவார். அவருக்கு பிரம்மன் (கடவுள்) துணைபுரிவார். துஷ்டர்களை அவர் நல்வழிப்படுத்துவார். ஓ ராஜாவே நீர் கெட்டவர்களை (ஷைத்தானைப்) பின்பற்றாதீர். ஆத்தூதரினைப் பின்பற்றுவோர் மாமிசம் உண்பர். விருத்தசேதனம் செய்வர். தாடியுடன் இருப்பர். பாங்கோசை ஒலித்து வழிபாட்டில் ஈடுபடுவர். அனுமதிக்கப்பட்டவற்றை மட்டுமே உண்பர். பன்றி இறைச்சியைத் தவிர்ப்பர். அவர்களுக்கு போர் வெற்றிப்பொருட்கள் ஆகுமானது. அவர்களுக்கு "முஸல்மான்" எனப்பெயர்."
இந்த சுலோகங்கள் உணர்த்தும் உண்மைகள்
1. ஷைத்தான்கள் அரேபியாவை அசுத்தப்படுத்தியிருந்தனர்.
2. ஆர்ய தர்மம் அரேபியாவில் காணப்படவில்லை.
3. சத்திய மார்க்கத்தை அழிக்கப் புறப்பட்ட பெரும் மன்னர்கள் அழிந்தனர் (உதாரணம்) அப்ரஹா
குர்ஆன் கூறுகிறது:(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (105:1)
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்க விடவில்லையா? (105:2)
மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான். (105:3)
சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. (105:4)
அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். (105:5)
4. நபிக்கு அல்லாஹ் (பிரம்மா) எதிரிகளை நேர்வழிப்படுத்த துணைபுரிகிறான்.
5. இந்தியன் ராஜா அரேபியா செல்லவில்லை. மாறாக முஸ்லீம்கள் இந்தியா வந்தடைந்தனர்.
6. இறைத்தூதர் ஏகத்துவத்தை போதிப்பவர் நேர்வழிப் படுத்துபவர்.
7. இறைத்தூதர் விருத்த சேதனம் செய்தவர், தாடியை வைத்திருப்பவர்.
8. பாங்கு ஓசை எழுப்பி தொழுபவர்.
9. அனுமதிக்ப்பட்ட உணவை உண்பார், பன்றி இறைச்சி தடுக்கப்பட்டது.
குர்ஆன் கூறுகிறது,
தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக (தடுக்கப்பட்டவை) ஆக்கிருக்கிறான் ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான்.(2:173)
(தானகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன. (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும் அம்புகள் மூலம் நீங்கள குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) (5:3)
நபியே!) நீர் கூறும் ''தானாக இறந்தவைகளையும், வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை"...(6:145)
நீங்கள் புசிக்கக் கூடாது என்று உங்களுக்கு அவன் விலக்கியிருப்பவையெல்லாம் தானே செத்ததும், இரத்தமும், பன்றி இறைச்சியும், எதன் மீது அல்லாஹ்(வின் பெயர்) அல்லாத வேறு (பெயர்) உச்சரிக்கப்பட்டதோ அதுவுமேயாகும்...(16:115)
10. அநியாயத்தை எதிர்த்து மாற்றாருடன் போரிட தயங்க மாட்டார்கள்.
11. அவர்கள் முஸ்லீம்கள் ஆவர்.
12. அவர்கள் இறைச்சி உண்பர்
குர்ஆன் கூறுகிறது,
...உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவற்றைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக), ஆகுமாக்கப்பட்டுள்ளன... (5:1)
நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம் இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன் அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள். (23:21)
பவிஷ்ய புராணம் பாகம் 3, காண்டம் 1, அத்தியாயம் 3 ஸ்லோகம் 21-23
அக்கிரமும் அநீதியும் ஏழு புனித நகரங்களில் தலைவிரித்தாடும் (காசி உள்ளிட்ட) இந்தியாவில் ரச்சாஸ், ஸாபர், பிஹ்ல் போன்ற மூடர்களின் பழக்க வழங்கங்களை மக்கள் பின்பற்றுவர். முஹம்மதுவைப் பின்பற்றும் முஸ்லீம்கள் மிகச் சிறந்த தைரியசாலிகள். முஸல்மான்களிடம் நல்ல குணநலன்கள் காணப்படும். கெட்ட தீய செயல்கள் ஆரியர்களின் பூமியில் ஒன்று திரட்டப்படும். இஸ்லாம் இந்தியாவையும் அதன் தீவுகளையும் ஆட்சி செய்யும். இவ்வுண்மைகளை அறிந்து கொண்ட ஓ முனியே! உமது இரட்சகனைப் புகழ்ந்து துதிப்பாயாக!
குர்ஆன் கூறுகிறது,
அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்). (9:33)
முஷ்ரிக்குகள் வெறுத்த போதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான். (61:9)
அவனே தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பியருளினான் சகல மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்வதற்காக (இதற்கு) அல்லாஹ் சாட்சியாக இருப்பதே போதுமானது. (48:28)
பவிஷ்ய புராண 20-ம் நூல், அதர்வண வேதத்தில் 127வது காண்டம் இன்னும் சில அத்தியாயங்கள் குண்டப் அத்தியாயம் என அழைக்கப்படுகின்றன. குண்டப் என்றால் வறுமையில், துன்பத்தில், சுழல்பவனை நீக்குவது என பொருள் கொள்ளலாம். உலகின் மையப்பகுதியில் உள்ள ஒரு இடத்துடன் இச்செய்தி தொடர்பு உடையது. உம்முல் குர்ஆன் என அழைக்கப்பட்ட மக்காவை இது குறிக்கிறது.
(இதை) குர்ஆன் கீழ்கண்டவாறு கூறுகிறது,
(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளதுதான் அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.(3:96)
மக்காவின் மற்றொரு பெயர் பக்கா.அநேக மொழி பெயர்ப்பாளர்கள் குண்டப் அத்தியாயத்தை மொழிபெயர்த்தனர். குறிப்பாக எம். ப்ளாம் பீல்டு, ரால்ப் க்ரிப்ட், பண்டிட் ராஜாராம், பண்டிட் கேம் கரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
அதர்வண வேதம் 20-ம் நூல் 127வது காண்டம் சுலோகம் 1-13
சுலோகம் 1. அவர் நரசன்ஷா (புகழுக்குறியவர்) - முஹம்மது.
அவருக்கு 60090 எதிரிகள் இருந்தும் அவர் பாதுகாப்புடன் கூடிய ஒரு சாந்திமிகு தலைவராக இருப்பார்.
சுலோகம் 2. அவர் ஒட்டகத்தில் சவாரி செய்யும் ஒரு ரிஷியாவார் ''மம்ஹா"
சுலோகம் 3. அவர் ரிஷியாவார். அவருக்கு 100 தங்க நாணயங்களும் பத்து கழுத்து அணிகலன்களும் 300 நல்ல குதிரைகளும் பத்தாயிரம் பசுக்களும் வழங்கப்படும்.
சுலோகம் 4. அவர் இறைவனை துதிப்பவராய் இருப்பார்.
சுலோகம் 5. வணக்க வழிபாடுகளில் தீவிர முயற்சி எடுப்பார்.
சுலோகம் 6. அவருக்கு இறைவன் புறமிருந்து அநேக அருள் வளங்கள் உண்டு.
சுலோகம் 7. அவர் சிறந்த அரசர், மனிதர், மனித சமுதாயத்திற்கு சிறந்த வழிகாட்டி.
சுலோகம் 8. அவரும் பாதுகாப்பில் இருப்பார். பிறருக்கும் பாதுகாப்பு வழங்குவார்.
சுலோகம் 9. உலக சாந்திக்கு உழைப்பார்.
சுலோகம் 10. அவரின் ஆட்சியில் மக்கள் வளமும், மகிழ்வும் பெறுவர். வறுமை அகன்று வளம் கொழிக்கும்.
சுலோகம் 11. அவர் அச்ச மூட்டி எச்சரிக்க தூண்டுவார்.
சுலோகம் 12. அவர் கொடைத் தன்மையும் தாராளமனமும் கொண்டவர்.
சுலோகம் 13. அவரைப் பின்பற்றுவோர் கொலை, கொள்ளை போன்ற கொடுமைகளிலிருந்து இறையருளால் பாதுகாப்பு பெற்று தம் தூதரையும் காத்தனர்.
சுலோகம் 14. இறைவனைப் போற்றிப் புகழ்ந்து தீய விளைவுகளில் இருந்தும் பாதுகாப்ப கோரினர்.
Posted by
மரைக்காயர்
at
4:27 PM
6
comments
Labels: இந்து மதம், வேதங்கள்
Friday, March 16, 2007
2. வேதங்களில் இறைக்கோட்பாடு
ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் இந்து மதத்தின் மிகப் புனித வேதங்களாகும்.
யஜூர் வேதம் (32:3)
"ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி" அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த் - யஜூர் வேதம் பக்கம் 377)
அவன் உருவமற்றவன். தூய்மையானவன். ஓளிமயமான உருவமற்ற, காயமற்ற, பாவங்களற்ற, தூய்மையான பாவங்கள் அண்டாத ஞான வடிவானவன். அவன் நித்திய ஜீவன். 40:8
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 538)
"அன்தாதம் ப்ரவிசன்த்தியே அசம்புத்தி முபாஸ்தே" இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்) இருளில் மூழ்குவர். 40:9
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538)
அதர்வண வேதம் (20:58:3)(புத்தகம் 20, அத்தியாயம் 58, சுலோகம் 3)
'தேவ் மஹா ஓசி" கடவுள் மகா பெரியவன்
குர்ஆன் கூறுகிறது:
...அவன் மிகவும் பெரியவன் மிகவும் உயர்ந்தவன் (13:9)
ரிக் வேதம் (1:164:46)
மிகப் பழம்பெரும் வேதம், ரிக்வேதம் கற்றறிந்த துறவிகள் ஓரிறையை பல பெயர் கொண்டு அழைத்தனர். அவர்கள் கடவுளை வருணன், இந்திரன், மித்திரன், சூரியன், அக்னி என பல பெயர்களில் அழகுபட அழைத்தனர். இவை அனைத்தும் அவனின் தன்மைகளை சிறப்பை உணர்த்துவதாக இருந்தன. கடவுளின் 33 தன்மைகளை ரிக் வேதம் குறிப்பிடுகிறது. அதில் ஒரு தன்மை பிரம்மா(படைப்பவன்) என்ற தன்மையை 2:1:3ல் குறிப்பிடுகிறது.
குறிப்பு: இஸ்லாம் படைக்கும் தன்மையை "காலிக்" எனக் கூறுகிறது. ஆனால் சிலர் கூறுகிற பிரம்மாவுக்கு 4-தலைகளும் 4-கைகளும் உண்டு, என்ற இத்தோற்றத்தை உருவகத்தை இஸ்லாம் மறுக்கிறது. மேலும் யஜூர் வேதத்தின் 32:3-ன் கூற்றுப்படி ''அவனை உருவகிக்க முடியாது" என்ற சுலோகத்ததுக்கும் ப்ரம்மாவுக்கு 4-தலைகளும், 4-கைகளும் உள்ளன என்ற வாதம் முரண்படுகின்றது.
ரிக் வேதம் (2:2:3)
விஷ்ணு-பாதுகாப்பவன், உணவளிப்பவன் எனும் கடவுளின் தன்மையைக் கூறுகிறது. இஸ்லாம் இத்தன்மையை ''ரப்" என அரபியில் அழகுபட கூறுகிறது. ஆனால் சிலர் கூற்றுப்டி விஷ்ணு 4 கரங்களைக் கொண்டவன் ஒரு கையில் சக்கரம் மற்றொரு கையில் சூலம், பறவையை வாகனமாய் கொண்டவன் என்று உருவகப்படுத்துவதை இஸ்லாம் மறுக்கிறது.
குறிப்பு:- யஜூர் வேதத்தின் 40:8ன் படி அவன் உருவமற்றவன் என்ற விளக்கத்திற்கு முரணானது.
ரிக் வேதம் (8:1:1)
''மா சிதான்யதியா ஷன்ஸதா" அவனையன்றி யாரையும் வணங்காதீர்கள், அவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன்.
(ரிக் வேத சம்ஹிதி 9-ம்பாகம், பக்கம் 1, 2 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)
ரிக் வேதம் (5:81:1)
படைக்கும் அவன் மிகப்பெரும் கீர்த்தியாளன்.
(ரிக்வேத 6-ம்பாகம், பக்கம் 1802, 1803 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)
குர்ஆன் கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)
ரிக் வேதம் (3:34:1)
கடவுள் மிகப்பெரும் கொடைத் தன்மை கொண்டவன் எனக் கூறுகிறது.
குர்ஆன் கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)
யஜூர் வேதத்தின் (40:160)
எங்களை நல்வழியில் செலுத்து. எங்களின் பாவங்களைப் போக்கு, பாவங்கள் நரகில் சேர்க்கும் ''யஜூர் வெது சம்ஹிதி-ராலப்" (யஜீர்வேத சம்ஹிதி- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 541)
குர்ஆன் கூறுகிறது: நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!, அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல. நெறி தவறியோர் வழியுமல்ல. (குர்ஆன் 1:5, 6&7)
ரிக் வேதம் (6:45:16)
''யா எக்கா இட்டமுஸ்ததி" தனித்தவனான இணையற்ற அவனுக்கு எல்லாபுகழும்.
இந்து வேதாந்தமான பிரம்ம சூத்திரம்
''ஏகம் ப்ரஹம் த்வித்ய நாஸ்தே எநன் நா நாங்தே கின்சான்" கடவுள் ஒருவனே, இருவர் இல்லை, இல்லவே இல்லை! இல்லவே இல்லை. சிறிது கூட இல்லை!
ஆக இந்துப் புனித வேதங்கள், புராணங்களைக் கற்றறிந்தால் கூட ஓரிறைக் கொள்கை உறுதியாகக் கூறப்பட்டதை நன்கு உணரலாம்.
மலக்குகள் அல்லது தேவதூதர்கள் (ANGELS)
இஸ்லாத்தில் மலக்குகள்
மலக்குகள் என்பவைஅல்லாஹ்வின் படைப்பினங்களில் ஒன்று. ஒளியினால் படைக்கப்பட்டவை. நம்மால் காணவியலாது. தங்களின் விருப்பப்படி எதுவும் செய்வதில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்கு அப்படியே அடிபணியக் கூடியவை. பல்வேறுப்பட்ட காரியங்களுக்காக அவற்றை நிறைவேற்ற அல்லாஹ்வால் பணிக்கப்பட்ட மலக்குகள் உள்ளன.
உதாரணம்:
ஜிப்ராயீல்(அலை)-வஹீ என்னும் இறைச் செய்திகளை கொண்டு வரும் மலக்கு
மீக்காயீல்(அலை)-மழை கொண்டு வரும் மலக்கு
இந்து மதத்தில் மலக்குகள்
மலக்குகளுக்கு என்று எந்த கோட்பாடும் இல்லை. இருப்பினும் இவை மனிதர்களைக் காட்டிலும் மிகப் பலம் வாய்ந்தவை. மலக்குகளை சிலர் தெய்வங்களாக வழிபடுவதுமுண்டு.
ஆக்கம்: நெல்லை இப்னு கலாம் ரசூல்
நன்றி: இஸ்லாம் கல்வி.காம்
Posted by
மரைக்காயர்
at
9:10 PM
2
comments
Labels: இந்து மதம், இஸ்லாம், வேதங்கள்
Thursday, March 15, 2007
1. இஸ்லாமும் இந்துமதமும் ஓர் ஒப்பீடு
இந்து மதம்
சிந்து நதிக்கரையோரம் (இந்துஸ் நதி) வாழ்ந்த மக்களின் பூகோள ரீதியான அடையாளப் பெயர் "ஹிந்து" என வழங்கப்பட்டது. சில வரலாற்று ஆசிரியர்கள் வடமேற்கு இமயத்தின் வழியாக இந்தியா வந்த பெர்ஸியர்களால் இப்பெயர் அழைக்கப்பட்டது எனக் கூறுகின்றனர். முஸ்லிம்கள் இந்தியாவை வெற்றிகொள்வதற்கு முன்பாக ஹிந்து என்னும் இவ்வார்த்தை இந்தியாவின் இலக்கியங்களிலோ அல்லது சரித்திர வரலாற்றுக் குறிப்புகளிலோ இல்லை. இச்செய்தியை மதம் மற்றும் வேதங்கள் பற்றிய என்ஸைக்ளோபீடியா (Encyclopedia) உறுதி செய்கிறது. ஜவஹர்லால் நேரு தம் நூலகிய டிஸ்கவரி ஆஃப் இந்தியாவில் பக்கம் 74, 75ல் ஒரு மதம் சாராத ஒரு பிரதேசத்தில் வசித்த மக்களைக் குறிப்பிடும் வார்த்தை இது எனக் குறிப்பிடுகிறார். ஹிந்து என்பது ஒரு மதம் சார்ந்தது என்பது பின்னர் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாக ஆகிவிட்டது. சுருக்கமாக இந்தியாவில் சிந்து நதிக்கரையில் வாழ்ந்த குறிப்பிட்ட சமுதாயத்தைக் குறிப்பிடும் வார்த்தையே பூகோள ரீதியாக சரியானது.
ஹிந்துத்துவம் என்றால் என்ன?
ஹிந்துத்துவம் என்பது ''ஹிந்து" என்ற வார்த்தையிலிருந்து வந்தது. ஹிந்து என்ற பெயரை ஆங்கிலேயர்கள் ஆங்கில மொழியில் 19ம் நூற்றாண்டில் ஒரு மத நம்பிக்கை விசுவாசம் கொண்ட மக்களை அழைக்கப் பயன்படுத்தினர். புதிய என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிகாவில் 20:581ல் பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் (1830) முஸ்லிம்களல்லாத, கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்கள் நீங்கலாக, உள்ள பிற மக்களை ஹிந்து என அழைத்தனர்.
மதநம்பிக்கை எண்ணம் ஆகியவற்றின் கூட்டே ஹிந்துத்துவா என நாம் கருதுவது தவறு. ஏனெனில் ஒரே கலாச்சாரம் மதநம்பிக்கை கொண்ட மக்களின் கூட்டமைப்புக்கு எதிராக இந்த ஹிந்துத்துவம் உள்ளது. இதற்கு என எந்த ஆரம்பமோ, வரம்போ, தீர்க்கமான வரையரையோ என்று எதுவும் சொந்தமாக இல்லை. எனவே இதன் சடங்குகள் சம்பிரதாயங்களில் கூட பல்வேறுபட்ட மாறுபாடுகள் உள்ளன. இந்துத்துவத்தை நிலை நிறுத்த எந்த விதியுமில்லை, வரம்புமில்லை. எனவே இந்து என தன்னைக் கூறிக் கொள்ளும் ஒருவர் தம் மனதுக்கேற்றவாறு எதையும் வணக்க வழிபாடுகள் புரியலாம். அது பழக்கத்தில் உள்ளதாக விசுவாசத்துக்குட்பட்டதாக இருந்தால் போதும்.
ஹிந்து அறிஞர்களின் கூற்றுப்படி இந்து மதம் ஒரு சாதாரண தர்மங்களைக் கூறுவது, என்றென்றும் நிலைத்து நிற்கும் மதம் அல்லது வேத தர்மங்களைக் கூறுவது எனக் கூறுகின்றனர். ஸ்வாமி விவேகானந்தரின் கூற்றுப்படி இந்து மதத்தைப் பின்பற்றுவோர் ''வேதாந்திகள்" ஆவர்.
இஸ்லாம்-ஒர் அறிமுகம்
''ஸலாம்" எனும் அரபுச் சொல்லிலிருந்து வந்ததுதான் இஸ்லாம். ஸலாம் என்றால் சாந்தி அமைதி எனப் பொருள். படைத்த வல்ல இறையோனுக்கு கட்டுப்படுதல் என்று மற்றொரு பொருளும் உண்டு. முஸ்லிம் என்றால் யார்? யார் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுகின்றாரோ அவரே முஸ்லிம்.
இஸ்லாத்தைப் பற்றித் தவறாகப் புரிந்தோர்
இஸ்லாம் கடந்த 1400 ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியது. அதனை நிறுவியவர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் என பெரும்பாலோர் புரிந்து வைத்துள்ளனர். உண்மையில் இஸ்லாம் மனித சமுதாயம் படைக்கப்பட்ட நாளிலிருந்து பூஉலகில் உள்ளது. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார். இஸ்லாத்தின் நிறுவனர் முஹம்மது நபி(ஸல்) அல்ல. மாறாக இறைவனின் இறுதி நபியும் முத்திரை நபியுமாவார்.
இந்துமத விசுவாசத்தின் தூண்கள்
இந்து மத விசுவாசத்தின் வரையறைகள் என ஒன்றுமில்லை. ஏற்கனவே குறிப்பிட்டது போல இந்துத்துவத்தின் ஆரம்பமோ, வரம்போ, தீர்க்கமான வரையறைகளோ என்று எதுவுமில்லை. ஒரு இந்துவாக இருந்தால் இன்னின்ன கட்டாய கடமைகளை, வணக்க வழிபாடுகளை இவ்வாறு புரிந்தால்தான் ஒரு இந்துவாக முடியும் என்ற ஒரு கட்டுக்கோப்பான பொதுவான நம்பிக்கை எதுவுமில்லை. ஒரு ஹிந்து தனக்கு திருப்தி அளிக்கும் செயலை சுதந்திரமாக செய்யலாம். அது அவருக்கு தடுக்கப்பட்டதாகவோ அனுமதிக்கப் பட்தாகவோ, கட்டாயம் செய்யவேண்டியது, அவ்வாறு செய்யத் தவறினால் அவர் ஒரு இந்துவல்லாதவராகப் போய்விடுவார் என்ற கெடுபிடியோ எதுவும் இல்லை. ஒருவரை இந்து அல்லாதவர் என்று கூற மத சடங்கு ஏதேனும் அவர் செய்யாமல் புறக்கனித்துவிட்டார், அதனால் இவர் இந்து அல்லாதவராக ஆகிவிட்டார் என கூறவியலாது. இருப்பினும் இந்துக்களிடம் பெரும்பாலும் சில பொதுவான நம்பிக்கைகள் உள்ளன. அதனை 100 சதவீதம் இந்துக்களும் ஏற்றுக் கொள்வதில்லை. அதனைப் பின்னர் விவரிப்போம்.
இந்துத்துவத்தில் கடவுள் கொள்கை
ஆரியர்களின் மதமே இந்துத்துவம். பொதுவாக ஒரு இந்துவிடம் உங்களின் கடவுள்கள் எத்தனை? (உங்கள் விசுவாச அடிப்படையில்) என்று வினவினால் சிலர் 3 என்பர், சிலர் 33 என்பர். சிலர் ஆயிரம் என்பர் இன்னும் சிலர் 33 கோடி என்பர். கற்றறிந்த இந்து ஆன்மீகத் தலைவரிடம் (வேதங்களை, புராணங்களை) இதுபற்றி வினவினால் கடவுள் ஒருவனே. அவனே வணக்க வழிபாடுகளுக்குறியவன் எனப் பதிலளிப்பார்.
இஸ்லாத்துக்கும் இந்துமதத்துக்கும் உள்ள வேறுபாடுகள்
இஸ்லாம் ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்வுக்குறியது. Every thing is God’s எனக் கூறுகிறது. இந்து மதமோ ஒவ்வொரு பொருளும் கடவுள் Every thing is God எனக் கூறுகிறது. ஆகவே இவ்விரண்டுக்கும் உள்ள முதல் வித்தியாசம் ’s ஆகும். இஸ்லாத்துக்கும் இந்துமதத்துக்குமுள்ள மிகப் பெரிய வேறுபாடு வணக்க வழிபாடுகளாகும். ஒரு சாதாரண இந்து மண், மரம், செடி, கொடி, சந்திரன், சூரியன், பாம்பு, பசுமாடு, எலி, புலி என ஒவ்வொரு பொருளையும் வணங்குபவனாக இருக்கிறான். அதற்கு கடவுள் அந்தஸ்தும் தருகிறான். ஆனால் முஸ்லிமோ மண் அல்லாஹ்வுக்குறியது, மரம், செடி, கொடி, சந்திரன், சூரியன், பாம்பு, பசுமாடு, எலி, புலி, மனிதன் என ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்வுக்குரியது என்பதையும் நம்புகிறான். ஒவ்வொரு பொருளும் கடவுள் எனக் கருதக்கூடிய (ஆங்கிலத்தில் ’s) ’s நீக்கிவிட்டால் விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் இஸ்லாத்துக்கும் இந்து மதத்துக்கும் எந்த வேறுபாடுமிருக்காது. அருள்மறை குர்ஆனின் கீழ்க்கண்ட வசனம் இதனையே வலியுறுத்துகிறது.
(நபியே! அவர்களிடம்) ''வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ''நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!" என்று நீங்கள் கூறிவிடுங்கள். (3:64)
ஓரிறைக் கொள்கையை உரக்க ஒலிக்கும் வேதங்கள்
பகவத் கீதை 7:20
மிகப் பிரசித்திபெற்ற இந்து மதப் புனிதநூல் பகவத்கீதை அதன் 7வது அத்தியாயத்தின் 20 வது வசனம் இவ்வாறு கூறுகிறது: ''எவரெருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்".
சிலை வணக்கம் உருவ வழிபாட்டின் முதுகெலும்பை முறிக்கிறது.
உபநிஷங்கள்:
உபநிஷங்களும் இந்துக்களின் புனித வாக்குகளே. அவை கூறுவதைப் பாருங்கள்.
1. சந்தோக்ய உபநிஷம்
சந்தோக்ய உபநிஷத்தில், பிரபாதக அத்தியாயத்தில் (Chapter-6) இரண்டாவது காண்டத்தில் (Section-2) வசனம் ஒன்று (Verse No.1) இவ்வாறு கூறுகிறது.
''ஏகம் எவதித்யம்"
''இரண்டல்லாத அவன் ஒருவனே - ஒருவன் மட்டுமே"
உபநிஷங்களின் தொகுப்பு - எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகத்தின் முதல் பாகம், பக்கம் 447, 448.
உபநிஷம் கூறும் வாக்கு சரி என்பதை அருள்மறையின் கீழ் கண்ட வசனம் உறுதி செய்கிறது
குர்ஆன் கூறுகிறது
(நபியே?!) நீர் கூறுவீராக அல்லாஹ் அவன் ஒருவனே. (குர்ஆன் 112:1)
2. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (6:9)
''நகஸ்ய கஸ்ஜிஜ் ஜானித நகதிப்பா" அவனுக்கு பெற்றோர்கள் இல்லை. அவனுக்கு அதிபதி யாருமில்லை.
''நதஸ்ய கஸ்ஜித் பாதிர் அஸ்திலோகே ந செஸித நைவ க தஸ்ய லிங்கம் நகரணம் கரணதி பதியே"
அவனுக்கு உலகில் எந்த அதிபதியும் இல்லை அவனை ஆள்பவர் எவருமில்லை. அவனுக்கு எந்த வரையறையுமில்லை. அவனே காரணி. அதிபதி, அவனுக்கு இணையான எவரும் இல்லை. (எஸ். ராதாகிருஷ்ணனின் உபநிஷங்களில் பாகம்-15ல் பக்கம் 745)
குர்ஆன் கூறுகிறது:
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (குர்ஆன் 112:3)
3. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:19)
நதஸ்ய பரதிமா அஸ்தி
அவனுக்கு ஒப்பாக யாருமில்லை.
னநனம் உர்தவம் நதிரியாங்கம் நமத்யே நபரிஜ்யகரபாத்
நதஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹத் யஸாஹ்
அவனுக்கு ஒப்பாக யாருமில்லை அவன் புகழும் கீர்த்தியும் மிகப்பெரிது.
குர்ஆன் கூறுகிறது:
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (குர்ஆன் 112:4)
..அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (குர்ஆன் 42:11)
4. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:20)
ந சம்த்ர்ஸே திஸ்கதி ரூபம் அஸ்யா ந சக்சுஸா பஸ்யத்தி கஸ் கனய்னம்
அவனின் தோற்றத்தை நம்மால் காணவியலாது. அவனை எவரும் கண்ணால் கண்டதில்லை.
ஹிர்த ஹிர்திஸ்தம் மானஸ ஏனம் ஏவம் விதுர் அமர்தஸ் தெ பவன்ந்தி
அவனை இதயத்தால் உள்ளத்தால் நெருங்குவோர், அவனை அறிவர்.
குர்ஆன் கூறுகிறது
பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.(குர்ஆன் 6:103)
ஆக்கம்: நெல்லை இப்னு கலாம் ரசூல்
நன்றி: இஸ்லாம் கல்வி.காம்
Posted by
மரைக்காயர்
at
10:15 AM
4
comments
Labels: இந்து மதம், இஸ்லாம், வேதங்கள்
Wednesday, March 14, 2007
"ஐயாயிரம் கொடுத்தால் இந்துவாயிடலாம்!"
மற்ற மதத்தினர் இந்து மதத்திற்கு எப்படி மாற முடியும் என்று கேள்விகள் எழும்போதெல்லாம் ஆர்ய சமாஜ் என்ற அமைப்பு அது போன்ற 'திருப்பணிகளை' செய்து வருவதாக இணைய இந்துத்துவாக்கள் கை காட்டுவார்கள். நண்பர் எழில் அவரது பதிவில் ஆர்ய சமாஜ் தளத்திற்கு இணைப்பு கூட கொடுத்திருக்கிறார். நேசக்குமாரும் ஆரியசமாஜம் முஸ்லிம்களை மதம் மாற்றியதாகவும் அப்படி மாறிய முஸ்லிம்கள் 'ஆரியசமாஜி' என்ற ஜாதியினராக இருந்ததாக அவரது பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த ஆர்ய சமாஜ் பற்றி ஜூனியர் விகடனில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வாக இருக்கிறார் அ.தி.மு.க-வைச் சேர்ந்த குளோரி சந்திரா. தனி தொகுதியான இங்கு இவர், ‘இந்து-பள்ளர்’ என்ற அடிப்படையில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அப்போதே இவரது வெற்றியை எதிர்த்து பலதரப்பிலும் சர்ச்சைகள் கிளம்பியது. இந்நிலையில் இவரிடம் தேர்தலில் தோற்றுப் போன எதிர்தரப்பினர், "கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பிற்பட்ட வகுப்பினரான குளோரி சந்திரா, பொய்யான தகவல்களைக் கொடுத்து தேர்தல் கமிஷனையே ஏமாற்றி வெற்றி பெற்றிருக்கிறார்" என்று குற்றச்சாட்டை கிளப்பியிருக்கிறார்கள்.
எதிர் தரப்பினர் எடுத்து வைத்த ஆதாரங்களை மறுக்க முடியாத சந்திரா, ‘அடிப்படையில் கிறிஸ்டியனான நான், 1994 வது வருடமே மதுரையிலிருக்கும் ஆரிய சமாஜம் என்ற அமைப்பின் மூலமாக இந்துவாக மாறிவிட்டேன்’ என்று கோர்ட்டில் சொல்லி அதற்கான சான்றிதழையும் தாக்கல் செய்திருக்கிறார். சந்திராவின் இந்த வாக்குமூலம்தான் ஆர்ய சமாஜின் உண்மையான 'திருப்பணிகளை' வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.
தி.மு.க.வைச் சேர்ந்த சண்முகம் என்பவர் சொல்கிறார், "பிப்ரவரி முதல் வாரத்துல சந்திரா குறிப்பிட்டுள்ள மதுரை ஆரிய சமாஜத்துக்குப் போனேன். அங்க ராஜேந்திரன்னு ஒருத்தர் இருந்தார். ‘சொந்தக்காரர் ஒருத்தர் இந்து மதத்துக்கு மாறுனது மாதிரி சான்றிதழ் வேணும்’னு கேட்டேன். உடனே, எனக்கு சர்டிஃபிகேட் கொடுக்க சம்மதிச்சார். நான், ‘ஜெயபால் டேவிட்’ங்கிற பேரை ‘செல்லையா’ன்னு மாத்தணும்னு எழுதிக்கொடுத்தேன். ஜெயபால் டேவிட் நெல்லை பேராயர்னு கூட தெரியாம ஐயாயிரம் ரூபாய வாங்கிக்கிட்டு அஞ்சு நிமிஷத்துல அவர செல்லையாவாக்கிட்டாங்க. இவ்வளவுக்கும் பேராயரோட அட்ரஸைத்தான் கொடுத்தேன்.
அன்னிக்கு சாயந்தரமே காங்கிரஸ் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ் பேரை ‘பெருமாள்சாமி’ன்னு மாத்தணும்னு எழுதிக் கொடுத்தேன். 5.2.2007-ம் தேதியில இருந்து பீட்டர் அல்போன்ஸும், பெருமாள்சாமியாயிட்டார்! சான்றிதழ்ல சட்டமன்ற உறுப்பினர்ங்கிறதை சுருக்கி, ‘ச.ம.உ.’ ன்னு எதுவும் புரியாமலே எழுதிக்கொடுத்துட்டாங்க. இதுக்கு வெறும் ஆயிரம் ரூபாய்தான் செலவாச்சு. பணத்தைக் குடுத்து மதத்தை மாத்துற இந்த ரூட்டுலதான் சந்திராவும் போயிருக்கிறார்’’ என்றார் சண்முகம்.
இந்த விவகாரம் தொடர்பாக இப்போது ஆரிய சமாஜ நிர்வாகிகள் இருவர் மீது வழக்குப் போட்டிருக்கிறது போலீஸ். விளக்கமறிவதற்காக ஜூனியர் விகடன் நிருபர்கள் அங்கே சென்றபோது பதில் சொல்ல ஆள் இல்லாமல் பூட்டிக் கிடந்தது அந்த அலுவலகம்.
பீட்டர் அல்போன்ஸை அவருக்குத் தெரியாமலே இந்து மதத்துக்கு மாற்றியிருப்பது குறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டார்கள். "இதுபற்றி நானும் கேள்விப்பட்டேன். ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது. மதத்தை வைத்து இந்த சமூகத்தில் எத்தகைய பித்தலாட்டங்கள் நடக்கின்றன என்பதற்கு இது ஒரு சான்று. பெருமாள்சாமியாக இருப்பதில் இந்த பீட்டர் அல்போன்ஸுக்கு எந்த பிரச்னையும் இல்லை. மக்கள் பணி செய்வதற்கு மதம் எனக்கு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. ஆனால், மதத்தை வைத்து இப்படி மக்களை ஏமாற்றும் நபர்கள் அபாயமானவர்கள். இப்படியெல்லாம் பணத்தை வாங்கிக் கொண்டு மதத்தை மாற்றிச் சான்றிதழ் கொடுப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நானும் இதுபற்றி புகார் செய்யவிருக்கிறேன்..’’ என்று படபடத்தார். - நன்றி: ஜூனியர் விகடன்
ஆரிய சமாஜம் இதை உலகமெங்கும் செய்து வருவதாகவும், பஞ்சாபில் சுதந்திரத்துக்கு முன்பு பெருமளவில் முஸ்லிம்களை இந்துக்களாக ஆக்கியதாகவும் நேசக்குமார் ஒரு பதிவில் சொல்லியிருக்கிறார். இவர்கள் இண்டர்நேஷனல் லெவலில் மதமாற்றம் என்ற பெயரில் காசு பார்க்கும் ஒரு கும்பல் என்பது இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 'அங்கே 8000 பேர் மதம் மாறுனாங்க, இங்கே 10,000 பேர் மதம் மாறுனாங்க என்று நண்பர் எழில் அடிக்கடி தன் வலைப்பதிவில் எழுதுவார். 'இது'தான் அந்த மதமாற்றமா? உலகளாவிய அளவில் நல்லா கல்லா கட்டியிருப்பாங்க போலிருக்கே!
இந்த ஆரியசமாஜம் ஒரு சமூக சேவை இயக்கம் என்பது போலவும் இங்கு சிலர் நம் காதில் பூ சுற்றுகிறார்கள். இது அந்தக்காலத்திய இந்து மதவெறி அமைப்புகளுள் ஒன்றுதான். "ஆரிய சமாஜிகள் ஒன்று மற்ற மதத்தினருடன் சண்டை போடுவார்கள். இல்லாவிட்டால் தங்களுக்குள்ளாக சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள்" என்று 1924-லேயே காந்திஜி சொன்னார். இதைத் தொடர்ந்து சம்பந்தப் பட்டவர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. 'இந்து மதத்தை இழிவு படுத்தி இஸ்லாம் பக்கம் சாய்ந்து விட்டார் காந்திஜி' என்று சமாஜிகள் நாடெங்கும் பிரச்சாரம் செய்தார்கள். இது போன்ற பிரச்சாரங்களின் விளைவாகவே இறுதியில் காந்திஜி தனது உயிரையே இழக்க நேரிட்டது என்பது வரலாறு.
Posted by
மரைக்காயர்
at
9:51 AM
23
comments
Labels: இந்து மதம், இந்துத்துவா
Sunday, March 11, 2007
இந்துப் பெண்கள் மதமாற்றம் வெறும் புரளி!
இந்து பெண்களை குறிவைக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று நண்பர் எழில் ஒரு பதிவு போட்டிருந்தார். ஒரு கும்பல் இந்துப்பெண்களை மிரட்டி மதம் மாற்றுவதாகவும் ஒரு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு ஒவ்வொரு இஸ்லாமிய மதமாற்றத்துக்கும் 5000 பவுண்டுகள் தருகிறதாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த தகவலின் உண்மை நிலவரம் பற்றி சகோதரர் அட்றா சக்கை ஒரு பின்னூட்டமிட்டிருந்தார். இந்துப் பெண்களை மதம் மாற்றுகிறார்கள் என்பது வெறும் புரளி என்றும் வழக்கம் போலவே இதுவும் பொய்ப் பிரச்சாரம் என்றும் இஸ்லாமின் வளர்ச்சியை கண்டு பொறுக்க முடியாத சிலரின் வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு என்பதும் இத் தகவல் அறிக்கையின் மூலம் நாம் அறிய முடிகிறது.
சில பொய்களை பரப்புவதன் மூலம் இஸ்லாமை ஒழித்து விடலாம் என்றும் தங்கள் மதத்தை வளர்த்து விடலாம் என்றும் சிலர் மனக்கோட்டை கட்டி அதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.. பாவம்!
MCB calls for evidence for “forced conversions”
The Muslim Council of Britain
8 March 2007
Press Release:
After persistent reports of forced conversions of British Hindu and Sikh girls to Islam, the Muslim Council of Britain calls upon all concerned to publicise their evidence and hand it to the police authorities immediately.
‘These allegations are not new. What is deeply worrying however is the continuing absence of any actual substantive evidence to corroborate them. We believe it is high time that the plaintiffs supply their evidence to the police and relevant authorities,' said Dr Muhammad Abdul Bari, Secretary-General of the MCB.
If these reports prove to be true the MCB would unreservedly condemn the practice of forced conversion as it goes against a fundamental tenet of our religion - there is no compulsion in matters of faith.
Dr Abdul Bari said, ‘The MCB is fully prepared to co-operate with its Hindu and Sikh counterparts and the police to get to the root of these allegations and to ensure that the religious rights, freedom and dignity of all are respected. In the absence of any hard evidence of forced conversions though, many British Muslims will suspect that this is an underhand attempt to smear them. People from all faiths and none should have the right to convert to other faiths if they so wish.
தகவலுக்கு நன்றி: அட்றா சக்கை
Posted by
மரைக்காயர்
at
7:05 AM
10
comments
Saturday, March 10, 2007
பின்லாடனுக்கு இந்திய முஸ்லிம்கள் தேவை!!!
நீதிபதி இராஜேந்திர சச்சார் குழுவினரின் அறிக்கையின்படி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி இந்திய முஸ்லிம்கள் மார்ச்-7 ஆம் தேதி டெல்லியில் திரண்டனர். (பேரணியின் வீடியோ பதிவை பார்க்க இங்கே சுட்டவும்)
முஸ்லிம்கள் ஜனநாயக முறையில் உரிமை கோரினாலும் சில இழிபிறவிகளால் சகிக்க முடியாது. இராஜேந்திர சச்சார் தலைமையிலான குழு உண்மைக்குப் புறம்பான தகவல்களைச் சொல்லியுள்ளதாக ஊளையிட்டுள்ளனர்.
பாராளுமன்றத் தாக்குதலில் அப்சல் குரு மீதான நீதிமன்றத் தீர்ப்பை அமல் படுத்தி காந்தியைக் கொன்ற பார்ப்பன மாபாதகன் கோட்சே வரிசையில் எப்படியாவது ஒரு முஸ்லிம் பெயரை இடம்பெறச் செய்துவிட வேண்டும் என்ற நப்பாசையில் பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் அரங்கேற்றப்பட்ட நாடகத்திற்கு எதிரான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட சாதாரணச் செய்தியைக் கூட தினமலம் போன்ற இந்துத்துவ ஊடகங்கள் எவ்வாறு திரித்து எழுதுவார்கள் என்பதைச் சொல்லவே மேறகண்ட தலைப்பு! மற்றபடி நல்ல விசயம்தான்!
சவுதி அரேபியாவின் பிரபல நிறுவனமான சவுதி பின்லேடன் குரூப் பல்வேறு வேலைகளுக்கு மும்பையில் ஆள் எடுக்கின்றார்கள். தகுதியான நமது சகோதரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியை தொடர்பு கொண்டு அந்த நேர்கானலுக்கு சென்று பயன் பெறுங்கள். அல்லது தங்களின் நண்பர்களையோ அல்லது தேவையுள்ள உறவினர்களையோ அனுப்பிப் பயன் பெற செய்யுங்கள். இவற்றில் சில வேலைகள் மக்காவில் நடைபெறும் புரஜக்ட்டிற்கு முஸ்லிம்கள் மட்டும் தேவைப்படுவதால் நமது சகோதரர்களை அதிக அளவில் விண்ணப்பிக்க சொல்லவும்.
இந்தியாவில் இந்த செய்தியை பார்க்கும் நமது சகோதரர்கள் தயவு செய்து இதை பிரின்ட் எடுத்து பள்ளியிலோ அல்லது சமுதாயக் கூடங்களிலோ ஒட்டி நமது சமுதாயத்தவர்களை அதிக அளவில் பயன் பெறச் செய்யுங்கள்
SAUDI BINLADIN GROUPREQUIRE FOR THEIR METRO PROJECT
Short listed candidates will be called for interview with the Client around 6 to 9 March 2007 at Delhi, Mumbai, Chennai & Hyderabad
01 CIVIL CONSTRUCTION ENGINEERS
02 CIVIL DESIGN ENGINEERS
03 CIVIL PLANNING ENGINEERS
04 ELECTRICAL ENGINEERS
05 MECHANICAL ENGINEERS
06 MATERIAL ENGINEERS
07 QUALITY ENGINEERS
08 CIVIL FOREMEN
09 CIVIL SUPERVISORS
10 QUANTITY SURVEYORS
11 LAND SURVEYORS
12 AUTO CA DRAFTSMEN (Civil/Mechanical/Electrical)
13 SECRETARIES / DOCUMENT CONTROLLERS
14 SOIL TESTING TECHNICIANS
15 CIVIL SUPERVISORS (EARTH WORK )
16 CIVIL FOREMEN (EARTH WORK )
17 A/C TECHNICIANS
ATTRACTIVE HANDSOME SALARY WITH OTHER PERKS ARE OFFERED
Note: Engineers should be BE & Others should be Diploma with min 05 Yrs relevant exp in Railways/Roads/Buildings.
Apply by courier/email typed bio data (mention phone/ email specific experience) copies of educational and experience certificates, 2 photos and passport to R. K. INTERNATIONAL.
-----------
SAUDI BINLADIN GROUP
REQUIRE FOR MAKKAH PROJECT
MUSLIMS ONLY
Candidates will be called for interview with the Client around 6 to 9 March 2007 at Delhi, Mumbai, Chennai & Hyderabad
01 CIVIL ENGINEERS
02 MECHANICAL ENGINEERS
03 ELECTRICAL ENGINEERS
04 SURVEYORS
05 AUTO CAD DRAFSTMEN
06 CARPENTERS
07 STEEL FIXERS
08 MASONS
09 ELECTRICIANS
10 DIESEL ENGINE MECHANICS
11 PLUMBERS
12 A/C TECHNICIANS
13 TILE MASONS
14 PAINTERS
15 GENERATOR MECHANICS
16 CAR DRIVERS
17 WELDERS.
ATTRACTIVE HANDSOME SALARY WITH OTHER PERKS ARE OFFERED
Note: Engineers should be BE & Others should be Diploma and technicians with relevant experience min 05 Yrs relevant exp in Railways/Roads/ Buildings. Apply by courier/email typed bio data (mention phone/ email specific experience) copies of educational and experience certificates, 2 photos and\npassport to R. K. INTERNATIONAL
FOR ALL POSTS APPLY TO :
R. K. INTERNATIONAL
605 HEMKUNT HOUSE
6 RAJENDRA PLACE
NEW DELHI – 110008
Email: rkintl2@eth.net
Posted by
மரைக்காயர்
at
1:08 PM
4
comments
Labels: சவூதி அரேபியா, வேலை வாய்ப்பு
Friday, March 09, 2007
தற்பெருமை, கரைத்ததும் குடித்ததும், இன்னும் பிற!
தற்பெருமை பேசும் பலரை பார்த்திருக்கிறோம். அதன் extreme case ஒன்றை சமீபத்தில் நேசக்குமார் என்பவரின் பதிவில் பார்க்க நேரிட்டது. இஸ்லாம் என்று கூகிளில் இட்டால் முதல் பக்கத்திலேயே இவரது பதிவு வருகிறதாம். இவரது பெயரை கூகுளிட்டால் 90% அவரைப் பற்றிய பதிவுகள் வருகிறதாம். இது போல ஒரு பட்டியலே இவர் இட்டிருக்கிறார். மததுவேஷம் என்று கூகுளில் இட்டால் கூட முதல் பக்கத்திலேயே இவரது பதிவுதான் வருகிறது. இதை இவர் கவனிக்கவில்லை போலிருக்கிறது.
********
தற்பெருமை அதிகமாக இருக்கும் இடத்தில் நேர்மை துளியும் இருக்காது என்பதற்கும் இவர் பதிவிலேயே உதாரணம் இருக்கிறது.
இந்து மத வேதங்களைப் பற்றி இவர் சொல்கிறார்; "நான் வேதத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்திருக்கிறேன். வேதத்தின் முடிவு, சிகரம் என்றெல்லாம் புகழப்படும் வேதாந்தத்தின் மீது எனக்கு அபரிதமான மரியாதை உண்டு. ஆனால், வேதங்கள்? அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்ததில் எனக்கு இது நமக்கு விளங்காத விஷயம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன்."
"... வேதத்தின் பக்கம் போக வேண்டாம். உபநிஷத்துக்களுடன் நமது தேடலை நிறுத்திக்கொள்வோம் என்ற முடிவுக்குவந்துவிட்டேன்."
என்ன ஒரு அயோக்கியத்தனம் பாருங்கள். இவரது மதத்தின் வேதம் விளங்காத விஷயமாம், அதன் பக்கம் போக வேண்டாமாம், ஆனால் இன்னொரு மார்க்கத்தின் வேதத்தைப் பற்றி இவர் விவாதம் செய்வாராம்.
இதுக்கு பிறகு வர்றதுதான் செம காமடி!
இவரோட நண்பர் ஜாடாயு என்பவர் எழுதுகிறார், "நேசகுமார், இதை நீங்கள் சொல்வது எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. குரானையும், ஹதீஸ்களையும், பற்பல இஸ்லாமிய இலக்கியங்களையும் சளைக்காமல் படித்துக் கரைத்துக் குடித்திருக்கும் நீங்கள் இந்த முயற்சியில் அயர்ந்து விட்டீர்களா?"
கரைச்சு குடிக்கிறதுக்கு இதெல்லாம் என்ன ரஸ்னா ஜூஸுங்களா?
எனது நண்பர் இவரைப் பற்றி ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார், "ஒரு காமடி நினைவுக்கு வருது. ஒரு படத்தில வடிவேலு கதாபாத்திரத்தை அடிவாங்குவதற்கென்றே கைதட்டி உற்சாகப் படுத்துவார்கள். அது போல இந்த நபருக்கு அரைவேக்காடு நீ.., மடவாயு போன்றவர்கள் உற்சாகப்படுத்தி சிங்கம் கெளம்பிருச்சுடோய்-ன்னு உசுப்பேத்திகிட்டு இருக்காங்க.."
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தித்தான்...!
*********
இவங்க ரெண்டு பேரோட கட்டுரையை(?)யும் திண்ணையில போட்டிருந்தாங்களாம். இப்பல்லாம் நகைச்சுவை கட்டுரை ரொம்ப பேர் எழுத மாட்டேங்குறாங்கன்னு இவங்க கிட்ட கேட்டு வாங்கி போட்டிருப்பாங்களா யிருக்கும்!
Posted by
மரைக்காயர்
at
5:52 PM
4
comments
Thursday, March 01, 2007
அந்த மூன்று கேள்விகள்!
எனது முந்திய பதிவில் நீலகண்டனுக்கும் அவரது சகாக்களுக்கும் நான் கேட்ட மூன்று கேள்விகள் இவை.
1. இந்து ஒற்றுமை, இந்து தர்மம், என்றெல்லாம் வெட்டி முறிக்கிற உங்களுக்கு எல்லாம் காஞ்சிபுர மடத்தை இழுத்து மூட வேணாம், இப்ப இருக்குற மட அதிபதிகளை விரட்டிவிட்டு ஒரு தலித்தை சங்கராச்சியாரா நியமிக்கணும்னு கோரிக்கை எழுப்பவாவது வக்கு இருக்கிறதா?
2. RSS கூட்டத்துக்கு தலைவரா நீலநிற கண்களை உடைய ஒரு 'சித்பவன்' பிராமணர் மட்டும்தான் வரமுடியுமாமே? ஏன் அப்படி? சித்பவன் பிராமணர்கள் என்றால் யார்? பிராமணர்களிலேயே இவங்க உசத்தியா? RSS கூட்டத்திற்கு யாராவது ஓரு தலித் இதுவரை தலைவரா வந்திருக்கிறாரா? இல்லையென்றால் ஏன்?
3. ஏமாறதவன் என்பவர் சொல்கிறார், "நான் நம் இணைய இஸ்லாமிய சகோதரர்களை கெஞ்சி கேட்பது இதுதான். அறியாமல் நீங்கள் உங்கள் வருங்கால சந்ததிகளையும் இந்த படுகுழியில் தள்ளாதீர்கள்." இவர் தன் வருங்கால சந்ததிகளை எந்த படுகுழியில் தள்ளியிருக்கிறார்? அது இஸ்லாத்தை விட எந்த வகையில் உயர்ந்தது? இவரோட கொள்கை வெளியில கவுரவமா சொல்லிக்கிற மாதிரி கொள்கையா இருந்தா தைரியமா அதைப் பத்தி சொல்லலாமே?
ஜோரா உங்க ஜல்லிகளை கொண்டு வந்து கொட்டுங்க பார்ப்போம்! என்று அழைப்பு விடுத்திருந்தும் நீலகண்டனிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. ஜல்லி ஸ்டாக் தீர்ந்து விட்டது போலும்! ஒரு கவன ஈர்ப்பு முயற்சியாக இக்கேள்விகளை மறுபதிவு செய்கிறேன்.
இதில் 'உங்கள் வருங்கால சந்ததிகளையும் இந்த படுகுழியில் தள்ளாதீர்கள்' என்று இணைய இஸ்லாமிய நண்பர்களை கெஞ்சிக் கேட்ட ஏமாறாதவன் என்பவர் மட்டும் 'இவர் எந்தப் படுகுழியில் கிடக்கிறார்?' என்ற நமது 3-வது கேள்விக்கு பதிலளிக்க ரொம்பவே அசிங்கப் பட்டுக் கொண்டு, கடைசியில் தான் எந்தப் போக்கிடமும் இல்லாத அனாதை என்று சமாளித்திருக்கிறார். இவர் தனது சந்ததிகளையும் அப்படியே அலைய விடப்போகிறாரா என்பது தெரியவில்லை. தனது இருப்பிடம் இன்னது என்று சொல்ல முடியாத இந்த நபர் இஸ்லாமிய நண்பர்களையும் தன்னைப் போலவே பரதேசிகளாகும்படி அழைப்பு விடுப்பதை வேடிக்கை என்பதா? வேதனை என்பதா?
'எல்லா மதங்களும் பொய்' என்று சொல்லியிருக்கும் ஏமாறாதவனின் சார்பாகவும் எனது முதல் கேள்வியை நீலகண்டன் அவர்களிடம் சமர்ப்பிக்கிறேன். இதற்கு நேர்மையான பதிலை தருவார் என்று எதிர்பார்க்கிறேன்.
சவூதி அரேபியாவின் மன்னராட்சி பற்றி தமிழ் முஸ்லிம்களிடம் கேள்வி கேட்ட நண்பர் நீலகண்டன், அவர் அங்கத்தினராக இருக்கும் RSS பற்றிய எனது இரண்டாவது கேள்விக்கும் நேர்மையான விளக்கம் அளிப்பார் என்று நம்புகிறேன்.
Posted by
மரைக்காயர்
at
2:37 PM
3
comments
Labels: இந்துத்துவா, விவாதங்கள்
Tuesday, February 27, 2007
நீலகண்டன் கேட்ட ஜல்லி!
நண்பர் நீலகண்டன் சவூதி அரேபியா பற்றி ஒரு பதிவு எழுதி 'மிதந்து கொண்டிருக்கிற வெளி முதல் சுவனத்து ப்ரியர் வரை மரக்காயர் முதல் இறைநேச வசை வரைக்குமாக சமாளிப்பு ஜல்லியடிகள் சமத்துவ முலாம் பூசி வரும்' என்பதாக அழைப்பு விடுத்திருந்தார். ஒரு விஷயத்தைப் பத்தி மத்தவங்க கருத்து சொல்றதுக்கு முன்னாடியே அதை 'ஜல்லியடிகள்' என்று முலாம் பூசுறதுல ஒரு சூட்சுமம் இருக்கிறது. வர்ற பதில் நெத்தியடியா இருந்தால்கூட 'ஹி..ஹி.. இதத்தான் நான் ஜல்லியடின்னு முன்னமே சொன்னேன்' அப்படின்னு சமாளிச்சுக்கலாம் பாருங்க!
சரி போகட்டும்.. நாம விஷயத்துக்கு வருவோம். நீலகண்டனோட சந்தேகங்களை ஒன்னொன்னா பார்ப்போம்.
//இரு மசூதிகளின் பொறுப்பாளன் எனும் புகழ்மிக்க அரபு பட்டத்தை சுமந்து கொண்டிருப்பவர் சவூதியின் பட்டத்து அரசர். அந்த குலத்தின் சந்ததிகளுக்கு மட்டுமே உரிய பட்டம் இது. 'இஸ்லாமில் சமத்துவம் உண்டே அதனால் ஒரு தலித் முஸ்லீம் ஆனால் அவர் இஸ்லாமிய அறிஞர்களிலேயே பேரறிஞரானால் அந்த பட்டம் இவருக்கு அளிக்கப்படுமா?' என்றால் 'இல்லை' என்கிற பதிலுக்கு.. - நீலகண்டன்//இந்திய அரசியல் சாசன சட்டத்தை நல்லா கரைச்சு குடிச்ச ஒரு பேரறிஞர் இருக்கிறார். அவருக்கு 'நாடாளுமன்ற சபாநாயகர்' என்ற பட்டம் அளிக்கப்படுமா? என்று யாராவது கேட்டால் நமக்கு சிரிப்புதான் வரும். ஏனென்றால் 'சபாநாயகர்' என்பது ஒரு பட்டமல்ல.. அது ஒரு பதவி என்பது பிரைமரி படிக்கிற பிள்ளைகளுக்கு கூட தெரிஞ்ச விஷயம். இப்படிப்பட்ட ஒரு கேள்வியைத்தான் நம்ம நண்பர் நீலகண்டர் கேட்டிருக்கிறார். சவூதி அரேபியாவின் மன்னராக இருப்பவர் இரு புனித தலங்களின் பாதுகாவலராகவும் பதவி வகிப்பார். இது அவரது மார்க்க அறிவை வைத்து கொடுக்கப்படும் பட்டமல்ல.
அவர் சவூதி அரேபியா என்ற நாட்டின் மன்னரே தவிர, உலக முஸ்லிம்கள் அனைவரின் தலைவரல்ல. கிருஸ்துவர்களுக்கு போப் இருப்பது போல முஸ்லிம்களுக்கும் ஒரு உலகளாவிய தலைவர் இருந்து, அந்த பதவிக்கு ஒரு எளிய குடும்பத்தைச் சார்ந்த மார்க்க அறிஞர் வர முடியுமா என்று நீலகண்டன் கேட்டிருந்தால் அதில் நியாயம் உண்டு. அப்படி ஒரு பதவி இருந்தால் அது இனம், குலம் சாராத, தகுதியை மட்டும் அடிப்படையாக கொண்டதாக இருக்கும். இதுதான் இஸ்லாம் காட்டும் சமத்துவம்.
//"The system of government in the Kingdom of Saudi Arabia is that of a monarchy....Citizens are to pay allegiance to the King in accordance with the holy Koran and the tradition of the Prophet, in submission and obedience, in times of ease and difficulty, fortune and adversity." என்று சவூதி அரசாங்கம் சொல்லுகிற வரிகள் குரானை அவமதிப்பதாகாதா? - நீலகண்டன்//'நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் இறைவனையும் இறுதி நாளையும் நம்பி இருந்தால் இறைவனுக்குக் கட்டுப்படுங்கள். இத்தூதரான முஹம்மதுக்கும் உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள். ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை இறைவனிடமும் இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள். இதுவே சிறந்ததும் மிக அழகிய விளக்கமுமாகும்.'-(குர்ஆன் 4 : 59)
முஸ்லிம்கள் தேசப்பற்றுடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் நாட்டுத்தலைவருக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் இறைவனே கட்டளையிடுவதற்கு ஒரு ஆணித்தரமான ஆதாரம் இந்த திருமறை வசனம். நீலகண்டன் சுட்டிக் காட்டியிருக்கும் சவூதி அரசாங்கத்தின் கொள்கையும் இதைத்தான் வலியுறுத்துகிறது. தலைமைக்கு கட்டுப்படுவது என்பதில் ஒரு கண்டிஷன் இருக்கிறது. தலைவர் காட்டும் வழி மார்க்கத்திற்கு முரண்படாததாக இருக்க வேண்டும்.
அதுவும் தவிர, சவுதி அரசாங்கத்தின் இந்த சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள் சவூதி குடிமக்கள்தானே? எல்லா முஸ்லிம்களும் அல்லவே?
//சவூதி அரேபியா போல சமத்துவத்தை பேணும் சொர்க்கத்துக்கு....இப்படியெல்லாம் யார் சொன்னாங்க?
இஸ்லாமிய சுவர்க்கத்தின் மண்ணுலக மாடலை... //
//இந்தியாவிலிருந்து வீட்டு வேலைக்காக அரபு நாடுகளுக்கு ஏராளமான பெண்கள் செல்கின்றனர். ஆனால் இவர்களுக்கு வேலை வாய்ப்பு நிறுவனங்களில் குறிப்பிட்டபடி சம்பளம் கொடுப்பதில்லை. இது தவிர பாலியல் கொடுமை உட்பட பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். -நீலகண்டன்//
புனிதத் தலங்கள் இருக்கும் நாடு என்பதால் சவூதி அரேபியா முஸ்லிம்களுக்கு புனித பூமி. அதற்காக அங்கே இருப்பவர்களெல்லாம் புனிதர்களாகி விடுவார்களா? எந்த சமுதாயமாக இருந்தாலும் அதில் சில கேடுகெட்ட கயவர்களும் கலந்துதான் இருப்பார்கள். கொஞ்ச நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் நடந்ததை எல்லாம் மறந்து விட்டீர்களா? துறவி என்ற போர்வையில் சிறு வயது சினிமா நடிகை முதல் வயதான பெண் எழுத்தாளர் வரை தனது காம சபலத்தை அடக்க முடியாமல் கைவைத்து அசிங்கப்பட்டு அவமானப்பட்டு நின்றவர்களை மறக்கத்தான் முடியுமா?
சவூதியின் கயவர்களுக்கும் காஞ்சிபுர _ _ _ _ களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? சவூதியில் பாலியல் குற்றம் செய்தவன் சட்டத்தின் முன் நிறுத்தப் பட்டால் அதிக பட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும். இதுதான் இஸ்லாம் காட்டும் வழிமுறை. ஆனால் காஞ்சிபுரத்திலோ, இந்த குற்றவாளிகள் இன்னும் 'நடமாடும் கடவுள்'களாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களால் கோடிக்கணக்கான இந்துக்களுக்கும் இந்திய திருநாட்டிற்குமே பெருத்த அவமானம்!
இனி, நீலகண்டனுக்கும் அவரது சகாக்களுக்கும் என்னுடைய கேள்விகள் சில. ஜோரா உங்க ஜல்லிகளை கொண்டு வந்து கொட்டுங்க பார்ப்போம்!
1. இந்து ஒற்றுமை, இந்து தர்மம், என்றெல்லாம் வெட்டி முறிக்கிற உங்களுக்கு எல்லாம் காஞ்சிபுர மடத்தை இழுத்து மூட வேணாம், இப்ப இருக்குற மட அதிபதிகளை விரட்டிவிட்டு ஒரு தலித்தை சங்கராச்சியாரா நியமிக்கணும்னு கோரிக்கை எழுப்பவாவது வக்கு இருக்கிறதா?
2. RSS கூட்டத்துக்கு தலைவரா நீலநிற கண்களை உடைய ஒரு 'சித்பவன்' பிராமணர் மட்டும்தான் வரமுடியுமாமே? ஏன் அப்படி? சித்பவன் பிராமணர்கள் என்றால் யார்? பிராமணர்களிலேயே இவங்க உசத்தியா? RSS கூட்டத்திற்கு யாராவது ஓரு தலித் இதுவரை தலைவரா வந்திருக்கிறாரா? இல்லையென்றால் ஏன்?
3. ஏமாறதவன் என்பவர் சொல்கிறார், "நான் நம் இணைய இஸ்லாமிய சகோதரர்களை கெஞ்சி கேட்பது இதுதான். அறியாமல் நீங்கள் உங்கள் வருங்கால சந்ததிகளையும் இந்த படுகுழியில் தள்ளாதீர்கள்." இவர் தன் வருங்கால சந்ததிகளை எந்த படுகுழியில் தள்ளியிருக்கிறார்? அது இஸ்லாத்தை விட எந்த வகையில் உயர்ந்தது? இவரோட கொள்கை வெளியில கவுரவமா சொல்லிக்கிற மாதிரி கொள்கையா இருந்தா தைரியமா அதைப் பத்தி சொல்லலாமே?
Posted by
மரைக்காயர்
at
2:44 PM
29
comments
Labels: சவூதி அரேபியா, தேசபக்தி, முஸ்லிம்கள்
Friday, February 23, 2007
லேப்டாப்பில் மாட்டிறைச்சி தேடிய பஜ்ரங்தள்!
வெளிநாட்டுப் பயணிகளிடம் வழிப்பறி செய்த பஜ்ரங்தள் கொள்ளையர்கள் கைது!
சங்பரிவார் இயக்கத்தினர் தென்னாப் பிரிக்காவைச் சேர்ந்த கோர்டன் (44) மற்றும் ஜேக்கப் (52) என்ற இருவரிடம் வழிப்பறி செய்து கையும் களவுமாக பிடிபட்டனர்.
இந்தச் சம்பவம் பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் மத்தியப் பிரதேசத்தில் சிண்ட்வாரா மாவட்டத்தில் உள்ள பாஜிபானி கிராமத்தில் நடந்துள்ளது.
வெளிநாட்டுக்காரர்களான கோர்டனும் ஜேக்கப்பும் Western Coal Fields Limited என்ற நிலக்கரி நிறுவனத்துக்காக பணி செய்ய வந்துள்ளனர். இவர்கள் தங்களின் பணி தொடர்பாக நாக்பூரிலுள்ள தலைமை அலுவலகம் நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது 20 பேர் கொண்ட பஜ்ரங்தள் குண்டர் கும்பல் அவர்கள் இருவரையும் வழிமறித்து தாக்கியது. வாகனத்தை நொறுக்கியதோடு லேப்டாப் கம்ப்யூட்டரையும் மொபைல் போன்களையும், பணம் வைக்கப்பட்டிருந்த கைப்பைகளையும் திருடிக் கொண்டு ஓடியிருக்கின்றனர். இதுதொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டிருப் பதாகவும் மேலும் 11 பேர் விரைவில் பிடிபடுவார்கள் எனவும் சின்ட்வார மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.கே.சிஹோர் தெரிவித்தார்.
வெளிநாட்டுக்காரர்கள் இருவரும் தங்கள் தலைமை அலுவலகம் இருக்கும் நாக்பூருக்கு சென்றுவிட்டு பின்னர் சொந்த நாடான தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்த இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் வழிப்பறி செய்யப்பட்டு தாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் முறை யான முதலுதவி மற்றும் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவர்கள் தாய்நாடு புறப்பட்டனர்.
'இது தவறாக நடந்துவிட்டது. வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் நம் நாட்டில் தாக்கப் பட்டது, வழிப்பறிக்கு உள்ளாக் கப்பட்டது மிகவும் கேவலமானது' என்றும், இதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்பதாகவும் சின்ட்வாரா பகுதியின் முக்கிய பஜ்ரங்தள் பிரமுகர் ராஜு கர்னாகர் முதலில் கூறினார்.
ஆனால் பிறகு அந்தர்பல்டி அடித்த அவர் 'வெளிநாட்டுக்காரர்கள் இருவரும் மாட்டிறைச்சி கொண்டு செல்வதாக எங்கள் ஆட்களுக்கு தகவல் கிடைத்தது. எனவே, அவர்களை சோதனைதான் செய்ததாக' மழுப்பினார்.
மாட்டிறைச்சிக்காக சோதனை செய்தவர்கள் லேப்டாப்பையும் மொபைல் போன்களையும் பணப்பைகளையும் ஏன் பறிக்க வேண்டும்? மாட்டிறைச்சியை லேப்டாப்பிலா கொண்டு போவார்கள்?
மத்தியப் பிரதேச - மகாராஷ்டிரா எல்லை வழியாக ஆயிரக்கணக்கான மாடுகள் இறைச்சிக்காக கொண்டு செல்லப்படுவதாகவும் அதனை தாங்கள் தொடர்ந்து தடுத்து வருவதாகவும் எந்த நிலையிலும் எங்கள் மாடு பிடிக்கும்(!) லட்சியத்தைக் கைவிட மாட்டோம் என்றும் அவர் மேலும் கூறினார்.
இவை அனைத்துமே பொய் என்கிறது போலீஸ். வெளிநாட்டுக்காரர்கள் கொண்டு சென்ற இறைச்சியை கால்நடை மருத்துவ பரிசோதனைக் கூடத்தில் சோதனை செய்து பார்த்தபோது கோழி இறைச்சி என்பது தெரிய வந்தது என தெரிவித்த காவல்துறை அதிகாரிகள் ஒருவேளை மாட்டிறைச்சியையே இரண்டு வெளிநாட்டுக்காரர்களும் கொண்டு சென்றிருந்தாலும் கூட அதைத் தடுக்க இவர்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என தெரிவித்தனர்.
அதோடு தீவிர சோதனைக்குப் பிறகு காவிக் கும்பலால் களவாடப்பட்ட மொபைல் போன்களும், பணப்பையும், லேப்டாப் கம்ப்யூட்டரும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மத்தியப் பிரதேச - மராட்டிய எல்லையில் வாகனங்களைத் தடுத்து நிறுத்துவதிலும் வழிப்பறியிலும் பஜ்ரங்தள் இயக்கத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அப்பாவி முஸ்லிம்களும் ஏழை தலித்களும் இவ்வாறு முடக்கப் பட்டு தீங்குகள் இழைக்கப்பட்டபோது ஓடிவராத பாஜக ஆளும் மத்தியப் பிரதேச அரசின் காவல்துறை, வெளிநாட்டுக்காரர்கள் தாக்கப்பட்ட பின் ஓடி வந்ததற்கு ஒரு 'தந்திர' காரணம் உண்டு என்றும் அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பொதுவாக இன்றைய அரசுகள் எல்லாம் அந்நிய முதலீடுகளுக்காக ஆலாய் பறந்துவரும் சூழலில் வெளிநாட்டுக்காரர்களிடம் திருடினால், தாக்குதல் நடத்தினால் அந்நிய முதலீடுகள் நின்றுவிடும், எனவே அரசுகளுக்கு பொல்லாத(!) கோபம் வந்துவிட்டது. எனவே, தங்களது செல்ல குரங்குப் படையைக் கூட கைது செய்ய வேண்டிய நிலைக்கு மத்தியப் பிரதேச பாஜக அரசு தள்ளப்பட்டுள்ளது.
வெளிநாட்டுக்காரர்களை வழிப்பறி செய்ததின் மூலமாக சர்வதேச அளவில் நாட்டின் மானத்தை கப்பலேற்றிய காவிகள் உருப்படுவது எப்போது?
நன்றி: சுட்டி1, சுட்டி2, சுட்டி3, சுட்டி4
Posted by
மரைக்காயர்
at
4:09 PM
0
comments
Labels: இந்துத்துவா
Thursday, February 22, 2007
சாதி என்று ஒன்று உண்டென்றால் அது மனித சாதியாக இருக்கட்டும்!
சர்ப்பத்திற்கு மட்டுமா பிளவுண்ட நாக்கு?
சாதி சாதி என வேதம் ஓதும்
சாத்தான்களுக்கும் அது உண்டு!
"நாம எல்லாரும் ஒரே மதம்!
ஆனா என் கோவிலுக்கு நீ வராதே!
உன் சாமியை நான் பூஜிக்க மாட்டேன்!
ஆனா நாம எல்லாரும் ஒரே மதம்!"
அப்பாவிகள் மேல் ஏவிவிட
அடியாட்கள் வேணுமென்றால்
'எல்லாரும் நம்மவா'
'ஏறி அடியுங்கடா துலுக்கனை யெல்லாம்!'
காரியம் ஆன பிறகு
'சூத்திராள் நீ! நெருங்காதே என்னை!
சீ.. போடா அந்தாண்டை!'
சக மனிதனை மனிதனாக
மதிக்கத் தெரியாத இதுவெல்லாம்
மனிதத்தில் சேர்த்தியா என்ன?
வயிற்றுச் சிசுவை நெருப்பில் எறிந்து
'உலக சாதனை' புரிந்த
நர மாமிச பட்சினிகள்,
ரத்தக்கறை படிந்த தம் வாயால்
'பசுவைக் கொல்லாதே' என
போதனை செய்கின்றன.
பதுங்குகுழிகளிலிருந்து வெளிவருகின்றன
பசுத்தோல் போர்த்திய நரிகள்!
தேசப்பிதாவை கொன்று போட்டது
கொடியோர் கூட்டம் அன்று!
தேசபக்தி நாடகம் அரங்கேற்றம் இன்று!
அன்னியனிடம் மண்டியிட்டு
அபயம் தேடிய 'வீர' தலைவர்கள்!
அவர் தம் வழியில் தொண்டர்கள்!
மாற்றி எழுதப்படும் வரலாறுகள்!
என்றும் மாறாமல் பல்லிளிக்கும் பித்தளைகள்!
சமணன், பௌத்தம், நாட்டார் மதங்கள் எல்லாம்
உண்டு செரித்து ருசி கண்ட மலைப்பாம்பு
இஸ்லாமிய ரத்தம் கேட்டு ஏங்கி நிற்கிறது
தன் கோரப் பற்களை காட்டியவாறு!
ஆயிரம் ஆதிசேஷன்கள் சீறி வந்தாலும்
சூரியனை விழுங்க முடியுமா?
மமதை, தற்பெருமை, உன்மத்தம் தலைக்கேறி
மனிதம் மதிக்கத் தெரியா மாக்கள் - இவரா
எம் மார்க்கம் பற்றி பேசத் துணிந்தார்?
Posted by
மரைக்காயர்
at
3:55 PM
6
comments
Labels: இந்துத்துவா, சாதி, தேசத்துரோகம்
Tuesday, February 20, 2007
நான் ஏன் முஸ்லிமானேன்? - யுவான் ரிட்லி
சகோதரி யுவான் ரிட்லி லண்டனில் இயங்கும் இஸ்லாம் சேனல் தொலைக் காட்சியின் அரசியல் எடிட்டர் மற்றும் 'In the Hands of Taliban: Her Extra ordinary Story' என்ற நூலின் இணையாசிரியர் ஆவார்.
மேலும்,2001-ம் வருடம் இவர் தாலிபான்களிடம் சிக்கி இஸ்லாத்தின் மீது ஆர்வம் கொள்ள வைத்த சுவையான சம்பவம் குறித்து இவரது நேரடி பேட்டி அப்போது 'நியூஸ் வீக்' பத்திரிக்கையில் பரபரப்பாக வெளியாகி இருந்தது.
இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டி இது:
தொடர்புடைய சுட்டி: ஹிஜாபைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்?
Posted by
மரைக்காயர்
at
4:22 PM
0
comments
Labels: இஸ்லாம், முஸ்லிம்கள், வீடியோ
Thursday, February 08, 2007
நூற்றாண்டுகளை கடக்க மறுப்பவர்கள்!
கணவன் தன் மனைவியை எந்த முறைகளில் கண்டிக்கலாம்? எந்த சூழ்நிலையில் அடிக்கலாம்? அப்படி அடிப்பதன் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? என்பதை ஒரு இஸ்லாமிய அறிஞர் விளக்கும் வீடியோ காட்சி ஒன்றை எழில் அவர்கள் தனது வலைப்பதிவில் பதிந்து வைத்திருந்தார். அதே பதிவில் எம்.ஐ.டி-யில் இயற்பியல் பாடங்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதைக் காட்டும் ஒரு வீடியோ காட்சியையும் பதிந்திருந்தார்.
அந்த பதிவில் அனானிமஸாக பின்னூட்டமிட்ட அவரது நண்பர் ஒருவர் இந்த இரண்டு வீடியோ காட்சிகளையும் ஒப்பிட்டு ஒரு பின்னூட்டமிட்டிருந்தார். அதில் அவர் சொல்கிறார், "இந்த எம். ஐ. டி காட்சிக்கும் அந்த அல் ஜசீரா காட்சிக்கும்தான் எத்தனை தூரம்? இரண்டு விடியோக்களில் பல நூற்றாண்டுகளை நாம் கடக்கிறோம், கடக்க மறுக்கும் சிலரை அவர் விருப்பப் படியே பின்னே விட்டு விட்டு."
குடும்பம் சீர்குலையாமல் இருப்பதற்காக பொறுப்பற்று இருக்கும் மனைவியை கண்டிப்பது பற்றி இஸ்லாம் சொல்லும் பரிந்துரையை, எம்.ஐ.டி-யில் உயர் தொழில் நுட்பம் பயன்படுத்தப் படுவதோடு ஒப்பிட்டு, தாம் நூற்றாண்டுகளை கடந்து சென்று கொண்டிருப்பதாகவும் மற்றவர்கள் அங்கேயே நின்று கொண்டிருப்பதாகவும் நம்பிக்கொண்டு மற்றவர்களையும் நம்பச் சொல்கிறார்கள் இவர்கள். பாவம்.. தன் நிலை என்னவென்பதை சுயபரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளப் பிடிக்காமல் மாற்றானை பழிப்பதில் தற்காலிக இன்பம் பெறும் பரிதாபத்திற்குரியவர்கள் இவர்கள்.
உங்கள் ஓப்பீடு சரியல்ல நண்பர்களே! அது எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் சொல்கிறேன்.
ஜூனியர் விகடன் 28-01-07 தேதி இதழில் ஒரு செய்தி வந்திருக்கிறது. நாகப்பட்டினம் அருகே உள்ள மீனவ கிராமம் ஒன்றில் கடற்கரையில் ஒரு இளம் பெண்ணின் சடலம் ஒதுங்குகிறது. காவல்துறையினர் விசாரணை செய்து கொண்டிருந்தபோது ஆறுமுகம் என்பவர் தனது மூத்த மகன் ரவிச்சந்திரனுடன் வந்து, ‘இறந்து போனது எனது மகள் பரிமளாதான். அவளை நாங்கள்தான் கொலை செய்துவிட்டோம்’ என்கிறார்.
தந்தையே தனது மகளின் கையையும் காலையும் கட்டி நடுக்கடலில் தூக்கி எறிந்து கொன்றிருக்கிறார். இதில் இன்னொரு கொடுமை, இந்தக் கொலைக்கு அவர் தனது மகனையும் துணைக்கு அழைத்துக் கொண்டதுதான்!
இந்தக் கொடூர கொலைக்கு காரணம் என்ன? பரிமளாவுக்கும் அதே ஊரைச் சேர்ந்த வினோத் என்பவருக்கும் காதல் அரும்பியிருக்கிறது. ஆனால், இது அவரது குடும்பத்துக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம், வினோத்தின் ஜாதி வேறு என்பதுதான்.
எழிலான நண்பர்களே, இந்த நிகழ்வு ஒரு சிறு உதாரணம் மட்டுமே! எம்.ஐ.டி-யின் தொழில் நுட்பத்தை கொஞ்ச நேரம் ஓரமாக வைத்து விட்டு, இந்த சமுதாய அவலத்தைப் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள். சாதி வேறுபாடு ஒரு தந்தை தான் பெற்ற மகளையே கொலை செய்ய தூண்டுகிறது. இதை ஒப்பீடு செய்து பாருங்கள். 1500 ஆண்டுகளுக்கு முன் காட்டரபிகள் பெண் குழந்தைகளை உயிரோடு புதைப்பார்களாம். அத்தகைய மடத்தனங்களுக்கு முடிவு கட்டிய இஸ்லாம் இன்று பல நூற்றாண்டுகளை கடந்து வந்து விட்டது. உங்கள் சமுதாயம் இன்னும் அங்கேயே நின்று கொண்டிருக்கிறது. அதைப் பற்றி கவலைப்பட வேண்டிய நீங்கள் எம்.ஐ.டி-யின் உயர் தொழில் நுட்பத்தில் உங்கள் பிரச்னைகளை மறைக்க அல்லது மறக்க முயல்கிறீர்கள்.
பிரச்னைகளை எதிர் கொள்ள முடியாமல் நீங்கள் simply sweeping them under the carpet! இந்த அணுகுமுறை பயன் தராது நண்பர்களே! மற்றவர்களிடம் என்ன பிரச்னை இருக்கிறது என்று தூண்டித்துருவி உலகின் கவனத்தை அவர்கள் பக்கம் திருப்புவதாலும், உங்கள் பிரச்னை தீர்ந்து விடாது. Be brave and Face it! மாற்றாரின் குறைகளை மட்டும் ஆராய்ந்து கொண்டிருந்த எந்த சமுதாயமும் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை!
இன்றைக்கு இஸ்லாத்தை பழித்து என்ன பதிவு போடலாம் என்று YouTube-ல் தேடிக் கொண்டிருப்பதை விடுத்து நான் மேலே சுட்டிக் காட்டிய ஜூனியர் விகடன் கட்டுரை போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள். இது போன்ற சமுதாய கொடுமைகளுக்கு எப்படி தீர்வு காணலாம் என்று ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள்.
பிராமணர் ஒருவரால் வளர்க்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் ஏன் இந்து மதத்தை விட்டு வெளியேறினார் என்பதை பற்றி சிந்தியுங்கள். இந்துவாக இருந்து பின் சீர்திருத்தவாதியாக மாறிய தந்தை பெரியாரின் கொள்கைகளை கொஞ்சம் நடுநிலையான கண்ணோட்டத்தில் சிந்தித்து பாருங்கள். அன்று மீனாட்சிபுர மக்கள் ஏன் இந்து மதத்தை விட்டு வெளியேறினார்கள் என்பதை யோசியுங்கள். இன்றும் நெல்லை ஆய்குடி மக்கள் ஏன் ''நாங்கள் முஸ்லிம்களாய் மதம் மாறுவோம்!'' என்று போர்க்கொடி தூக்குகிறார்கள் என்பதையும் யோசியுங்கள். நீங்கள் பயணிக்க வேண்டிய தூரம் ரொம்ப அதிகம் நண்பர்களே!
உங்கள் முன் இரண்டு choices இருக்கின்றன:
1. "எங்கள் சமுதாயத்தில் எந்த பிரச்னையும் இல்லை" என்று கண்ணை மூடிக் கொண்டு சாதிப்பது. இதைத்தான் உங்களில் பலர் செய்து கொண்டிருக்கிறீர்கள். இந்த அணுகுமுறையால் பலனேதும் இல்லை. கார்ப்பெட்டிற்கு அடியில் உள்ள குப்பை அப்படியேதான் இருக்கும்!
2. சமுதாய அவலங்களைப் பற்றி சிந்தித்து அவற்றிற்கு ஆக்கபூர்வமான தீர்வுகளை கண்டறிய முயல்வது.
The Choice is Yours! வாழ்த்துக்கள்!
Posted by
மரைக்காயர்
at
9:16 AM
28
comments
Labels: இந்து மதம், இஸ்லாம்

