Wednesday, January 31, 2007

''நாங்கள் முஸ்லிம்களாய் மதம் மாறுவோம்!''

"நாங்கள் முஸ்லிம்களாய் மதம் மாறுவோம்!" இப்படிச் சொல்வது தலித் மக்கள் அல்ல. வாணியச் செட்டியார் சமுதாய மக்கள்தான் இப்படிச் சொல்கிறார்கள். அதோடு நிற்காமல், முஸ்லிம் அமைப்புக்களயும் அவர்கள் பார்த்துப் பேசவே, ஆடிப்போய் இருக்கிறது நெல்லை மாவட்ட நிர்வாகம். மத மாற்றத்தின் மூலம் பிரபலமான மீனாட்சிபுரம் பக்கம் உள்ள ஆய்குடியில்தான், இப்படியொரு பகீர் முடிவை எடுத்திருக்கிறார்கள்.

நெல்ல மாவட்டம் தென்காசிப் பக்கம் இருக்கிறது, ஆய்குடி. இங்கு சேனைத் தலைவர் சமுதாயத்தினர் மெஜாரிட்டியாய் வாழ்கிறார்கள். சுமார் 1500 குடும்பத்தினர் இருக்கிறார்கள். வாணியச் செட்டியார் சமூகத்தினர் சுமார் 150 குடும்பத்தினர் வசிக்கிறார்கள். தற்போது இந்த வாணியச் செட்டியார் சமுதாயத்தினர்தான் 'முஸ்லிம்களாய் மதம் மாறப்போகிறோம்' என்று போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள். இந்த விஷயம் நமது கவனத்திற்கு வர, ஆய்குடிக்குச் சென்றோம். வாணியச் செட்டியார் சமுதாயத் தலைவர் சிதம்பரம் செட்டியாரச் சந்தித்தோம்.

"ஆய்குடியில் மைனாரிட்டியாய் வாழும் எங்க சமுதாயத்தினர் அனவருமே, முஸ்லிம்களாய் மாறப்போகிறோம். இதற்காக ஊர்க்கூட்டம் போட்டுப் பேசினோம். பெண்கள் உள்பட அனைவருமே முஸ்லிம்களாய் மாறச் சம்மதித்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, கடந்த ஒரு மாத காலமாக யாரும் கோயிலுக்குச் செல்வதில்ல!" என்றவரிடம், 'அதற்கான காரணம் என்ன?' என்று கேட்டோம்.

மனிதர் கொதித்துப்போய் பேசினார். ''எங்க ஊர்ல அற்புதமான முருகன்கோயில் இருக்கு. திருச்செந்தூருக்கு அடுத்து எங்க ஊர் முருகன் கோயிலில்தான் சூரசம்காரம் மிகவும் பிரமாண்டமாய் நடக்கும். சுத்துப்பட்டு கிராமங்களிலிருந் பல்லாயிரக்கணக்கானோர் அதைப் பார்க்க வருவார்கள். ஊருக்குள் உள்ள சிவன் கோயில் மைதானத்தில்தான் சூரசம்காரம் நடக்கும். மொத்தம் ஏழு நாட்கள் நடைபெறும் அந்தத் திருவிழாவில், இரண்டாம் நாள் மண்டகப்படி எங்க வாணியச் செட்டியார் சமுதாயத்தினருக்கு. அந்தக் காலத்தில் எங்க ஊர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இருந்தது. எனவே, இந்த சிவன்கோயில் தற்போது சுசீந்திரம் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. சிவன்கோயில் மைதானத்தில் நாங்க பிள்ளயார் சிலைய வக்க முடிவு செய்தோம். இதற்காக சுசீந்திரம் சென்று தேவசம்போர்டு அதிகாரிகள சந்தித்துப் பேசி அனுமதி வாங்கினோம். இதனைத் தொடர்ந்து சிவன்கோயில் மைதானத்தில் கடந்த ஆண்டில் நாங்கள் ஒரு பிள்ளையாரை பிரதிஷ்டை செய்தோம். இரண்டரை அடி உயர கற்சில அது. இந்தப் பிள்ளையார் சிலைதான் பிரச்னைக்குப் பிள்ளயார் சுழி போட்டது. எங்க சமுதாயத்தினர் மட்டுமல்ல, சர்வ சமுதாயத்தினரும் பிள்ளையாரை வணங்கிச் செல்வார்கள். இது எங்க ஊரில் உள்ள மெஜாரிட்டி சமுதாயமான சேனைத் தலவர் சமுதாயத்தினருக்குப் பிடிக்கவில்ல. எனவே, பிள்ளயார்கோயிலை அகற்ற வேண்டும் என்று பெட்டிஷன் மேல் பெட்டிஷன் போட்டுக்கொண்டே இருந்தார்கள்.

ஆனால், யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்ல. எனவே, சேனைத் தலவர் சமுதாயத்தினர் கூடிப்பேசி பிள்ளயார் சிலையை அகற்ற என்ன வழி என்று யோசித்திருக்கிறார்கள். அதன் விளவாக, கடந்த 13-ம் தேதி அவர்கள், எங்கள் பிள்ளையார் சிலைப் பக்கம் இரவோடு இரவாக ஒரு பீடம் அமைத்து, சுடலைமாடன் சிலயை வைத்து விட்டார்கள். இது குறித்த நாங்கள் போலீஸில் புகார் செய்தோம். இதனத் தொடர்ந்து தென்காசி உதவி கலெக்டர் ரமண சரஸ்வதி தலமையில் அதிகாரிகள் வந்தார்கள். சுடலைமாடன் சிலையை அகற்றுமாறு சேனைத் தலவர் சமுதாயத்தினரிடம் கூறினார்கள். அதற்கு அவர்கள், 'பிள்ளயார் சிலையை அகற்றினால்தான் சுடலைமாடன் சிலையை அகற்றுவோம்' என்று சொல்லி, பிரச்னையை ஊதிப் பெரிதாக்கினார்கள். இதனைக் கேட்டுக் கடுப்பான அதிகாரிகள், சட்டென இரண்டு சிலைகளயும் எடுத்து விட்டார்கள். பீடத்தையும் இடித்து விட்டார்கள்!'' என்று நடந்த கதையைச் சொன்னவர், ''இந்து சமுதாயத்தினரே இந்துக் கோயிலை இடிக்க வைத்தது எவ்வளவு பெரிய அநியாயம்? இனிமேல் நாங்கள் எங்கே போய் சாமி கும்பிடுவது? எனவேதான், ஒட்டுமொத்தமாக மதம் மாறத் தீர்மானித்தோம்!'' என்றார் ஆவேசமாய்.

கவுன்சிலர் அய்யப்பன் கூறும்போத, ''மெஜாரிட்டி இந்துக்களே எங்களத் தீண்டத்தகாதவங்களாகப் பார்க்குறாங்க. பிளளயார் சிலையை எடுத்ததற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிச்சதனால, சேனைத் தலைவர் சமுதாயத்தினர் எங்கள் மீது சில தடைகைள விதிச்சிருக்காங்க. குறிப்பா, எங்களுக்கு வெற்றிலை கொடிக்காலில் வேலை மறுக்கப்பட்டிருக்கிறது. எங்கள் சமுதாயத்தச் சேர்ந்தவங்க டீககடகளில் யாரும் டீ குடிக்கக் கூடாதுன்னும் சொல்லியிருக்காங்க. சொல்லப் போனா, எங்கள அடக்கி ஆளப் பார்க்கிறாங்க. பிள்ளயார் சிலய மறுபடியும் அதே இடத்தில் வக்க வேண்டும் என்று கோரி கலெக்டரச் சந்தித்தோம். அவரோ, எங்க மனுவ வாங்கிக் குப்பையில் போட்டு விட்டார். அதன் பிறகு முதல்வருக்கு மனு அனுப்பினோம். அதற்கும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அடுத்த மாதம் 4ம் தேதி வருஷாபிஷேகம் நடத்த வேண்டும். அதற்குள் பிள்ளயார் சிலை அதே இடத்தில் இருக்கணும். இல்லாவிட்டால் மறுநாளே ஊரில் உள்ள 1500 தலக்கட்டுகளும் முஸ்லிமாய் மாறிவிடுவோம். சிவன்கோயில் பக்கத்தில் எங்க சமுதாயத்திற்குச் சொந்த இடம் இருக்கிறது. அங்கே மசூதி கட்டுவோம்!'' என்றார்.

இதே ஊரச் சேர்ந்த பரமசிவன் ஒரு தீவிர பக்திமான். கடந்த 12 வருடங்களாக சென்னயில் இருந்து திருப்பதிக்குப் பாதயாத்திர சென்று வந்து கொண்டிருக்கிறார். பச்ச வேஷ்டி அணிந்து கழுத்தில் ருத்திராட்ச மாரல, நெற்றி நிறய சந்தனம், விபூதியுடன் காட்சியளித்தார். அவர் கூறும்போது, ''எங்க ஊர்ல நாங்க வச்ச சாமியக் கும்பிட முடியலேன்னா, நாங்க வாழ்ந்து என்ன பயன்? இதுக்கு நல்ல முடிவு தெரியலேன்னா நானும் வேஷததக் கலைச்சிடுவன்னு முடிவு செஞ்சுட்டேன்!'' என்றார்.

ஆண்கள்தான் இப்படி ஆவேசப்பட்டார்கள் என்றால், பெண்கள் அதைவிடவும் கோபமாகப் பேசினார்கள். முத்துலெட்சுமி, மகாலெட்சுமி ஆகிய இருவரும் நம்மிடம், ''கடந்த 3_ம் தேதி திருவாதிரர திருவிழா நடபெற்றது. எங்க சாமய நாங்க கும்பிட முடியலேன்னா, அந்த மததத்ல இருந்து என்ன பயன்? எனவே, எங்க ஊர்ப் பெரியவங்க முடிவுப்படி முஸ்லிமா மாறத்தயாராயிட்டோம்'' என்றனர் ஆவேசமாக. இவர்கள், 'முஸ்லிம்களாய் மதம் மாறுவோம்' என்று சொன்னதோடு நிற்கவில்ல. அதற்குச் செயல்வடிவம் கொடுக்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள். இதுபற்றி ஊர்த்தலைவர் சிதம்பரம் செட்டியார் கூறும்போது, ''பிள்ளயார் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் மனுகொடுத்தும் பிரயோஜனம் இல்லை. எனவே, ஊர்க் கூட்டம் போட்டு மேல் நடவடிக்யாக என்ன செய்யலாம் என்று மக்களிடம் கேட்டோம். 'நம்மை மதிக்காத மதத்தில் இருந்த என்ன பயன்?' என்றே அனவரும் சொன்னார்கள். அப்போ, அதற்கு என்ன வழி என்று மக்களயே கேட்டோம். அதற்கு அவர்கள் 'பேசாம மதம் மாறிவிடுவோம்' என்று கூறினார்கள். முஸ்லிம் மதம்தான் நமக்குப் பாதுகாப்பு என்றும் அவர்கள் சொன்னார்கள். இதனத் தொடர்ந்தே தென்காசியில் உள்ள கனிபாய் என்பவரிடம் பேசினோம். அவர் பாளயங்கோட்டயில் உள்ள ஓர் அலுவலகத்திற்குக் கூட்டிச் சென்றார். அங்கே இருந்தவர்களிடம் 'வாணியச் செட்டியார் சமுதாயத்தச் சேர்ந்த நாங்க ஒட்டுமொத்தமா முஸ்லிம்களா மாறத் தீர்மானிச்சிருக்கிறோம்' என்று சொன்னோம். அதற்கு அவங்க, 'அதில் ஒண்ணும் பிரச்ன இல்ல. ஆனா எதுக்கும் நீங்க ஊருக்குப் போய் நிதானமா இன்னும் ஒரு தடவ யோசிச்சிட்டு வாங்க'ன்னு சொன்னாங்க. இதுல என்னத்தை யோசிக்கிறது? வரும் 4_ம்தேதி சில வரலேன்னா 5_ம் தேதி மதம் மாறுவதைத் தவிர வேறு வழியில்ல. இது நாங்களா எடுத்த முடிவுதானே தவிர, வேறு யார் தூண்டுதலிலும் எடுக்கவில்லை!'' என்றார் அவர்.

வாணியச் செட்டியார் சமுதாயத்தினரின் இந்தத் திடீர் முடிவு பற்றி மாற்றுச் சமுதாயமான சேனைத் தலவர் சமுதாயத்தினர் என்ன சொல்கிறார்கள்? அந்தச் சமுதாயத்தின் ஊர் நாட்டாண்மை அருணாசல முதலியாரைச் சந்தித்தோம்.

''அவங்க முஸ்லிமாவெல்லாம் மாற மாட்டாங்க. இது ஒரு மிரட்டல். அவ்வளவுதான். தவிர, பிள்ளயார் சிலையை அகற்றியது நாங்கள் அல்ல. அது பேரூராட்சிக்குச் சொந்தமான இடம். எனவே, ஆக்கிரமித்து வக்கப்பட்டிருந்த பிள்ளயார் சிலையை பேரூராட்சி நிர்வாகம் அகற்றியிருக்கிறது. பிள்ளயார் சில மட்டுமல்ல, நாங்க வச்ச சுடலமாடன் சில மற்றும் எட்டுக் கடைகளையும் கூட இடித்துத் தள்ளியிருக்கிறது பேரூராட்சி. ஆனா, இந்த ஆக்கிரமிப்பு அகற்றுதலுக்குக் காரணம் எங்க சமுதாயம்தான்னு தவறா நினச்சிக்கிட்டு இருக்காங்க. மற்றபடி நாங்க மெஜாரிட்டி சமுதாயம்ங்கிற உண்மைதான். அவங்களை அடக்கி ஆளணுமுன்னுல்லாம் நாங்க நினச்சதே கிடயாது!'' என்றார் அவர்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 21.01.07

==================
பின் குறிப்பு: இரு இந்து சமுதாயங்கள் தங்களுக்கிடையில் இருக்கும் பிரச்னைகளை தீர்த்துக் கொள்வதற்காக இஸ்லாத்தை பகடைக் காயாக பயன்படுத்துவதாகத்தான் இது தெரிகிறது. இது சரியான அணுகுமுறையாக தெரியவில்லை. சமூக விரோத சக்திகள் 'இந்த பிரச்னைக்கெல்லாம் முஸ்லிம்கள்தான் காரணம்' என்று திசை திருப்பவும் வாய்ப்பிருக்கிறது. 4-ம் தேதி சிலை வரலேன்னா 5-ம் தேதி முஸ்லிமா மாறுனவங்க 6-ம் தேதி சிலை வந்துடுச்சுன்னா என்ன செய்வாங்க என்பதையும் யோசிக்க வேண்டும்.

அப்படி இல்லாமல், இஸ்லாத்தின் அடிப்படைகளை அறிந்து கொண்டு, தங்கள் சமுதாயத்திற்கு இழைக்கப்படும் அநீதிக்கு இஸ்லாத்தில் விடிவு பிறக்கும் என்ற உறுதியான நம்பிக்கையோடு முஸ்லிம்களாக மாறுவதே எல்லாத் தரப்பினருக்கும் நல்லது. - மரைக்காயர்

16 comments:

said...

நல்ல பதிவு. எதெற்கெடுத்தலாம் கண்ழூடித்தனமாக முஸ்லீம்களைச்சாடும் இந்துத்வா வகையாறக்கள் அறிந்து கொண்டால் சரி தான்.

said...

//6-ம் தேதி சிலை வந்துடுச்சுன்னா என்ன செய்வாங்க என்பதையும் யோசிக்க வேண்டும்.//

6-ம் தேதி சிலை வந்துடுச்சுன்னா 7ந்தேதி திரும்பவும் வந்த இடத்துக்கே போய் விடுவார்கள்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்பவர், இக்கொள்கையின் மீதுள்ள உறுதியான நம்பிக்கையில் வர வேண்டும். யார் மேலோ உள்ள கோபத்தால் வரக்கூடாது.

இஸ்லாம் வெறும் கூட்டம் சேர்க்கும் கும்பலல்ல. கொள்கையாளர்களை சேர்த்து அரவணைத்துச் செல்லும் மார்க்கம்.

எனவே இது போன்றவர்களை யாரும் ஊக்குவித்தால் அது தவறான வழி காட்டுதலாகவே அமையும்.

said...

வளர்பிறை, சுல்தான், உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Anonymous said...

பாகிஸ்தானுக்கு நாடுகடத்தப்பட வேண்டிய உன்னையெல்லம் இங்கே பதிவு வெளியிடும் அளவுக்கு கொண்டுவந்துவிட்ட இந்தியாவுக்கு கொஞ்சமாவது நேர்மையாக நடந்துகொண்டிருக்கிறாயே?

Anonymous said...

முஸ்லிம் என்பது ஒரு இனம், இஸ்லாம் என்பதுதான் மதம் என்று வித்தியாசம் தெரியாத நீர் எல்லாம் பதிவு எழுத வந்துவிட்டீர். நேரம்டா சாமி!

said...

//Anonymous said...
பாகிஸ்தானுக்கு நாடுகடத்தப்பட வேண்டிய உன்னையெல்லம்..//

சரி.. என்னை பாகிஸ்தானுக்கு நாடு கடத்திடலாம். 'சுதந்திர போராட்டம் பக்கமே தலைவச்சு படுக்க மாட்டேன்'ன்னு ஆங்கிலேயன்ட்ட எழுதி கொடுத்த 'வீர' பரம்பரையில வந்த உன்னை மாதிரி ஆட்களை எந்த நாட்டுக்கு கடத்தறது?

said...

//Anonymous said...
முஸ்லிம் என்பது ஒரு இனம், இஸ்லாம் என்பதுதான் மதம் என்று வித்தியாசம் தெரியாத நீர் எல்லாம் பதிவு எழுத வந்துவிட்டீர். நேரம்டா சாமி! //

நீர்தான் சொல்லுமே, "நாங்கள் இஸ்லாம்களாய் மதம் மாறுவோம்"னு தலைப்பை மாத்திடுவோமா?

said...

சகோதரர் மரைக்காயர்,

மனிதர்களுக்குத் தான் இஸ்லாம் தேவையே அன்றி இஸ்லாத்திற்கு மனிதர்கள் தேவை இல்லை. (எங்கோ படித்தது)

இதனை அறிந்து கொண்டால் இஸ்லாத்திற்கு வரவிரும்பும் அல்லது அதைத் தடுக்கவிரும்பும் மனிதர்கள் தெளிவு பெறுவர்.

அரைவேக்காட்டுத் தனமாக உளறிக் கொட்டும் காவி(லி) களையும் அழகாக பதிலடி கொடுக்கிறீர்கள்!

என் சிறு ஆலோசனை: அவர்களின் லெவல் அப்படி என்றால் நீங்களும் அந்த லெவலுக்குப் போகணுமா என்ன?

உங்களின் தெளிவான கண்ணோட்டத்தையும் இறுதியில் கொடுத்தது எந்த அரைவேக்காடுகளுக்கும் ஜல்லி அடிக்க இருக்கும் வாய்ப்பையும் அடைத்துவிட்டீர்கள்

பாராட்டுக்கள்!

said...

//என் சிறு ஆலோசனை: அவர்களின் லெவல் அப்படி என்றால் நீங்களும் அந்த லெவலுக்குப் போகணுமா என்ன?//

உங்கள் பின்னூட்டத்திற்கும் ஆலோசனைக்கும் நன்றி சவூதி தமிழன் அவர்களே.

said...

இது குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த செய்திங்க ... கூமுட்டை அனானிங்களா, போக மாட்டார்னாலும் மரைகாயருக்காவது போவதற்குப் பாகிஸ்தானாவது இருக்குது. அனானிப் பரதேசிகளுக்கு ...?

Anonymous said...

//அனானிப் பரதேசிகளுக்கு ...?//

மொத்தமாக சாட வேண்டாமே?

சங்க்பரிவார கூமுட்டை பரதேசிகளுக்கு என்று மாற்றிக் கொண்டால் பொருத்தமாக இருக்கும்.

Anonymous said...

உன்னைபோன்ற துளுக்கன்கள் இந்நாட்டின் சாபக்கேடு. பாகிஸ்தான் பிரியும் போதே போய்த்தொலையாத உங்களைப்போன்றாரால் தான் இன்று இந்தியா பயங்கர வாதிகளாலும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் உன்னைபோன்றோராலும் அவதிப்படுகிறது.

said...

அழகு, இறைநேசன், உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

Anonymous said...

//உன்னைபோன்ற துளுக்கன்கள் இந்நாட்டின் சாபக்கேடு. பாகிஸ்தான் பிரியும் போதே போய்த்தொலையாத உங்களைப்போன்றாரால் தான் இன்று இந்தியா பயங்கர வாதிகளாலும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் உன்னைபோன்றோராலும் அவதிப்படுகிறது. //

அனானி, நாங்கள் எல்லோரும் பாகிஸ்தான் போயிருந்தால் நீ இங்கு அனானியாயிருப்பாய்...

said...

இந்த அனானிக்கு யாராவது ஒரு தூனைக் காட்டுங்களேன். போய் முட்டிக்கட்டும்.

said...

//பாகிஸ்தான் பிரியும் போதே போய்த்தொலையாத உங்களைப்போன்றாரால் தான்..//

அழகு அவர்கள் சொன்ன மாதிரி, இது இன்னொரு கூமுட்டை!

//அனானி, நாங்கள் எல்லோரும் பாகிஸ்தான் போயிருந்தால் நீ இங்கு அனானியாயிருப்பாய்... //

:-) இப்ப மட்டும் என்ன வாளுதாம்?

//இந்த அனானிக்கு யாராவது ஒரு தூனைக் காட்டுங்களேன். போய் முட்டிக்கட்டும். //

நல்ல யோசனை. நல்ல இந்துத்துவ தூணா பாத்து முட்டுய்யா! நீர் பாட்டுக்கு துலுக்க தூண்ல முட்டிட்டு 'ஜிகாதி தூண்' அது இதுன்னு புலம்ப போறீர்!