Tuesday, June 26, 2007

இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் (வருங்கால) குடியரசுத் தலைவரே?

ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திருமதி பிரதிபா பாட்டீல் அவர்களை ஆதரிக்கப் போவதாக பாஜக-வின் முக்கிய கூட்டணித் தலைவர்களுள் ஒருவரான பால் தாக்கரே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

பாஜக கூட்டணியின் ஆதரவு பெற்ற திரு செகாவத் அவர்களும் போட்டியில் இருக்கும்போது, காங்கிரஸ் வேட்பாளரான திருமதி பாட்டீலை சிவசேனா ஆதரிப்பதாக சொல்வது சாதாரணமாக யாரையும் வியப்பில் ஆழ்த்தும் ஒரு விஷயம்தான். ஆனால் இம்முறை இந்த அறிக்கை ஒருவகையில் எதிர்பார்க்கப் பட்டதுதான் என்பதால் இது யாருடைய புருவத்தையும் உயர்த்தி யிருக்காது.

திருமதி பாட்டீலின் பெயர் ஜனாதிபதி பதவிக்கு முன்மொழியப் பட்டதுமே அவர் ஒரு காரியம் செய்தார். இந்தியாவில் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் உடை பழக்கத்தைக் குறித்து, "இது முகலாய மன்னர்களால் விளைந்த தீமை, அவர்களின் காலத்தில் அவர்களிடமிருந்து தப்பிக்க இந்திய பெண்கள் கடைபிடிக்க துவங்கியதே இந்த பர்தா முறை" என்று அவர் கருத்து தெரிவித்தார்.

எந்நேரமும் தலையில் முக்காடிட்ட வண்ணம் காட்சி தரும் ஒரு பெண்மணி, 'பர்தா' எனப்படும் இஸ்லாமியப் பெண்கள் அணியும் ஆடை முறை குறித்து இப்படி ஒரு நகைப்பிற்குறிய ஒரு கருத்தை தெரிவித்திருப்பது அவரது அறியாமையை காட்டுகிறதா என்றால் நிச்சயமாக இல்லை.

'காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் தான் ஒரு இந்துத்துவ சிந்தனை உடையவர்' என்று காட்டிக் கொண்டு இந்துத்துவாக்களையும் திருப்தி படுத்தி அவர்களின் ஆதரவும் வாக்குகளும் தனக்கே கிடைக்கே வேண்டும் என்ற லட்சியத்தில்தான் இவர் இப்படி பேசியிருக்க வேண்டும். சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தினரின் வாக்குகளையும் இவர் வாங்கினால்தால் ஜனாதிபதி பதவியில் அமர முடியும் என்ற நிலை இல்லை அல்லவா!

தான் திட்டமிட்டபடியே முதல் கட்டமாக சிவசேனாவை 'மடக்கிய'தன் மூலம், தான் ஒரு கைதேர்ந்த அரசியல்வாதி என்பதை நமது வருங்கால குடியரசுத் தலைவர் நிரூபித்திருக்கிறார்.

வாழ்க வளமுடன்!

பின் குறிப்பு:

நான் ஏன் 'குடியரசுத் தலைவரே' என்று தலைப்பிட்டிருக்கிறேன்?

ராஷ்டபதி ஆண்பாலா பெண்பாலா என்ற பிரச்னை ஒரு புறமிருக்க, மரியாதைக்குரிய பதவியில் இருக்கும் ஒரு பெண்மணியை 'தலைவி' என்று அழைப்பது சரியா? தலைவன், தலைவி ஆகியவை முறையே ஆண்பாலுக்கும் பெண்பாலுக்குமான ஒருமை விளிச்சொற்கள் அல்லவா? 'தலைவர்' என்பதுதானே இருபாலாருக்கும் பொதுவான மரியாதை விளிச்சொல்? அப்படியென்றால், 'குடியரசுத் தலைவர்' என்று அழைப்பதுதானே முறை? தெரிஞ்சவங்க யாராவது விளக்கம் கொடுத்தால் நல்லா இருக்கும்.

5 comments:

said...

மரைக்காயர் நானா,

தவறான புரிதலை உடைய பிரதிபாவா, இந்துத்துவாவில் முழ்கிய ஷெகாவத்தா என்று பார்த்தால் பிரதிபாவுக்குத்தானே சாய்ஸ். (நம்ம ஜனநாயகத்துல, எரியிற கொள்ளில ஏதாச்சும் ஒரு கொள்ளியத்தானே தேர்ந்தெடுக்கோணும்)

மேலும், சினா சேனா-காரவுக ஆதரிக்கறதுக்கு கொளுக ஒருபக்கம் காரணமாயிருந்தாலும், மாநில பாசம்னு ஒண்ணும் இருக்கில்லையா?!

அப்புறம், தலைவர்-ங்கறத ஆண்கள் கவர்ந்து வெச்சுக்கிட்டாலும் அத பொதுச்சொல்லாவும் சொல்லலாமுங்கோ!

said...

திடீரென்று பிரபலம் ஆவதற்கு இதுதானே சிறந்த வழி. ஒரே கல்லில் இரண்டு மாங்காய், இரண்டு கட்சிகளையும் திருப்தி படுத்தலாம்.

said...

வாங்க வாசகன் சார்,

//தவறான புரிதலை உடைய பிரதிபாவா, இந்துத்துவாவில் முழ்கிய ஷெகாவத்தா என்று பார்த்தால் பிரதிபாவுக்குத்தானே சாய்ஸ்.//

இது தவறான புரிதலாக தெரியலீங்களே. அப்படியே இருந்தால் கூட, குடியரசுத் தலைவர் போன்ற மரியாதைக்குரிய பதவியில் அமரப்போகும் ஒருவர், நாட்டின் எல்லா சமுதாயத்தினருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டியவர், சிறுபான்மை சமுதாயத்தினரின் மனம் புண்படும்படியான வார்த்தைகளை உதிர்ப்பது எந்த வகையில் நியாயம்?

//சினா சேனா-காரவுக ஆதரிக்கறதுக்கு கொளுக ஒருபக்கம் காரணமாயிருந்தாலும், மாநில பாசம்னு ஒண்ணும் இருக்கில்லையா?!//

நம்ம திராவிட கட்சிக்காரங்களுக்கு இந்த மாநில பாசமெல்லாம் வராதா?

said...

//ஒரே கல்லில் இரண்டு மாங்காய், இரண்டு கட்சிகளையும் திருப்தி படுத்தலாம்.//

சரியா சொன்னீங்க வளர்பிறை. ஒரு சாதாரண அரசியல்வாதி வாக்குகளுக்காக இதுபோன்ற செய்கைகளில் ஈடுபடலாம். ஆனால் குடியரசுத் தலைவர்..?

said...

மரைக்காயர் அய்யா,

நலமா இருக்கீங்களா?

ரொம்ப நாள் கழிச்சு இப்பத்தான் உங்க பதிவு பக்கம் வர முடிஞ்சுது...

இப்பவே தன்னோட காவிப் புத்தியக் காமிச்சுட்டாங்களே இந்த அம்மணி...

ஆமா அலங்கார பதவியில் யார் இருந்தா என்ன?

ஆமா இந்தியில ராஷ்ட்ரபதின்னு சொல்றங்களே. இந்த அம்மா குடியரசுத் தலைவராயிட்டா என்னன்னு சொல்வாங்க?

ராஷ்ட்ரபத்னின்னா?