Wednesday, April 23, 2008

ஜனநாயகத்தைக் கண்டுபிடித்தவர் அத்வானி!

"கட்சியின் செயல்பாடுகள் ஜனநாயகரீதியில் இல்லாதக் காரணத்தாலேயே நான் ராஜினாமா செய்கின்றேன். மத்தியப் பிரதேச பட்ஜட் கூட்டத்தொடருக்குப் பின் இதுதொடர்பான விரிவான தகவலை நான் வெளியிடுவேன்"

மத்தியப் பிரதேச மாநில பாஜகவின் முகம் என பாஜக அகில இந்திய தலைமையினால் கருதப்படும் பாஜகவின் மூத்த தலைவர் கோபினாத் முண்டே இரண்டு நாட்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர் முன்னிலையில் தெரிவித்த வாசகங்கள் இவை.

அவரைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் 4000 பேரும் கட்சிப்பதவிகளை ராஜினாமா செய்தார்களாம்.

டெல்லிக்குச் சென்று கட்சியின் மேலிடத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவும் முண்டே மறுத்திருந்தார்.

ஆனா, இதெல்லாம் பழைய கதை!

நேற்று (செவ்வாய்க் கிழமை) டெல்லிக்குச் சென்ற முண்டே, அத்வானி, வெங்கையா நாயுடு, ராஜ்னாத் சிங் ஆகியோரை சந்தித்தார். அத்வானியுடனான 5 மணி நேர சந்திப்பு முடிந்தவுடன் அவர் தனது ராஜினாமாவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தார்.

பல வருடங்களாகக் கட்சியில் இருந்த அனுபவத்தை வைத்து, 'கட்சியில் ஜனநாயகம் காணாமல் போய்விட்டதாக' புகார் கூறிய முண்டே, ஒரே நாளில், அதுவும் 5 மணி நேர சந்திப்பிலேயே தனது கூற்றினை மாற்றிக் கொண்டதைப் பார்த்தால், காணாமல் போயிருந்த ஜனநாயகத்தை அந்த 5 மணி நேரத்தில் அத்வானிதான் கண்டுபிடித்துக் கொடுத்தார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கும்.

அடுத்த முறை பாஜக ஆட்சிக்கு வரும்போது, வரலாறு பாட புத்தகங்களில் 'ஜனநாயகத்தை கண்டுபிடித்தவர் அத்வானி' என்று எழுதப் பட்டால் யாரும் அதிர்ச்சி அடையக் கூடாது.

நல்லா கூத்தடிக்கறாங்கப்பா!

4 comments:

Anonymous said...

அட, அது மேட்டர் வேற ஒண்ணும் இல்ல மரக்காயர் அய்யா.

5 மணி நேர சந்திப்பின் இறுதியில் "அடுத்த தேர்தலில் மத்தியப்பிரதேச பாஜகவை இந்த முண்டத்தின்.. சே சாரி, முண்டேயின் தலைமையில் சந்திக்க தலைமை சம்மதித்துள்ளதாம்". இதற்காகவே "கட்சியில் இதுவரை இல்லாத ஜனநாயகம் 5 மணி நேர சந்திப்பில் வந்து விட்டதாம்".

எல்லாம் பதவி சுகம் படுத்தும் பாடு.

"பாஜகவை அத்வானி தலைமையில் சில கேடுகெட்டதுகள் கூறு வைத்துச் சாப்பிடுகின்றன" என்றக் குற்றச்சாட்டுடன் வெளியேறிய உமாபாரதி நினைவுக்கு வருகிறாரா?

பாவம் பாஜகவை வளர்க்கப்பாடுபடும் சுதர்சனன் தலைமையிலான சங்கபரிவாரக் குரங்குகள்!

- இறை நேசன்

said...

குஜராத் முன்னால் உள்துறை அமைச்சர் ஹரேன் பான்டியாவைப் பற்ற்றி கோபினாத் முன்டேக்கு நினைவுருத்தப்பட்டிருக்கலாம்!! கூட இருந்தவர்தானே இவர்...

எல்லாம் அரசியல் மரைக்காயர் ஐயா!!

said...

//"பாஜகவை அத்வானி தலைமையில் சில கேடுகெட்டதுகள் கூறு வைத்துச் சாப்பிடுகின்றன" என்றக் குற்றச்சாட்டுடன் வெளியேறிய உமாபாரதி நினைவுக்கு வருகிறாரா?//

சரியாச் சொன்னீங்க இறைநேசன். உமாபாரதி மேட்டரை சரியா கையாளாம கையைச் சுட்டுக்கிட்டாங்க பாஜக-வினர். வாஜ்பாய், அத்வானி, போன்றோருக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கிறது என்றுகூட உமா பாரதி குற்றம் சுமத்தினார்.

அதைப்போல முண்டேவும் குற்றச்சாட்டுகளை அள்ளி வீச ஆரம்பித்தால் அதை எதிர் கொள்ள பாஜக தயாராக இல்லை. எனவேதான், உடனடியாக 'ஜனநாயகத்தை தேடிக் கண்டுபிடித்து', அழுத குழந்தையை சமாதானப் படுத்தியிருக்கிறார்கள்

said...

//குஜராத் முன்னால் உள்துறை அமைச்சர் ஹரேன் பான்டியாவைப் பற்ற்றி கோபினாத் முன்டேக்கு நினைவுருத்தப்பட்டிருக்கலாம்!! கூட இருந்தவர்தானே இவர்... //

கருத்திற்கு நன்றி முகவைத் தமிழன். இது போன்ற ராஜினாமா நாடகங்கள் பாஜகவிற்கு புதியது அல்ல. வாஜ்பாய், அத்வானி மற்றும் பலரும் பல முறை இதே நாடகத்தை போட்டிருக்கிறார்கள். இந்த முறை நாடகத்தின் கதாநாயகன் முண்டே, அவ்வளவுதான்.