Thursday, December 21, 2006

தமிழகத்தை கலவர பூமியாக்கும் திட்டம்! - ஜனநாயகன்

தமிழகத்தைக் கலவர பூமியாக்க இந்து முன்னணி பயங்கர சதித்திட்டம்!
- ஜனநாயகன்

சமூக நீதிக்கும் அமைதிக்கும் நிலைக்கலனாகி நிற்கும் தமிழகத்தை கலவர பூமியாக்கி முஸ்லிம்களின் ரத்தம் சுவைப்பதற்கு கங்கணம் கட்டி களமிறங்கியுள்ளது காவிப் பரிவாரம். காவி சக்திகள் இதுவரை நடத்தியுள்ள கலவரங்களைக் கவனித்துப் பார்த்தால் ஒரு பகுதியை கலவரக் காடாய் மாற்றும் முன், அங்குள்ள முஸ்லிம்களையும், அவர்களின் சொத்துக்களையும் துல்லியமாக அடையாளப் படுத்துவார்கள். இதுவே சங்பரிவார சதித்திட்டத்தின் முதல் கட்டமாகும்.

1993ம் ஆண்டு பம்பாயில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பவர்களின் வேடத்தில் சென்று, வீடுதோறும் விசாரித்து முஸ்லிம் வீடுகளில் ஸ்வஸ்திகா குறியிட்டுச் சென்றது சங்பரிவாரக் கும்பல். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கலவரத்தில் சுமார் இரண்டாயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன.

குஜராத்தில் 2002ம் ஆண்டில் இதேபோல முஸ்லிம்களை அடையாளம் காணும் பணியை காவிப்படை முடுக்கி விட்டது. அதைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற இனப்படுகொலைகளில் சுமார் மூவாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். பல்லாயிரம் பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள், தங்கள் வீடுகளை இழந்து, சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப் பட்டார்கள். பாகல்பூர், பீவண்டி, சூரத், லட்டூர் என வடமாநிலங்களில் இவர்கள் நடத்திய கொடிய கலவரங்களால் பல்லாயிரம் முஸ்லிம்கள் பலியாக்கப்பட்டனர். பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சூறையாடப்பட்டன.

மதவெறியை பயங்கரமாகத் தூண்டி, மக்கள் நெஞ்சுகளில் நஞ்சைக் கலந்து, ஒற்றுமைக்கு வேட்டு வைத்து, கலவரத்திற்குக் கால்கோள் செய்து பிணங்களில் நடந்து மேலேறுவதே காவிக் கயவர்களின் கடந்த கால வரலாறு.

இந்தக் கொடூர பயங்கரவாதிகளின் கவனம் இப்போது தமிழகத்தில் குவிந்திருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் எப்படியாவது இங்கு மதக் கலவரத்தை உருவாக்கி, மாநில அமைதியை மயானத்திற்கு அனுப்ப வேண்டும் என்று மத பயங்கரவாதிகளின் மனது துடிக்கிறது.

முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சொந்த மாவட்டமாம் தஞ்சைத் தரணியில், அவர் வளர்ந்த திருவாரூர் பகுதியிலிருந்தே மதவெறி நெருப்பை வளர்த்து, தமிழக அமைதியைப் பொசுக்குவதற்குரிய மாபாதகத் திட்டத்தை இந்து முன்னணி பயங்கரவாதிகள் தீட்டியுள்ளனர். அவர்கள் நடத்தும் 'விஜயபாரதம்' என்ற விஷக் கருத்துப் பத்திரிகை மூலம் இந்த விபரீதம் வெளிவந்துள்ளது.

திருவாரூர், நாகை மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சைத் தரணியில் முஸ்லிம்கள் செறிவாக வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள், வணிக நிறுவனங்கள், முஸ்லிம் கல்லூரிகள், அரபி மதரஸாக்கள், வசதி படைத்த முஸ்லிம் வீடுகள் ஆகியவற்றைத் துல்லியமாகக் கணக்கெடுத்து அவற்றைத் தாக்குதல் இலக்குகளாய் இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு அடையாளம் காட்டி, விரிவான சதித் திட்டத்தின் ஒரு பகுதியை சங்பரிவார பத்திரிகையான விஜயபாரம் வெளியிட்டுள்ளது. (ஸ்வய ஆவணி 30, கலியுக ஆண்டு 5108(?) 15-09-2006 என்ற தேதிதான் இந்த பாடுபடுகிறது)

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி, வழுத்தூர், பண்டாரவாடை, ராஜகிரி, பாபநாசம், திருப்பாலத்துறை, திருவலஞ்சுழி, கும்பகோணம், சோழபுரம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், மதுக்கூர், ஆவணியாபுரம், திருப்பனந்தாள், சேதுபாவாசத்திரம், ஆடுதுறை, முருக்கங்குடி, நாச்சியார் கோவில், ஒரத்தநாடு உள்ளிட்ட ஊர்களில் இஸ்லாமிய ராஜ்ஜியம் நடப்பதாகவும், அதற்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் விஜயபாரதம் வெறி ஊட்டியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருவாரூர், கொடிக்கால்பாளையம், அடியக்கமங்கலம், ஆழியூர், கூத்தாநல்லூர், பொதக்குடி, அத்திக்கடை, பூதமங்கலம், குடவாசல், அபிவிருத்தீஸ்வரம், அடவங்குடி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, நீடாமங்கலம், கொரடாச்சேரி, நன்னிலம் ஆகிய ஊர்களையும் நாகை மாவட்டம் நாகூர், தரங்கம்பாடி, கோடியக்கரை, கரியாப்பட்டினம், தோப்புத்துறை, தேத்தாகுடி, பூம்புகார், மயிலாடுதுறை, கிளியனூர், வடகரை, மன்னம்பந்தல், நீடூர், கடலங்குடி, குத்தாலம், வானாதிராஜபுரம், தேரிழந்தூர், திருவாடுதுறை, திருவாலாங்காடு, சீர்காழி, தைக்கால், மேலச்சாலை, பொறையார் ஆகிய ஊர்களையும், புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல், கட்டுமாவடி, கோட்டைப்பட்டினம், பந்தர்பட்டினம் உள்ளிட்ட பல ஊர்களையும் பார்ப்பனர்களிடமிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாகக் கைப்பற்றிக் கொண்டதாகவும், மேற்கண்ட பகுதிகளில் பிராமணப் பெண்களை மானபங்கம் செய்தல் உள்ளிட்ட பல அட்டூழியங்களை முஸ்லிம் இளைஞர்கள் செய்து, மேற்கண்ட ஊர்களிலிருந்து பார்ப்பனர்களைத் துரத்தி அடித்து விட்டதாகவும், முஸ்லிம்களின் அராஜகங்கள் தாங்க முடியாமல்தான் தஞ்சை பிராமணர்கள் தங்கள் உயிரையும், ஆச்சாரத்தையும் காப்பாற்றிக் கொள்ள நாட்டின் பல பகுதிகளுக்கு தப்பிச் சென்று குடியேறி இருப்பதாகவும், தஞ்சை தரணியை முழு முஸ்லிம் ராஜ்ஜியமாக்க முஸ்லிம்கள் சதித்திட்டம் போட்டுள்ளதாகவும், அதன் ஒரு கட்டமாகவே அக்ரஹாரங்களை இடித்து வீடு கட்டிக் கொண்டு, கோவில்களை இடித்து பள்ளிவாசல் கட்டிக் கொண்டு முஸ்லிம்கள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும் விஜயபாரதம் எழுதியுள்ளது.

காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள அழகிய பள்ளிவாசல்களைப் படமெடுத்து வெளியிட்டு, பாழடைந்து கிடக்கும் கோவில்களின் படங்களையும் பக்கத்தில் போட்டு, இதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று நெருப்பைக் கொளுத்தி யிருக்கிறது சங்பரிவாரத்தின் ஏடு. தஞ்சைப் பகுதியில் இந்துத்துவ பயங்கரவாதிகள் முகாமிட்டு, முஸ்லிம்களை மிக உற்றுக் கவனித்து, சதித்திட்டங்களை தீட்டியிருப்பதை நாம் உணர முடிகிறது. முஸ்லிம் தொழில் நிறுவனங்களையும், தொழில் அதிபர்களையும், கல்விக் கூடங்களையும் கொடியோர் கும்பல் குறிவைத்திருக்கிறது.

தமிழகத்தை குஜராத் ஆக்கும் சங்பரிவார சதிக்கனவின் முதல் பகுதி இது. அரசு உடனே விழித்துக் கொள்ளாவிடில் ஆபத்தான விளைவுகளை இவர்கள் ஏற்படுத்தி விடுவார்கள்.

ஞ்சை தரணியில் முஸ்லிம்கள் எவ்வாறு எழுச்சிப் பெற்றார்கள்? அக்கிரஹாரங்கள் ஏன் காணாமல் போயின? தஞ்சைத் தரணியில் அராஜகம் செய்பவர்கள் யார்? போன்ற விஷயங்களுக்கு விடைகாண நிசங்களை அலசுவோம்...

(உண்மைகள் கண்விழிக்கும் அடுத்த வாரம்...)

நன்றி: தமுமுக

Wednesday, December 20, 2006

ஈஸ்வர அல்லா தேரே நாம்

தொண்டன் என்பவர் எனது பதிவில் ஒரு பின்னூட்டமிட்டிருந்தார்.

யதார்தத்தை சுள்ளென்று உறைக்கும்படி சொல்லும் ஒரு விஷயம்.

அது பின்னூட்டத்திலேயே அமுங்கி போகலாமா?

அதனால் அந்த பின்னூட்டத்தை முன் வைத்து இந்தப் பதிவு!

தொண்டன் said...

\\ஈஸ்வர அல்லா தேரே நாம் என்று
பெருங்குரலெடுத்துப் பாடி மகிழ்ந்திருப்போம்,
இணைவைத்த குற்றத்திற்காக நம்
குரல்வளை அறுக்கப்படும் நாள் வரும்வரைஇது ஒரு அனானியின் பின்னோட்டக் கவிதையாம் இது யாருக்கும் தெரியாம அழிஞ்சு போகக்கூடாதாம் அதுனால மீள் பதிவாம்.

நல்லாயிருக்கு.

ஆமா அரபு நாட்டுல வேலை பார்த்தப்போ ஈஸ்வரனுக்குப் பதிலா அல்லாவைத்தான் இவரு வணங்கியிருப்பாரோ. இருக்கும் இருக்கும் இல்லைனா இவர் தலை போயிருக்கனுமே!. இவர்தான் இப்படின்னா இன்னும் எத்தனையோ முஸ்லிமல்லாதவங்க அரபு நாட்டுல பணத்துக்காக அல்லாவை வணங்குறாங்களா?.

800 வருஷமா இஸ்லாமியருக்கு கீழேதானப்பா நம்ம நாடு இருந்துச்சு அப்ப இணைவைச்ச குற்றத்திற்கு எவ்வளவு கழுத்து அறுபட்டிருக்கனும். இல்ல இந்த நாட்டு மன்னரெல்லாம்
முஸ்லிம் மன்னனுக்குப் பயந்து அல்லாவுக்கு குல்லாவும் ஈஸ்வருக்கு அல்வாவும் கொடுத்துட்டாங்களா?. இன்னும் இதுமாதிரி பழய பல்லவி வேணாம் கேட்டு கேட்டு புலிச்சுப்போச்சு புதுசா ஏதாவது இருந்தா சொல்லுங்க.
20/12/06 4:38 PM

இது போன்ற ஒரு அரிய தகவலை பின்னூட்டத்தில் தந்த தொண்டன் அவர்களுக்கு நன்றி.

'ஈஸ்வர அல்லா தேரே நாம்' என்று தினமும் பிரார்த்தித்து வந்த மகாத்மா காந்தியை எந்த முஸ்லிமும் குரல்வளையை அறுக்கவில்லை. அந்த புண்ணிய காரியத்தை செஞ்சவங்க யாருன்னு தெரியும்தானே?

Tuesday, December 19, 2006

கதை கதையாம் காரணமாம்!


இன்னிக்கு கதை சொல்ற மூடுல இருக்கேன். பாவம் நீங்கள்லாம் :-(

இதை கற்பனைன்னு சொல்றதா அல்லது நிஜம்னு சொல்றதா என்று எனக்கு தெரியவில்லை. அதனால் அதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

ஒரு நண்பர் என்கிட்ட சொன்னார், "உங்க வீட்டை விட என் வீடு உயர்வானது. அதனால உங்க வீட்டை விட்டுட்டு எங்க வீட்டுக்கு வந்துடுங்க"

'சரி, அதையும்தான் பாக்கலாமே'ன்னு அவர் வீட்டை பாக்குறதுக்கு என்னை அழைச்சுகிட்டு போகச் சொன்னேன்.

ஒரு நாள் அவர் என்னை கூட்டிக்கொண்டு போனார். போய்ப் பார்த்தால்....
அவர் வீடு என்று சுட்டிக் காட்டிய இடத்தில் பொட்டல்வெளிதான் இருந்தது! ஆமாங்க. வெறும் திடல்.

"என்ன நண்பரே? வீடுன்னு சொல்லி திடலை காட்டுறீங்களே?" என்றேன்.

"இதுதாங்க வீடு. இதை நீங்க கண்ணால பார்க்க முடியாது. உணரத்தான் முடியும்"னாரு அந்த நண்பர்.

"வீடுன்னா கதவு, சுவர், கூரை இதெல்லாம் இருக்கணுமே?" - இது நான்.

"ஏன் நாலு சுவத்துக்குள்ளேயே கட்டுப்பெட்டித் தனமா அடைஞ்சு கிடக்குறீங்க? இங்க அந்தக் கட்டுப்பாடெல்லாம் கிடையாது. நீங்க சுதந்திரமா இருக்கலாம்" - அந்த நண்பர்

"அப்படின்னா கண்ட மிருகங்களும் வேஷம் போட்டுட்டு வந்து உங்களை தாக்குனா என்ன செய்வீங்க?"

"அதுங்கள்லாம் எங்களை வந்து தாக்குன பிறகு அதை நாங்கள் அடையாளம் கண்டு உதாசீனம் செய்து விடுவோம்"

"இந்த 'வீட்டுக்கு' பெரிய மனுசங்கன்னு யாரும் இருக்காங்களா? உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தா, ஆலோசனை வேணும்னா யார் கிட்டே கேப்பீங்க?"

"அதெல்லாம் தேவையேயில்லை. பல்வேறு பாதைகள் இருக்கின்றன. அவற்றில் உங்களதை தேர்ந்தெடுத்துக்கொள்வது உங்களது சுதந்திரம். உங்களது ஸ்வதர்மம்."

"ஒரே வீடுன்னு சொல்றீங்க. ஆனா, அங்கங்கே தனித்தனி கூட்டமா இருக்காங்களே, அவங்கள்லாம் யாரு? ஒரு கூட்டத்தில இருந்து வர்றவரை இன்னொரு கூட்டத்துல சேர்த்துக்க மாட்டேங்குறாங்களே, ஏன்?"

"அவங்க அப்படித்தான். அவங்களையும் இந்த வீட்டையும் ஏன் இணைச்சு பார்க்கணும்?"

"சரி இந்த வீட்டுக்கு ஒருத்தர் புதுசா வந்தா அவரை எந்தக் கூட்டத்துல சேர்ப்பீங்க?"

"ஏன் அவர் ஒரு கூட்டத்துல போய் சேரணும்? அவரு தனியாவே இருந்துக்கலாமே?"

எனக்கு ஒன்னுமே புரியலை. உங்களுக்கு?

=====

டிஸ்க்ளெய்மர் 1: இன்னொரு பதிவின் தாக்கத்தால் இந்தப் பதிவுக்கு நான் முதலில் வைத்த தலைப்பு வேறு. சில நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று தலைப்பு மாற்றப்பட்டது.

டிஸ்க்ளெய்மர் 2: ஒரு கருத்தை யாராவது சுட்டிக்காட்டும்போது விரலை பார்க்கக்கூடாது. ஒரு கருத்தை விளக்க கதை கூறும்போது, கதையை பிடித்து தொங்கக்கூடாது.

எமது அடுத்த வெளியீடு:

இதுதாம்லே பெண்ணுரிமைங்குறது! (ஆதாரங்களுடன்)

Monday, December 18, 2006

தமிழ் மண்ணே வணக்கம்! - பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்

‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே!
அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே!
அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே!
இதை வந்தனை கூறி மனத்தில் இருத்தி என் வாயுற வாழ்த்தேனோ?’
என்கிற நம் மூதாதையர் பற்றிய வரலாற்று உணர்வுதான் நமக்கு விடுதலையின் தேவையை உணர்த்தியது.

எப்படி வாழ்கிறோம் என்பதை மதிப்பிட எப்படி வாழ்ந்தோம் என்கிற வரலாறுதான் அளவுகோல். அந்த உணர்வைத் தமிழன் தொலைத்ததால் தான், நம்முடைய கீழாநெல்லியை வெளிநாட்டுக்காரர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். வரலாறு தெரியாமல் போனதால்தான், தமிழகப் பள்ளிகளில் தமிழ் பேசினால் தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தண்டனை கிடைக்கிறது. தமிழ்க் குடும்பங்களின் கிழவன், கிழவிகளைப் பயன்படாதவர்களாக, பாரமானவர்களாகப் பார்ப்பதற்கும் நமக்கு வரலாற்று அறிவு இல்லாமல் போனதுதான் முக்கிய காரணம்.

கடந்த காலத்தைப்பற்றித் தெரிந்துகொள்ள விரும்பாத எந்தச் சமூகமும் தன் முகவரியைத் தொலைத்துவிடும்.

வரலாறு என்பதை, படித்தால் வேலை கிடைக்காத ஒரு பாடப் பிரிவாக வைத்துவிட்டோம். நம் பெருமைகளை, இழப்புகளை, அதற்கு நாம் தந்த விலையைத் தெரிந்துகொள்வதற்கு வரலாறுதான் நமக்கு கடந்த காலம் காட்டும் கண்ணாடி என்பதை மறந்துவிட்டோம்.

சரி, கடந்த காலத்தை தெரிந்து வைத்துக்கொண்டு என்ன செய்வது?

காலம் காட்டும் கண்ணாடிதான், வருங்காலத்துக்கான பாதைகளையும் காட்டும் கைவிளக்கு. எனவே, வரலாற்றைத் தொலைப்பது என்பது வருங்காலத்தையே தொலைப்பதற்குச் சமம்.

நம் நாட்டின் மிகப் பெரிய தீமை, சாதிப் பிரிவினையும், தீண்டாமைக் கொடுமையும் ஆகும். குஜராத்தில் பூகம்பம் வந்தது. உயர்ந்து நின்ற கட்டடங்கள் எல்லாம் தரைமட்டமாயின. இடிபாடுகளுக்கிடையில் ஆயிரக் கணக்கில் இறந்து கிடந்தனர் நம் மக்கள். கை கால் இழந்து, எலும்பு முறிந்து ஊனமுற்றவர்களாயினர். உயிர் துறந்து, உடைமை துறந்து கூட்டம் கூட்டமாக முகாம்களில் தங்கியிருந்தனர். அந்த நிலையிலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், எங்களுக்கும் ஒரே உலையில் உணவு சமைத்தால் நாங்கள் சாப்பிட மாட்டோம் என்று பெரிய போராட்டத்தையே நடத்தினர் நம் உயர்சாதிச் சகோதரர்கள். இதைவிட அவமானமும் துயரமும் வேறென்ன இருக்க முடியும்?

பண்டமாற்று முறையில் தேன் கொடுத்து, மீன் வாங்கி உயிர் வாழ்ந்த ஒரு கலாசாரத்திலிருந்து வந்தவர்களுக்குள்தான் இப்போது இத்தகைய கொடூரப் பிரிவினை. எப்படிச் சேர்ந்து வாழ்ந்தோம் என்கிற வரலாறு அடுத்த தலைமுறைக்கு உணர்த்தப்பட்டால் தான், பிரித்த சூழ்ச்சி எதுவென்று உணர முடியும்.

‘நான் விவசாயம் செய்கிற சாதியைச் சேர்ந்தவன் இல்லை’ என்பதை உணர்த்துவதற்காகத்தான் மார்பில் நூல் அணிந்தார்கள் என்பதை நாம் உணர்த்தி இருந்தால், உழவர்கள் சூத்திரர்களாக ஆகியிருக்க மாட்டார்கள். ‘உழந்தும் உழவே தலை’ என்று சொல்கிற திருக்குறளின் அர்த்தமும், ஆழமும்தானே நம் வரலாறு!

இனம், மொழி, நாடு, அரசியல், பொருளாதாரம், இலக்கியம்... இதுபோன்ற ஒவ்வொரு சமூகவியல் துறைக்கும் வரலாறு தேவை. நடந்த நிகழ்வுகளையும் செய்திகளையும் முறைப்படுத்தி வருங்காலத்துக்குச் சான்றாகவும், அறிவுறுத்தலாகவும் அமைவதே வரலாறு. நம் முன்னோர்களின் வாழ்வியல் அனுபவங்களே, வரலாறு! அனுபவங்களைத் தொலைத்துவிட்டு புதியதொரு வாழ்க்கையை வாழ்வது அறிவுடைமை ஆகாது.

‘முதலாம் பானிபட் போர் எந்த ஆண்டு நடந்தது?’ என்று கோடிட்ட இடத்தை நிரப்புகிற கேள்வியாக வரலாற்றை நினைவு வைத்திருக்கிறோம். அதுதான் தவறு. ‘ஏன் அந்தப் போர் நடந்தது? அதனால் நிகழ்ந்த பாதிப்புகள் என்னென்ன?’ என்பன போன்ற கேள்விகள் மூலம்தான் வரலாற்றை அணுக வேண்டும். கடந்த காலத்தின் துணை கொண்டு நிகழ்காலத்தைப் புரிந்துகொள்ளவும், வருங்காலத்தைக் கணிக்கவும் பயன்படுகிற சமூக விஞ்ஞானமாக வரலாற்றை பார்ப்பதே சரியான அணுகுமுறை.

இன்று நடக்கிற ‘இந்து - முஸ்லிம்’ மதக் கலவரங்களுக்கும், நம் மெக்காலே கல்வி முறையில் பயின்ற வரலாற்றுப் பாடத்துக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.‘ஸ்டூவர்ட் மில்’ என்கிற ஆங்கில வரலாற்றாசிரியர், ‘ஹிஸ்டரி ஆஃப் பிரிட்டிஷ் இந்தியா’ என்கிற தமது வரலாற்று நூலில், இந்தியாவை ‘இந்து இந்தியா’, ‘முஸ்லிம் இந்தியா’ என்று வகைப்படுத்தினார். இன்று இந்தியாவில் இந்து, முஸ்லிம் மதக் கலவரங்கள் நடப்பதற்கும், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டம் இரு நாட்டு இந்து - முஸ்லிம்களுக்கு இடையிலான அறிவிக்கப்படாத போராகப் பாவிக்கப்படுவதற்கும், வரலாற்று ஆசிரியர்களின் பிரிவினைகளுக்கும் நேரடியாகச் சம்பந்தம் இருக்கிறது. இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சியே நமக்கு மெக்காலே கல்வித் திட்டத்தின் மூலம் பாடமாக்கப் பட்டது.

நமக்கென்று ஒரு வரலாறு இல்லை, பண்பாடு இல்லை என்று நமக்கே சொல்லப்பட்டது. நாமும் கிளிப்பிள்ளைகளைப் போலத் திரும்ப அதையே சொன்னோம். நமது மன்னர்களைப் பற்றிய பெருமைகளையும், அவர்களின் போர்த் தந்திரங்களையும், வரி வசூலிக்கும் முறையையும் மட்டுமே வரலாறு என நமக்குப் போதிக்கப்பட்டது. மன்னர்களின் வரலாற்றையே மக்களின் வரலாறுதான் உருவாக்குகிறது என்பது நமக்கு இந்த விஞ்ஞான யுகத்தில் கூடப் புரியவில்லை.

‘மங்கலம்’ என்கிற பெயரில் முடிகிற ஊர்ப் பெயர்கள் இன்று நமக்கு வெறும் ஊர்ப் பெயர்களாக மட்டுமே தெரியும். ஆனால், அரசன் கண்ட ஒரு கெட்ட கனவுக்குப் பரிகாரமாக, நான்கு வேதங்களைக் கற்றவர்களுக்கு அவர்கள் விரும்புகிற பூமியைத் தானமாக தருகிற இடத்துக்கு ‘மங்கலம்’, ‘அகரம்’ என்கிற அடைமொழியுடன் பெயர் தந்தனர். அதற்கு முன்பு அங்கு வாழ்ந்த மக்களின் வரலாற்றைத் தேடிச் சென்றால்தான், நம் முன்னோர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையின் தீவிரம் நமக்குப் புரியும்.

ஹிட்லரின் சுயநலத்துக்கு அவருடைய ‘இன மேன்மை வரலாறு’ தான் கருவியாக இருந்தது. ‘ஆரியர்கள், உலகம் ஆளப் பிறந்தவர்கள்’, ‘உலகம் நமதே!’ என்கிற கோஷத்துக்குப் பின்னால் லட்சக்கணக்கான மனித உயிர்கள் விலை பேசப்பட்டன.

பித்தப்பை கற்கள் காரணமாக லூயி மன்னன் அதிக வலியில் துடிதுடிக்க நேர்ந்ததும், அதன் பொருட்டு எழுந்த கோபமுமே பிரெஞ்சுப் புரட்சியின் ஆணி வேர்.

இந்திய வரலாற்றில், இஸ்லாமிய மன்னர்கள் கொடூரமானவர்களாகவே சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒளரங்கசீப் மன்னனை கொடூரமானவனாகவே அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் சொல்லிவருகிறோம். அதுவே, தஞ்சையை ஆண்ட இந்து, மராத்திய மன்னர்களின் அந்தப்புரப் பெண்களின் வயது 12-லிருந்து தொடங்குவதைச் சொல்வது இல்லை. எல்லா மத அரசர்களும் மக்களைத் துன்புறுத்தும் நோக்கம் கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த அரசர்களை மட்டும் மோசமானவர்களாகச் சித்திரிப்பது வரலாற்றுப் பிழை அல்லவா?

வாழ்ந்த வரலாறும், வீழ்ந்த வரலாறும் முழுமையாகத் தெரிந்தாலொழிய பாபர் மசூதி, ராமர் கோயில் போன்ற விவகாரங்களுக்குத் தீர்வு கிடைக்காது.

‘முன்பு ஒரு காலத்தில் அவர்களிடம் பைபிள் இருந்தது... நம்மிடம் நிலங்கள் இருந்தன. இன்று நம்மிடம் பைபிள் இருக்கிறது. அவர்களிடம் நம் நிலங்கள் இருக்கின்றன. நமது நிலத்தில் நாமே அடிமைகள்’ என்கிற ஒரு ஆப்பிரிக்கக் கவிதையில் கறுப்பு - வெள்ளைப் பிரிவினையின் வரலாறும், மதங்கள் மக்களை அடிமை கொள்ள எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்கிற தகவலும் பொதிந்திருக்கிறது.

இப்படி ஒவ்வொன்றையும் வருங்காலத் தலைமுறை, வரலாறாகப் படிக்கும்போதுதான், நடந்த தவற்றை மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும். காரணம், வரலாற்று உணர்வுதான் சூழ்ச்சிகளிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளும் கேடயம். தாக்குவதற்காக அல்ல; தற்காப்பதற்காக நமது முன்னோர்களின் வரலாற்றை, நமது அடுத்த தலைமுறைக்குச் சரியான கோணத்தில் விளக்க வேண்டியது நமது கடமை அல்லவா?

நன்றி: ஆனந்த விகடன் 29-11-06

Friday, December 15, 2006

முஸ்லிம்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்கள்!

இந்தியாவில் மட்டும் முஸ்லிம்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை இது. 1954 லிருந்து 1984 வரை உள்ள எண்ணிக்கை இந்திய உள்துறை அமைச்சக பதிவேடுகளிலிருந்து பெறப்பட்டது. அதன் பிறகு உள்ள எண்ணிக்கை கலிபோர்னியாவில் இயங்கும் இந்திய ஆராய்ச்சி மையத்தினால் தொகுக்கப் பட்டது.

தாக்குதல்களுக்கு ஆளானவர்கள் பற்றி அரசு வெளியிடும் தகவல்கள் குறித்து முஸ்லிம் அமைப்புகள், ஊடகங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கேள்வி எழுப்பி வந்திருக்கின்றன. உண்மையில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை அரசு வெளியிடும் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் எனவும் இந்த அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன.


ஆண்டு

வன்முறைச் சம்பவங்கள்

இறந்தவர்கள்

காயமடைந்தவர்கள்

1954

84

34

512

1955

75

24

457

1956

82

82

575

1957

58

12

316

1958

40

7

369

1959

42

41

1,344

1960

26

14

262

1961

92

108

593

1962

60

43

348

1963

61

26

489

1964

1,070

1,919

2,053

1965

173

173

758

1966

144

45

467

1967

198

25

880

1968

346

133

1,549

1969

519

674

2,877

1970

521

298

1,723

1971

321

103

1,330

1972

240

70

1,207

1973

242

72

1,500

1974

248

87

1,266

1975

205

3

962

1976

169

9

794

1977

188

36

1,122

1978

219

108

1,801

1979

304

261

2,379

1980

427

375

2,691

1981

319

196

2,613

1982

474

236

3,025

1983

500

1143

3,652

1984

476

445

4,836

1985

525

328

3,665

1986

633

532

5,321

1987

645

762

7,653

1988

671

802

8,762

1989

634

739

7,438

1990

564

639

6,892

1991

656

817

8,920

1992

1,105

3,000

17,000

மதத் துவேஷத்தை வளர்க்காதீர்கள்!
மதத் துவேஷத்தை ஆதரிக்காதீர்கள்!
மத பயங்கரவாதங்களை ஆதரிக்காதீர்கள்!
மனித உரிமையை மீறாதீர்கள்!
சக மனிதர்களின் மத உணர்வுகளை கொச்சைப் படுத்தாதீர்கள்!
மனிதம் பேணுங்கள்!

Wednesday, December 13, 2006

சச்சார் அறிக்கையும் சுஷ்மாவின் போலிக் கண்ணீரும்!

ராஜேந்தர் சச்சார் குழுவின் அறிக்கை என்ன சுட்டிக்காட்டுகிறது என்பதை ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் "இந்துத்துவவாதிகள் புளுகுவது போல முஸ்லிம்கள் தாஜா செய்யப்படவில்லை. மாறாக, தாழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்''.

ஆனால், என்றுதான் உண்மைகளை ஒப்புக் கொண்டிருக்கிறது சங்பரிவாரம்? இந்த அறிக்கை முழுவதும் ஒருசார்பானதாகவும், பாரபட்சமானதாகவும் இருப்பதாகக் கூறியிருக்கிறார் சுஷ்மா ஸ்வராஜ்.

'இந்த அறிக்கை முஸ்லிம்களுக்கு எந்த நன்மையும் செய்யப் போவதில்லை என்று கட்சி (பாஜக) உறுதியாக நம்புவதாகவும், சமுதாயத்தில் மேலும் பிளவுகளையே உருவாக்கும் என்றும், சிறுபான்மையினர் மீதான காங்கிரஸ் அணுகுமுறையே முஸ்லிம்களின் இன்றைய நிலைமைக்குக் காரணம் என்றும் அவர் கூறினார்.' (தி ஹிந்து 2-12-06)

வெறும் அறிக்கை யாருக்கும் எதையும் செய்து விடப் போவதில்லை. இதைச் சொல்ல சுஷ்மா ஸ்வராஜ் தேவையில்லை. அது அவருக்கும் தெரியும். ஆனாலும் இப்படிச் சொல்வதன் நோக்கம் முஸ்லிம்களுக்கு எதாவது நன்மை நடந்துவிடுமோ என்று வயிற்றெரிச்சலில் பொருமுகிறார் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, அப்படி அந்த அறிக்கையின் மீது எதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டு விடுமோ என்ற கெட்ட எண்ணத்தில், "இந்த அறிக்கை மேலும் பிளவுகளையே உருவாக்கும்' என்று பயமுறுத்துகிறார்.

நடவடிக்கை எடுக்கப்பட்டால் பிளவுகளை உருவாக்குவார்கள் போலும். முஸ்லிம் களின் இன்றைய நிலைக்கு காங்கிரஸ்தான் காரணம் என்றால் என்ன அர்த்தம்? காங்கிரஸ் அவர்களது வாழ்நிலையை முன்னேற்ற எதுவும் செய்யவில்லை என்று தானே அர்த்தம்? அது ஒரு வகையில் பெருமளவு உண்மைதான். ஆனால் காங்கிரஸ் முஸ்லிம்களைத் தாஜா செய்வதாக இத்தனை நாள் சங்பரிவாரம் புலம்பியது அப்பட்டமான பொய் என்பதை சுஷ்மாவே ஒப்புக் கொண்டு விட்டார். இதுவே அவரது பேச்சின் சாராம்சம்.

ஒருபக்கம் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து மதச் சிறுபான்மையினரையும் அடக்கி ஒடுக்கி ஒழிப்பதையே லட்சியமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் இவர்கள், அவ்வப்போது முஸ்லிம் பெண்களின் நிலைமை பற்றி நீலிக்கண்ணீர் வடிப்பார்கள். அதை இப்போதும் செய்திருக்கிறார் சுஷ்மா. 'முஸ்லிம்களுக்குள் பாலினப் பிரச்சினைகளும் இருக்கின்றன. அவையும் தீர்க்கப்பட வேண்டும். ஆனால் ஏன் ஒரு பெண் முஸ்லிம் உறுப்பினர் கூட இந்தக் குழுவில் இல்லை' என்பது குறித்து அவர் கேள்வி எழுப்பினார் என்று அந்தச் செய்தி கூறுகிறது.

இந்துப் பெண்களின் நிலைமை மட்டும் ஏதோ சுபிட்சமாக இருப்பது போல் இவர் முஸ்லிம் பெண்களைப் பற்றிக் கவலைப்படுகிறார். பெண் கருக்கொலையும், பெண் சிசுக்கொலையும், வரதட்சணைக் கொலையும் தங்கு தடையின்றி நாட்டில் நடந்து கொண்டிருப்பதைப் பற்றி இவருக்கொன்றும் தெரியாது போலும்.

நாட்டின் பல மாநிலங்களில் ஆண் - பெண் விகிதாச்சாரம் பெண்களுக்கு எதிரான வகையில் மோசமாகிக் கொண்டிருப்பது பற்றியும் இவருக்கொன்றும் தெரியாது போலும்.

இதற்கெல்லாம் காரணமான இந்துக் கலாச்சாரம் அடிப்படையிலேயே பெண்களுக்கு எதிரானது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

மேலும், சங்பரிவாரிகள் இருக்கும் இடங்களில் எந்த இந்துப் பெண்ணின் கணவனாவது இறந்து போனால், அந்தப் பெண் தன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் இருக்க வேண்டும். அசந்தால் கணவனின் சிதையில் தூக்கிப் போட்டு உயிரோடு கொளுத்தி விடுவார்கள். சதிமாதா என்று கோவில் கட்டி கதையை முடித்து விடுவார்கள். இந்த லட்சணத்தில் இவர் முஸ்லிம் பெண்கள் பற்றி கவலைப்படுகிறார்.

உண்மையில் முஸ்லிம்களில் அண் - பெண் விகிதாச்சாரம் இந்துக்களை விட கணிசமான அளவு பெண்களுக்குச் சாதகமானதாக இருக்கிறது. அதாவது பெண் சிசுக் கொலையோ அல்லது மரணமோ முஸ்லிம்களில் மிகக்குறைவாக இருக்கிறது என்று அறிக்கை கூறுகிறது. அது மட்டுமல்ல, இந்திய முஸ்லிம் பெண்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய கணக்கெடுப்பின் விவரங்களை ஆய்வு செய்த ரீது மேனன் மற்றும் ஜோயா ஹாசன் அகியோர் வெளியிட்டுள்ள நூலும் இதை உறுதி செய்கிறது.

அது சரி. முஸ்லிம்களின் நிலை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டதையே எதிர்த்த காவிக் கும்பல் வேறு மாதிரியா பேசும்?

- எம். அசோகன் - தீக்கதிர் (7-12-06)
நன்றி: தமுமுக

Tuesday, December 12, 2006

ஆண் சாதி - பெண் சாதி!

கேள்வி: ஆண்கள் தங்கள் பெயருடன் சாதிப் பெயரைச் சேர்த்துக் கொள்வதைப் போல், பெண்கள் தங்கள் பெயருடன் சாதிப் பெயரைச் சேர்த்துக் கொள்வதில்லையே, ஏன்?

பதில்: பண்டைய காலத்திலிருந்து ஆண்கள் வீடு, பசு, தோப்பு, தோட்டம் மாதிரி பெண்களையும்ஒரு பொருளாகவே (commodity) கருதி நடத்தியதால், அவள் தன் சாதிப் பெயரைப் போட்டுக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. திருமணமாகும் வரை அவள் தந்தையின் சாதி. ஆன பிறகு, கணவனின் சாதி! சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு, எல்லாவிதமான சுதந்திரங்களையும் அனுபவித்து வாழ்ந்த பெண்களை ஆண்கள் அடக்கி அடிமையாக்கியது மாபெரும் தந்திர வரலாறு!

நன்றி: ஹாய் மதன் பதில்கள் - ஆனந்த விகடன் 13-12-06

நல்லா இருங்கடே!

நீலகண்டன் என்ற ஆர்.எஸ்.எஸ்-காரர் நேசக்குமார் என்ற இந்துத்துவவியாதியின் பதிவில் ஒரு பின்னூட்டம் எழுதியிருக்கிறார் பாருங்கள்.

//At 7:13 AM, நீலகண்டன் said...முகமதுவின் ஆழ்மன ஆசாபாசங்களே குரானாக வந்துள்ளன என்பதனை நீங்கள் தெள்ளத்தெளிவாக நிறுவியுள்ளீர்கள்ள். அத்துடன் இப்போது இஸ்லாமின் சமூகநீதி முகமூடியை கிழித்தெறிந்துள்ளீர்கள்.. முகமதுவின் கேலிசித்திரங்கள் இத்துடன் ஓப்பிடுகையில் மிகவும் மைல்ட்தான். ஆனால் இவர்களுக்கு புரிகிற ஒரே மொழி புலிகள் பேசும் மொழிதான். இலங்கையில் பாருங்கள் பிரபாகரன் அவர்களின் மகத்தான நடவடிக்கைகளுக்கு ஒரு முணுமுணுப்பு கூட இல்லை. நாம் ஈழ தமிழரிடம் இருந்து படிக்க வேண்டிய விஷயம் இது. //

ஈழ புலிகளிடமிருந்து இவர்கள் எதை படிக்க வேண்டிய விஷயமாக சொல்கிறார்கள் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் தெரிந்து கொள்ள கீழே உள்ள படத்தை பாருங்கள்.


3 ஆகஸ்டு 1990, வெள்ளிக்கிழமை இலங்கையின் காத்தான்குடி என்ற ஊரில் பள்ளிவாசலில் மாலை நேர தொழுகைக்காக கூடியிருந்த, ஆயுதங்கள் ஏதுமில்லாத முஸ்லிம்களின் மீது புலிகள் தொடுத்த தாக்குதலில் 25 சிறுவர்கள் உள்ளிட்ட 103 பேர் அநியாயமாக உயிரிழந்தனர். பள்ளிவாசலே ரத்தக்குளமானது.

நீங்கள் திடமான மனதுடையவராக இருந்தால் இந்த தளத்தில் உள்ள மற்ற படங்களையும் பாருங்கள். இளகிய மனதுடையவர்கள் தயவு செய்து இந்தப் படங்களை பார்க்காதீர்கள்.

இது மட்டுமல்ல. ஆகஸ்ட் 18 அன்று எறவூர் என்ற ஊரிலும் 31 குழந்தைகள் 27 பெண்கள் 115 ஆண்கள் படுகொலை செய்யப் பட்டிருக்கின்றனர்.

இதைத்தான் நமது ஆர்.எஸ்.எஸ் நீலகண்டன் புலிகளிடமிருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறார் போலிருக்கிறது. ஏனய்யா குஜராத்தில் குடித்த துலுக்க ரத்தமும் நெருப்பில் சுட்டுத்தின்ற பச்சைப்பிள்ளை கறியும் போதவில்லையா உங்களுக்கு?

இந்தியாவில் உள்ள முஸ்லிம்களையெல்லாம் 'இனச்சுத்திகரிப்பு' செய்துவிட்டு, கிருஸ்துவர்களை உயிரோடு எரித்து விட்டு, தலித்துகளை புத்தமதத்திற்கு விரட்டிவிட்டு,

2% நீங்க மட்டும் நல்லா இருங்கடே!

Saturday, December 09, 2006

சகோதரர் எழிலின் பதில்கள்

சகோதரர் எழிலிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் தனது பதிவில் பதில் அளித்திருக்கிறார். அவருக்கு என் நன்றிகள். அவரது விளக்கங்களை பார்ப்பதற்கு முன்பாக, எனது டிஸ்கிளைமரை மறுபடியும் நினைவு படுத்திக் கொள்கிறேன். "இந்தப் பதிவில் எந்த விதமான எள்ளலும் இல்லை. கண்ணியமான எனது இந்து மத சகோதரர்களின் மனதை புண்படுத்தும் நோக்கமும் இல்லை. எழில் என்பவர் 'இந்து மதம் வாருங்கள்' என்று இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுத்ததால் அவரது பாணியிலேயே சிலதை தெளிவு படுத்திக் கொள்ளலாமே என்பதற்காக கேட்கும் சில கேள்விகள்தான் இவை." இந்து மதம் பற்றி நான் அதிகம் அறியாதவன். எனது கேள்விகள் யாரையும் புண்படுத்தி விடக்கூடாதே என்ற அச்சத்தினால்தான் இதை இங்கே வலியுறுத்துகிறேன்.

எனது முதல் கேள்வி, கடவுள் யார்? அல்லது யாவர்? இந்தக் கேள்வியில் புராணங்கள் மற்றும் நடைமுறையில் இருக்கும் சில கருத்தாடல்கள் மூலமாக அறிமுகப் படுத்தப் பட்டிருக்கும் கடவுள் தொடர்பான சில விஷயங்களை சுட்டி விளக்கம் கேட்டிருந்தேன்.

அதற்கு எழிலின் பதில்: "புராணங்கள் போன்றவை ஒரு கருத்தை வலியுறுத்துவதற்காக தெய்வம் என்னும் பாத்திரத்தையும் எடுத்துக்கொண்டு உதாரணம் மூலம் கருத்தை விளக்குபவை. அவை இறை அல்ல. உபநிஷதமும் திருவாசகமும் விதந்தோதும் இறைவன்,விஷ்ணுமயம் ஜகத்து என்றும், சர்வம் ஈசம் என்றும் கூறுகின்றன.ஒரு கருத்தை குருக்கள் சுட்டிக்காட்டும்போது விரலை பார்க்கக்கூடாது. ஒரு கருத்தை விளக்க கதை கூறும்போது, கதையை பிடித்து தொங்கக்கூடாது."

கருத்தை விளக்க கதை கூறும்போது கதையை பிடித்து தொங்கக் கூடாது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், விப்ர புராணம் சொல்லும் இது மாதிரியான உதாரணங்கள் மூலம் வலியுறுத்தப்படும் கருத்து என்ன என்பதை எழில் விளக்க முடியுமா? அதுவல்லாமல் என் கேள்விக்கு இங்கே பதில் கிடைக்கவில்லையே! என் கேள்வி 'கடவுள் யார்? அல்லது யாவர்? '. இதற்கு உதாரணங்கள் இல்லாத நேரடியான பதில் என்ன?

எனது இரண்டாவது கேள்வி, புதிதாக இந்து மதத்திற்கு வரும் ஒருவருக்கு ஆன்மீக வழிகாட்டிகள் யாவர்?

இதற்கு பதில் சொன்ன எழில் நான் சொன்ன சில உதாரணங்களை மறுத்து, "துறவு என்னும் அறத்தை பின்பற்ற வேண்டியது குருவாக இருக்கும் அனைவருக்கும் தேவையில்லை" என்கிறார். இதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் என் கேள்வி அதுவல்லவே! துறவறம் எல்லா குருக்களுக்கும் கட்டாயமில்லை. ஆனால் துறவறத்தை மேற்கொண்ட ஒரு குரு அதை முழுதாக கடைப்பிடிக்க வேண்டுமா இல்லையா? இந்து மத சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றி துறவு என்ற அறத்தை ஏற்ற, மற்றவர்களால் 'நடமாடும் கடவுள்' என்ற ரேஞ்சுக்கு கொண்டாடப்பட்ட ஒருவர், ஒழுக்கம் பிறழ்ந்து கொலை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிறார் என்றால், அது அந்த தனி நபரின் குற்றம் மட்டுமா? அல்லது அவர் பின்பற்றிய சாஸ்திர சம்பிரதாயங்களில் உள்ள குறைபாடா? அல்லது ஒரு சாதாரண மனிதரை அந்த அளவுக்கு உயர்த்தி போற்றிய அவரது தொண்டர்களின் தவறா?

மேலும் எழில் சொல்கிறார், "துறவு ஒரு முயற்சி. ஞானம் என்பது விளைவு. விளைவை நோக்கி பல முயற்சிகள் இருக்கலாம்.... பல்வேறு பாதைகள் இருக்கின்றன. அவற்றில் உங்களதை தேர்ந்தெடுத்துக் கொள்வது உங்களது சுதந்திரம். உங்களது ஸ்வதர்மம்.ஒருவர் குருவிடமிருந்துதான் ஞானம் பெறவேண்டுமென்று எந்த கட்டாயமும் இல்லை.... அறியக்கூடிய மனம் இருந்தால், ஞானம் சித்திக்கும். ஞானம் அற்றவர்கள் நீங்கள் கூறுவது போன்ற வெளிவேடக்காரர்களாக இருக்கலாம். அவர்கள் நீங்கள் அடையாளம் கண்டுகொண்டது போலவே மக்களால் உதாசீனம் செய்யப்பட்டு விடுவார்கள்".

ஞானத்தை அடைய பல்வேறு பாதைகள் இருக்கின்றன என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அதற்கு முன்பாக 'ஞானம்' என்றால் என்ன என்பதை தீர்மானிக்க முடியுமா? சென்றடைய வேண்டிய இடம் எது என்பதை தெரிந்து கொண்டால்தானே, நாம் போக வேண்டிய பாதையை தேர்ந்தெடுக்க முடியும்? ஆனால் ஞானம் என்பது அப்படி தீர்மானிக்கப் படும் ஒன்றல்ல. வேதங்களை நன்கு கற்றுணர்ந்த ஒருவர் அடைய விரும்பும் ஞானமும் சாமான்யர் ஒருவர் அடைய விரும்பும் ஞானமும் வேறு வேறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அது போல தன் முழு வாழ்க்கையையும் ஆன்மீக வழியில் செலவிடும் ஒருவரின் ஞானமும் குடும்பப் பொறுப்புள்ள ஒருவரின் ஞானமும் வேறு வேறாக இருக்கும்.

பாதைகள் வேறு வேறாக இருக்கலாம். சென்றடைய வேண்டிய இலக்கே வேறு வேறாக இருந்தால்..?

குருவானவர் சரியான வழிதான் காட்டுகிறார் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டதற்கு எழில் சொல்கிறார், "எது தர்மத்தை போற்றுகிறதோ, எது தர்மம் தழைத்தோங்க வைக்கிறதோ அது நல்வழி. தர்மம் என்பது எது மக்களை இணக்கத்துடன் வாழ வைக்கிறதோ அது தர்மம். எது இந்த மனித குலமும் ஜீவராசிகளும் புல்பூண்டுகளையும் வாழ வைக்கிறதோ அது தர்மம். எது மக்களுக்கு இடையே சண்டையையும் பூசலையும் தோற்றுவிக்கிறதோ அது அதர்மம். ஒரே ஒரு குருவின் வார்த்தைகளை இறையின் வார்த்தையாக எடுத்துக்கொள்ளும்போது இது பிரச்னை. அந்த குரு சொன்ன வார்த்தைகளைப் பிடித்து தொங்கும்போது அவை பூசலையும் பிரச்னையையும் உருவாக்குகின்றன. "

நல்வழி, தர்மம், அதர்மம் என்பதற்கு சில விளக்கங்களை எழில் சொல்லியிருக்கிறார். ஆனால் எனது கேள்விக்கான பதில் இதில் இல்லை. நான் கேட்டதை ஒரு உதாரணத்துடன் மறுபடியும் சொல்கிறேன். நடமாடும் கடவுள் என்று ஒருவரை மக்கள் மதித்தார்கள். அவரிடம் அருளாசி பெற படித்தவர்களும் படிக்காதவர்களும் முட்டி மோதினார்கள். ஏனென்றால் அவர் மேல் அந்த மக்கள் வைத்திருந்த நம்பிக்கை. அவர் தன் மத சம்பிரதாயங்களை பேணிக் காப்பவர் என்ற நம்பிக்கை. ஆன்மீகத்தில் நமக்கு இவர் சரியான வழி காட்டுவார் என்ற நம்பிக்கை. ஆனால் அவர் அந்த நம்பிக்கைக்கு ஏற்றவரல்ல என்பதை காலம் கடந்துதான் மக்கள் தெரிந்து கொண்டார்கள். அவரது உண்மையான முகம் வெளிப்படாமலேயே போயிருந்தால் என்னவாகியிருக்கும்? அவரை ஆன்மீக குருவாக ஏற்றுக் கொண்டவர்களின் கதி என்ன? அவர் போதனைகள் சரியானவையா தவறானவையா என்பதை எப்படி சரி காண முடியும்? இது போன்ற வெளிவேடக்காரர்களை மக்கள் எப்படி அடையாளம் காண்பது?

எனது மூன்றாவது கேள்வி, 'எந்த வேதங்களை பின்பற்றுவது?' வேதங்கள் என்று சொல்லப்படுபனவற்றில் பெண்களை கேவலப்படுத்துவது போல சில வசனங்கள் இருப்பதாக வலைப்பதிவுகளில் கூட சிலர் எழுதியிருந்தார்கள். அது தவிர வேதங்களை ஒரு குறிப்பிட்ட பிரிவினரைத் தவிர மற்றவர்கள் படிக்க தடை இருப்பதாகவும் பல இடங்களில் எழுதியிருக்கிறார்கள். விப்ர புராணம் போன்றவைகளில் கடவுளர்களை ஒழுக்கம் கெட்டவர்களாக சித்தரிக்கும் கதைகள் இருக்கின்றன. இது போன்ற காரணங்களாலேயே எதுவெல்லாம் ஏற்றுக் கொள்ளத்தக்க, பின்பற்றத்தக்க வேதங்கள் என்ற கேள்வி எழுகிறது.

இதற்கு எழில் சொன்ன பதில்: "பெண்களை கேவலப்படுத்துவதாக சொல்லும் மந்திரம் வேதத்தில் உள்ளது அல்ல. அதன் உட்பொருள் தெரியாமல் கூறினால், அது உங்களுக்கு கேவலமானதாகவே தோன்றும். இதற்கான விளக்கம் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. படிக்கவும். புராணம், மனுதர்மம் ஆகியவை வேதங்கள் அல்ல. வேதங்களை படிக்க தடை ஏதும் இன்று இல்லை. என்றும் இல்லை. காதில் ஈயம் காய்ச்சி ஊற்றப்படுவதாக சொல்லப்படும் பிரச்சாரம் பொய். அவை பிரிட்டிஷ் காலத்தில் இந்து மதத்தை கேவலப்படுத்த அவர்களது கைக்கூலிகளால் திணிக்கப்பட்டவை. கிறிஸ்துவ பிரச்சாரகர்களாலும் இஸ்லாமிய பிரச்சாரகர்களாலும் தொடர்ந்து உபயோகிக்கப்பட்டு இன்று உண்மை என்ற நிலையை அடைந்துவிட்டன. வேதம் படித்தால் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றப்படுமென்றால், எப்படி மாட்டிடையன் கிருஷ்ணன் அவதாரமாக கருதப்பட்டான்? வால்மீகி என்ற வேடனால் எப்படி ராமாயணம் எழுதப்பட்டிருக்க முடியும்?முருகன் ஏன் குறத்தி வள்ளியை திருமணம் செய்துகொள்ளவேண்டும்?கம்பன் என்ற நெசவாளர் சமஸ்கிருதமும் வேதமும் வால்மீகி ராமாயணமும் படித்து கரைதேர்ந்து கம்பராமாயணம் எழுத முடிந்திருக்குமா?சிந்தித்து பாருங்கள். பொய் பிரச்சாரங்களை நம்பாதீர்கள். ரிக், யஜூர் சாமம் அதர்வணம் ஆகிய வேதங்களும், நாலாயிர திவ்யபிரபந்தமும், திருவாசகமும், திருப்பாவையும் இன்று யாருடைய மேற்பார்வையும் இல்லாமல் தங்குதடையின்றி படிக்கக்
கிடைக்கின்றன. அவற்றை படித்து உணரவும், ஆன்மீக உணர்வு பெறவும் இன்று எதுவும் தடையில்லை.
"

- பெண்களை கேவலப்படுத்துவதாக சொல்லும் மந்திரம் வேதத்தில் இல்லை என்றால் வேதமல்லாத மற்றவைகளில் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறாரா எழில்?

- வேதங்களைப் படிக்க தடை எதுவும் இல்லை என்று மூன்று இடங்களில் சொன்ன எழில், மூன்று முறையும் தடை 'இன்று' இல்லை என்று வலியுறுத்தியிருப்பதை கவனித்தால், 'அன்று' தடை இருந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா?

- வேதத்தை படிக்க யாருக்கும் தடையில்லை என்பதை விளக்குவதற்காக மாட்டிடையன் கிருஷ்ணன், குறத்தியை திருமணம் செய்த முருகன் என்று சிலவற்றை ஆதாரங்களாக எழில் காட்டியிருக்கிறார். இதுவெல்லாம் புராணக்கதைகள் இல்லையா? இவற்றிற்கும் வேதத்திற்கும் என்ன தொடர்பு? 'புராணம், மனுதர்மம் ஆகியவை வேதங்கள் அல்ல' என்று எழிலே சொல்லியிருக்கிறாரே? அதுவுமல்லாமல் 'புராணங்கள் போன்றவை ஒரு கருத்தை வலியுறுத்துவதற்காக தெய்வம் என்னும் பாத்திரத்தையும் எடுத்துக்கொண்டு உதாரணம் மூலம் கருத்தை விளக்குபவை.' என்று சொன்ன எழில் மாட்டிடையன், குறத்தி போன்ற கதாபாத்திரங்களை எப்படி ஆதாரமாக காட்ட முடியும்?

மறுபடியும் என் கேள்விக்கே வருகிறேன். எந்த வேதங்களை பின்பற்றுவது? வேதங்கள் அல்லாத மற்றதை (புராணங்கள், மனு சாஸ்திரம் போன்றவை) பின்பற்ற தேவை இல்லை என்று எழில் ஒப்புக் கொள்கிறாரா? அப்படியென்றால் அவற்றை என்ன செய்வது?

எனது நான்காவது கேள்வி இந்து மதத்திற்கு புதிதாக வருபவர்கள் எந்த ஜாதியில் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள்? என்பது. இதற்கு எழிலின் பதில் முழுக்க முழுக்க சமாளிப்புதான். "ஏன் இந்து மதத்தையும் ஜாதியையும் இணைத்து பார்க்க வேண்டும்?" என்று கேட்கிறார். எழிலுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ஜாதி என்பது இந்து மதத்திலிருந்து பிரிக்க முடியாத அடையாளம் என்பதுதான் உண்மை. ஏதாவது ஒரு நாளிதழைப் பிரித்து மேட்ரிமோனியல் பக்கத்தை அவர் பார்த்தாலே இது புரியும்

எழிலின் அடுத்த சமாளிப்பு, "இந்துமதம் என்பது ஆன்மீகம். அது இறையை மனிதன் உணர அழைக்கிறது. மனுதர்மம், இந்திய அரசியலமைப்பு சட்டம், அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் போன்றது. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தையும் கிறிஸ்துவத்தையும் போட்டு குழப்பிக்கொள்வது இல்லை. அது போல, மனுதர்மத்தையும் இந்துமதத்தையும் போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. மனுதர்மம் அன்று ஜாதிக்கு ஒரு நீதி என்று எழுதியது போல இன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம், மதத்துக்கு ஒரு நீதி என்று எழுதி வைத்திருக்கிறது. அது எப்படி தவறோ அது போல இதுவும் தவறுதான்"

இந்துமதம் என்ற ஆன்மீகத்தில் கடவுளைத் தொழ எல்லோருக்கும் சம உரிமை இருப்பதுதானே முறையாகும்? ஆனால் நடைமுறையில் அப்படியில்லையே? உயர் சாதியினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் தலித் மக்கள் தங்கள் ஆன்மீக வழிபாடுகளை செய்யவிடாமல் தடுப்பது மனுதர்மம் உருவாக்கிய வர்ணபேதம்தானே?. மனுதர்மத்தையும் இந்துமதத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்வது மாற்று மதத்தினர் அல்ல. இந்துமதத்தினரேதான். அந்த மனுவையும் கடவுளாக்கி மனாலியில் கோயில் கட்டி கும்பிட்டு வருவதும் அதே இந்துமதத்தினர்தான். மனுதர்மமே தவறு என்றால், அது அறிமுகப்படுத்திய வர்ணாஸ்ரம முறையால் இந்து மதத்திற்கே இழுக்கு என்றால், பாபரி மசூதியை இடிப்பதற்கு பதிலாக இந்த மனு கோவிலை இடித்துத் தள்ளியிருக்க வேண்டாமா?

"இந்துமதத்துக்கு வருபவர்கள் எந்த ஜாதியில் சேரவேண்டும் என்று
கேட்டிருக்கிறீர்கள். ஏன் உங்கள் ஜாதிக்கு என்ன குறை? மரைக்காயர் என்பது ஒரு ஜாதிமாதிரி வைத்துக்கொண்டு சிவபாலன் மரைக்காயர் என்று பெருமையாக இருக்கலாமே
?" என்கிறார் எழில். சிவபாலன் மரைக்காயருடன் சம்பந்தம் பேச அய்யர்களோ அல்லது அய்யங்கார்களோ தயாரா என்பதையும் கொஞ்சம் கேட்டுச் சொன்னால் நல்லது.

" இந்துமதத்தில் குறை ஏதும் இல்லை. சுதந்திரமே குறை, என்னை சிந்திக்கச்சொல்லாதே, கட்டளைகளை கொடு நான் மிஷின் போல நடக்கிறேன் என்று கூறுபவர்களுக்கு மட்டுமே இந்து மதத்தின் சுதந்திரம் ஒரு குறை." என்ற சொல்லும் எழில்தான் அபூமுகை, சுவனப்பிரியனுடன் நடந்த விவாதத்தில், ஒருவர் இறைத்தூதர்தான் என்பதற்கு கே.ஜி. பிள்ளைகளுக்கு புரியுற மாதிரி ஆதாரம் காட்டினால்தான் ஒப்புக் கொள்வேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தார்.

"மனுதர்மத்தில் உள்ள குறைகளையும் இந்துக்கள்தான் எதிர்த்தனர். மனுதர்மத்தில் உள்ள குறைகளை எதிர்க்கவும் இந்துக்களுக்கு அனாதிகாலம் தொட்டு சுதந்திரம் இருந்தது. மனுதர்மமும் மாற்றமுடியாதது அல்ல. அதன் இறுதி பகுதியில் அதிலுள்ள சட்டங்களை கற்றறிந்தவர்கள் எப்படி மாற்றுவது என்ற வழிமுறையையும் கொடுத்திருக்கிறது." என்கிறார் எழில். மனுதர்மம் அறிமுகப்படுத்திய சமூகக் கொடுமைகளுள் முதன்மையானது பிறப்பினடிப்படையில் மனிதர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வை கற்பிக்கும் வர்ணாஸ்ரமம். இக்கொடுமையை நிவர்த்திக்க இதுவரை மனுதர்மத்தில் எத்தனை மாற்றங்கள் ஏற்படுத்த்ப் பட்டிருக்கின்றன என்பதையும் அந்த மாற்றங்கள் நடைமுறைப் படுத்தப் பட்டிருக்கின்றனவா என்பதையும் எழில் அறியத்தந்தால் நல்லது.

இன்னொரு விஷயம் சொல்ல வேண்டும். இந்துமதக் காவலர்களாக காட்டிக் கொள்ளும் ஆர்எஸ்எஸ், பிஜேபி போன்ற அமைப்புகள் இந்துமதத்தை காப்பதை விட அதை வைத்து எப்படி அரசியல் செய்யலாம் என்பதில்தான் கவனம் செலுத்துகின்றன. இந்துமதத்தில் ஊடுருவி இருக்கும் பிரச்னைகளை தீர்க்க முயற்சி செய்வதை விட மற்ற மதத்தினரை வம்புக்கு இழுப்பதில்தான் இவர்களுக்கு சுவாரஸ்யம் அதிகம். அப்சலை தூக்கில் போடுவதில் காட்டும் தீவிரத்தை தலித்களின் பிரச்னைகளை போக்கி அவர்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறாமல் இருக்க வைப்பதில் காட்டினார்கள் என்றால் அவர்கள் உண்மையிலேயே இந்துமதக் காவலர்கள்தான் என்பதை ஒப்புக் கொள்ளலாம்.

எழில் போன்றவர்களின் அணுகுமுறையும் அப்படித்தான் இருக்கிறது. இந்துமதத்தைப் பற்றி உயர்வாக சொல்ல எவ்வளவோ இருக்கும்போது இவர்கள் இஸ்லாமை குறை சொல்வதில் நேரம் செலவளித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி செய்து 'நீங்கள் வந்து எங்கள் மதத்தை தாக்குங்கள்' என்று மறைமுகமாக அழைப்பு வைக்கிறார்கள். அதுதான் அவர்கள் விருப்பமென்றால் நாம் என்ன செய்ய முடியும்?